2010

2010

கிளிநொச்சியில் மக்களிடம் பணம் பறிக்க முற்பட்ட மோசடிக் கும்பலில் பிடிபட்ட நால்வருக்கு விளக்கமறியல்.

காணாமல் போனதாகக் கருதப்படும் புலிச்சந்தேக நபர்களை விடுவிப்பதாகக்கூறி கிளிநொச்சியில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற நால்வர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களில் மூவர் கனகபுரம் பாடசாலையில் வைத்து மக்களிடம் பணம் பெறவந்த போது பாடசாலை அதிபரின் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவித்ததையடுத்து பிடிபட்டமை தெரிந்ததே. மேஜர் சீலன் என்பவருடன் அவரது முகவர்களாக செயற்பட்ட நால்வர் நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதவானால் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றில் பொலிஸார் சமாப்பித்த அறிக்கையில் மேஜர் சீலன் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவருக்கும் இராணுவத்தினருக்குமிடையில் சம்மந்தம் எதுவுமில்லை எனவும், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக தன்னை அவர் அவ்வாறு அறிமுகம் செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மாகம்புர சர்வதேச துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

jetliner.jpgமுதலாவது கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்று முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்ததையடுத்து இன்று அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமிடக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு சுகவீனம் சிறைச்சாலை மருத்துவமனையில்

sarath-in-court.jpgமுன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார். பொன்சேகா சுகவீனமடைந்திருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக வி.ஆர்.டி.சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைக்கு சமுகமளித்திருந்த பின்னர் சிறைச்சாலைக்குத் திரும்பிச் சென்ற பொன்சேகா பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு நாளை 19ஆம் திகதி காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கொழும்பு கோட்டை, முதல் கொள்ளுப்பிட்டி சந்திவரை வீதிகள் மூடப்படவுள்ளன. காலி வீதியூடாக கொழும்பு நோக்கி வரும் கனரக வாகனங்கள் டிக்மன் வீதியூடாக சென்று ஹெவ்லோக் வீதி வழியாக கொழும்பு நகரை அடைய முடியும். இலகு ரக வாகனங்கள் கொள்ளுபிட்டி சந்தி வரை வந்து தர்மபால வீதி வழியாக கொழும்பு நகரை அடையமுடியும். மாற்று வழிகளை சாரதிகளுக்கு சுட்டிக்காண்பிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் கடமையிலீடு படுத்தப்பட்டுள்ளனர்.

மூடப்படவுள்ள வீதிகள் வருமாறு,

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதி, கோட்டை ரயில் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியும், ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதியும்,

புறக்கோட்டை விமலதர்ம பிரதர்ஸ் முன்பாகவுள்ள மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம் முதல் பெஸ்டியன் வீதி, சதாம் வீதி, லோட்டஸ் வீதி, பிரிஸ்டல் வீதி, யோர்க் வீதி, லோட்டஸ் வீதியுடன் வங்கி வீதி, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி,

கொம்பனித்தெரு முதல் ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, மாக்கான் மாக்கார் வீதி வழியாக காலிமுகத்திடல் நோக்கிச் செல்லும் வீதி,

சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை நவம் மாவத்தை வீதி,

ஹோர்டன் சுற்றுவட்டம் முதல் பொதுநூலக சுற்றுவட்டம் வரையிலான வீதி,

எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை வீதி தர்மபால மாவத்தை சந்தியிலிருந்து சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மாவத்தை முதல் கொழும்பு மாநகர சபை வரையிலான வீதிகள் என்பன நாளை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மாகம்புர துறைமுகத்தில் முதலாவது கப்பல் இன்று நங்கூரமிடும்

அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகத்தின் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகளின் நிறைவும் முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வும் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு மாகம்புர துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிதியாகக் கலந்துகொள்வார்.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமிடக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. கட்சியினர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்! : PLOTE அறிக்கை

PLOTE_Logoயுத்த காலங்களில் காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்படோர் குறித்த பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஜனாநாயக ரீதியிலான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

யுத்தம் முடிவுற்று ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஜனநாயக சூழல் இன்னமும் முழுமையாக திரும்பவில்லை. பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், கணவன்மாரை இழந்த விதவைகளென தமிழ் சமூகம் கண்ணீரும் கவலையுமாக வாழுகின்றனர். இந்த மக்களின் வேதனைகளுக்கு நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நடாத்துவதற்கு வடமாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வேறு எந்த தமிழ் கட்சிகளும் முன்வராத நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை வரவேற்கின்றோம்.

தமிழ் மக்கள் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாட்டில் எமக்கு உடன்பாடு இல்லாத போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியாக அவர்கள் நடத்திய போராட்டத்தினை நாம் ஆதரிக்கின்றோம்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பி.யினர் கொண்டிருக்கும் கொள்கையில் எமக்கு உடன்பாடு இல்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 1987ம் ஆண்டு இணைக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களை (வடகிழக்கு மாகாணங்கள்) பிரிப்பதற்கு நீதிமன்றம் சென்றவர்கள் ஜே.வி.பி.யினர். இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, அடிப்படை உரிமையையும் நிராகரித்தவர்கள். ஆகவே அரசியல் ரீதியாக எமது கட்சிக்கும் அவர்களுக்கும் இடையில் அதிக முரண்பாடுகள் உள்ளன.

நாம் எவ்வாறு சிங்கள மக்களின் உயிர்களுக்கு சேதம் விளைவிக்காது இருந்தோமோ, அதே போன்று ஜே.வி.பி.கட்சியினரும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஒருபோதும் தீங்கு இளைத்திருக்கவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஜே.வி.பி.கட்சியினர் மேற்கொள்ளும் ஜனநாயக போராட்டங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சா;வதேச கிளைகள் எப்போதுமே தமது ஆதரவை நல்கும் என்பதனை தொpவித்து கொள்கின்றோம்.

ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அனுதாபம் காட்டுவதற்கு பதிலாக தமிழ் மக்களின் செறிவினை குறைக்கும் திட்டத்தில் குடிபரம்பலை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் ஜனநாயக ரீதியாக போராடும் உரிமையையும் மறுதலித்து வருகின்றது. கடந்த 15ம் திகதி ஜே.வி.பி.கட்சியினரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஜனநாயக வழிமுறை ஆர்ப்பாட்டத்தினை குழப்பும் முகமாக அரச இயந்திரம் செயற்பட்டு அடாவடித்தனம் புரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவ் கட்சியின் தொண்டர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அரசின் இந்த அராஜக செயலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகள் வன்மையாக கண்டிக்கின்றது.

அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.

இலங்கை அமைச்சரவையில் 7 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

22 நவம்பர் 2010இல் இலங்கை அமைச்சரவையில் 7 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஜனாதிபதி ராஸபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பதவியேற்றபின்பு நடைபெறும் முதலாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். 2000 ஆண்டு காலப்பகுதியிலிருந்து அமைச்சரவையின் பிரதி அமைச்சர்களாக இருந்த பிரதி அமைச்சர்கள் சிலர் இந்த மாற்றத்தின்போது அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

யுஎன்பி யிலிருந்து அரசுடன் சேர்ந்து கொண்டவர்களில் இருவரும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸிலிருந்து ஒருவரும் அமைச்சரவையில் சத்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிரான கருத்துரைப்பும் கலந்துரையாடலும்

Homophobia_Erase_the_HateGay / Lesbian / Trans_gender ற்கு எதிரான பல்வேறு வகையான கருத்துக்கள் இயல்பாக்கப்படுவதும் (Normalizing Discourses), அவர்களது தெரிவுசார் உரிமைகள் மறுக்கப்படுவதும், சமூகத்தின் அங்கத்தவர்களாக அவர்களது இருப்பு தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதும் தமிழ்ச்சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவருகிறது. பரவலான இக்காழ்ப்புணர்வுக்கு எதிராக எமது எதிர்க்குரல்களைப் பதிவு செய்தல் அவசியமாகின்ற இந்தவேளையில்….

பொது ஊடகங்கள் சிலவும் இக்காழ்ப்புணர்வு முழுத் தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ற பிரமையை ஏற்படுத்த முயல்கின்றன. ஊடகங்கள் தம் விழுமியங்களைத் தவறுவதைச் சுட்டிக்காட்டவும், எமது தன்னிலையை சுயவிமர்சனம் செய்யவும், விளிம்புநிலையாக்கம் (Process of Marginalization) குறித்தான விவாதங்களை மேற்கொள்ளவும்….

நாங்களும் நீங்களுமாய் ஓர் உரையாடலுக்கான பொதுக்களத்தில் சந்திப்போம்

Where: Scarborough Civic Centre
150 Borough Road
(McCowan & Ellesmere)

When: Friday, November 19, 2010
At 6.00 PM

Friends Aganinst Homophobia
416 725 4862 / 647 829 9230/ 416 841 6810
email: friendsagainsthomophobia@gmail.com

நாவற்குழியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு.

Douglas_Devanandaயாழ். நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் அத்துமீறிக் குடியமர்ந்துள்ள சிங்கள மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அம்மக்கள் அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு தன்னை ஜனாதிபதி பணித்துள்ளதாக பாரம்பரிய மற்றும், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தும் போது இதனை அவர் தெரிவித்தார். தான் இவ்விடயம் தொடர்பாக அம்மக்களை சந்தித்து கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அத்துமீறி குடியேறுவது தடுக்கப்படல் வேண்டும் எனவும், சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் அது தவாறான செயல் எனவும் அவர் குறிப்பிட்டாhர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜே.வி.பியினரின் நோக்கம் சரியா பிழையா என்பதற்கப்பால் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தமை கண்டிக்கப்படவேண்டிய ஒன்று எனவும் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா குறிப்பிட்டார்.

“யாழ்ப்பாணத்தில் எங்களை பொதுமக்கள் தாக்கவில்லை” -ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவிப்பு.

Sunil_Handunnetti_JVP_MPயாழ்ப் பாணத்தில் ஜே.வி.பியினரை பொதுமக்கள் தாக்கினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி தவறானது என்றும், தங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுப்பிரிவினரே செயற்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான ஜே.வி.பியின் நடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை பத்தரமுல்ல பெலவத்தயில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யாழ்நகரில் தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தாம் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் ஜே.வி.பியினர் மீது தாக்குதல் நடத்தியதாக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதிலிருந்தே தாக்குதலை யார் மேற்கொண்டனர் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த பொலிஸார் எங்களை உடனடியாக குடாநாட்டை விட்டு வெளியுறுமாறும், தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர் யாழ். நகரிலும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் தமிழ் மக்கள் தங்களுடன் நல்லுணர்வுடன் நடந்து கொண்டனர். வைத்தியசாலை வைத்தியர்கள். தாதியர் முதலானோர் தங்களுடன் பண்பாக நடந்து கொண்டதோடு தங்களை சிரத்தையோடு கவனித்தனர் எனவும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்கில் தற்போது இரண்டாவது பிரபாகரனின் ஆட்சி நடைபெறுகின்றது. கோத்தாபய ராஜபக்ச அங்கு பிரபாகரனாக செயற்படுகின்றார் எனவும், புலனாய்வப் பிரிவினா சிந்திப்பதையும் நினைப்பதையும் பொதுமக்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டார்.

அச் செய்தியாளர் மாநாட்டில் அவர் தங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும் காண்பித்தார்.