வன்னியில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருகின்றது. கடந்த சில தினங்களாக 15இற்கும் மேற்பட்டோர் மலேரியா நோய் இனங்காணப்பட்டு சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் தீவிர மலேரியா நோய் பிரதேசமாக கிளிநொச்சி காணப்பட்டது ஆனால், சுமார் 10 வருடங்களாக இந்நோய்ப் பரவல் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தது.
போரின் பின், மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அந்நோய்த் தொற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொக்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுர வேலைகளுக்காக தென்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களிடமே முதலில் இந்நோய் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து மலேரியா நோய்த் தடுப்பு மற்றும், விழிப்பு நடவடிக்கைகளில் மலேரியா தடுப்புப் பிரிவினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.