கண்ணி அகற்றும் பணிக்கு அமெ. மேலும் நிதி உதவி – 6 மில்லியன் டொலர் நன்கொடை

வட மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நட வடிக்கைகளை துரிதப்படு த்துவதற்காக அமெரிக்க அர சாங்கம் மேலும் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ விவகார அலுவல் பணி யகத்தினூடாக இந்நிதி, இலங்கையில் கண்ணி வெடி களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்கு அரச சார்பற்ற அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றுதல் தொடர்பான தமது ஆற்றலை அதிகரிப்பதற்கும் அடுத்துவரும் 12 மாதங்களில் தமது பணியை விஸ்தரிப்பதற்கும் இம் மேலதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்க் கண்ணி வெடி அகற்றும் குழு கண்ணி வெடி நடவடிக்கைகளுக்கான ஸ்விஸ் மன்றம், ஹேலோ நம்பிக்கைப் பொறுப்பு, கண்ணிவெடி மதியுரைக் குழு ணிதிமி) ஆகியன இந்நிதியை தமது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவுள்ளன.

“இலங்கையின் வட பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இந்நிதி அளிப்பது குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது” என்று பிரதித் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மூர் கூறினார்.

ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தின் கண்ணி வெடி அகற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு கடந்த ஜுன் மாதம் இலங்கை வந்திருந்தது. அவர்கள் இங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது கண்ணி வெடி அகற்றலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தேவைகள் மற்றும் உதவிகள் குறித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *