பயிர்ச் செய்கைக்கான விதைகள் ஆராய்ச்சி ஆய்வுகூடம் நிறுவும் சார்க் நாடுகளின் திட்டத்தின் கீழ் இலங்கையிலும் ஓர் ஆய்வுகூடத்தை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.
இத்திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் 7.7 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்குகிறது.