ஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் தென்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்படாததால் புனித ரமழானை 30ஆக பூர்த்திசெய்து ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளை நாளை திங்கட்கிழமை கொண்டாடுவது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இணைந்து கூட்டாக அறிவித்துள்ளது.
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நேற்று (19) மஃரிப் தொழுகையைத் தொட ர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலை வரும், மதீனதுல் இல்ம் அரபுக் கல்லூரியின் அதிபரு மான மெளலவி உஸ்தாத் ஏ. டபிள்யூ. எம். ரியாழ் (பாரி), அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலை வர் மெளலவி எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் கூட்டாக இணைந்து ஏகமனதாக உத்தியோகபூர்வமாக இந்தத் தீர்மானத்தை அறிவித்தனர்.
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, கலீபதுஷ் ஷாஸ¤லி மெளலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி), மெளலவி அரூஸ் உட்பட உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள் ளிவாசல் நிர்வாகிகள், ஜம்இய்யதுல் உலமா, முஸ் லிம் சமய கலாசார திணைக்களம், ஸாவியாக்கள், தக்கி யாக்கள், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய ஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.