2010

2010

நூல் வெளியீட்டு விழா – ‘இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு’

Mayooran_Bookசுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் ஆதரவில் இடம்பெறும் ஊடகவியலாளர் அ.மயூரனின்  ‘இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை விமர்சன ரீதியான ஒரு மதிப்பீடு’ என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று யூன் 5, 2010ல் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

ஜுன் 05, 2010 சனிக்கிழமை, மாலை 4.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில் மண்டபம்
5 Chapel Road, West Ealing, London W13 9AE

கலை நிகழ்ச்சிகளும், தொடர்ந்து இராப்போசன விருந்துபசாரமும் நடைபெறும்.

குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்க உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகின்றோம்.

அன்றையதினம், ஈழத்தில் வெளியான புதிய தமிழ் நூல்களின் கண்காட்சியும் விற்பனையும் வாசகர் வட்டம் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

அ.மயூரன்
நூலாசிரியர்
078 9498 6780

ஐ.தி.சம்பந்தன்
செயலாளர்,
சுடரொளி வெளியீட்டுக் கழகம்
020 8552 6992

வெளிநாட்டு உதவிகளில் 60 வீதம் வடமாகாண அபிவிருத்திக்கே பயன்பாடு – ஆளுநர் சந்திரசிறி

cha.jpgவெளி நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த உதவிகளில் 60 சதவீதமான நிதி வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் இந்தளவு நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு ஒதுக்கப்படும் நிதிகள் வட மாகாணத்தின் உட்கட்டமைப்பு, வீதி, நீர்ப்பாசன, மின்சார, விவசாய, வீடமைப்பு, குடிநீர் வசதி, மீள்குடியேற்றம், நிவாரண, கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான், சீனா உட்பட பல்வேறு உலக நாடுகள் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சிக்கு சிறந்த செய்திக்கான விருது!

channel-4.jpgஇலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் – 4  செய்திச்சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறந்த தொலைக்காட்சி செய்திக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றது. 

திரைப்பட விழாவும் இந்திய முதலீடும் இலங்கையின் வளர்ச்சிக்கு அங்கீகாரம் – iifa விழாவில் ஜனாதிபதி மஹிந்த

Mahinda Rajapaksaஇலங்கை யின் மீதும் அதன் பொருளாதாரக் கொள்கையின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினாலேயே சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை இந்தியா இலங்கையில் நடத்த முன்வந்துள்ளது. அது மட்டுமன்றி இலங்கையில் அதிகளவு முதலீடுகளைச் செய்யவும் இந்தியா தற்போது முன்வந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவின் முன்னோடியாக நேற்று இந்திய – இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் விசேட அமர்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

வர்த்தக சம்மேளன அமர்வினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக வருகை தந்திருந்தார்.ஜனாதிபதியுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பேசுகையில்:-

பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு வருடங்களுக்கு முன்னர் தான் நாம் வெற்றி கண்டோம். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், சிறுவர் போராளிகள், குண்டுத் தாக்குதல்கள் என பயங்கரவாதத்துக்கு வேறு பரிமாணத்தை எல். ரி. ரி. ஈ. யினர் அறிமுகப்படுத்தினார்கள். இருப்பினும் இராணுவ ரீதியான எங்கள் வெற்றியானது உலகளாவிய ரீதியில் அறியப்பட்டபோதும், பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றி பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை.

ஆதலால் பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதாயின் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை வருடம்தோறும் 6 சதவீதத்திலும் பார்க்கக் கூடுதலான வளர்ச்சியை எமது நாடு அடைந்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் பணவீக்கம் 22 சதவீதமாகவும் 2009 இல் 4 வீதத்திலும் பார்க்கக் குறைவாகவும் இருந்தது. உட்கட்டமைப்புகள் நாம் என்றும் எதிர்பாராத வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், மீன்பிடித்துறை முகங்கள், ரயில்வே பாதைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

எமது நாட்டின் வேலை வாய்ப்பின்மை 5.7 சதவீதத்திலும் குறைவாக இருக்கின்றது. உலகில் வேலை வாய்ப்பின்மை மிகக் குறைந்தளவில் இருப்பது இலங்கையில் மட்டும் தான். நாட்டிலுள்ள அனைவரும் 24 மணி நேரமும் மின்சாரம் பெறுவது இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. தனிநபர் வருமானம் கடந்த 5 வருடங்களில் 2000 அமெரிக்க டாலர்களாக இருக்கின்றது. இது அடுத்த 5 வருடங்களில் 4000 டொலராக அதிகரிக்கப்படுவதை இலக்காகக் கொண்டு நாம் செயற்படுகின்றோம்.

உலகப் பொருளாதாரச் சிக்கலை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். எமது எந்தவொரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ பொருளாதாரச் சிக்கலால் மூடப்படவில்லை. சர்வதேச உணவுச் சிக்கலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். பயங்கர வாதத்துக்கெதிராகப் போரிட்டுக் கொண்டே நாம் அடுத்தடுத்து எழுந்த இச் சிக்கல்களையும் எதிர்கொண்டோம்.

அபிவிருத்தியல்லாமல் சமாதானம் இல்லையென்பதை நாம் திடமாக நம்புகின்றோம். இடம் பெயர்ந்தவர்களை மிகக் குறுகிய காலத்தில் மீளக் குடியமர்த்திய நாடு இலங்கையே. எல். ரி. ரி. ஈயினரால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்களை புனர்வாழ்வளிப்பதிலும் நாம் வெற்றி கண்டிருக்கின்றோம். இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைக் காணச் செய்வதே எமது இலக்கு. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாம் ஆரம்பித்த துறைகள் எல்லாம், எமது மக்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகளை வழங்குகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை. இராமாயண காலத்தில் இருந்து தொடர்பவை. ஒரு பொதுவான மரபு ரீதியான பொருளாதார வர்த்தக முயற்சிகளே இரண்டு நாடுகளிலும் காணப்படுகின்றன. தற்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மேலும் வலுச்சேர்க்கின்றோம் என்றார்.

இலங்கையில் நீங்கள் முதலிடவிரும்பினால் உங்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. ஆற்றல், திறமை, அர்ப்பணிப்பு, ஆர்வம் போன்ற தனித்துவத்தன்மைகளையும் நீங்கள் இங்கு காணலாம்.இந்த வர்த்தக சம்மேளனம் இரு நாடுகளுக்குமிடையிலான புதிய உறவுகள் புதிய வர்த்தக முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார். இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தருர் ஆகியோரும் உரையாற்றினர்.

ஹ்ரிதிக் ரோஷனின் “கைட்ச்” திரைப்படம் சென்னை திரையரங்குகளில் ரத்து

hrithik-roshan.jpgசென்னை யிலுள்ள ஐந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷனின் புதிய திரைப்படமான “கைட்ச்” ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்றுவரும் iifa சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த திரைப்படம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீர் பரிசோதனைக் குழு

drage.jpgகிழக்கு மாகாண ஆஸ்பத்திரிகளில் காணப்படும் குறைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்த்துவைக்கும் வகையில் திடீர் பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எம். சுபைர் இந்தக்குழுவை நியமித்துள்ளார். இதன் தலைவராக மாகாண வைத்திய அத்தியட்சகர் டொக்டர். குணாலன் பணியாற்றுவார். அமைச்சின் மேலதிகச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் இதில் பணிபுரிவர். மாகாண ஆஸ்பத்திரிகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்ளும் இந்தக் குழு அவற்றின் குறைபாடுகளை அமைச்சரின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டுவரும்.

CNBC – IIFA விருது: ஜனாதிபதியினால் மூவருக்கு விருது வழங்கி கெளரவம்

iifa-aw.jpgகார்கில்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர் ரஞ்ஜித் பேஜ், மாஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மகேஷ் அமலீன், இந்திய திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அனுபம் கேர் ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கி கெளரவித்தார்.

சீ.என்.பீ.ஸி – ஐ.ஐ.எப்.ஏ. குளோபல் லீடர் ஷிப் விருதுகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை – இந்திய வர்த்தக சம்மேளனத்தின் விசேட அமர்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்கினார்.

iifa திரைப்பட விழாவுக்கான அனுமதி கட்டணம் ரூ.25,000ஆக அறிமுகம்

iifa-colombo.jpgகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெறவுள்ள iifa சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கான குறைந்தபட்ச அனுமதிக் கட்டணம் ரூ.25,000ஆக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலாச்சபை தெரிவித்தது.

இந்த கட்டண முறைமை ரூ.200,000 முதல் 11 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த சபை குறிப்பிட்டது.  இந்த புதிய குறைந்தபட்ச நுழைவுச் சீட்டுக்கான ஆசன வசதிகள் பின்புறப்பகுதியில் பிறிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலாச்சபை தெரிவித்தது.

IIFA: நட்புறவுக் கிரிக்கெட் போட்டி

iifa-cri.gifIIFA சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ஓர் அங்கமாக நேற்று இடம்பெற்ற இந்திய திரைப்பட நட்சத்திரங்களுக்கும் – இலங்கை கிரிக்கெட் அணிக்குமிடையில் முதலில் இடம் பெற்ற 10 ஓவர் கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் சங்கக்கார, தலைமையிலான அணி வெற்றியீட் டியது.

இப்போட்டி பி.ப. 1.30 மணிக்கு கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் ஆரம்பமானது.
களத்தடுப்பில் ஈடுபட்ட சுனில் செட்டி, ரித்தேஷ் தேஷ்முக்…

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய சங்கக்கார தனது அணி துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கை அணியில் முன்னாள் வீரர்கள் விளையாடினர். இந்திய திரைப்படவீரர்கள் அணிக்கு சுணில் செட்டி தலைமைதாங்கினார். இவ்வணியில் மஹேல ஜயவர்தன, பர்விஷ் மஃறுப் ஆகியோர் விளையாடினர்.

இதேவேளை, இப்போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி. இரத்நாயக்க மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை மற்றொரு போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முதல் கிரிக்கெட் போட்டி ஒன்றில் களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதில் அவர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

இதேவேளை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய ஆகியோர் விளையாடினர். இக் கிரிக்கெட் போட்டி சிறுவர் நல நிதிக்காக இடம்பெற்றது. இதற்கு யுனிசெப் அனுசரணை வழங்கியது.

நாடுகடந்த அரசுத் தேர்தலும் அதன் பிரித்தானியத் தேர்தல் ஆணையமும்! நடந்தது என்ன?

Vijayasingam_TGTEMay_02_Election_TGTE._._._._._.
இவ்வறிக்கை நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரித்தானிய பிரதிநிதித்துவத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றிய உள்விடயங்களை ஆராய்கின்றது. தேர்தல் மோசடி இடம்பெற்றதாகக் கூறி லண்டனுக்கு வெளியே நிராகரிக்கப்பட்ட தேர்தல் நிலையங்களின் உத்தியோகத்தர்களும் பொது மக்களும் இவ்வறிக்கையின் கீழ் கையொப்பம் இட்டு தேர்தல் ஆணையகத்திற்கு ஒப்படைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. மே 31ல் வெளியான இவ்வறிக்கையின் இலத்திரனியல் பிரதி தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்ட்டு இருந்து. அதனை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
._._._._._.

இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளிற்கான தேர்தலை முழுமையாக ரத்துசெய்த நிலையானது தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் எந்த ஒரு நிர்வாகமும் செய்ய துணியாத செயல், ஏன் எனில் ஒரு தவறு நடக்கும் பட்சத்தில் அதை உறுதி செய்யப்படாமலும் அங்கு கடமையாற்றிய அதிகாரிகளை மற்றும் வாக்களித்த மக்களை பற்றி எள்ளளவும் சிந்திக்காமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது வெளியே வாழும் அனைத்து தமிழ் மனங்களையும் நிறையவே புண்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு படி மேலாக நமது ஊடகமும் என்னவென்று விசாரிக்காமல் வெளிப்படையாக எம்மை தாக்கியது பெரும் வேதனையளிக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு குழப்ப நிலையில் நாம் ஆணையகத்தையும் அதற்கு பொறுப்பானவர்களையும் தேர்தலை ஒழுங்கு செய்தவர்களையும் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், நம்நிலையை புரியவைக்க முற்பட்ட பொழுதும் அதற்கு இன்றுவரை அவர்கள் வாய்ப்பளிக்கவில்லை. ஆகையால் இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் பணிபுரிந்த அனைத்து பொறுப்பானவர்களும் இணைந்து பேசி எடுத்த முடிவாகத்தான் இந்த அறிக்கையை எழுதுகின்றோம். மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் எமக்குள் உள்ள நியாயங்களையும் கேள்விகளையும் மக்களாகிய உங்கள் முன் வைக்கின்றோம்.

எமது தேசத்தின் விடியலுக்காக இந்தத் தேர்தலில் நம்முடன் பணியாற்றியவர்களையும் வாக்களித்த மக்களையும் தேர்தல் ஆணையகமும் தேர்தலை ஒழங்கு செய்தவர்களும் ஒட்டுமொத்தமாக அவமதித்து புண்படுத்திய நிலையிலும் நாம் எல்லோரும் உண்மையாக உழைத்த உங்கள் அனைவர்க்கும் நன்றி கூறுகின்றோம் தொடர்ந்தும் எம்மக்களுக்காக நாங்கள் அனைவரும் ஒன்றாய் நிற்போம்.

பிரித்தானியாவில் லண்டனைத் தவிர்ந்த வெளி மாவட்டத்தில் உள்ள மில்ரன் கீன்ஸ் (Milton Keynes) வாக்களிப்பு நிலையத்தை நோக்குவோம் – S.ஜெயாவின் வாக்குமுலம்:
மில்ரன் கீன்ஸ் தேர்தல் நிலையத்திற்கான வாக்குச் சீட்டுக்கள் அடங்கலான வாக்குப் பெட்டி மே 1ம் திகதி இரவு 9 மணியளவில் S.ஜெயா ஆகிய எனது வீட்டில் கொண்டுவந்து தந்தார்கள். நான் லண்டனில் உள்ள தேர்தல் ஆணையகத்திற்கு மில்றன் கீன்ஸ் வாக்குச் சாவடி தேர்தல் இணைப்பாளராக பணியாற்றினேன். தேர்தல் ஆணையகத்தின் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக வாக்களிப்பு நிலையத்தில் நாட்டுப்பற்றும், அனுபவமும், தராதரமும் மிக்க பலரின் ஆதரவுடன் பணியாற்றினோம். மீல்ரன்கீன்ஸில் உள்ள மக்கள் தொகைக்குகேற்ப உத்தியோகத்தர்கள் வேலைசெய்தார்கள். தேர்தல் சட்ட நேரப்படி காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டு ஜனநாயகமுறையில் பிரித்தானிய ஆங்கிலேயர் (observers) முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இவ் அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையகத்தின் நேரடிப் பார்வையிலேயே நடைபெற்றது.

இரவு 9மணிரை வாக்குப் பதிவு நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட போதிலும் லண்டன் தேர்தல் ஆணையம் மாலை 6 மணிக்கு மூடும்படி திடீரெனக் கட்டளையிட்டார்கள். வாக்காளர்கள் அதிகமாக வந்து கொண்டிருந்ததால் அவர்கள் கட்டளையிட்டபடி 6 மணிக்கு மூட முடியவில்லை என்று என்னால் அறிவிக்கப்பட்டது. மில்ரன் கீன்ஸ் வாக்கு நிலையத்தை உடன் மூடும்படி மாலை 6மணியில் இருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் லண்டன் ஆணையகத்தில் இருந்து வந்து கொண்டேயிருந்தது.

இறுதியாக மாலை 7மணியளவில் உங்கள் வாக்கு நிலையம் உடனடியாக மூடாவிட்டால் மில்ரன்கீன்ஸ் வாக்கு நிலையம் நிராகரிக்கப்படும் என அறிவித்தல் வந்ததது. இவ்வளவு நேரமும் வாக்களித்த 1500க்கும் மேற்பட்ட வாக்குரிமைகள் வீணாக்கப்படும் என்ற ஒரே நோக்கம் கொண்டு இரவு 8.05 மணிக்கு வாக்குச் சாவடி முறைப்படி மூடப்பட்டது.

தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்ட்ட “தேர்தல் சாவடி உத்தியோகத்தருக்கான கைப்புத்தகக் குறிப்பில்” 16ம் பக்கத்தில் மூன்றாம் பக்கத்தில் 2010 மே 2ம் திகதி காலை 8 மணிக்கு முன்பும் இரவு 9 மணிக்குப் பின்பும் எக்காரணம் கொண்டும் வாக்குச் சீட்டு விநியோகிக்கூடாது என்று குறிக்கப்பட்டது என்பதை அவதானிப்பாளராக இருந்த ஆங்கிலேயர் அதைச் சுட்டிக்காட்டி 55 நிமிடம் முன்னராக மூடிவிட்டீர்கள், மக்கள் வந்து திரும்பிப் போகின்றார்கள் என ஆதங்கப்பட்டார்.

இரவு 9 மணி 10 நிமிடமளவில் வாக்குச் சாவடியை விட்டு நாம் வெளியேறும் போது தேர்தல் சட்டமுறைப்படி வாக்கு நிலைய அதிகாரியிடம் வாக்குப்பெட்டியும் அனைத்து ஆவணங்களும் கையளிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் முறையே அனைத்தும் சரிவர இருப்பதை மீளவும் இந்த ஆங்கிலேயரால் உறுதி செய்யப்பட்டபின்னர் வாக்குப்பெட்டி எடுக்க வருபவரிடம் தனது முகவரியைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். வாக்குப் பெட்டி எடுக்க வருபவர்கள் இரவு 9.30 மணிக்கு எடுக்க வருவதாகக் கூறினார்கள், பின்னர் 3ம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு வருவதாகக் கூறி காலை 6.30 மணிக்குத் தான் வந்து எடுத்துச் சென்றார்கள். இதில் மில்ரன் கீன்ஸ், நோத்கம்ரன், லூட்டன் வெட்போட், ஐஸ்பரி நகரங்களில் உள்ள மக்களும் இங்கு வாக்களித்தனர்.

3ம் திகதி செய்தியை பார்த்தபோது மில்றன் கீன்ஸ், கொவன்றி நிலைய வாக்குப்பெட்டிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் 17 நிலைய வாக்குப் பெட்டிகளும் நிராகரிக்கப்படுகின்றன என்றும் தொலைக்காட்சியில் மில்ரன் கீன்ஸ் (01) வாக்குப்பெட்டியை தொடர்ந்து காட்டிக் கொண்டே கட்டுக்கட்டாக எடுப்பதையும் அதை ஒரு சிலர் கைதட்டி ஆரவாரம் செய்வதையும் காட்டினார்கள்.

அவதானித்தவைகள்:
1. வாக்குப் பெட்டி கவிட்டுக் கொட்டப்படாமல் பக்கவாட்டில் சரிக்கப்பட்டது. அப்போது முன் கூட்டியே வைக்கப்ப்டது போல் இரு வாக்குச் சீட்டு கட்டுக்களை ஒருவர் எடுத்து பிரித்தானியரிடம் கொடுக்க அவர் பார்வையிடுகிறார்.
2. அவர்கள் எடுத்துக் காண்பித்த வாக்குச் சீட்டுக் கட்டு எக் காராணம் கொண்டும் வாக்குப்பபெட்டியின் துவாரத்துக்கூடாக சுயாதீனமாக திணிக்கக் கூடிய அளவிற்கு அதன் துவாரம் பெரிதல்ல.
3. வாக்குப் பெட்டியை வந்து எடுத்தவர்களிடமே முழு ஆவணங்களும், மிகுதி வாக்குச் சீட்டும், வாக்குப் பெட்டியின் திறப்பும் கையளிக்கப்பட்டது.
4. இதற்கு முன்னர் வேறு இரு வாக்கு சாவடிகளுக்காண வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டது. இவற்றிலும் வாக்குச் சீட்டு கட்டுக்கள் இருந்ததாக அறியப்படுகிறது ஆனால் இது வரை அதுபற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளிக் கொணராது திட்டமிட்டு எமக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
5. வாக்கு நிலையத்ததை பார்வையிட்ட தேர்தல் ஆணையத்தால் அனுப்பிவைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆங்கிலேயர், எமது வாக்கு நிலையத்தை அவதானித்து விட்டு முறையாகவும், திருப்தியாகவும் நடைபெறுகின்றது என்று தெரிவித்து கையொப்பம் இட்டுச் சென்றார், பார்வையிட்ட ஆங்கிலேயர் Michel Chadwwick ஆவார்.
6. எந்த முறைகேடுகளும் எமது வாக்குச் சாவடியில் நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க எம்மிடம் பல ஆதாரங்கள் உண்டு.

கொவன்றி (Coventry)

எமது வாக்குச் சாவடியில் அனைத்தும் தேர்தல் ஆணையகத்தின் நேரடிப் பார்வையிலேயே சிறப்பாக நடைப்பெற்றுது. அனைத்து விடயங்கலிலும் தேர்தல் ஆணையகம் நேரடியாகவே எம்மை வழி நடத்தினர்.

இருப்பினும் எமக்கு கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் முடிவடையும் தறுவாயில் தேர்தல் ஆணையகத்திற்குத் தொடர்பு கொண்டபோது, தாங்கள் பேர்மிங்காமிற்கு (Birmingham) மேலதிகமான வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும் அங்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறும் பணித்தனர்.

நாங்கள் போர்மிங்காம் சென்று கேட்டபோது அங்கு பணியில் இருந்த பொறுப்பாளர் யாருடனோ தொடர்பு கொண்டுவிட்டு தேர்தல் ஆணையகத்திற்கு தொடர்பு கொண்டதாகவும் உங்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொன்னதாகவும் கூறினார். நாங்கள் யார் கூறினார் என்று கேட்டதற்கு திரு குணாளன் என்பவர் உங்களையும் உள்ளே அனுமதிக்கவும் வேண்டாம் ஒரு வாக்குச்சீட்டும் கொடுக்கவும் வேண்டாம் என்றும் கூறியதாக்ககூறி மீண்டும் நிராகரித்தனர். தர மறுத்தவர்களை நாங்கள் அடையாளம் காட்டுவோம், மேலும் போதிய அளவு வாக்குச்சீட்டு எமக்கு தராதது தேர்தல் ஆணையகத்தின் தவறு. மேலும் எந்த குளறுபடியும் எமது வாக்கு சாவடியில் நடைபெறவில்லை என்பதை நாம் உறுதிபடுத்துவோம்.

தேர்தல் ஆணையகம் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் பட்சத்தில் போட்டிக்கு நின்ற வேட்பாளர்களை அழைத்து அவர்கள் முன்நிலையில் உறுதிசெய்திருக்க வேண்டும் அத்துடன் பெட்டிகள் திறக்கப்படும் பொழுது பாதுகாப்புப் பட்டிகளின் இலக்கங்கள் அனைத்தும் சரிபார்த்திருக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நடைபெறவில்லை, வேட்பாளர்களிடம் இது பற்றிய எந்த ஒரு வார்த்தையும் கூறப்படவில்லை.

தேர்தல் ஆணையகம் முறைகேடுகள் நடந்தது எனும் பட்சத்தில் வாக்குநிலையத்தில் பணியாற்றிய தேர்தல் நிலைய அதிகாரிகளினதும், அவதானிப்பாளர்களினதும் கருத்துக்கள் கேட்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இது வரை எந்த ஒரு கருத்துக்களும் கேட்கபடவில்லை.

கருத்துகணிப்பு வாக்கெடுப்பிற்கு (வட்டுக் கோட்டை தீர்மான) முன் தேர்தல் சம்பந்தமான அனைத்து பயிற்சி முறைககளும் பயிற்சிவிக்கப்பட்டது போல் இங்கு எதுவும் நடக்கவில்லை, மாறாக நாடுகடந்த தமிழீழ தேர்தல் மக்களின் ஆணை பெறவேண்டும் என்ற இலட்சியக் கூறிக்கோளுக்கு மாறாக ஓரிருவரின் அனுசரனைக்காகவும், அவர்களின் சுயநலத்துக்காகவும் நடைபெற்றதாக ஏன் மனசாட்சியுள்ள மனிதர்கள் சந்தேகம் கொள்ள முடியாது.

இந்த தேர்தல் குழறுபடிகளை திட்டமிட்டு நடாத்தியது போலவும், நீண்ட நெடுங்காலமாக மக்களுக்குப் பணிசெய்தவர்களை வீணே அதற்குள் இழுத்து அவமானப்படுத்தி வெளியேற்ற வேண்டும் என்றும் எமது சமூகத்திற்கு முழு மனதுடன் பாடுபடுபவர்களுக்கு இப்படியொரு களங்கத்தை திட்டமிட்டே ஏற்படுத்தியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின்படி எமது இனத்துக்குள் எந்த ஒரு மக்கள் கட்டமைப்பும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் எமக்குள் ஊடுருவி எம்மால் எம்மையே அழிக்கும் புதிய வழிக்கு இந்தத் தேர்தல் துணை போகியுள்ளது.

இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளிற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாது நாடு கடந்த அரசின் முதல் அமர்வு நாடாத்த ஒழுங்கு செய்வது எந்த ஒரு ஜெனநாயக மரபிற்கும் உட்பட்டதா என அனுபவமிக்க தேர்தல் ஆணையர் உறுதிப்படுத்துவாரா?

மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.
எது எப்படியிருந்த போதிலும் தாயகதேச நேசிப்பு மிகுதியால் பாணியாற்றியவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் தேர்தல் ஆணையகம் தந்த பிரிசு அவமானமே தவிர வேறொன்றும் இல்லை.

அனுபவம் மிக்க தேர்தல் ஆணையாளர் திரு விஜயசிங்கம் தலைமையில் இருந்த இந்த தேர்தல் ஆணையம் வெளிமாவட்டத்தின் 17 வாக்கு நிலையங்களை நிராகரித்த நிலையானது முன்கூட்டிய திட்டமிட்ட சதியாக இருக்கும் என்று நாம் ஏன் கருதக்கூடாது?

மேற்கூறப்பட்டவைகளை அவதானித்து பார்போமானால் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது உண்மை, ஆனால் நிச்சயமாக 17 வாக்கு நிலையங்களில் கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களோ அல்லது வாக்காள பொதுமக்களோ இந்த தேர்தலின் முறைகேடுக்கு காரணம் இல்லை. இதற்கு காரணம்
1) தேர்தலை ஒழுங்கு செய்தவர்களும்.
2) வாக்கு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை எண்ணும் நிலையத்துக்கு எடுத்து செல்லும் வழியிலோ அல்லது எண்ணும் நிலையத்திலோ மட்டுமே முறைகேடுகள் நடந்துள்ளது என்று நாம் நம்புகின்றோம்.

நமதும் மற்றும் வாக்காள பெருமக்களின் கோரிக்கை:
தேர்தல் ஆணையகத்துக்கு பொறுப்பானவர்களும் தேர்தலை ஒழுங்கு செய்தவர்களும், எமது மக்களிடமும் மற்றும் வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களிடமும் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும். உடனடியாக மறுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.