முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் இரு சிறுவர்கள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் ஒருவரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹிச்சிராபுரத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் இரண்டு சிறுவர்களின் வாய்க்குள் தனது ஆணுறுப்பினை வைத்து பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞன் முள்ளியவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் விடயமாக காணப்படுகின்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறுவர்கள் மீதான இந்த துஷ்பிரயோகங்கள் பாதுகாப்பற்ற சிறுவர்கள் உலகம் ஒன்று உருவாவதை எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றது. முடியுமானவரை உங்களுடைய வீட்டு சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.