14

14

அரசியல் ரீதியான வெற்றிகள் இராணுவ வெற்றிக்கு அத்திபாரமாக அமைந்துள்ளது – வீரவன்ச எம்.பி.

vimalveera.jpgஅரசியல் ரீதியான வெற்றிகள் இராணுவ வெற்றிக்கு அத்திரபாரங்களாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் தெரிவித்துள்ளார். கண்டி தபால் காரியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற முன்னணியின் மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

“ரணில் விக்கிரமசிங்கவின் சமாதன உடன்படிக்கை காரணமாகவே யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு காலதாமதமாகியது. நாம் இதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டோம். உண்மையாகவே, ரணில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசித்துப் பார்க்காமலேயே கையொப்பமிட்டுள்ளார் என்றே எண்ணவேண்டியுள்ளது.

எமது இராணுவத்தினர் யுத்தத்தில் வெற்றிபெறுவார்கள் என நீண்ட காலமாகவே நாம் கூறிவந்தோம். அதுவே தற்போது நிறைவேறியுள்ளது.  2009 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வெற்றிகரமான ஆண்டாகும். நாம் இந்த பூமிக்கு முழுமையான ஆதரவாளர்களாகவே திகழ வேண்டுகின்றோம்’ என்றார்.

வன்னியில் கடந்த 3 மாதப் போரில் மூவாயிரம் படையினர் உயிரிழப்பு -அமைச்சர் கெஹலிய

SL_Army_in_Killinochieவன்னியில் கடந்த மூன்று மாதப் போரில் மூவாயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அரசின் பாதுகாப்பு விவகாரப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளதாக “சண்டே ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அந்தப் பத்திரிகைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 3 ஆயிரம் படையினர் வன்னி களமுனைகளில் கொல்லப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் 15 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது தவறானது.  விடுதலைப்புலிகள் முல்லைத்தீவுப் பகுதியில் மட்டுமே தற்போது நிலைகொன்டுள்ளனர். அவர்கள் வசம் 2 ஆயிரம் பேரே உள்ளனர். எனவே அவர்களை நாம் இலகுவில் வெற்றி காண்போம் என்றார்.

எஞ்சியிருக்கும் புலிகள் ஒன்றுசேர்ந்து கெரில்லா பணியிலான தாக்குதலை சிறப்பாக முன்னெடுக்க முடியுமா என அவரிடம் கேட்கப்பட்ட போது, அது சாத்தியமற்றது. இடையிடையே சிறு சிறு சேதங்களை மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர பெரும் சேதங்கள் எதனையும் அவர்களால் ஏற்படுத்த முடியாதென்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

படையிலிருந்து தப்பியோடிய 2,500 பேர் சிறையில் தடுத்துவைப்பு.

justice.jpgஇரா ணுவத்திலிருந்து தப்பியோடி பிடிபட்டவர்களில் 2,500 பேர் தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 4,000 பேர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்; படைகளிலிருந்து தப்பியோடி பின்னர் கைது செய்யப்படுவோர் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் . இவர்களுக்கான சிறைத் தண்டனை, மூன்று மாதத்திலிருந்து ஒரு வருடமாயிருக்கும், தற்போது இவ்வாறு 2,500 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் மேலும் 4,000 பேர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படவுள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கானோர் மீண்டும் படைகளில் இணைவதற்காக அவர்களுக்கு பல தடவைகள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் குறிப்பிட்ட அளவினரே பொது மன்னிப்பை பெற்று மீண்டும் படைகளில் இணைந்து கொண்டனர். சுமார் 3,000 பேர் இந்த பொதுமன்னிப்புக் காலத்தின் ஊடாக மீண்டும் படையணிகளில் இணைந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையின் கெளரவ தூதுவர்களுக்கான கருத்தரங்கு

presidentmahinda.jpgவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையின் கெளரவத் தூதுவர்களுக்கு (வெளிநாட்டுப் பிரஜைகள்) இந்நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் மூன்று நாட்கள் கருத்தரங்கொன்று எதிர்வரும் 19ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவிருக்கிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையின் கெளரவத் தூதுவர்கள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்துவைக்க விருக்கிறார்.

இக்கருத்தரங்கின்போது இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை என்பன தொடர்பாக தெளிவுபடுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் பங்குபற்றும் கெளரவத் தூதுவர்கள் திருகோணமலைக்கு நேரில் விஜயம் செய்யவிருக்கிறார்கள். இவர்கள் திருமலை மாவட்ட செயலாளர் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏ-9 பாதை திறப்பு மூலம் யாழ். குடா மக்கள் புத்துயிர் பெறுகின்றனர் – யாழ். ஆயர்

jaffna_thomas.jpgஏ-9  பாதை திறக்கப்பட்டது குறித்து தான் பெரு மகிழ்ச்சியடைவதாக யாழ். ஆயர் வண. தோமஸ் செளந்தரநாயகம் தெரிவித்துள்ளார். ஏ-9 பாதை திறப்பானது வடக்கிற்கும், தெற்கிற்குமிடையில் மிகவும் புரிந்துணர்வை ஏற்படுத்துமெனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், ஏ-9 பாதை மூடப்பட்டிருந்ததன் மூலம் யாழ். குடாநாட்டு மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வந்தார்கள். பாதை திறக்கப்பட்டு விட்டதென்ற செய்தி கேட்டதும் பெருமகிழ்ச்சியடைந்தேன். குடாநாட்டில் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன. இதற்கு போக்குவரத்து பிரதான காரணமாக அமைந்தது. பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் யாழ். மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

அகதிகள் தஞ்சமடைந்திருப்பதால் வன்னி பாடசாலைகள் முழுவதும் இயங்கமுடியாத நிலை

school-2.jpgவன்னி யில் தொடரும் படை நடவடிக்கைகளால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்து வருவதால் அடுத்து வரும் நாட்களில் பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலை ஏற்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.  இராணுவ நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி கல்வி வலயத்தில் 73 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராசா தெரிவித்தார்.

முன்னர் இங்கு 90 பாடசாலைகள் இயங்கின. அதில் 73 பாடசாலைகள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன. இதிலும் 17 பாடசாலைகளில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளதால் மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்தநிலையில் பரந்தனுக்கு கிழக்கேயும் வேறு பகுதிகளிலும் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளால் தொடர்ந்து பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தருமபுரம் மற்றும் விசுவமடு பகுதி பாடசாலைகள் தற்போது, இடம்பெயர்ந்த மக்களால் முற்றாக நிரம்பிவழிகிறது.  இதனால், அடுத்து வரும் நாட்களில் வன்னியிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலை ஏற்படலாமெனவும் பாடசாலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை பிரச்னைக்கு தீர்வு தமிழர்கள் கையில்: இல.கணேசன்

eela-ganash.jpgஇலங் கை பிரச்சனைக்கு எது தீர்வு என்பதை அங்குள்ள தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்.வெப்துனியா இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி:  ஈழத் த‌மிழ‌ர்க‌ள் ‌விஷய‌த்‌தி‌ல் எ‌ப்போதுமே பாஜக கவலையை‌த் தெ‌ரி‌வி‌த்து வருகிறது. இல‌ங்‌கைத் த‌மிழ‌ர்க‌ள் பாதுகா‌ப்போடு இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது மட்டுமல்ல, சம உ‌ரிமையோடும் வாழ வே‌ண்டு‌ம். சம உ‌ரிமை எ‌ன்பது அவ‌ர்களது பிற‌ப்பு‌ரிமை. விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான நடவடி‌க்கை எ‌‌ன்ற போ‌ர்வை‌யி‌‌ல் அ‌ப்பா‌வி‌த் த‌மிழ‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்படு‌கிறா‌ர்க‌ள். சொ‌ந்த நா‌ட்டிலேயே த‌மிழ‌ர்க‌ள் அக‌திகளாக வா‌ழ்‌கிறா‌ர்க‌ள்.

இல‌ங்கை அரசுக்கு ஆதவாக திமுக அங்கம் வகிக்கும் கா‌ங்‌கிர‌ஸ் அரசு செய‌ல்படு‌கிறது; பண‌ம் த‌‌ருகிறது. இந்தியா நடு‌நிலையாக இ‌‌ல்லாம‌ல் ஒரு சா‌ர்பாக‌, த‌மிழனு‌க்கு எ‌திராக நட‌ந்து கொ‌ள்வது தவறு. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு பிரணா‌ப் முக‌ர்‌ஜியை அனு‌ப்‌பினாலு‌ம், ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கே போனாலு‌ம் கூட ஒ‌ன்று‌ம் நட‌க்காது. த‌மிழக முத‌ல்வரே டெ‌ல்‌லி போ‌ய் வ‌ற்புறு‌த்‌தினாலு‌ம் எதுவு‌ம் நட‌க்காது.

இப்பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு எ‌ன்னவெ‌ன்று முடிவு செ‌ய்ய வே‌ண்டிய அ‌திகார‌ம் இல‌ங்கை‌யி‌ல் வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிற த‌மி‌ழ் ம‌க்களு‌க்கு‌த்தா‌ன் உ‌ள்ளது. த‌னி நாடு எ‌ன்பதை பாஜக ஆத‌ரி‌க்கவு‌ம் இ‌ல்லை; எ‌தி‌ர்‌க்கவு‌ம் இ‌ல்லை. அதை தமிழர்கள் முடிவு செ‌ய்து கொ‌ள்ள‌ட்டு‌ம். இவ்வாறு இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
 

மும்பைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை எந்த நாட்டிடமும் ஒப்படைக்க முடியாது – பாகிஸ்தான் பிரதமர்

mumbai.jpgமும் பைத் தாக்குதலில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டாலும் அவர்களை எந்த நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோமென பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.  கராச்சியில் (11)செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; மும்பையில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா கொடுத்த ஆதாரங்கள் குறித்து தனியாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உண்டு என்று, கண்டறியப்பட்டாலும் அவர்கள் பிறநாடுகளிடம் ஒப்படைக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தான் நாட்டு சட்டப்படியே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படுபவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கென தனிச் சட்டம் உள்ளது. அதன்படி விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்குத் தெரிவிப்போம்.

பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் எதிராக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்றார். இதற்கிடையே, பாகிஸ்தானிலுள்ள வெளிநாடுகளின் தூதர்களுக்கு ஜனாதிபதி சர்தாரி விருந்து அளித்தார். முஸ்லிம் அல்லாத நாடுகளின் தூதர்களுக்கு மட்டுமே இந்த விருந்து அளிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சத்யபிரபாபோல் மற்றும் அமெரிக்க, சீன, இங்கிலாந்து, ரஷ்ய, பிரான்ஸ் தூதர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் கிலானியும் இதில் பங்கேற்றார். விருந்து நிகழ்ச்சி மூலமாக பாகிஸ்தான் தரப்பு நியாயத்தை வெளிநாட்டு தூதர்களிடம் சர்தாரி தெரிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை சர்தாரியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். விருந்து நிகழ்ச்சியில் சர்தாரி எந்த உரையும் ஆற்றவில்லை என்று அவர் தெரிவித்தார்.