கல்வி நிர்வாக சேவையில்; நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – கல்வி அமைச்சு தகவல்

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்பில் நிலவும்; 284 வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் சேவையின் முதலாம் வகுப்பிலுள்ள அதிபர்களே இலங்கை கல்வி நிர்வாக சேவையில் மூன்றாம் வகுப்புக்கு பதவி உயர்வு பெறவுள்ளனர். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம்; கல்வி அமைச்சில் நடாத்தப்படவுள்ளதோடு ஒக்டோபர் மாத இறுதியில் நியமனக் கடிதங்களும் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிபர் சேவையின் முதலாம் வகுப்பிலுள்ள அதிபர்கள் எழுத்துப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற விபரங்களின் அடிப்படையில் கல்வியமைச்சினால் நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளார் மேலும் குறிப்பிட்டார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *