2009

2009

ராகுல் காந்திக்கு விடுதலைப் புலிகளால் மிரட்டல் – உளவுத்துறை

29-rahul.jpgவிடுதலைப் புலிகள்  அமைப்பில் எஞ்சியிருப்பவர்கலால் ராகுல் கந்திக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது என இந்திய இணையத்தளமொன்ற செய்தி வெளியிட்டிருந்தது.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டாலும் கூட, எஞ்சியிருக்கும் புலிகளால், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாம்.

ராகுல் காந்திக்கும், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கம் நாட்டிலேயே உயர்ந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டல் காரணமாகவே, சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது சாலை மார்க்கமாக ராகுல் காந்தி பயணிக்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர்களை அதிகம் பயன்படுத்தினார்.

இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிடமிருந்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் அதிக மிரட்டல்  உள்ளதாம்.

பிரிட்டிஷ் எதிரிகளை இந்தியாவில் தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்யும் கூட்டம்

290909family.jpgபிரிட்டனில் வாழும் இந்தியர்கள், உறவுக்காரர்களிலும் தொழில் சகாக்களிலும் தமக்குள்ள எதிரிகளைத் தீர்த்துக்கட்டுவதற்கு, இந்தியா சென்று அங்கு பணத்துக்காக கொலை செய்யும் நபர்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்பது பிபிசி நடத்திய ஒரு புலனாய்வு செய்திச் சேகரிப்பில் தெரியவந்துள்ளது. இந்த எதிரிகள் பிரிட்டனிலிருந்து இந்திய துணைக்கண்டத்துக்கு செல்லும்போது அங்கே வைத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

பணத்துக்காக கொலை செய்யும் ஆட்கள் குறைந்த பணத்திற்கே கிடைப்பார்கள் என்பதாலும், மாட்டிக்கொள்கிற ஆபத்து குறைவு என்பதாலும், எதிரிகளை இந்தியாவில் வைத்துத் தீர்த்துக்கட்டுவதை பிரிட்டிஷ் இந்தியர்கள் தெரிவுசெய்கிறார்கள்.

இப்படியான குற்றங்களைச் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள் என்பது அங்கு அரிதாகவே நடக்கிறது. கடந்த காலங்களில் இவ்வாறாக இந்தியாவில் ஆள் வைத்தது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளதாக இந்தியாவிலும் பிரிட்டனிலும் இவ்விஷயத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருபவர்கள் நம்புகின்றனர்.

பிரிட்டனில் தீட்டப்பட்டு முக்கியமாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இப்படியான கொலைச் சதிகளில் கவனிக்கப்படாமல், விஷயம் வெளியில் வராமலேயே சென்றுவிட்டுள்ளன என்று ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு எண்ணிக்கை என்று கூறும் பஞ்சாப் பொலிசார், தமது பொலிஸ் அணியில் ஊழல் சகஜம் என்ற குற்றச்சாட்டையும் மறுக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல ஐக்கிய ராஜ்ஜிய அதிகாரிகளிடம் உதவிகளை நாடுகின்றனர். பிரிட்டிஷ் பிரஜைகள் கிட்டத்தட்ட ஆறு பேர் தில்லி மற்றும் பஞ்சாப் சென்றபோது காணாமல் போயுள்ளதாய் தற்போது தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக பிரிட்டனின் வெளியுறவுத்துறை அலுவலகம் கூறுகிறது.

கண்ணிவெடிகளின் மேல் அப்பாவிகளை தள்ளிவிட நாம் தயாரில்லை – ஜனாதிபதி

290909mahinda.jpgவன்னியில் அங்குலத்திற்கு அங்குலம் புதைக்கப்பட்டிருக்கும் நிலக் கண்ணி வெடிகளின் மேல் அப்பாவி மக்களைத் தள்ளிவிட நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம், இந்த நாட்டை மீண்டும் அடகு வைப்பதற்கும், ஏலத்தில் விடுவதற்கும் நாம் ஒரு போதுமே இடமளியோம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ரன்பிம (தங்கபூமி) காணி உறுதி வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இப்போது சிலருக்கு கோஷங்கள் எழுப்புவதற்கு விடயங்கள் இல்லாதிருக்கின்றது. அதனால் கடந்த காலத்தில் யுத்தம், மனித உரிமை குறித்து பேசியவர்கள் இன்று இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாகவும், அவர்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்துமாறும் கூறுகின்றனர்.

இந்த மக்களைப் புலிப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்தே எமது படை வீரர்கள் மீட்டெடுத்தனர். இம்மக்களைப் பாதுகாத்து அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவர்.

இம்மக்களைப் பராமரிப்பதற்காக நாளாந்தம் கோடிக்கணக்கான ரூபாக்களை செலவிடுவது அவர்களது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல. எமக்கு அரசியலை விடவும் மக்களின் உயிர் முக்கியமானது.

அதனால் புலிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் முழு உலகினதும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் அம்மக்களை நாம் விடுவித்தோம். இன்று இம்மக்களுக்காகப் பேசுபவர்கள் இம்மக்களைப் புலிகள் மனித கேடயங்களாகப் பாவித்ததை அன்று சர்வதேச சமூகத்தினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்களா? இல்லை. மாறாக எமக்கு கடனுதவி வழங்க வேண்டாம் என்று வங்கிகளிடமும், ஜி. எஸ். பி. பிளஸ் உதவியை நிறுத்துமாறுமே கூறி வந்தனர்.

அமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர

mangala2222.jpg“யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில்,  அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார். இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்ல 2800 பேருக்கு அனுமதி – 5300 ஆக அதிகரிப்பது பற்றி பேச பெளஸி சவூதி விரைவு

இலங்கையில் இருந்து இம்முறை புனித மக்காவுக்கு யாத்திரை செல்வதற்காக 2800 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தக் கோட்டா தொகையை 5300 ஆக அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகச் செயற்படும் அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி சவூதி அரேபியா சென்றுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

ஹஜ் ஏற்பாடு தொடர்பாக அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி கடந்த வெள்ளிக்கிழமை ஹஜ் முகவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் போது ஹஜ் யாத்திரை தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகள் கோட்டா தொகை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 5 ஆயிரம் யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா செல்வரென எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்.  இம்முறை இலங்கையில் இருந்து செல்ல 2800 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகை போதுமானது அல்ல எனவும் இதனால் மேலும் 2500 பேருக்கு மேலதிகமாக அனுமதி பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று தபால் மூல வாக்களிப்பு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (29) நாளையும் (30) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,151 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குச் சீட்டுகள் யாவும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

திறைசேரி செயலாளர் இன்று பதவியேற்பு

திறைசேரி செயலாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி பீ.பி. ஜயசுந்தர இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். நிதி அமைச்சில் இன்று காலை நடைபெற்ற சமயக் கிரியைகளையடுத்து அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கலாநிதி ஜயசுந்தரவுக்கு திறைசேரி செயலாளருக்கான நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்வி நிர்வாக சேவையில்; நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – கல்வி அமைச்சு தகவல்

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்பில் நிலவும்; 284 வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் சேவையின் முதலாம் வகுப்பிலுள்ள அதிபர்களே இலங்கை கல்வி நிர்வாக சேவையில் மூன்றாம் வகுப்புக்கு பதவி உயர்வு பெறவுள்ளனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம்; கல்வி அமைச்சில் நடாத்தப்படவுள்ளதோடு ஒக்டோபர் மாத இறுதியில் நியமனக் கடிதங்களும் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிபர் சேவையின் முதலாம் வகுப்பிலுள்ள அதிபர்கள் எழுத்துப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற விபரங்களின் அடிப்படையில் கல்வியமைச்சினால் நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளார் மேலும் குறிப்பிட்டார். 

ஈரான் புதிய குறுந்தூர ஏவுகணை பரீட்சிப்பு

ஈரான் சென்ற ஞாயிற்றுக்கிழமை புதிய ஏவுகணை ஒன்றைப் பரீட் சித்தது. இந்த ஏவுகணை குறுந்தூர எல்லைகளைச் சென்றடைந்து குறித்த இலக்குகளைத் தாக்கும் திறனுடையது. ஈரான் தொலைக்காட்சிகள் ஏவுகணை பரீட்சிக்கப்படுவதை ஒளிபரப் பின.  சர்வதேச அறிவுரைகளை ஏற்கத் தயாரெனத் தெரிவித்துள்ள ஈரான் யுரேனியம் செறிவூட்டல்களை மின்சாரத் தேவைகளுக்காகச் செய்வதாக கூறுகின்றது.

அண்மையில் ஈரான் தனது இரண்டாவது அணு உலையைப் பார்வையிட சர்வதேச அணு முகவர் அமைப்பின் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் துரிதம்; 60 ஆயிரம் பேர் இதுவரை மீட்பு – வெளிநாட்டு உதவிகளை பிலிப்பைன்ஸ் எதிர்பார்ப்பு

280909.jpgபிலிப் பைன்ஸ் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் பலியானோர் தொகை 73 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை மழை ஓய்ந்ததால் வெள்ளம் குறையத் தொங்கியது. இதனால் மீட்புப் பணிகள் தடையின்றித் தொடர்ந்தன.

மீட்கப்பட்டோரில் அறுபதாயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் சிறுவர்களே அதிகமாகும். ஹெலிகொப்டர்கள், தோணிகளின் உதவியுடன் வெள்ளத்தில் தத்தளித்தோர் காப்பாற்றப்பட்டனர்.

வெள்ளம் முற்றாக வடிந்த பின்னரே சேத விபரங்களின் சரியான தகவல்களை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் கூறினர். வெள்ளத்திலிருந்து தப்பும் பொருட்டு மக்கள் வீட்டுக் கூரைகளின் மேலும் உயரமான இடங்களிலும் ஏறிக் கொண்டனர்.

ஒன்பது மணித்தியாலங்களுக்கு இடைவிடாது மழை பெய்ததால் இருபது அடி உயரத்தில் வெள்ளம் நின்றது. பிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலா உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. நாற்பது வருடங்களின் பின்னர் இப்பெரு வெள்ளம் பிலிப்பைன்ஸைச் சேதப்படுத்தியது.

மக்களைப் பொறுமையாக இருக்கும்படி பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கோரியுள்ளதுடன், வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பேர் வரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளனர்.