அரசியல் ரீதியான வெற்றிகள் இராணுவ வெற்றிக்கு அத்திரபாரங்களாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் தெரிவித்துள்ளார். கண்டி தபால் காரியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற முன்னணியின் மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
“ரணில் விக்கிரமசிங்கவின் சமாதன உடன்படிக்கை காரணமாகவே யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு காலதாமதமாகியது. நாம் இதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டோம். உண்மையாகவே, ரணில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசித்துப் பார்க்காமலேயே கையொப்பமிட்டுள்ளார் என்றே எண்ணவேண்டியுள்ளது.
எமது இராணுவத்தினர் யுத்தத்தில் வெற்றிபெறுவார்கள் என நீண்ட காலமாகவே நாம் கூறிவந்தோம். அதுவே தற்போது நிறைவேறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வெற்றிகரமான ஆண்டாகும். நாம் இந்த பூமிக்கு முழுமையான ஆதரவாளர்களாகவே திகழ வேண்டுகின்றோம்’ என்றார்.