August

August

ஸ்ரீ ரெலோ இயக்கம் கட்சியின் பெயரை “புதிய தாயகம்” என மாற்றவுள்ளது

puthiya_thaayagam_telo.jpgஸ்ரீ ரெலோ எனப்படும் ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் பெயரை விரைவில் கூடவுள்ள தமது தேசிய மாநாட்டில் “புதிய தாயகம்”  என்று மாற்றவுள்ளதாக கட்சியின் செயலாளர் ப உதயராசா தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் நிலை உட்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ள அவர் புதிய தேர்தல் சட்டமூலத்திற்கு ஏற்க தனி இனத்தையோ மதத்தையோ பிரிவினை சொற்களையோ தாங்கிய கட்சிகள் தடை செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

boycott000.jpgஇலங் கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அமெரிக்காவின் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். விக்டோரியா செக்ரெட் என்ற நிறுவனத்தை மையப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் இலங்கையுடன். கடந்த ஆண்டில் இலங்கையுடன் மேற்கொண்ட வர்த்தகத்தின் ஊடாக 5.6 பில்லியன் டொலர்கள் இலாபம் உழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிரான பதாதைகளை சுமந்த படி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.தமிழர் இன அழிப்பை மேற்கொண்ட இலங்கையுடன், வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

குளவிகளின் தாக்குதல்களையடுத்து சீகிரியா குன்றுக்குச் செல்ல தற்காலிகத் தடை

000images.jpgமடுத் திருவிழாவிற்குச் சென்று விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் சீகிரியா குன்றில் ஏறுவதற்குச் சென்ற மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சீகிரியாவிற்குச் சென்ற பெருமளவிலான மக்களே இவ்வாறு ஏமாற்றமடைய நேரிட்டது.

சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சீகிரியா குன்றுக்குச் சென்று ஏறிய வேளையில் குளவிகள் கொட்டி 48 பேர் காயமடைந்த நிலையில், சீகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் பத்துப்பேர் மேலதிக சிகிச்சைகளின் பொருட்டு தம்புள்ள ஆதார வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டிருந்தனர்.

சனிக்கிழமை நான்காவது தடவையாகவும் இவ்வாறு உல்லாசப் பயணிகளைக் குளவிகள் கொட்டி காயப்படுத்தியதைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் இடை நடுவில் அமைந்துள்ள சங்கபாதம் வரையிலான பிரதேசத்திற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டதுடன், குன்றின் மேற்தளத்திற்கு ஏறுவது சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று முன்தினம் முதல்தடை செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை குளவிகளால் கொட்டப்பட்டு காயத்திற்குள்ளானவர்களில் 9 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவதாகவும் இவர்கள் களுத்துறை, கல்முனை, வத்தளை, கிரிபத்கொட மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சீகிரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளவியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் குறித்த உத்தியோகத்தர்கள் சம்பவ தினம் விடுமுறையில் சென்றிருந்ததால் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை எனவும் கலாசார முக்கோண மத்திய நிலையப்பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை சிகிரியா குன்றின் உச்சியில் குளவிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அங்குள்ள சேறுநிறைந்த நீர்த்தடாகத்தினுள் 3 மணிநேரம் சுமார் 15 பேர் வரை குந்தியிருக்க நேர்ந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்ததுடன், சிகிரிய கலாசார முக்கோண நிதிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களால் தமக்கு எவ்வித உதவிகளும் பாதுகாப்பும் இல்லை எனவும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் சிங்கபாதத்தைத் தாண்டி மேலே செல்வதை தற்காலிகமாக தடை செய்யத் தீர்மானித்ததாக சீகிரியா கலாசார முக்கோண மத்திய நிலைய முகாமையாளர் சுமேத கருணாரத்ன தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அங்கிகளை அணியாது எவரும் சீகிரியா குன்றிலேறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

ஊவா மா.ச. முதலமைச்சர் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம்

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபை முதலமைச்சராக சசேந்திர ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஊவா மாகாண சபை வட்டாரங்கள் இணையத் தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளன.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட கதிர்காம தேவாலயத்தின் தியவதன நிலமே சசேந்திர ராஜபக்ஷ 1 லட்சத்து 36 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று முதலமைச்சர் பதவிக்குத் தகுதி பெற்றுள்ளார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சகல மாவட்டங்களையும் தனதாக்கி அமோக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாலாவியில் 1 கோடியே 38 லட்சம் ரூபா செலவில் புதிய தபாலகம் – அமைச்சர் பீரிஸ் திறந்து வைப்பு

புத்தளம் பாலாவியில் 1 கோடி 38 லட்சம் ஷரூபா செலவில்; நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகத்தை வெளிநாட்டு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் பதில் தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று திறந்து வைத்தார்.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தபாலகத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சா பீரிஸ் நாட்டில் பயங்கரவாதம் நிலவிய போது,  எவ்வித அபிவிருத்திகளையும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இன்று அவற்றை அழித்து அபிவிருத்திகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் எனக்கூறினாh.;

புத்தளம் மிகவும் முக்கியமான பிரதேசமாகும். மன்னார், மற்றும் ஏனைய முக்கிய வடமாகாண பகுதிகளுக்குப் பயணம் செய்யக் கூடிய பாதைகள்; இங்கிருந்து செல்கின்றன. புலிகளின் சர்வதேச தலைவர் பத்மநாதனும் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைத்துவமற்ற அமைப்பாக இன்று புலிகளின் அமைப்பு மாறிவிட்டது. இனி அவர்களுக்கு விமோசனம் இல்லை. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.மு.தசநாயக்கவை கொன்றதும் புலிகளே. இம்மாவட்ட மக்களுக்குப் பெரும் பணியாற்றிய நல்லதொரு தலைவர் த.மு.தசநாயக்க” என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

இருபது குடும்பங்களுக்கான காணி உறுதிகளையும் அமைச்சர் இந்நிகழ்வில் வழங்கினார். கால்நடை வளத்துறை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் அழைப்பின் பேரில் அமைச்சர் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதில் கடற்தொழில் பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவும் கலந்து கொண்டார்.

யாழ். குடாவில் நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்கம்

jaffna_8.jpgவரலாற் றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களுக்கு யாழ் குடாநாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பி.டி சில்வாவிடம்  சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடாந்த திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையே நடைபெற்று வரும் உள்ளுர் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையம் என்பன இரதோற்சவத்தையும் தீர்த்தத்திருவிழாவையும் நேரடி ஒலி ஒளிபரப்பு செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த திலக்கரத்ன டில்ஷான் – 30 பந்துக்களில் 50 ஓட்டங்கள்

thilakarathna-dilshan.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட விரரான திலக்கரத்ன டில்ஷான் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் போட்டியில் இன்று காலை குறைந்த பந்துகளுக்கு அரைச்சதம் அடித்து சாதனை படைத்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கைக்கும் நியுஸிலாந்துக்கும் இடையில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே டில்ஷான் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் 30 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் முன்னால் தலைவர் அர்ஜூன ரனதுங்கவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அர்ஜூன இந்திய அணியுடனான போட்டி ஒன்றின் போது 31 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்தார். ஆட்ட முடிவின் போது இலங்கை கிரிக்கெட் அணி 3 விக்கட் இழப்புக்கு 293 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

தமிழக இடைத் தேர்தலில் 65% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் தொண்டாமுத்தூர், இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. சராசரியாக 65 சதவீத வாக்குகளுக்கும் மேலாக பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது. ஐந்து தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

அதிமுகவின் தேர்தல் புற்ககணிப்புக்கு இடையே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ஐந்து தொகுதிகளிலும் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் எனத் தெரிகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டத்தை நிறைவுசெய்ய முன்வாருங்கள்: உருத்திரகுமாரன் : உருத்திரகுமாரனை நாடு கடத்தக் கோரும் இலங்கை

rudrakumaaran_voo.jpgஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக – உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து – நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார்.  நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது.

ஏற்கெனவே – பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.

சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர்.

புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும்.

ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம். இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும். இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருத்திரகுமாரனை நாடு கடத்தக் கோரும் இலங்கை

gothabaya.jpgநாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பிரபல வழக்கறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.  இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜெயந்த ஞானக்கோன் செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரரான சார்ள்ஸ் ஞானக்கோன் என்பவர் சிங்கப்பூரில் இருந்தபடி புலிகளுக்காக செயல்பட்டு வந்துள்ளார். இந்தத் தகவல்களை கைது செய்யப்பட்டுள்ள கே.பி. விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர விஸ்வநாதன் உருத்திரகுமாரன். இவர்கள் மூவரையும் நாடு கடத்துமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை விட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என்றார்.

ஞானக்கோன் சகோதரர்களில் மூத்தவர் சார்ள்ஸ். இவரைத்தான் சில காலத்திற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் இரகசியமாக சந்தித்து புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயன்றதாக ராஜபக்ச கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது.  ஜெயந்தா ஞானக்கோன் ஏர் சிலோனில் விமானியாக பணியாற்றியவர். மறைந்த ஜெயவர்த்தனவின் நண்பர் ஆவார். 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்த பின்னர் இவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஜெயந்தா.

சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர். கடந்த 2005ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

விடுதலைப் புலிகளுக்காக பெருமளவில் துப்பாக்கிகளை விநியோகம் செய்து வந்தவர். இவர்கள் தவிர உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த சட்ட நிபுணர்.

இவர்கள் மூன்று பேரையும் இலங்கைக்கு நாடு கடத்தி கொண்டு வந்து விசாரிக்க இலங்கை அரசு தற்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் அது எளிதாக இருக்குமா என்பது சந்தேகம் என்ற பேச்சு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் – 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக மின் அஞ்சல்

sarathfonseka.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை கால அட்டவணை போட்டு தோற்கடித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசியல் பிரவேசத்திற்கான முதலாவது மின் அஞ்சலை இணையத்தில் பரவவிட்டு உள்ளார். மகாவம்சத்தை மீண்டும் சென்று புரட்டியுள்ள அவர் துட்டகைமுனு இலங்கைத் தாய்நாட்டை ஒற்றுமைப்படுத்தியது போன்ற உணர்வு தற்போது ஏற்பட்டு உள்ளதாகக் கூறும் மின் அஞ்சலைப் பரவவிட்டுள்ளார்.

அதில் இராணுவ வீரர்கள் ஈட்டிய வெற்றியை அரசியல்வாதிகள் இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் பணிந்து நாட்டை வேறுமுறையில் பிரிக்க முற்படுவதாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது பிரிவினைக்கு இட்டுச்செல்லும் என்றும் அவர் தெரிவித்திதுள்ளார்.

13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியமானது என்று வாதிட்ட ஐ நா பிரிதிநிதி தயான் ஜெயதிலக்க அவரது பதவியில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார். அவர் திருப்பி அழைக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய அரசின் அழுத்தங்கள் காரணமாக இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எது எப்படியானாலும் இலங்கை அரசின் பக்கத்தில் இருந்து வரும் சமிஞ்சைகள் பெரும்பாலும் அரசியல் தீர்வொன்றுக்கு எதிராகவே உள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி பரவிவிட்டுள்ள மின் அஞ்சல் லங்கா ஈ நியுஸ் இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.

._._._._._.

Dear Fellow citizens,

Let me first salute the fallen heroes of Sri Lanka who made a supreme sacrifice to defend the motherland from the clutches of terrorism. We are indebted to them for generation to come for rescuing the nation
from the grip of terrorism and protecting the territory and integrity of Sri Lanka. For those who made the noble sacrifice for this supreme cause we will never be able to pay their debt. They shall not grow old,
as we that are left grow old age shall not weary them, nor the years condemn at the going dawn of the sun, and in the morning we will remember them lest we forget.

When I was a young kid in school, I learnt the Great king of Dutu Gemunu who united Mother Lanka! Today we taste the same freedom & joy in our father’s land. My best fear is that we will no more enjoy this freedom. The separatism comes in a different form. Now we have a daunting task to protect our motherland from India and the western world. We defeated separatism and strengthened the political mainstream in the country.

I am sadden to understand that our politicians are conniving with India and western world to separate the country in a different way. The proposed political solution through the 13th Amendment would foil the
military victory and create a division in the country. If the present Sri Lankan leaders are going to sing the same old song which was solely composed by India in 1987 for their own benefit, then the recent
military victory would be a total loss and in vain.

The saddest thing for Sri Lanka is its worst neighborhood. India never helped Sri Lanka genuinely but always had its profitable motivation behind every move or planted problems in Sri Lanka for a short term or long term. Can somebody forget what happened when Sri Lanka requested Indian help to fight terrorism? They always bowed to Tamilnadu pressure and twisted the hands of Sri Lankan governments. Thankful to Pakistan, China, Middle East and few other countries Sri Lanka could wipe-out the
terrorism completely.

The government is planning to provide a political solution to the national problem through the 13th Amendment. India and several western countries are attempting to thrust upon us a proposed political
solution against the wishes of all communities in Sri Lanka. If the Thirteenth Amendment is to going to be implemented, then it is like the Ealam the terrorists were fighting for is granted and presented and
that will be a most traitorous act of all time!

This is against my wish and wish of all the citizens of the country. I will make a supreme sacrifice to defend my land against the politicos who ever they may be joining hands with India and western world. I
salute the valiant soldiers of the Army of Sri Lanka, emerging victoriously from their determined struggle against international terrorism. Please give me your full cooperation to protect our motherland.

Yours Sincerely,
Sgd. General Sarath Fonseka RWP, RSP, VSV, USP
sarath.fonseka.2010@gmail.com