யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் அவர் பயணித்த படகு கவிழ்ந்தமையால் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று(11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் மாதகல் சம்மாந்துறையைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மீனவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் படகு கவிழ்ந்து காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன் குறித்த நபரின் சடலமும் மீட்கப்பட்டது.
மீனவரின் படகுமீது கடற்படையினரின் படகுடன் மோதியே விபத்து நேர்ந்துள்ளதாக குறித்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எவ்வாறாயினும் கடற்படையினரின் படகுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானதென இளவாழை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.