September

September

சம்பியன்ஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றும் – ராவிட்

000cricket.jpgதரவரி சையில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தாலும் சம்பியன்ஸ் கோப்பையை வெல்ல அவுஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு இருப்பதாக இந்திய வீரர் ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘அவுஸ்திரேலியா மிகவும் அபாயகரமான அணி. சமீபத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் அவர்களின் கைதான் ஓங்கி இருக்கிறது. எனவே அவர்களுக்கு தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.

ஐ.தே.கவின் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டமூலம் சபையில் நிறைவேற்றம்

26parliament.jpgஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக திருத்தச் சட்டமூலம் திருத்தங் கள் எதுவுமின்றி நேற்று பாராளுமன்றத்தில் நிறை வேறியது.

1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகச் சட்டமூலத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் பாராளுமன்றம் கூடியபோது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டமூலத்தை சமர்ப்பிக்க முற்பட்டார். இதனைத் தடுப்பதற்காக ஐ. தே. க வினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கொன்று இருப்பதால் இதனை சமர்ப்பிக்க முடியாதென சபையில் தெரிவித்தனர். இதனால் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சுமார் ஒருமணி நேரம் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. சட்டமூலத்தை சமர்ப்பிக்க இடமளிக்காதிருப்பதற்காக ஐ.தே. க எடுத்த முயற்சிகள் யாவும் வீணானதுடன் அமைச்சர் கெஹலிய திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.

சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போதும் ஐ.தே.க எம்பிக்களான ஜோசப்மைக்கல் பெரேரா, ரங்கே பண்டார ஆகியோர் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இத்திருத்தங்களை எவ்வகையிலும் பெற்றுக்கொள்ள முடியாதென சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததுடன் திருத்தங்கள் எதுவுமின்றி ஐ.தே.க வினரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருத்தச் சட்டமூலம் சபையில் நிறைவேறியது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுப்பதற்காக ஆரம்பத்திலும் இறுதியிலும் ஐ.தே.கவினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நிராகரிக் கப்பட்டுவிட்டன.

விதைகள் ஆராய்ச்சி ஆய்வு கூடம் அமைக்க உடன்படிக்கை

190909paddy.jpgபயிர்ச் செய்கைக்கான விதைகள் ஆராய்ச்சி ஆய்வுகூடம் நிறுவும் சார்க் நாடுகளின் திட்டத்தின் கீழ் இலங்கையிலும் ஓர் ஆய்வுகூடத்தை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.

இத்திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் 7.7 மில்லியன்  ரூபாவை இலங்கைக்கு வழங்குகிறது.

‘பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ புலி ஆதரவு அரங்கில் தமிழருவி மணியன் தொகுப்பு : த ஜெயபாலன்

Maniyan_thamilaruvi‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவவவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ என தமிழருவி மணியன் செப்ரம்பர் 24 மாலை லண்டன் ஈஸ்ற்ஹாமில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நிறைந்திருந்த அரங்கில் ‘இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று தான் நம்பவில்லை’ எனத் தெரிவித்தார் தமிழருவி மணியன். ‘தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அதன் தலைவரினதும் தியாகத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்த தமிழருவி மணியன் அவர் (வே பிரபாகரன்) ஆயுதங்களை மட்டும் நம்பியது மிகப்பெரிய தவறு என்றும் அது இவ்வளவு அழிவை ஏற்படுத்தி விட்டது’ என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை எதிர்த்த போதும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது பெரும்தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தமாறு வற்புறுத்தி வந்தவர் தமிழருவி மணியன். ஆளும் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான அவர் இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா வற்புறுத்தாததையிட்டு தனது கட்சிப் பதிவியையும் உறுப்புரிமையையும் துறந்தவர். சாத்வீகப் போராட்டமே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானது என்று நம்புபவர்.

‘தமிழக அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்களிக்க மேடைகளில் பேசிவிட்டு போய்த் தூங்கிவிடுவார்கள். அவர்களை நம்பி அரசியல் மோசம் போய்விடாதீர்கள்’ என்று எச்சரித்த தமிழருவி மணியன் அவ்வாறு ‘என்னாலும் பேச முடியும்’ ஆனால் ‘என் தமிழினம் அழிக்கப்படுவதை என்னால் தாங்க முடியாது’ என்றார். நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் ஒரு சில வீதமே எனச் சுட்டிக்காட்டிய தமிழருவி மணியன் ‘பரந்து பட்ட தமிழக மக்களின் ஆதரவைப் பெறாமல் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’ என்றார். ‘இவர்களது அரசியல் பேச்சுக்கள் உணர்ச்சிபூர்வமாய் இருக்கும் கைதட்டுவார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள் விசிலும் அடிப்பார்கள் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன?’ என்று கேள்வியும் எழுப்பினார்.

தமிழருவி மணியத்தின் சிறிய பேச்சைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் தமது கருத்துக்களை வழங்கவும் கேள்வி எழுப்பவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புலி ஆதரவு அரங்கு ஒன்றில் மாறுபட்ட கருத்துடைய ஒருவர் பிரதான பேச்சாளராக வரவழைக்கப்பட்டது இதுவே முதற்தடவையாக இருந்தது. செல்வவிநாயகர் ஆலயத் தலைவர் செல்வராஜா ‘கலைஞர் கருணாநிதியைப் பலப்படுத்தி அவரைக் கொண்டு நீங்கள் எதையாவது சாதித்திருக்க முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார். ‘என்னதான் கூறினாலும் வைக்கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்’ என்றார் செல்வராஜா. ‘மகிந்த ராஜபக்ச நினைக்கின்ற மாதிரி அல்ல. தலைவர் பெரும் திட்டத்தோடு வருவார்’ என்றும் ‘போராட்டம் தொடரும்’ என்றும் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

‘ஆயுதப் போராட்டமே ஒரே வழி’ என்ற கூக்குரல் ஒலிக்கத் தவறவில்லை. அதற்கு ஒருபடி மேலேசென்று ‘சுறாவளி’ போல் சுழட்டி கருத்து வெளியிட்ட சிவபாதம் என்ற முன்னால் கூட்டணி (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் ‘நானும் எனது மகனும் புலி. இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறோம்’ என்றார். கூட்டத்தின் இடையிடையே இவரது ‘குளறி’ வித்தைகள் அரங்கைக் குழப்பியது. இன்னும் ஓரிருவரும் மதுபோதையில் நின்று குளறி வித்தை காட்டியதைத் தவிர கூட்டம் சுமூகமாகவே நடந்தது.

Maniyan_thamilaruvi‘நான் இங்கு உங்களை மாற்றுவதற்காக ரோவினால் அனுப்பப்ட்டவன் அல்ல. என் இன மக்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் யாதார்த்தமாக சில விடயங்களைப் பார்க்கும்படி சொல்கிறேன். இல்லை ஆயுதப் போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆயுதம் எடுத்தால் அழிவு எதிரிக்கு மட்டுமல்ல எமக்கும் தான் என்பதனை மறந்தவிடக்கூடாது. நான் உங்களுக்கு ஏற்றமாதிரிப் பேசுவதற்காக இங்கு வரவில்லை. எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்கு சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளுக்குச் செல்லாமல் நிதானமாகச் சிந்தியுங்கள்’ எனத் தமிழருவி மணியன் அங்கிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தன்னுடைய பேச்சுக்களில் இலங்கை அரசையும் அதன் இனவாதப் போக்கையும் மிகச் சரியாகவும் நேர்த்தியாவும் கண்டித்த தமிழருவி மணியன் அந்த இனவாதப் போக்கிற்கு எதிராக சாத்வீகமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஒரு திலீபனுடன் சாத்வீகப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இருந்திருந்தால் இந்தப் பேரவலத்திற்குச் செல்ல வேண்டி இருந்திராது என்பதையும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியும் பல்வேறு அமைப்புகளின் தலைவருமான ப சிதம்பரப்பிள்ளை தனது கருத்தைத் தெரிவிக்கையில் ‘இந்தியா இலங்கையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தேசியத் தலைவர் இந்தியாவை நம்பியதே அவர் விட்ட மிகப்பெரிய தவறு’ எனத் தெரிவித்தார். இதே கருத்தினை இன்னும் பலரும் வெளியிட்டனர். தமிழருவி மணியன் தான் கட்சியின் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் வெளியேறியவர் என்று கூறி இருந்தும் பலரும் மீண்டும் மீண்டும் அவரை ஒரு இந்தியப் பிரதிநிதியாக்கி கேள்விகளை தொடுத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்த தமிழருவி மணியன், ‘பிரபாகரன் ஒன்றும் இந்தியாவை நம்பி இருக்கவில்லை. அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று நம்பித்தான் கடைசிவரை இருந்தார். இந்தியா மட்டுமல்ல புரட்சியை வென்றெடுத்த நாடுகளே ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கி இருந்தன. இந்தியா இந்தியா என்று சொல்லிச் சொல்லியே நீங்கள் இந்திய மக்களை எதிரிகளாக்கி உள்ளீர்கள். இந்தியா வேறு இந்திய மக்கள் வேறு. எந்தவொரு சாதாரண இந்தியப் பிரஜையாவது எமது நாட்டு பிரதமரைக் கொலை செய்திருக்கலாம் என்று குற்றம்சாட்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘அமெரிக்காவில் டலஸ் பகுதியில் தமிழ் சங்கத்தில் காலை ஒரு சந்திப்பு மாலை ஒரு சந்திப்பு. ஒன்று இந்தியத் தமிழர்கள் சந்திப்பு மற்றையது புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சந்திப்பு. பாரிஸில் புதுச்சேரித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் சேர்ந்து எதுவும் செய்வதில்லை’ இவ்வாறு தமிழருவி சொல்லிக் கொண்டிருக்கையில் ‘லண்டனிலும் அப்படித்தான். இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று தனித்துத்தான் செயற்படுகிறார்கள்’ என்று ஒரு குரல் வந்தது. ‘ஏன் நாம் ஒற்றுமையாகப் போராட முடியாதவர்களாக இருக்கிறோம்’ என்றும் தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினார்.

‘புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எப்போதும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு பிரச்சினை உள்ளது.’ என்று தனது கருத்தை வெளியிட்ட தேசம்நெற் த ஜெயபாலன் ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் நிஜத்திற்கு வரவில்லை. வரவும் விரும்பவில்லை. இன்னமும் கனவுலகத்திலேயே உள்ளனர். நீங்கள் இன்று வெளியிட்ட இதே கருத்துக்களை நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தால் உங்களை ரோ உளவாளி என்றும், தேசியத் துரோகி என்றும் அழைத்திருப்பார்கள்’ எனத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவுப் பகுதியில் வெளியிட்ட இக்கருத்து மீண்டும் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

Maniyan_thamilaruviஅதனைத் தொடர்ந்து பேசிய தமிழருவி மணியன் ‘புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் என்னால் பிளவுபட்டுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்று மூன்று லட்சம் மக்கள் முகாம்களில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களை விடுவிக்க வழிசெய்ய வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கல்வி வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இங்குவந்து ஓரளவு வளமாக வாழ்கிறீர்கள். அப்படி வாழ்ந்துகொண்டு ஆயுதப் போராட்டம் என்றெல்லாம் பேச முடியும். ஆனால் அந்த முகாம்களில் வாழும் மக்களின் நிலையென்ன. இதுவரை ஆயுதப் போராட்டத்தில் ஒரு 10 வீதம் உரிமைகளைப் பெற்றிருந்தால் இவ்வளவு மக்களை இழந்து இந்த உரிமைகளைப் பெற்றிருக்கின்றோம் என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழருவி மணியன் ‘எமக்கு முன் உள்ள உதாரணம் தீபெத். எந்த நாடு அதனை அங்கிகரித்தது? அயர்லாந்துக்கு என்ன நடந்தது?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தமிழ் நாட்டுக்கு இந்திய அரசமைப்பில் உள்ள உரிமைகள் போன்ற உரிமைகளைக் கோரி அதனை நோக்கிச் செல்வதே தற்போதுள்ள யதார்த்தம்’ எனத் தெரிவித்தார்.

இறுதியாக கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது போராட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது. அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தள்ளது. அதனை போஸ்மோட்டம் செய்து அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைக் கேட்டு அதன் சரி பிழைகளை ஆராய்கின்ற பக்குவம் வரவேண்டும். எத்தனையோ ஆயிரம் மக்களை இழந்திருக்கிறோம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் துரோகிகள் என்று சொல்லியவர்களுடனெல்லாம் ஒரே மேசையில் உட்கார்ந்திருந்து கதைக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப் போராட்டமும் தோற்றுவிட்டது. இப்போது தமிழருவி மணியன் சொல்கின்ற அறிவு வழி சிந்திக்க வேண்டும். அவர் துரோகி. இவர் துரோகி. இந்தியா துரோகம் செய்துவிட்டது என்பதை விட்டுவிட்டு யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

மூன்று மணிநேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெரும்பான்மையானவர்கள் யதார்தத்தை நோக்கித் தள்ளப்படுவதைக் காணக் கூடியதாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு இவ்வாறான கருத்துக்கள் புலி ஆதரவு அரங்கு ஒன்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அடுத்த இரு தினங்களில் செப்ரம்பர் 26ல் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தொல் திருமாவளவனையும் தமிழருவி மணியனையும் பிரதம பேச்சாளர்களாக அழைத்துள்ளது. புலி ஆதரவுத் தளத்தில் தற்போது ஒரு கருத்தியல் மாற்றத்தின் அவிசியத்திற்கான தேவை உருவாகி உள்ளதையே இது வெளிப்படுத்துகின்றது.

ஜனவரியில் இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் : ஜனாதிபதியின் உறுதி குறித்து பன் கீ மூன் மகிழ்ச்சி

ban-ki-moon.jpgவவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவர் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி அளித்திருப்பது தமக்கு மகிழ்வைத் தருவதாக ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெர்வித்தார்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் – வோல்டர் கெலின் சந்திப்பு

210909walter-kalin.jpgஇடம் பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் விசேடப் பிரதிநிதி வோல்டர் கெலின் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் தொடர்பாகக் வோல்டர் கெலின் கேட்டறிந்து கொண்டார்.

இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் மிகவும் சிறப்பாக செய்து கொடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஐக்கிய நாடுகள் சபை, இடம்பெயர்ந்த மக்களுக்குச் செய்து வரும் உதவிகளுக்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.எதிர்காலத்திலும் இவைபோன்ற உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அமைச்சர், வோல்டர் கெலினிடம் தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த விசேட பிரதிநிதி வோல்டர் கெலின், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன் நன்றியையும் தெரிவித்தார். அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் எப்பொழுதும் உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும்-

24-moammar-gadhafi.jpgகாஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, காஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது. பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக்கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா  மற்றும் ஆஸ்திரேலியா  ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை  நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல. பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது. அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.

இதுவரை 40 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் மீளக் குடியமர்வு -அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்

anura_priyadarshana_yapa.jpgபயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுள் இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல்,  ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை அவசரமாக மீள்குடியமர்த்துமாறு ஐ.தே.க. தலைவரான ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்தும் கூறி வருவதை ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். அவர்கள் கூறுவதைப் போல இடம்பெயர்ந்த மக்களை எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி அவரசாமாகக் குடியேற்றி அம்மக்களை மற்றுமொரு சிரமத்தினுள் ஆழ்த்த அரசாங்கம் தயாரில்லை.

வட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணி பூர்த்தியானதும் அம்மக்களுக்குத் தேவையான சகல வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு விரைவில் அவர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் ரணில் உட்பட எதிர்க்கட்சியினருக்கு எந்தப் பொறுப்புணர்வும் கிடையாது. ஆனால் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு அந்தப் பொறுப்பு உண்டு. நாம் அதனை கடமையுணர்வுடன் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

இதுவரை மன்னார்,  யாழ்ப்பாணம்,  திருகோணமலை,  வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 40 ஆயிரம் மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று சம்பியன் கிண்ணத்தின் மூன்றாவது ஆட்டம் – South Africa won by 5 wickets

240909new-vs-sa.jpgஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான ‘பி’ பிரிவின் மூன்றாவது போட்டி நியூசிலாந்து -தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  பகல் நேர ஆட்டமாக தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் போட்டியின் ஸ்கோர் விபரம் கீழே தொகுத்துத் தரப்படுகிறது.

South Africa won the toss and elected to field

ICC Champions Trophy – 3rd Match, Group B
ODI no. 2895 | 2009/10 season
Played at SuperSport Park, Centurion
24 September 2009 (50-over match)
Umpires Aleem Dar (Pakistan) and Asad Rauf (Pakistan)
TV umpire DJ Harper (Australia)
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire IJ Gould (England)

New Zealand innings 

BB McCullum†  c Duminy b Botha  44 
 JD Ryder  c van der Merwe b Parnell  8 
 MJ Guptill  c Amla b Parnell  21 
 LRPL Taylor  lbw b Parnell  72 
 GD Elliott  b van der Merwe  39
 NT Broom  lbw b van der Merwe  1 
 GJ Hopkins  c Duminy b Parnell  13 
 KD Mills  c de Villiers b Steyn  0 
 DL Vettori*  not out  1
 DR Tuffey  c Duminy b Parnell  4
 SE Bond  c de Villiers b Steyn  0 
 Extras (b 4, lb 5, w 1, nb 1) 11     
      
Total (all out; 47.5 overs) 214 (4.47 runs per over)
Fall of wickets1-12 (Ryder, 3.6 ov), 2-58 (Guptill, 12.6 ov), 3-92 (McCullum, 23.1 ov), 4-163 (Elliott, 38.6 ov), 5-171 (Broom, 40.5 ov), 6-203 (Hopkins, 44.6 ov), 7-204 (Mills, 45.5 ov), 8-209 (Taylor, 46.3 ov), 9-213 (Tuffey, 46.5 ov), 10-214 (Bond, 47.5 ov) 
        
 Bowling
 DW Steyn 9.5 1 32 2
 WD Parnell 8 0 57 5
 JH Kallis 8 0 24 0
 JA Morkel 3 0 13 0 
 J Botha 9 1 44 1
 RE van der Merwe 10 1 35 2

South Africa innings (target: 215 runs from 50 overs)
 
GC Smith*  c Vettori b Tuffey  7
HM Amla  lbw b Vettori  38
 JH Kallis  c †McCullum b Bond  36 
 AB de Villiers  not out  70
 JP Duminy  c †McCullum b Mills  11
 MV Boucher†  c †McCullum b Tuffey  28
JA Morkel  not out  19  
Extras (lb 2, w 4, nb 2) 8     
      
Total (5 wickets; 41.1 overs) 217 (5.27 runs per over)
Did not bat J Botha, RE van der Merwe, DW Steyn, WD Parnell 
Fall of wickets1-22 (Smith, 5.6 ov), 2-74 (Kallis, 16.3 ov), 3-108 (Amla, 23.2 ov), 4-138 (Duminy, 26.5 ov), 5-180 (Boucher, 35.5 ov) 
        
 Bowling
 KD Mills 8.1 0 45 1
 SE Bond 10 0 51 1
 DR Tuffey 9 1 52 2 
 DL Vettori 10 1 34 1 
 JD Ryder 2 0 15 0  
 MJ Guptill 1 0 13 0  
 GD Elliott 1 0 5 0

Player of the match WD Parnell (South Africa)

உலகெங்கும் பாதுகாப்பு வழங்கும் நிறுவனத்தில் கெலிக்கொப்டரில் வந்து கொள்ளை.

G4S_Logoசுவீடன் நாட்டில் கெலிக்கொப்டரில் 3 அல்லது 4பேர் அடங்கிய கொள்ளைக் கூட்டத்தினர் 100மில்லியன் சுவீடன் குரோன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 23.09.2009 ஜி4எஸ் எனும் பாதுகாப்பாளர்கள் (Security) நிலையத்தில் இக்கொள்ளை துரிதமாக நடந்தேறியுள்ளது. இந்த பாதுகாப்பு அமைப்புத்தான் வங்கிப் பணங்களை பாதுகாப்புடன், பாதுகாப்பான இடத்திற்குக் கொண்ட செல்லும். இந்த ஜி4எஸ் எனும் பாதுகாப்பு அமைப்பு உலகிலே மிகப்பெரிய பாதுகாப்பாளர் சேவையை உலகெங்கும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைக் கிணறுகளுக்குக் கூட இவர்களே பாதுகாப்புக் கொடுக்கிறார்கள்.

சுவீடனிலுள்ள ஸ்ரொக்கோம் எனும் இடத்தில் உள்ள பொலிஸ் கெலிக்கொப்டருக்கு அருகில் வெடிகுண்டுபோல் தயாரிக்கப்பட்ட சிவம்பு மின்னிபொருத்திய பார்சல் ஒன்றை வைத்துவிட்டு கொள்ளையர் தம்கொள்ளை நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். களவாடப்பட்ட கெலிக்கொப்டரில் சென்ற கொள்ளையர்கள் நெருப்புப் பற்றாதவாறு திடமாகப் பலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஜி4எஸ் கட்டிடத்தின் மேல் கெலிக்கொப்டரில் கொண்டு வரப்பட்ட பெரிய பாரமான சுத்தியல் போன்ற கூரான ஒரு இரும்புக் குற்றியை கூரையினூடாகப் போட்டு கொள்ளையர்கள் உள்ளே இறங்கினர். அதே வேளை கெலிக்கொப்டரானது மாடியில் நிறுத்த வசதியிருந்தும் நிறுத்தப்படாமல் பறப்பில் சமநிலையில் நின்று கொண்டிருந்தது. இதில் இருந்து நாம் அறிவது என்ன வென்றால் கெலிக்கொப்டரை நிறுத்தினால் அதை திரும்ப இயக்கி எழும்ப நேரம் எடுக்கும் என்பதால் அதை பறப்பிலேயே வைத்திருந்திருக்கிறார்கள். இதை பல நிமிடங்கள் பறப்பில் சமநிலையில் வைத்திருப்பதற்கு விமான ஒட்டியானவன் குறைந்தது 100 மணித்தியாலங்களாவது பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.

எடுத்த பணத்துடன் வடக்குநோக்கிப் பறந்த கெலிக்கொப்டரானது கொள்ளை நடந்த இடத்துக்கு தெற்கே 3 மைல்களுக்கப்பால் கைவிடப்பட்டுள்ளது. பொலிஸின் அனுபவப்படி கொள்ளையர்கள் பணத்தையும் கொள்ளையர்களையும் வடக்கே விட்டுவிட்டு விமான ஓட்டிமட்டும் விமானத்தை தெற்கில் கைவிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

கொள்ளைச்செய்தி கேட்டு தமது கெலிக்கொப்டரை எடுக்க வந்தபோது குண்டுப்பார்சல் சிவப்புச் சமிக்ஞையுடன் கண்ணடித்துக் கொண்டு இருந்தது. உடன் வெடிகுண்டு விற்பனர்கள் அழைக்கப்பட்டு அந்தப்பார்சல் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கண்டது வெறும் புஸ்வாணம் தான். இந்த நேரத்துக்குள் கொள்ளை நாடகம் முற்றாக நிறைவேயிருந்தது.

இக்கொள்ளை காரணமாக சுவீடனில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்று பொருளியல் விற்பனர்கள் கூறுகிறார்கள்.