வடமேல் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் தேர்தல் தொடர்பான 102 வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வணிக உரிமைகளைப்பாதுகாக்கும் புத்தி ஜீவிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த ஒன்றியம் கடந்த 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமேல் மாகாணத்தில் 50 முறைப்பாடுகளும் மத்திய மாகாணத்தில் 52 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என ஒன்றியம் தெரிவித்துள்ளது.