அம்பாந்தோட்டையில் ஆ.அ.அட்டை நடமாடும் சேவை

தென்மாகாண சபைத் தேர்தலுக்கு அடையாள அட்டை கட்டாயமாகையால் அம்பாந்தோட்டையில் இதுவரை அடையாள அட்டை பெறாதவர்களுக்காக நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை நகர சபையும் ஆட்பதிவுத் திணைக் களமும் இணைந்து நாளை காலை 10.00 மணி முதல் அம்பாந்தோட்டை நகர சபை காரியாலயத்தில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்றை நடாத்தவுள்ளது.

இதில் இதுவரை அடையாள அட்டையை பெறாதவ ர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் கே.ஜீ.காமினி வேண்டு கோள்விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *