26

26

கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ள சுமார் 61 கோடி மாணவர்கள் – யுனிசெப் கவலை !

கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் அமைப்பு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் பல நாடுகளில் இலட்சக்கணக்கான குழந்தைகள் அடிப்படை திறன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும், அதனால் மன இறுக்கம், போதிய ஊட்டச்சத்து குறைவின்மை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை குழந்தைகள் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயதிற்குள்ளான குழந்தைகளில் 70 சதவீதம் பேர் சாதாரண வாசகங்களை கூட வாசிக்கக் கூடிய திறனற்று உள்ளதாகவும், பாடசாலையில் இடைநிற்றல் அளவு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விரைவில் பாடசாலைகளை திறக்குமாறு உலக நாடுகளிடம் யுனிசெப் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

“காணாமல் போனோருக்கு மரணசான்றிதழ் வழங்கி பிரச்சினைக்கு தீர்வு வழங்க முற்படுகிறோம்.” – நீதி அமைச்சர் அலிசப்ரி

“காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்கி இந்தப் பிரச்சினைகளை இத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.” என  நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற, நடமாடும் நீதிக்கான அணுகல் சேவை வேலைத்திட்டம் தொடர்பில் நேற்றைய தினம் நீதி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“காணாமல்போனோர் விடயத்தில் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க வேண்டியுள்ளது. நீண்ட காலமாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

எவ்வாறெனினும், வடக்கில் காணமால் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் பலர் குறித்து அரசாங்கத்திடம் எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களைப் பெற்று இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்கின்றது.

வடக்கில் யுத்தத்தின் போது காணமால் போனவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அவர்களின் குடும்பத்தினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.

ஆகவே அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் வழங்கக்கூடிய தீர்வுகள் என்ன? பாதிக்கப்பட்ட தரப்புக்கு நட்டஈடு வழங்குவது மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்கி இந்தப் பிரச்சினைகளை இத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை அரச தலைவர் தொடர்ச்சியாக எம்மிடத்தில் வலியுறுத்தி வருகின்றார்.

வடக்கில் காணமால் ஆக்கப்பட்ட நபர்களின் உறவினர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள வேண்டும், ஆதாரங்களுடன் அவற்றை ஒன்று திரட்டி பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்றார்.

ஊரடங்கு காலத்தில் விருந்தில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் – விசாரணைகளை ஆரம்பித்தனர் லண்டன் போலீசார் !

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போரிஸ் ஜோன்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. அவருக்கு சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது.
இதற்கிடையே, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கீழ் சபையில் பேசிய போரிஸ் ஜோன்சன், கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என ஒப்புக்கொண்டார். அதற்காக மன்னிப்பு கேட்டார். ஆனால், போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது பற்றி லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.   இதுதொடர்பாக மெட்ரோபொலிடன் காவல் ஆணையாளர் கிரெஸ்சிடா டிக் கூறுகையில், டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த எண்ணற்ற நிகழ்ச்சிகள் பற்றி ஸ்காட்லாந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தவைப்பு !

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 07ஆம் திகதி வரையில் ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த வியாழேந்திரன் உட்பட ஆறு பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியை காணவில்லை – தொலைபேசி மிரட்டலால் பதற்றம் !

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியை காணவில்லை என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பழைய கச்சேரி வீதி, கிளி நகர் பகுதியில் வசிக்கும் செந்தூரன் பகலினி என்ற 14 வயதுடைய சிறுமியே கடந்த 17ஆம் திகதியிலிருந்து காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சிறுமி தொடர்பாக பெற்றோரிடம் வினவியபோது, கடந்த 17 ஆம் திகதி மகளைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர், தங்களுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ள சிறுமி தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் 0774188975 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு காவல்துறையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

“அரச நிதியை வீணாக்க இடமளிக்க முடியாது .” – அங்கஜன் இராமநாதன்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு, சேவை இடம்பெறாமலுள்ள யாழ் புதிய பேருந்து நிலையத்தில் எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் சேவைகள் இடம்பெற வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தினார்.

அரச நிதியை வீணாக்கும் வகையில், புதிய பேருந்து நிலைய இயக்கம் இடம்பெறாமலிருப்பதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது என தெரிவித்த அவர், தனியார் மற்றும் இ.போ.ச இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற, வீதி போக்குவரத்து நெருக்கடியை குறைப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட, வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளிடம் இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்த நிலையில் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட, வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவராசா சிவபரன், “முதற்கட்டமாக தமது சேவைகளை பெப்ரவரி 01ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்ததோடு, தம்மைத்தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையினரும் அங்கு சேவையில் ஈடுபடவேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடலொன்றை நடாத்திய பின்னர் தமது சாதகமான நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இபோச வட மாகாண பிராந்திய முகாமையாளர் செல்லத்துரை குணபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் திரிபுக்கு எதிரான புதிய தடுப்பூசி !

பைசர் மற்றும் பயோடெக் ஆகியவை ஒமிக்ரோன் திரிபுக்கு எதிரான புதிய தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளன.

தடுப்பூசியின் இந்த பூஸ்டர் டோஸ், ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 1,420 ஆரோக்கியமான நபர்களிடம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையானது தடுப்பூசியின் பாதுகாப்பு, அதன் செயல்திறன், நோயாளியின் சகிப்புத்தன்மை நிலை மற்றும் நோயெதிர்ப்பின் நிலை ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.

மாவட்ட செயலக வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் – குவிக்கப்பட்ட பொலிஸார் !

வவுனியா மாவட்ட செயலக வளாகத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியதனால் இரு பகுதியினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை உள்ளடங்களாக நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்  மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் | Thinappuyalnews

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், “நீதி அமைச்சினால் நீதி கிடைப்பதில்லை”, “கால அவகாசம் வேண்டாம் நீதி தான் வேண்டும்”, “செயல் திறன் அற்ற ஓ எம் பி யை நம்பி காலத்தை கடத்தாது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துங்கள்” என எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் அரச அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – இலங்கையில் புதிய திட்டம் !

சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ள தாக அமைச்சர் தெரிவித்தார்.

காற்று மாசைக் குறைக்கவும், நேர விரயத்தைத் தடுக்கவும் தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங் களுக்காக சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது ஒரு வாகனம் ஒன்றுக்கு கிலோ மீற்றருக்கு ரூ.103.56 அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக கணக்கெ டுப்பில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோ மீற்றருக்கு 236 ரூபாவை மீதப்படுத்த முடியும் எனவும் அரசாங் கத்துக்கு 339 ரூபா இலாபத்தை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் லசித் மாலிங்க !

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியின் வியூக பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது.