மட்டு. கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவையின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பிரதம புகையிரத நிலைய அதிபர் அ. சிவநேசராசா தெரிவித்தார்.

மீனகாயா கடுகதி ரயில் மாலை 7.15 க்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். இந்த ரயில் இரவு 8.15 க்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 க்கு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும். உதயதேவி ரயில் காலை 8.45 க்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.40 க்கு மட்டக்களப்பை சென்றடையும். இப்புகையிரதம் காலை 7.45 க்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு மாலை 4.10 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.  

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *