2010

2010

‘2015 ஆண்டுக்கிடையில் யாழ் அபிவிருத்தியில் முழுமை பெற வேண்டும்!’ – யாழ் அரசாங்க அதிபர்

Ganesh_GA_Jaffnaயாழ்.மாவட்டம் 2015ஆம் ஆண்டுக்கிடையில் அதன் அபிவிருத்தியில் பாரிய மாற்றத்தைப் பெற வேண்டும் எனவும்,  அதற்கான திட்டங்களை தயாரித்து திறம்பட செயற்படுமாறும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே. கணேஸ் திணைக்கள தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ் செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுகையிலேயெ அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

யாழ்.மாவட்டம்  சகல தறைகளிலும் வளாச்சியடைய வேண்டும், கல்வி சுகாதாரம், போக்குவரத்து விவசாயம், எனப் பல்வேறு துறைகளையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை  இன்றுள்ளது இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வன்னியில் மீண்டும் மலேரியா நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

malaria_mosquito_headவன்னியில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருகின்றது. கடந்த சில தினங்களாக 15இற்கும் மேற்பட்டோர் மலேரியா நோய் இனங்காணப்பட்டு சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் தீவிர மலேரியா நோய்  பிரதேசமாக கிளிநொச்சி காணப்பட்டது ஆனால், சுமார் 10 வருடங்களாக இந்நோய்ப் பரவல் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தது.

போரின் பின்,  மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அந்நோய்த் தொற்றினால் பொதுமக்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொக்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுர வேலைகளுக்காக தென்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களிடமே முதலில் இந்நோய் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து மலேரியா நோய்த் தடுப்பு மற்றும், விழிப்பு நடவடிக்கைகளில் மலேரியா தடுப்புப் பிரிவினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் தமிழ் மக்களை வஞ்சித்து விட்டன. : வீ.ஆனந்தசங்கரி (தலைவர், தவிகூ)

Rehabilitation_Wanniதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் (June 7 2010) பேச்சுவார்த்தை நடத்தி எடுத்துள்ள முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன.  தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களை உடன் விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நியாயப்படுத்த த.தே.கூட்டமைப்பு தவறிவிட்டது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றும் அரசு கொடுத்த உறுதி மொழிகளை நம்பியும் சரணடைந்தவர்களாவர். அரசின் வேண்டுகோளையும் உறுதி மொழியையும்  உதாசீனம் செய்து முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையினர் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நிம்மதியாக வாழ்கின்றனர். சில அரச அதிகாரிகள், உயர்மட்ட அரசியல்வாதிகளின் உதவியுடன் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இன்று அயல் நாடுகளிலும், பிறநாடுகளிலும் உள்@ரிலும் நிம்மதியாக வாழ, அப்பாவி மக்களின் பிள்ளைகள் இன்று தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். அவர்களின் குடும்பத்தவர்கள் ஒரு வேளை உணவைக்கூட நிம்மதியாக உண்ண முடியாமலுள்ளனர்.  அண்மையில் விடுவிக்கப்பட்ட யாரோ ஒருவர் அநுராதபுரத்தில் புலிகளின் புலனாய்வுப் பணியில் ஈடுபட்டதற்காக பிடிபட்டார் என அரசு தரப்பால் கூறப்பட்ட கருத்திற்கு தகுந்த பதிலை கூட்டமைப்பினர் கொடுக்கத் தவறிவிட்டனர். ஒரு சிலரின் தவறான செயற் பாட்டிற்காக ஒட்டுமொத்த கைதிகளை தடுப்புக்காவலில் விடுதலை செய்யாமல் வைத்திருக்க முடியாதென்பதை விளக்கமாக அரசுக்கு எடுத்துக் கூற கூட்டமைப்பினர் தவறி விட்டனர். 

அன்று விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டவர்களில் பலர் இன்று அரசுடன் செயற்படுகின்றார்கள் என்பதை எடுத்துக் கூறி சிறையில் உள்ளவர்களின் விடுதலை பற்றி, ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  விவாதிக்கவில்லை? தடுப்புக் காவலில் உள்ளவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து சில உயர்மட்ட குழுக்களை அமைத்து அவர்களின் சிபார்சுகளைப் பெற்றுக்கொண்டு அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்குமாறு ஏன் கேட்கவில்லை? படிப்பில் ஈடுபட்டிருந்தவர்களை விடுவிக்கும்படி ஏன் கேட்கவில்லை? அதே போல் மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பிணையில் நின்று கொண்டு வழக்கை எதிர்கொள்ளும் போது, தற்போது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பெற்றோரின் உறுதியுடன் வெளியில் விடும்படி ஏன் கேட்கவில்லை? இந்த யோசனைகளை நான் பல தடவைகள் முன்வைத்துள்ளேன். எத்தனை ஆயிரம் பேர் புலிகளுடன் இருந்தவர்கள் இன்று வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர் என்பதை அரசு அறியாதா?

அடுத்ததாக மீளக்குடியமர்ந்த வன்னி மக்களுக்கு தொழில் வசதி கருதி உதவி செய்ய முன்வருவது மிக வேடிக்கையாகும். வன்னி மக்களில் 90 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளுமாவர். அநேகமானேர் செலவச் செழிப்போடு வாழ்ந்தவர்கள். இன்று அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாக அரசிடம் கையேந்தி நிற்கின்றனர். உண்ண, உறங்க வசதியற்ற நிலையில் சிறு கூடாரங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு முதலில் அவசியமானது உறைவிடம். போரால் அழிவுற்ற பகுதிகளில் புலிகள் தற்போது இல்லை. ஆகவே மக்களின் வீடுளைக் கட்டிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும், கடமையும் ஆகும். இக்கடமையிலிருந்து அரசாங்கம் விலகிச்செல்ல முடியாது.

போரினால் அழிவுற்ற ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், அம்மக்கள் தங்கள் விவசாயத்தின் இரு தடவை அறுவடைகள் மூலமாக தாங்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வார்கள் எனவும் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் போரினால் தங்கள் வீடுகளை இழந்த மக்கள் அரசாங்கம் தங்கள் வீடுகளைக் கடடித்தரும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஜனாதிபதியின் இச்செய்தியினால், அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தற்போது 1500 தொடக்கம் 2000 ஏக்கர் வரையிலான காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் 30 மூடை விளைச்சல் என்று கணக்கிட்டாலும், உற்பத்திச் செலவு போக. அதிலிருந்து கிடைக்கும் இலாபம் அவர்களின் வாழ்க்கைச் செலவிற்கே போதாது.  இதே வேளை, இந்த 2000 ஏக்கர் நிலம் எத்தனைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது? ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்ன? இந்நிலையில், நெல் அறுவடையின் மூலமாக வீடுகளைக் கட்டிக்கொள்வது எவ்வாறு? இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது, சாத்தியமாகக் கூடிய விடயங்களா? இதனை ஒரு கேலிக்கூத்து என்று கூறாமல் வேறெவ்வாறு கூறுவது?

உண்மையில் வீடுகளை இழந்தவர்களுக்கு அதனைக் கட்டிக்கொடுக்க வெளிநாடுகளின் உதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளன. அரசாங்கத்தின் பணத்தை எதிர்ப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதனை அரசாங்கத்தினால் செய்ய முடியாது என வெளிப்படையாகத் தெரிவித்தால் அதனைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அனைத்துலக நாடுகளிடமும் அமைப்புகளிடமும் எனக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்குத் தயாராகவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டுக்குழு அமைக்கவிருப்பது ஆட்சேபனைக் குரியதாகும். சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக குழுவொன்றை அமைத்து இனப்பிரச்சினை தொடர்பாக பேசித் தீர்வு காணவேண்டும் என்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்தாகும்.

வைகோ, நெடுமாறன், சீமான், தொல் திருமாவளவன் கைது

chenai.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை எதிர்த்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழக முக்கியஸ்தர்கள் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னிந்திய அரசியல் வாதிகளான வைகோ, பழ. நெடுமாறன், தொல். திருமாவளவன் உட்பட திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் அடங்கலாக நூற்றுக் கணக்கானோர் நேற்று தமிழ் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டிருப்பவர்களில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சீமான் டி.ராஜேந்தர், மகேந்திரன், நல்லகண்ணு போன்றோரும் அடங்கியுள்ளனர். தமிழகத்தில் சென்னையிலுள்ள இலங்கை உதவி உயர்ஸ் தானிகராலயம், இலங்கை வங்கி போன்ற பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ் வீதிகளும் மூடப்பட்டிருந்தன.

தமிழகத்தின் திருப்பூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கோவை, காந்திநகர், நாகர்கோவில், கரூர், சென்னை, ஓசூர், தேனி, நாமக்கல் போன்ற பகுதிகளிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டிருந்த நிலையிலே அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக செய்திகள் மேலும் தெரிவித்தன.

யுத்தத்தினால் பாதிப்புற்ற சிறுவர்களுக்கு வவுனியாவில் பாடசாலை: இந்திய நடிகர் விவேக் ஒபரோய் முதற்கட்டமாக ரூ.50மில். நிதியுதவி

viv-ob.jpgயுத்தத் தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கென வவுனியாவில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலையை அமைத்துக் கொடுக்கத் தீர்மானித்துள்ள பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் அதற்கென முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாவினை வழங்கவுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறுகிய காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் தற்போது அமைதி சூழல் உருவாகியுள்ளதை சர்வதேச நாடுகள் உணர்ந்துகொள்ள ஐஃபா திரைப்பட விழா வழிவகுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.  சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் தலைமையில் ஐஃபா விருது விழா சம்பந்தமான இச்செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.  இங்கு நடிகர் விவேக் ஒபரோய் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் :-

நான் வவுனியாவிற்குச் சென்றிருந்தேன் யுத்தத்தினால் பாதிப்படைந்த பகுதியைப் பார்வையிட்டேன்.  அங்கு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்மாடி வீடுகளை நிறுவ புலிகள் முயற்சி -அவசரகால சட்டத்தை சமர்ப்பித்து பிரதமர் உரை

dmd.jpgகொழும் பிலும் புற நகர்ப் பகுதிகளிலும் புலிகள் இயக்கத்தினர் தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகளின் அனுதாபிகளான தமிழர்களுக்காக இந்த வீடுகளை நிர்மாணிக்க புலிகள் முதலீடுகளைச் செய்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்துப் பிரதமர் உரையாற்றினார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்குச் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமையான நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தைச் சமர்ப்பித்த பிரதமர், அவசர காலச் சட்டம் தொடர்பான பிரேரணையையும் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ஜயரட்ன, கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் தொடர்மாடிக் குடியிருப்புகளை நிர்மாணித்து புலிகள் மீள ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இறுதி யுத்தம் நடைபெற்ற போது புலிகள் இயக்க உறுப்பினர்கள் மக்களுடன் மக்களாகக் கலந்துள்ளதாகவும் தற்பொழுது தென் பகுதியில் தங்கியிருக்கும் அவர்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொட ர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், ஏற்கனவே, கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய 71 பேர் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் மேலும் பலரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் நாடு கடந்த தமிbழ அரசை’ நிறுவ வாக்கெடுப்புகளை நடத்தியிருக்கிறார்களென்று சுட்டிக்காட்டிய பிரதமர் இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் புலிகளின் செயற்பாடுகளை முற்றாகத் தடுப்பதற்கும் அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டியிருப்பதாகவும் பிரதமர் மேலும் கூறினார்.

2010 நிதியாண்டுக்கான செலவு ரூ.97,474 கோடி – வரவு செலவுத் திட்ட யோசனை சபையில் தெரிவிப்பு

dm.jpg2010  நிதியாண்டிற்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவாக 97,474 கோடி 83 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளதாக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் தி.மு. ஜயரத்ன வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.

இலங்கையில் இருந்தோ இலங்கைக்கு வெளியில் இருந்தோ கடனாக 89 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பெறமுடியாது எனவும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான நிதி ஒதுக்கீடுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு அமைச்சிற்கே அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாதுகாப்பு அமைச்சிற்கு 20,221 கோடி 74 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி திட்ட அமுலாக்கல் அமைச்சிற்காக 6348 கோடி 29 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவும் சுகாதார அமைச்சிற்கு 5309 கோடி 65 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடாக 734 கோடி 37 இலட்சத்து 7 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அபிவிருத்திப் பணிகளுக்காக 381 கோடி 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்காக 6083 கோடி 66 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவும் துறைமுக, விமான சேவை அமைச்சிற்காக 3090 கோடி 3 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவும் போக்குவரத்து அமைச்சிற்கு 3509 கோடி 97 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாவும் மாகாண சபைகள் உள்ளூராட்சி சபை அமைச்சிற்கு 11,326 கோடி 30 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் வடமாகாண சபைக்கு 1150 கோடி 71 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் கிழக்கு மாகாண சபைக்கு 1369 கோடி 77 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். மாவட்ட செயலகத்துக்கு 35 கோடி 81 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவும் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு 12 கோடி 40 இலட்சம் ரூபாவும் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு 13 கோடி 98 இலட்சம் ரூபாவும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு 12 கோடி 22 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சுக்கு 307 கோடியே 43 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 2750 கோடியே 78 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு 9553 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவும் என்றபடி நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சுகள், திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட செலவினங்கள் வருமாறு;

பாதுகாப்பு அமைச்சு 20221 கோடியே 74 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 9559 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபா,நெடுஞ்சாலைகள் அமைச்சு 8351 கோடியே 23 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு 11326 கோடியே 30இலட்சத்து 10 ஆயிரம் ரூபா,நிதி திட்டமிடல் அமைச்சு 6348 கோடியே 29 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 6083 கோடியே 66 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா, சுகாதார அமைச்சு 5309 கோடியே 65 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா, கல்வி அமைச்சு 2750 கோடியே 78 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா, மீள்குடியேற்ற அமைச்சு 307 கோடியே 43 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா, புனர்வாழ்வளிப்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு 405 கோடியே 43 இலட்சத்து 4 ஆயிரம் ரூபா,ஜனாதிபதி செயலகம் 5029 கோடியே 95 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சு 3090 கோடியே 3 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா, போக்குவரத்து அமைச்சு 3509 கோடியே 97 இலட்சத்து 4 ஆயிரம் ரூபா, பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு 9கோடியே 69 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா, கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சு 162 கோடியே 5 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா, கமத்தொழில் அமைச்சு 3790 கோடியே 39 இலட்சத்து 37 ஆயிரம் ரூபா,மின்வலு எரிசக்தி அமைச்சு 2628 கோடியே 47 இலட்சத்து 86 ஆயிரம் ரூபா,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 126 கோடியே 30 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா, தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு 754 கோடியே 91 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா, நீதி அமைச்சுக்கு 355 கோடியே 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, வெளிநாட்டு அமைச்சு 647 கோடியே 33 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாசிறுவர் அபிவிருத்தி மகளிர் அலுவல்கள் அமைச்சு 74 கோடியே 25 இலட்சத்து 39 ஆயிரம் ரூபா, வெகுசன ஊடக தகவல் அமைச்சு 195 கோடியே 9 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா, நிர்மாணப் பொறியியல் சேவைகள், வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சு 80 கோடியே 63 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா, சமூக சேவைகள் அமைச்சு 66 கோடியே 26 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா, தொழிலுறவுகள் விளைவு பெருக்க மேம்பாட்டு அமைச்சு 130 கோடியே 20 இலட்சத்து 39 ஆயிரம் ரூபா, பாரம்பரிய கைத்தொழில் , சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு 68 கோடியே 73 இலட்சத்து 58 ஆயிரம் ரூபா, தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு 246 கோடியே 97 இலட்சத்து 23 ஆயிரம் ரூபா, தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு 35 கோடியே 66 இலட்சத்து 41 ஆயிரம் ரூபா, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 417 கோடியே 19 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா , விளையாட்டுத்துறை அமைச்சு 120 கோடியே 59 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா, சுதேச மருத்துவத்துறை அமைச்சு 107 கோடியே 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா. கடற்றொழில் நீர் வளங்கல் அபிவிருத்தி அமைச்சு 550 கோடியே 50 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா, கால்நடை வளர்ப்பு கிராமிய சனசமூக அபிவிருத்தி 188 கோடியே 78 இலட்சம் ரூபாவும் தேசிய மரபுரிமைகள் கலாசார அலுவல்கள் அமைச்சு 265 கோடியே 22 இலட்சத்து 63 ஆயிரம் ரூபா, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு 36 கோடியே 94 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா, கைத்தொழில் வாணிப அமைச்சு 219 கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சு 1532 கோடியே 48 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா, காணி, காணி அபிவிருத்தி அமைச்சு 375 கோடியே 90 இலட்சத்து 43 ஆயிரம் ரூபா, இளைஞர் அலுவல்கள் அமைச்சு 573 கோடியே 52 இலட்சத்து 29 ஆயிரம் ரூபா, சுற்றாடல் அமைச்சு 295 கோடியே 66 இலட்சத்து 68 ஆயிரம் ரூபா, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு 2513 கோடியே 91 இலட்சத்து 93 ஆயிரம் ரூபா, உயர்கல்வி அமைச்சு 2011 கோடியே 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, அரச வளங்கள், தொழில் முயற்சி, அபிவிருத்தி அமைச்சு 17 கோடியே 43 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

‘தேசத்துரோகத்துக்குரிய தண்டனையை நீதித்துறை தீர்மானிக்க வேண்டும்’ – லக்ஷ்மன் ஹுலுகல்ல. “உண்மைகளை கூறுவது தனது கடமை” -பொன்சேகா

sa-pon.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ச்சியாக தேசத் துரோகமான அறிக்கைகளை விடுத்து வருகிறார். அவருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதித்துறையினரின் பொறுப்பாகுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

பி. பி. ஸியின் ‘ஹார்ட்டோக்’ நிகழ்ச்சிக்கு இரகசியமாக தொலைபேசியில் பேட்டி கொடுத்த பொன்சேகா,  ‘புலிகளுக்கெதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவ அதிகாரிகள் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார். பி.பி. ஸி ‘ஹார்ட்டோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீபன் ஸக்கூர் இதனை இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்’.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த லக்ஷ்மன் ஹுலுகல்ல மேலும் கூறியதாவது; ‘பி.பி.ஸியுடன் இரகசியமாக செய்து கொண்டதாக கூறப்படும் தொலைபேசி பேட்டியின் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனாதிபதியையும், பாதுகாப்பு செயலாளரையும், பாதுகாப்பு படையினரையும் மட்டுமன்றி முழு நாட்டையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுத்துவிட்டார்’ என்றார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு சுதந்திர விசாரணையின் போதும் தான் இது பற்றி சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக ஜெனரல் பொன்சேகா தனது இரகசிய தொலைபேசி பேட்டியில் மேலும் கூறியிருந்ததாக தொகுப்பாளர் ஸ்டீபன் ஸக்கூர் மேலும் கூறியிருக்கிறார்.

“இவ்வாறான தேசத்துரோகத்தனமானதும், ஆத்திரமூட்டும் வகையிலானதுமான கூற்றை ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருப்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் காட்டிக்கொடுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார்” என்றும் ஹுலுகல்ல சுட்டிக்காட்டினார். மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படைகளில் இருந்த அதிகாரிகளும் ஏனையவர்களும் மிகுந்த கடமையுணர்வுடனும் தியாக சிந்தையுடனும் செயற்பட்டனர் என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகிறார்.

அவர்கள் மேற்கொண்ட தியாகங்களினால் இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடிந்தது. அதற்கான தலைமைத்துவமும் வழிகாட்டலும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

அவர்கள் மீது பொறாமை கொண்டிருந்த ஜெனரல் பொன்சேகா அவர்களை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் வஞ்சம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவ்வாறான அறிக்கைகள் அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் கடுமையான செயற்பாடுகளின் மூலம் பெறப்பட்டயுத்த வெற்றியை குறைத்து மதிப்பிடவைக்கும்.

தனது முன்னைய கூற்றுக்களை ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ள போதிலும் இறுதியாக பி.பி.ஸிக்கு வழங்கிய இறுதியான தொலைபேசி பேட்டியை அவர் எந்த வகையிலும் மறுக்க முடியாது. ஏனெனில் அது அவரது சொந்த குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகா முன்னர் உண்மையான இராணுவத் தளபதியாக நடந்துகொண்ட போதிலும் அதன் பின்னர் அவர் தேசத்துரோகமாக நடந்துகொண்டதால் இலங்கை சமூகத்திடம் இருந்த நன்மதிப்பை இழந்ததுடன் கெட்ட பெயரையும் சம்பாதித் துக்கொண்டுள்ளார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின்டயசிரி கூறியுள்ளார்.

நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் லாபம் பெற ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சி செய்வதாகவும் கோமின் டயசிரி மேலும் கூறினார்.

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” – கோட்டாபாய ராஜபக்ஷ

இலங்கையில் கடந்த வருடம் நடந்த இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கான செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கின்ற சரத் பொன்சேகா அவர்கள், ”தான் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவே இந்த சிரமங்களை எதிர்கொள்வதாக” தன்னிடம் கூறியதாக தெரிவித்த பிபிசியின் செய்தியாளர், ”ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடக்குமாயின் அதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் இந்த விடயங்களை அங்கு கூறுவேன்” என்றும் பொன்சேகா கூறியிருக்கிறாரே என்று கோட்டபாய ராஜபக்ஷவிடம் கூறினார்.

அதற்கு பதிலளித்த கோட்டாபாய அவர்கள், ”அவர் அதனை செய்ய முடியாது. அவர் இராணுவத்தின் தளபதியாக இருந்திருக்கிறார். அவர் பொறுப்பு மிக்கவார இருந்திருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம். அது ஒரு துரோகம் . எவ்வாறு அவர் பொய் சொல்ல முடியும். அவர் எவ்வாறு நாட்டை காட்டிக்கொடுக்க முடியும்.” என்று கூறீனார்.

 “உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா

 இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த “உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்
அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, ” பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.” என்று கூறியிருந்தார்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

kahiliya.jpgவிடுதலைப் புலிகளின் நிதி தொடர்பான விபரங்களை வழங்குவது தொடர்பாக கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் அளித்த உதவிக்காக அவருக்கு மன்னிப்பு வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்தால் அது தொடர்பாக தான் ஆச்சரியப்படமாட்டேன் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அத தெரணவின் 360 நிகழ்ச்சியின்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். கே.பி.வெளியிட்ட தகவல் மூலம் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் பலவற்றை அதிகாரிகளால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அந்தச் சொத்துகளின் பெறுமதி குறித்துக் கண்டறியப்பட்டதா அல்லது இலங்கைக்கு அவை கொண்டுவரப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது அதனை வெளிப்படுத்தும் நிலைப்பாட்டில் தான் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். ஆயினும் உரிய வேளையில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனுக்கு விசேடமான பதவி ஏதாவது வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இது தொடர்பாக தீர்மானிப்பது உயர்மட்ட அதிகாரிகளைப் பொறுத்தது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டுக்கு எதிராக கே.பி. மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவர் தண்டனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் வலியுறுத்துவது தொடர்பாக அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, “அவருக்கான தண்டனையை அவர் தற்போது பெற்றுக்கொண்டிருக்கிறார். தனது சொந்த மனச்சாட்சிக்கு எதிராகப் போராடுவது அதிகளவுக்குப் போதுமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மன்னர் போன்று வாழ்ந்தவர் கே.பி. இப்போது அவர் தனது சகல சிறப்புரிமைகளையும் இழந்துவிட்டார். தனது தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், இப்போது நாட்டுக்காக அவர் அதிகளவுக்குச் செய்கிறார் என்பதையிட்டு நாம் திருப்தியடைவது அவசியமானதாகும். அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்தியா பயணம் – உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவும் ஏற்பாடு

india.jpgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்தியாவின் தலைநகரான புதுடில்லிக்குப் பயணமானார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபாபட்டேல், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவிருக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இவ்விஜயத்தின் போது முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப் படவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார்.