2009

2009

இரான் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏமாற்று வேலைக்கு இடமில்லை; போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்: அயதுல்லா கமெனெய்

khamenie.jpgஇரானில் கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல்களை தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள் ஏற்கமுடியாதவை என்றும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரானிய அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனெய் கூறியுள்ளார்.

அதிபர் அஹமதிநெஜாத் அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கான தனது முன்பெப்போதும் இல்லாத அளவிலான ஆதரவை வழங்கிய பின்னர் முதன்முதலாக பகிரங்க வைபவத்தில் உரையாற்றிய அவர், அந்த போராட்டங்கள் தொடர்ந்தால், அவற்றின் விளைவுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களே பொறுப்பு என்று கூறினார்.

அகங்கார சக்திகளும், அமெரிக்காவிலும் வேறு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஊடகங்களும் தேர்தலுக்குப் பின்னர் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டார்கள் என்று அயதொல்லா கமெனெய் சாடினார்.

டெங்கு: மரணம் 139 – பாதிப்பு: 10,417

aedes_aegypti.jpgநாட ளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பலியானோரின் தொகை 139 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் உயரதிகாரி, சுரங்கனி பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில் :-டெங்கு நோயினால் இதுவரை 10,417 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

டெங்கு நோய் பாதிப்பினால் நேற்று முன்தினம் நாடளாவிய ரீதியில் அறுவர் மரணமடைந்துள்ளதுடன், இவர்கள் களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்கள் இனங்காணப்பட்டு டெங்கு நுளம்பு தடுப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர்.

நோய் காணப்படும் பிரதேச சுகாதார அத்தியட்சகர் பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இங்கு சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பாதுகாப்புக் குழுக்கள், பொலிஸார் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய குழுக்களும் செயற்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி முதல் நேற்றுமுன்தினம் வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயினால் கொழும்பு மாவட்டத்தில் 1558 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1198 பேரும், கேகாலை மாவட்டத்தில் 1288 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 1601 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(ஏ) எச்1 என்1: சிகிச்சை பெறும் நால்வரும் பூரண சுகம்; 2 வாரங்களில் வீடு திரும்புவர்

19swine-flu.jpgஇன்புளு வன்ஸா (ஏ) எச்1 என்1 வைரஸ் தாக்குதலுக் கிலக்காகி விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 சிறுவ ர்களும் பூரண குணமடைந்து வருகின்றனர். இன்னும் இரண்டு வாரத்தில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என டொக்டர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.தொற்று நோய் தடுப்புப் பிரிவின் டொக்டர் சுதத் பீரிஸ் நேற்று இதனைத் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் திகதி இனங்காணப்பட்ட சிறுவன் உட னடியாக விசேட வைத்திய பிரிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் விசேட பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனூடாக அந்தச் சிறுவன் வைரஸ் தாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு நன்றிகூறவேண்டும். சிறுவன் காய்ச்சலில் பீடிக்கப்பட்டவுடனேயே எமக்கு அவர்கள் தகவல் தந்தார்கள். சிங்கப்பூர் விமான நிலையத்திலும், எமது விமான துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவ ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கையின் சுகாதாரத் துறையை கண்டுவியக்கும் இதேவேளை பாராட்டவும் வேண்டும் என்றார்.

இலங்கையில் சர்வதேச விமான நிலையம் ஒன்றுதான் இருக்கிறது. இந்தியாவில் 38 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. எந்த வழியாக எவர் வருகிறார்கள் என்பதை கவனிக்கவே முடியாமல் போகும். ஆனால் இலங்கையில் அப்படியல்ல. நிலையத்திலும் அறிவுறுத்தப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்றும் என தெரிவித்தார்.

சிறுவனுடன் 4 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வழமைபோன்று சுட்டித்தனத்துடன் துள்ளி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் துவண்டு போவார்கள் என்று கூறுவது உண்மையல்ல என்றும் கூறினார்.

சிறுவனுடன் விமானத்தில் பயணித்த 185 பேரின் விபரங்களை சேகரித்துள்ளோம். அதுமட்டுமல்ல விமானத்தில் அவருக்கு அருகில் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டில் ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களையும் கண்டுபிடித்து அவர்களைப் பற்றியும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். நாளை 23ம் திகதி வரை அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் டொக்டர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை சிறுவனுடன் விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படும் மற்றுமொருவர் வைரஸ் தாக்கம் காரணமாக விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை இவர் அனுமதிக்கப்பட்டதுடன் வைரஸ் தாக்கத்துக்குள்ளான ஐந்தாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட ஜேதவனாராமய தூபி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

jethawana_stupa3.pngஅநுராத புரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜேதவனாராமய தூபி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.செங்கற்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரியதும் மிக உயரமானதுமான இந்தத் தூபியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

யுனெஸ்கோ நிறுவனம் மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பவற்றின்; ஒத்துழைப்புடன் 1980ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைய சுமார் மூன்று தசாப்தங்கள் சென்றுள்ளன. இலங்கையில் குளங்களை நிர்மாணிப்பதில் புகழ்பெற்ற மன்னராக விளங்கிய மஹகாசேன மன்னனால் கி.மு 276-300 காலப் பிரிவில் இத்தூபி கட்டப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. 1600 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை அழிவுகளுக்கு மத்தியில் முற்றாக இடிந்து விடாது காணப்பட்ட இத்தூபி இலங்கை கட்டடக் கலையின் தேர்ச்சிமிக்க பொறியியல் ஆற்றலுக்கு சிறந்த சான்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

வைரஸை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைக்கு சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

swine_flu.jpgஇன்புஃ ளுவன்ஸா (ஏ) எச்1 என்1 வைரஸ் தாக்க த்தை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் வியப்புக்குரியதும், பாராட்டத்தக்கதுமாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் பிர்தோஸி ருஸ்டம் மெஹ்தா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநா டொன்றின் போதே அவர் நேற்று இதனைத் தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட (ஏ) எச்1 என்1 வைரஸ் என்பது ஆட் கொல்லி வைரஸ் அல்ல, டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் ஒன்றே, அச்சமோ பதற்றமோ படத் தேவையி ல்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையர்கள் மிகவும் அதிர்ஷ்டசாளிகள் என்றே நான் கூறு வேன் என்றும் கூறினார்.

மெக்ஷிகோவில் வைரஸ்தாக்கம் ஏற்பட்டதையடுத்து ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவியதையடுத்து இலங்கை இதற்கு முகம்கொடு ப்பதற்கு ஆயத்தமாகிவிட் டது. தேவையான மருந்து வகைகள், தடுப்பூசிகள் மட்டு மல்லாது. தாக்கம் ஏற்படும் நோயாளிகளை தனியாக பராமரிக்க சகல வசதிகளையும் கொண்ட மருத்துவ மனைகளையும் ஆயத்த நிலையில் வைத்துவிட்டது.

மேலும் விமான நிலையத்தில் பயோ ஸ்கேனர்கள் மூலம் வைரஸ் தாக்கமுள்ளவர்களை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் சகலரையும் அறிவுறுத்தும் விதத்தில் மும்பாயில் 38 பேரும், சிங்கப்பூரில் 49 பேரும், மலேஷியாவில் 17 பேரும், பாங்கொக்கில் 405 பேரும் மேற்படி வைரஸ் தாக்கம் உள்ளவர்களாக பதிவாகியுள்ளனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபன இலங்கைக்கான பிரதிநிதி மெஹ்தி தெரிவித்தார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு திடீர் நிபந்தனை

india-refuge.jpgதமிழ்நாடு அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்கள் இலங்கை செல்ல வேண்டுமானால், “மீண்டும் வரமாட்டேன்” என கியூ பிரிவு பொலிஸாரிடம் உறுதியளிக்க வேண்டுமென தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. இலங்கையில் 1983இல் ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பின், ஏராளமானோர் அகதிகளாக தமிழகம் வந்தனர்.

தமிழகத்தில் 117 முகாம்களில் தங்கியுள்ள இவர்கள், வெளிநபர்களுடன் தொடர்பு வைத்துள்ளனரா என்பது குறித்து கியூ பிரிவு பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். இதன்போது, முகாமில் தங்கியுள்ள அகதிகள் சிலர் இலங்கைக்குச் செல்ல விரும்புவது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு செல்ல விரும்புபவர்கள், கியூ பிரிவு பொலிஸாரிடம், ” மீண்டும் முகாமுக்கு வரமாட்டேன்…” என்று உறுதிமொழி எழுதி கொடுத்து விட்டு, சான்றிதழ் பெற்று தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

டெங்கு பரவும் 2000 வீடுகள் பொலிஸ்-இராணுவத்தால் சுற்றி வளைப்பு

aedes_aegypti.jpgமட்டக் களப்பு, காத்தான்குடி நகர சபைப் பிரிவில் தீவிரமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை சுகாதார பகுதியினர் ஆரம்பித்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் 2000 வீடுகள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் சுற்றி வளைக்கப்பட்டு பாரிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்றும் இன்றும் மேற்கொண்ட சோதனையின் போது சுமார் 600 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தினங்களுக்குள் தமது இருப்பிடங்களைத் துப்புரவு செய்யாவிட்டால் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதாரப் பணிமணை தெரிவித்துள்ளது

யாழ்குடாவுக்கு சாலை வழியாக அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதில் தாமதம்

a-9-loorys.jpgஇலங் கையில் யாழ்குடா நாட்டிற்கு சாலை வழியாகக் கொண்டுசெல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பத்து நாட்களுக்கு முன்பே கொழும்பிலிருந்து கிளம்பியிருந்தாலும், கடந்த இரண்டு நாட்களாகத்தான் அவை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து வருகின்றன.

பொருட்களை ஏற்றிவந்த லாரிகள் கடந்த பல நாட்களாக அநுராதபுரத்தில் தடுத்துவவைக்கப்பட்டிருந்தன. தற்போதுதான் கட்டம் கட்டமாக இந்தப் லாரிகள் யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்கப்பட்டுவருகின்றன.

காத்தான்குடியில் சட்ட விரோத ஆயுதங்கள் ஒப்படைக்கப்படுவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது

இலங் கையின் கிழக்கே மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களிலுள்ள சில முஸ்லிம் பிரதேசங்களில் மறைத்து வைக்கப்டப்டிருப்பதாகக் கூறப்படும் சட்ட விரோத ஆயுதங்களை களைவதற்கான விசேட வேலைத் திட்டமொன்றை பாதுகாப்பு தரப்பினர் ஆரம்பித்துள்ளனர்.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை எதிர்வரும் ஜூலை 2ஆம் தேதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில் பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சட்ட விரோத ஆயுதங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க இதனை அறிவித்துள்ளார். ஆயுதங்கள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினம் World Refugee Day – புன்னியாமீன்

civiling_fleeng3.jpgஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாக World Refugee Day நினைவுகூரப்படுகிறது.  ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day  நினைவு கூரப்பட்டது. பின்னர் இத்தினமானது  2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly  சிறப்புத் தீர்மானமொன்றின்படி,  ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக,  உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும்,  பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.

உறவுகளை இழந்த மனிதன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி! எனக் கூறுவார்கள். இங்கு தேசம் எனும்போது தான் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்ற நிலையையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கும். எனவே, அகதி எனும் பதத்துக்கு ஒரு திட்டவட்டமான வரையறை விதிக்க முடியாது. இத் தினத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும்  பல்வேறு போர்களால் அரசியல்,  சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்கள்,  கருத்தரங்குகள்,  இசை நிகழ்ச்சிகள்,  நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன..

அகதி என்பது,  இனம்,  சமயம்,  தேசிய இனம்,  குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது. அகதி என்ற கருத்துரு,  மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும்,  ஆபிரிக்காவிலும்,  லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால்,  சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர்,  அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார்.

அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும்,  அவர்களின் உரிமைகளையும்,  புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். இது டிசம்பர் 4,  1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற்புறுதி செய்யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து,  கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது,  அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) ஆகும். இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12, 019, 700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34, 000, 000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. 2009 ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பீ.பீ.ஸி உலக சேவை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி மோதல்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான துன்புறுத்தல்கள் காரணமாக உலகில் சுமார் 42 மில்லியன் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மதிப்பிட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக குறைந்த அளவிலானோரே தமது குடியிருப்புகளுக்கு திரும்ப முடிந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்த்தானுகராலயம் தெரிவிக்கின்றது. அகதிகளை பராமரிப்பதற்கான பிரதான பொறுப்பு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் மீதே சுமத்தப்படுவாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தென்னாபிரிக்காவே அதிக அளவான தஞ்சமடைவோரின் விண்ணப்பங்களை பெறுகின்றமையும் இந்த எண்ணிக்கை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமானதென்பதும் குறிப்பி்டத்தக்கது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR)  அல்லது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும்,  ஆதரவளிப்பதற்கும்,  அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். 14 டிசம்பர் 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954 இலும் 1981 இலும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) வரையறுத்துள்ளபடி,  அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள்,  அகதிகள் தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல்,  குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல்,  மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்பனவாகும். 2005 ஆம் ஆண்டு நிலையின் படி மிக அதிகமான அகதிகள்,  பாலஸ்தீனப் பகுதிகள்,  ஆப்கனிஸ்தான், ஈராக்,  மியன்மார்,  சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் எனப் படுகின்றது.

இலங்கையிலும் அகதிகள் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் உள்நாட்டினுள்ளே எத்தனை பேர் அகதிகளாக உள்ளார்கள் என்ற சரியான புள்ளிவிபரம் வெளியிடப்படாவிடினும்கூட,  கணிசமான எண்ணிக்கையினர் அகதிகளாக இருக்கலாம் என கருத இடமுண்டு.

2007ஆம் ஆண்டு அகதிகள் நாளையொட்டி தமிழர்களின் அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள்
வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கைப் பிரகாரம் வட பகுதியிலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரை 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெரும் தொகையான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது 3, 50, 000 பேர் தமிழர் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட சிங்கள பொதுமக்களுக்கு அனைத்துலக உதவியுடன் நிரந்தரமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. பெருந்தொகையான பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ இன்னமும் தற்காலிக முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கான ஆழிப்பேரலை நிதி உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தடுத்துவிட்டது. மழையாலும் வெள்ளத்தாலும் அந்த மக்கள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தமிழர் தாயகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறையேனும் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும்,  1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் கொழும்பிலிருந்தும் தமிழர் தாயகத்திலிருந்தும் பெருந்தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதேநேரம்,  1990களில் வட புலத்திலிருந்து முஸ்லிம்கள் அப்பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்ட நேரம் சுமார் 1இலட்சம் அளவில் இன்னும் அகதிகளாவேயுள்ளனர். எமது இலங்கiயில்  30ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும்,  அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் அனாதைகளானோரும் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும்,  ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டிலும் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர் எனக் கூறப்பட்டது. இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75, 738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறமாக 2009ஆம் ஆண்டு வட புலத்தில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3இலட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளனர்.

அகதிகளின் பொதுவான வாழ்க்கை நிலையை நோக்கும்போது இவர்களின் அன்றாட அடிப்படை இன்னல்களையும் சிக்கல்களையும் உலக அரங்கிலும் உள்ளநாட்டு மக்கள் மத்தியிலும் புலப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படுவதே இந்த அகதிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது எனலாம். இதனை வேறு வகையில் குறிப்பிடுவதாயின் வாழ்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத அகதிகளின் மனக் குமுறல்களை வெளி உலகம் உணர வேண்டும் என்பதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.. ஆனால் உலகம் உணர்ந்ததா என்பது கேள்விக் குறியே! அழகான இச்சிறு கோளினைச் சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களுமொழிந்து,  உலகமெங்கனும் சமாதானமும்,  அமைதியும் ,  இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்ல ஒரு விடிவு காலம் வர இந்த உலக அகதிகள் தினம் உதவியாக இருக்குமெனில் சந்தோஷமே!!