இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக திருத்தச் சட்டமூலம் திருத்தங் கள் எதுவுமின்றி நேற்று பாராளுமன்றத்தில் நிறை வேறியது.
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகச் சட்டமூலத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் பாராளுமன்றம் கூடியபோது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டமூலத்தை சமர்ப்பிக்க முற்பட்டார். இதனைத் தடுப்பதற்காக ஐ. தே. க வினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கொன்று இருப்பதால் இதனை சமர்ப்பிக்க முடியாதென சபையில் தெரிவித்தனர். இதனால் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சுமார் ஒருமணி நேரம் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. சட்டமூலத்தை சமர்ப்பிக்க இடமளிக்காதிருப்பதற்காக ஐ.தே. க எடுத்த முயற்சிகள் யாவும் வீணானதுடன் அமைச்சர் கெஹலிய திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.
சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போதும் ஐ.தே.க எம்பிக்களான ஜோசப்மைக்கல் பெரேரா, ரங்கே பண்டார ஆகியோர் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இத்திருத்தங்களை எவ்வகையிலும் பெற்றுக்கொள்ள முடியாதென சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததுடன் திருத்தங்கள் எதுவுமின்றி ஐ.தே.க வினரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருத்தச் சட்டமூலம் சபையில் நிறைவேறியது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுப்பதற்காக ஆரம்பத்திலும் இறுதியிலும் ஐ.தே.கவினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நிராகரிக் கப்பட்டுவிட்டன.