February

February

டெல்லியில் வைகோ (13.02.2009) உண்ணாவிரதம்-அத்வானி சந்திப்பு

1102-vaiko.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று (13.02.2009) டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர்.

டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

அத்வானி வாழ்த்திப் பேச்சு:

உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை காணும்போது உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

டெல்லியில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும், உண்ணாவிரதத்தில் இத்தனை பேர் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை முக்கிய பிரச்சினையாக கருதி செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சீன, இந்திய மக்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. அங்கு மருத்துமனைகள் மீதும் குண்டு வீசப்படுகிறது. இது எங்கும் கேள்விப்படாத விஷயம். இது தமிழர்கள் பிரச்சனையோ, தமிழ்நாட்டு பிரச்சனையோ அல்ல இந்தியாவின் பிரச்சனை .

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் பாஜக என்றும் ஆதரவாக இருக்கும் என்றார் அத்வானி.

பின்னர் வைகோ பேசுகையில்,

பாஜக தலைவரும் பிரதமர் வேட்பாளருமான நீங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோட்டில் மதிமுக நடத்திய மாநாட்டிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள்.

1998ல் வாஜ்பாய் ஆட்சி நடந்த போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது பாஜக ஆட்சி அக்கறை காட்டியது. ஆனால் இன்றைய மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுகிறது என்றார்.

வைகோ – ராஜ்நாத் சிங் சந்திப்பு

முன்னதாக வைகோவை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் (13.02.2009 )உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அரசின் கொடூர ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழர்களை நினைத்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரிகிறது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், ராணுவத்தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை, இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, இந்திய அரசு தலையிட வேண்டும் என கனடாவின் வெளி விவகார அமைச்சர், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வற்புறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் செய்யுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் கூட்டு அறிக்கை விடுத்த பின்னரும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது, சிங்கள ராணுவமும், விமானப்படையும் ஏவுகணைத் தாக்குதலும், குண்டு வீச்சும் நடத்தியதில், மருத்துவமனையில் இருந்த 116 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 260 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.  உலக நாடுகளின் கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகி வரும் இலங்கை அரசு அதிலிருந்து தப்பிக்க விடுதலைப்புலிகள் தான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள் என்று கோயபெல்ஸ் பாணி பொய்ப் பிரசாரத்தை இரண்டு நாட்களாக செய்து வருகிறது.

இலங்கை அரசின் அராஜகத்தை, வெளி உலகத்துக்குத் தெரிவித்ததற்காக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர்களை, முல்லைத் தீவில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். மொத்தமாகத் தமிழ் இனத்தைக் கொன்று தமிழ் ஈழத்தையே சுடுகாடக மாற்ற ராஜபக்சே திட்டம் போட்டுவிட்டார். போர் நிறுத்தம் தான் ஒரே வழி என்பதை நன்றாக அறிந்திருந்தும், இந்திய அரசு அதை சொல்லத் தயாராக இல்லை.

ஏனெனில், விடுதலைப்புலிகளை அழிப்பது தான் இந்திய அரசின் நோக்கம். நான் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் குற்றம் சாட்டுகின்றபடி, இலங்கையில் கொல்லப்படுகின்ற ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், அவன் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், இந்திய அரசு, குறிப்பாக தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பாளி ஆகும். எனவே, இந்திய அரசின் துரோகத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், வதைபடும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, அகில இந்திய அளவில், ஆதரவு திரட்டவும், உண்மை நிலைமையை இருட்டடிப்புச் செய்யும் டெல்லி ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தைக் கடந்து, இந்திய மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கவும், தலைநகர் டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மதிமுக சார்பில், என்னுடைய தலைமையில், மிகப் பெரிய உண்ணாநிலை அறப்போர், காலை எட்டு மணி முதல் நடைபெறுகிறது.

இந்த அறப்போரில் பங்கு ஏற்பதற்காக, ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த உண்ணா நிலை அறப்போருக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர்களைக் காக்க உரை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

தீக்குளிப்போருக்கு நிதியுதவி இல்லை

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உயிர் துறப்போரின் குடும்பத்தினருக்கு இனி நிதியுதவி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக முதன் முதலில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த அமரேசன் ஆகியோர் தீக்குளித்து உயிர் நீத்தனர். இவர்களில் ரவி, அமரேசன் ஆகியோர் தற்கொலை குறித்து சர்ச்சை இருந்தது.

முத்துக்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவியை அறிவித்தது. ஆனால் அதை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். இந்த நிலையில் தீக்குளித்து இறந்த மற்றவர்களுக்கும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை பேரணியில் கலந்து கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்னை பாண்டியன் குடும்பத்திற்கோ தமிழக அரசு நிதியுதவி எதையும் அறிவிக்கவில்லை.

அவ்வாறு செய்தால், தற்கொலை செய்வதை ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என தமிழக அரசு கருதுவதால், நிவாரண நிதி அறிவிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

3000 தற்காலிக ஊழியர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்

nimal-siripala.jpgஅரசாங்க சுகாதாரத்துறையில் பணிபுரியும் மூவாயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு இன்று 12ம் திகதி நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு, மருதானை, எல்பிஸ்டன் திரையரங்கில் நடைபெறும் வைபவத்தின் போது இந்த நிரந்தர நியமனக் கடிதங்கள் வழகப்படவிருக்கின்றன.

வன்னி அகதிகளுக்காக மேலதிக பஸ்கள்

bus.jpgவன்னிப் பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற மக்களின் நலன் கருதி வவுனியா இ.போ.ச.டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சு ஐந்து பஸ்களை வழங்க இணங்கியுள்ளது. ஏற்கனவே வவுனியா டிப்போவுக்கு ஐந்து பஸ்கள் கிடைத்துள்ளன எனவும் டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.

இந்த பஸ்கள் வன்னியில் இருந்து வருகின்ற மக்களை ஏற்றிவருவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள வன்னிப் பகுதி அகதிகளை இந்த பஸ்கள் மூலம் செட்டிகுளத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பஸ்கள் இரவு பகலாக வன்னிப் பகுதி அகதிகளின் சேவைக்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

வன்னிப்பகுதியிலிருந்து வவுனியா வருபவர்கள் தொகை மேலும் அதிகரிக்கும் நிலை -அமைச்சர் ரிசாட் பதியுதீன்

civilians_arrive.jpgவன்னிப் பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற அகதிகளின் தொகை தினமும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் அடுத்த சில தினங்களில் மேலும் இத்தொகை அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் சுகாதார நிலைமைகள் மிக மோசமாகியுள்ளன எனவும் புகார்கள் வந்துள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்ற வன்னிப்பகுதி மக்களுக்கு சேவையாற்ற டாக்டர்கள் முன்வரவேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு விசேட மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்றன எனவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் குடிநீர் உணவு சுகாதார விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனால் பலருக்கு பல நோய்கள் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த அகதிகளின் உடல் நலன்களை கருத்திற்கொண்டு மேலதிக டாக்டர்களை உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பிவைக்குமாறு அமைச்சர் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா நகரில் உள்ள ஏனைய பாடசாலைகளில் இருபது தற்காலிக மலசல கூடங்கள் அமைத்துக்கொள்ளுமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியைக் காண வந்த துப்பாக்கி நபர் கைது!

obama-2001.jpgஅமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை பார்ப்பதற்காக துப்பாக்கியோடு வந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று டிரக்கில் வந்தவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையின் போது ஜனாதிபதி ஒபாமாவிடம் ஒப்படைப்பதற்காக தன்னிடம் ஒரு பார்சல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு கேள்விகளை கேட்டபோது, அவருடைய டிரக்கில் துப்பாக்கி வைத்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனையடுத்து அதிகாரிகள் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். டிரக் வண்டியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி தோட்டாக்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனையடுத்து லூசியானாவை சேர்ந்த ஆல்பிரட் பிராக் என்ற அந்த நபர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கியோடு வந்ததால் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான முயற்சியா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

102 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

election_.jpgவடமேல் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் தேர்தல் தொடர்பான 102 வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வணிக உரிமைகளைப்பாதுகாக்கும் புத்தி ஜீவிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த ஒன்றியம் கடந்த 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமேல் மாகாணத்தில் 50 முறைப்பாடுகளும் மத்திய மாகாணத்தில் 52 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வெற்றிக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது ஒழுக்காற்று விசாரணைக்கு – ஜனாதிபதி மஹிந்த பணிப்பு

dalas_alahapperuma.jpgவிருப்பு வாக்கிற்காக மோதிக்கொள்ளும் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு சுதந்திரக் கட்சி செயலாளருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். ஐ. ம. சு. முன்னணிக்கு கிடைக்க உள்ள வெற்றிக்குக் களங்கம் ஏற்படும் வகை யில் செயற்படும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழஹப்பெரும, இரு மாகாணங்களிலும் எமக்குக் கிடைக்கவுள்ள பாரிய தேர்தல் வெற்றிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படாதிருக்குமாறு கட்சி ஆதரவாளர்களை கோருகிறோம். கெளரவமான வெற்றி யையே நாம் விரும்புகிறோம். கெளரவமற்ற முறையில் அதிகாரம் கிடைப்பதை நாம் விரும்பவில்லை என்றார்.

வன்னியிலிருந்து நேற்றுடன் ஐ.சி.ஆர்.சி.யும் வெளியேறியது

red-cr.jpgவன்னி யிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) பணியாளர்களும் செவ்வாய்க்கிழமையுடன் வெளியேறியுள்ளனர்.  வன்னியில் யுத்த நடவடிக்கைகளால் படுகாயமடைந்த நிலையிலிருக்கும் 250 பேர் நேற்று மாலை முல்லைத்தீவு மாத்தளன் கடலிலிருந்து ஐ.சி.ஆர்.சி.யால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்கள் சென்ற கப்பலில், வன்னியில் எஞ்சியிருந்த ஐ.சி.ஆர்.சி.யின் வெளிநாட்டுப் பணியாளர்களும் வெளியேறியுள்ளனர். தற்போது முல்லைத்தீவில் இயங்கும் ஐ.சி.ஆர்.சி. அலுவலகத்தை அங்குள்ள உள்ளூர் பணியாளர்களே இயக்குகின்றனர்.

எனினும்,  நேற்று முன்தினம் முல்லைத்தீவிலிருந்து வெளியேறிய ஐ.சி.ஆர்.சி.யின் வெளிநாட்டு பணியாளர்கள் மீண்டும் அங்கு திரும்பும் சாத்தியமில்லையென்றே தெரிவிக்கப்படுகிறது.  முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சி.யின் வெளிநாட்டுப் பணியாளர்கள் முழுமையாக வெளியேறியதன் மூலம் தற்போது வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் எந்தவொரு சர்வதேச தொண்டர் அமைப்புகளினதும் வெளிநாட்டுப்பணியாளர்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட நடுப்பகுதியில் வன்னியிலிருந்து அனைத்து சர்வதேச தொண்டர் அமைப்புகளும் வெளியேறிவிட வேண்டுமென்று இலங்கை அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐ.சி.ஆர்.சி. மட்டும் அங்கு செயற்பட்டு வந்தது.  தற்போது ஐ.சி.ஆர்.சி.யும் அங்கிருந்து வெளியேறியுள்ளது.

Ramalingam Muttiah – தமிழ் தட்டச்சின் தந்தை

ramalingam.JPGதமிழ் தட்டச்சின் தந்தை – ONE HUNDRED TAMILS OF THE 20TH CENTUR today is his 50th death Anniversary.
(courtesy: கா. மாணிக்க வாசகர், சரஸ்வதி இதழ், 1959 ) [Nominated by Visagaperumal Vasanthan]

ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழிகளும் உலகமொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமான காரணம். 1875-ம் ஆண்டில் “ரெம’ங்டன்” தட்டச்சு விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள்.

ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இவை தவிர எண்களும் குறியீடுகளும் வடமொழி மூலம் வந்த சில முக்கியமான எழுத்துக்களும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களை உடைய தமிழ் மொழியை ஒரு யந்திரத்தில் அமைப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆங்கில மோகம் வானளாவின்ற அந்த நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர் இருந்தாலும் செய்து முடிக்கும் உடையோர் இல்லை.

பெரு எண்கையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டுமே பண முதலீடு செய்தாலும் விற்பனை ஆகுமா? இந்தப் பிரச்னைகளையெல்லாம் கருத்தில் கொள்ளாது துணிச்சலுடன் செயலில் இறங்கினார் ஒரு தமிழர்.

ஈழ நாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் அப்போது சிறந்த அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உலகுக்கு அளித்துக் கொண்டேயிருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான ஆர் முத்தையா அவர்கள்.

முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிற்குளியில் 24-2-1886-ல் பிறந்தார். இவருடைய தந்தையாரான ராமலிங்கம் பண்பாடு மிக்கவர், கல்வியாளர், பக்திமான். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாயிருக்கும்பொழுது, இவருடைய தந்தையார் இறந்துவிட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில வருஷங்களில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தாள். இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.

சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியாவுக்குப் போக எண்ணியபொழுது டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட கார்லாண்ட என்ற பிரபலமான வர்த்தக ஸ்தாபனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம குமாஸ்தாவாக உயர்ந்து 1930ஆம் ஆண்டு வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம். தமிழ் இலக்கியம் கைத்தொழில் நூல்கள். சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார். இவ்வளவு திறமை வாய்ந்தவராயிருந்தும் அரசாங்க உத்தியோகத்தை இவர் நாடியதே இல்லை. சுயமுயற்சியில் அதிக நம்பிக்கை உடையவர், அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் இவர் எடுத்துச் சொல்வார்.

இவர் கடமையாற்றிய ஸ்தாபனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக ஓர் அறையில் 247 எழுத்தின் வடிவங்களை ஒரு புறமும் தட்டச்சின் 46 விசைகளை மறு பக்கமும் வைத்து எழுத்துக்களை எப்படி விசைகளில் அமைப்பது என்று சிந்தித்தார். கிடைத்த நேரங்களை யெல்லாம் இந்த ஆராய்ச்சிக்கே செலவிட்டார். தம் தமிழ் நண்ர்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அபிப்ராயங்களையும் சேகரித்தார். எவ்வளவு முயற்சி செய்தும் எழுத்துக்களை 72-க்கு மேல் குறைக்க முடியவில்லை. அதுவரையில் கிடைத்த வெற்றியைக் கொண்டு தட்டச்சை நிறைவேற்றும் பணியை மேற் கொண்டார்.

முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை “ஸ்டாண்டர்ட்” பெரிய தட்டச்சு என்று குறிப்ப’ட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத்தனித் தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக்கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது “ந“” என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள “ந”வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

ஆங்கிலத் தட்டச்சைப் போலல்லாது தமிழ்த் தட்டச்சுக்களின் விசைப்பலகை அமைப்பு வேறு விதமாக இருக்கிறது. ஒரு யந்திரத்தில் பழகியவர் அதே முறையில் வேறொரு யந்திரத்தில் அச்சடிக்க முடியாது. ஆகவே, இதை ஒருமைப்படுத்த எண்ணிய சென்னை அரசினர் 1955-ஆம் ஆண்டில் ஒரு குழுவை நிறுவினார்கள். அதன் சிபார்சுப்படியும் பிறருடைய ஆலோசனையின் பேரிலும் இப்பொழுது விசைப் பலகையமைப்பில் ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும், முத்தையா அவர்களின் கண்டு பிடிப்பிலிருந்து அதிக மாற்றம் புதிய முறையில் இல்லை. புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பான அம்சங்களும் இவருடைய தட்டச்சில் உண்டு. இவை புதிய அமைப்பில் சேரவில்லை. இப்பொழுது க’.த’ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் அந்த எழுத்துக்களின் மேற்கோட்டின் நுனியில் இருக்கின்றன. இது தமிழ் எழுத்தைப் பிழையாக்குவதாகும். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’. த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும். ண’. ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

இப்பொழுதிருக்கும் சில தட்டச்சுகள் இரண்டு கை விரல்களுக்கும் சமமாக வேலை கொடுக்கவில்லை. இந்தக் குறையைத் தம் தட்டச்சில் இவர் நீக்கியிருக்கிறார். தமிழெழுத்துக்களில் ய, ள, க, ப, ர, ம, ட, ந, ச, வ, ல, ன, டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபயோகமாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். ஆகவே. அரசினருடைய விசைப்பலகையில் கீழ் திட்டத்தில் இவை அமைந்திருக்கின்றன. முத்தையா அவர்களின் விசைப்பலகையமைப்பும் இதையொட்டியே இருக்கிறதென்றால் இவர் எவ்வளவு ஆராய்ச்சியின் பின் இதை உருவாக்கியிருக்க வேண்டுமென்று நாம் ஊகிக்கலாம்.

முதலாவது உலக யுத்தம் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப்பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வியாபர ஸ்தாபனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப்பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க’. “பிஜோ”. “ஐடியல்” ஆகிய “போர்ட்டபிள்” தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே “ஆர் ஸ’”. “எரிகோ”. “யுரேனியா”. “ஹால்டா” போன்ற தட்டச்சுகள் வெளியாயின.

முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ்சென்ற தெய்வசிகாம ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு அரும்பாடு பட்டார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதி அதை அச்சேற்றுவதற்கு முன்பே காலமாகி விட்டார்