20

20

கண்ணி அகற்றும் பணிக்கு அமெ. மேலும் நிதி உதவி – 6 மில்லியன் டொலர் நன்கொடை

வட மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நட வடிக்கைகளை துரிதப்படு த்துவதற்காக அமெரிக்க அர சாங்கம் மேலும் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ விவகார அலுவல் பணி யகத்தினூடாக இந்நிதி, இலங்கையில் கண்ணி வெடி களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்கு அரச சார்பற்ற அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றுதல் தொடர்பான தமது ஆற்றலை அதிகரிப்பதற்கும் அடுத்துவரும் 12 மாதங்களில் தமது பணியை விஸ்தரிப்பதற்கும் இம் மேலதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்க் கண்ணி வெடி அகற்றும் குழு கண்ணி வெடி நடவடிக்கைகளுக்கான ஸ்விஸ் மன்றம், ஹேலோ நம்பிக்கைப் பொறுப்பு, கண்ணிவெடி மதியுரைக் குழு ணிதிமி) ஆகியன இந்நிதியை தமது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவுள்ளன.

“இலங்கையின் வட பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இந்நிதி அளிப்பது குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது” என்று பிரதித் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மூர் கூறினார்.

ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தின் கண்ணி வெடி அகற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு கடந்த ஜுன் மாதம் இலங்கை வந்திருந்தது. அவர்கள் இங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது கண்ணி வெடி அகற்றலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தேவைகள் மற்றும் உதவிகள் குறித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சகல முஸ்லிம் அமைப்புகளையும் உள்ளடக்கிய பொதுக் கட்டமைப்பு – உலமா சபை தலைமையக மாநாட்டில் இணக்கப்பாடு

muslim-prayer.jpgஇந்நாட்டில் தஃவா பணியில் ஈடுபட்டுள்ள சகல முஸ்லிம் அமைப்புகளும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் செயற்படவென பொதுக் கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படவிருக்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அதன் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இப் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான இணக்கப்பாடு ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இணக்கப்பாடு தொடர்பாக உலமா சபையின் உதவிப் பொதுச் செயலர் அஷ் ஷெய்க் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் கையெழுத்திட்டு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

அண்மையில் பேருவளையில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதன் தலைமையகத் தில் 2009.08.18 அன்று ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுடன், தரீக்காக்கள், தஃவா அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தரீக்காக்கள், தஃவா அமைப்புகளுக்கு இந் நாட்டில் பல ஆண்டு கால வரலாறு உண்டு. இவைகளின் பணிகள் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு பயன்களை அடைந்துள்ளனர். அடைந்தும் வருகின்றனர். அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள், சம்பவங்கள் நடைபெற்ற போதிலும் அவற்றின் நன்மைகள் அதிகம் என்பதே எல்லோரினதும் கருத்தாகும்.

இந்நிலையில் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு சுமுகமான ஒரு நிலையில் தத்தமது செயற்பாடுகளையும் பணிகளையும் மேற்கொள்வதற்கான ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தரீக்காக்களினதும் தஃவா அமைப்புகளினதும் மற்றும் சில உலமாக்கள் எதிர்கால அமர்வுகளுக்கு அழைக்கப்பட வேண்டுமெனவும் மேற்கொண்டும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அன்புப் பிணைப்புடன் புரிந்துணர்வின் அடிப்படையில் தஃவாப் பணியில் ஈடுபடுவதன் அவசியம் பற்றி எல்லோரும் வலியுறுத்திப் பேசியதுடன், எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் அனைத்து முஸ்லிம்களும் சகோதர வாஞ்சையுடனும் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துகொள்ளுமாறும் அங்கு வருகை தந்த அனைவரும் வேண்டிக்கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நன் முயற்சி தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அனைவரும் வேண்டிக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல்; அனைவரையும் வாக்களிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி உலக வங்கியின் முன்னாள் உறுப்பினர் அஷ்ரஃப் கானி மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ஆகியோர் பிரதான வேட்பாளர்களாவர்.

ஜனாதிபதியையும் 34 மாகாண சபைகளின் 420 உறுப்பினர்களையும் தெரிவு செய்யும் இத் தேர்தலில் 17 இலட்சம் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.  ஆறாயிரம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. தேர்தலைக் கண்காணிக்கவென இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தயாராகவுள்ளனர்.

மோசடிகளைத் தவிர்க்கும் பொருட்டே இவ்வளவு தொகையான கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோல் வன்முறைகள் கலகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வீதிகள் பிரதான சந்திகளில் பாதுகாப்புப் படை யினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வாக்களி ப்பு நிலையங்களிலும் இராணுவம் குவிக்க ப்பட்டுள்ளது.

ஜனநாயக அரசாங்கத்தை தெரிவு செய்ய ஆப்கான் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென ஐ. நா. செயலாளர் பான் கி மூன் கேட்டுள்ளார். காலை தொடங்கும் வாக்களிப்பு மாலையில் முடிவடையவுள்ளது. வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆரூடம் கூற முடியாதுள்ள நிலையில் ஹமித் அல் கார்ஸா யியும் அஷ்ரஃப்கானியும் உள்ளனர். முன்னாள் நிதியமைச்சரின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.

அஷ்ரஃப் கானியின் உரை கவர்ச்சிகரமாக அமைந்தது. உணவையும், குடி நீரையும்தான் ஹமீத் அல் கார்ஸாயியால் தரமுடியும் பல தொழில்களையும் இலட்சக்கணக்கான வீடுகளையும் பாதுகாப்பையும் தன்னால் தரமுடியும் என அஷ்ரஃப் கானி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.  வெளிநாட்டுப் படைகளின் பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் பெண்கள், சிறுவர்கள் உயிரிழந்தமை தற்போதைய ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயியின் செல்வாக்கைப் பாதித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலிபான்கள் தேர்தலைக் குழப்பும் நோக்குடன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதுடன் வாக்களிப்போரின் கரங்கள் துண்டிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை ஜனாதிபதியின் மாளிகை மீது தலிபான்கள் ரொக்கட் தாக்குதல்களை நடத்தினர். மற்றும் தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தினர். இத்தாக்கதல்களில் குறைந்தது 15 பேர் வரை கொல்லப்பட்டனர். தேர்தல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்குச் செல்லத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.