தரவரி சையில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தாலும் சம்பியன்ஸ் கோப்பையை வெல்ல அவுஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு இருப்பதாக இந்திய வீரர் ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘அவுஸ்திரேலியா மிகவும் அபாயகரமான அணி. சமீபத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் அவர்களின் கைதான் ஓங்கி இருக்கிறது. எனவே அவர்களுக்கு தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.