01

01

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா பரவல் – அதிர்ச்சியில் உலக நாடுகள் !

கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்தது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்டது.

இது மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. இதனால் உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளோரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது ப்ளூ காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஏற்படுவதை குறிக்கும்.

மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வாவில் உள்ள பெய்லின்சன் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு ப்ளோரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுடன் ப்ளூவென்சா தொற்று இணைவதால் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம் என்றும் சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வகை ப்ளூரோனா வைரஸ் தொற்று குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

“சம்பள பிரச்சினையை தீர்க்க கூட்டு ஒப்பந்த முறைமை அவசியமாகும்.” – ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கூட்டு ஒப்பந்த முறைமை அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிலரின் அரசியல் நோக்கம் காரணமாகவே பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் – இந்த வருடம் ஆரோக்கியமானதாக அமையட்டும் !

மலர்ந்துள்ள இந்த 2022 புதிய ஆண்டானது அனைவருக்கும் ஆரோக்கியமான ஆண்டாகவும் – விட்டுக்கொடுப்புடனும் – சக மனிதர்களை புரிந்து கொள்ளும் மனோநிலையை இன்னும் வளர்க்க கூடிய ஆண்டாகவும் – மனிதநேயமும் – ஜீவகாருண்யமும் மேலோங்கி உங்களுடைய கனவுகள் – எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவேறக்கூடிய ஆண்டாக அமைய தேசததின் சார்பாக அனைத்து வாசகர்களுக்கும் புதிய ஆண்டு வாழ்கத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த வருடம் எங்களுடைய தேசத்துக்கு நீங்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் எங்களை இன்னும் சிறப்பாக இயங்க செய்திருந்தது. இந்த வருடத்திலும் அதே ஆதரவு எதிர்பார்ப்புடன் வருடத்தை ஆரம்பிக்கிறது தேசம்.. !