திறைசேரி செயலாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி பீ.பி. ஜயசுந்தர இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். நிதி அமைச்சில் இன்று காலை நடைபெற்ற சமயக் கிரியைகளையடுத்து அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கலாநிதி ஜயசுந்தரவுக்கு திறைசேரி செயலாளருக்கான நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.