2009

2009

திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது:காங்கிரஸ்

manmohan_soniya.jpgமத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.

காங்கிரசுடனான இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,  காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக டி.ஆர்.பாலு அறிவித்தார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்,  ’’அமைச்சரவையில் திமுகவின் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமானது.  அதனால், திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

காங். போக்கால் அதிருப்தி – வெளியிலிருந்து ஆதரவு தர திமுக முடிவு

karunanithi.jpg கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர திமுக இன்று இரவு அதிரடி முடிவை எடுத்தது. திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.

தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வந்தது

தீவிரவாதம் இனி தலைதூக்க முடியாதவாறு மூல வித்தை நாம் அழித்துள்ளோம் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anurapriyadarsanayapa.jpgதீவிரவாதத்தின் மூலவித்தை நாம் அழித்துள்ளோம். எனவே எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் அறவே இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபேதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது

புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகார தலைவர் கே.பத்மநாபன் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாம் அலட்சியம் செய்கிறோம். அவர் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. குற்றவாளிகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் சர்வதேச நாடுகளுடன் இலங்கையும் கையொப்பம் இட்டுள்ளது. எனவே இவ்வாறானவர்களுக்கு எதிராக இலங்ககை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களின் மீள்பதிவு ஆரம்பம்

muslim-society.jpgவடக்கு மாகாணத்தில் இருந்து 1990ம் ஆண்டு புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு தற்பொழுது புத்தளம் மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் உள்ள முஸ்லீம் மக்களின் மீள்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்தநிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பானது இன்று (21.05.2009) ஆரம்பிக்கப்பட்டு நாளையும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் முதற்கட்ட வேலைகள் முந்தல் பிரதேச செயலர் எம் ஆர் எம் அலி தலைமையில் குறித்த பிரதேசசபையில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஏனைய பிரதேச சபைகளில் உள்ளவர்களும் கணக்கெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் இலங்கைக்கான உதவித் தூதரகம்

rohithaogollagama.bmpசீனாவின் செந்து பிரதேசத்தில் இலங்கைக்கான உதவித் தூதரகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம சமர்ப்பித்திருந்தார்.

இதற்காக இவ்வருடம் 193,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேவைப்படும் நிதி திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.

இலங்கை அரசுக்கு ரஷ்யா வாழ்த்து

russian-flag.jpgவிடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தோற்கடித்து வெற்றிபெற்றமை தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டிருக்கும் செய்தியில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்யும் பொருட்டு  பிரிவினை வாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ரஷ்யா உதவிகளை வழங்குகிறது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், மோதல்கள் முடிவு பெற்றிருப்பதானது இலங்கையில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் கொண்டு வருமென நம்புவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கண்டி வீதியூடாக யாழ்.குடாநாட்டுக்கு 20 லொறிகளில் அத்தியாவசியப் பொருட்கள்

a9-road.jpg யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக இருபது லொறிகளில் பொருட்கள் எடுத்துவரப்படுவதாக யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த லொறிகளில் மருந்துப் பொருட்கள் சீமெந்து, அஸ்பெய்டஸ் சீற், இரும்புக் கம்பிகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், கம்பளி உற்பத்திப் பொருட்கள் ஆகியன எடுத்துவரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்து சேருமென எதிர்பார்க்கப்பட்டபோதும் வந்து சேரவில்லை. பொருட்களை ஏற்றிவரும் லொறிகளில் யாழ்.மாவட்ட விளை பொருட்களான வெங்காயம், புகையிலை, பீற்ட், பனை உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்வுள்ளன.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இராணுவம் தீர்வு கண்டுள்ளதால் இனிமேல் பேசுவதற்கு தேவையில்லை – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இராணுவத்தினர் தீர்வு கண்டுள்ளதால் இனிமேல் தீர்வுத் திட்டங்கள் குறித்து பேசுவதற்கான தேவையில்லையென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டைப் பிரிப்பதற்குத் திட்டமிட்ட சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியான பிரபாகரன் உயிரிழந்துள்ள நிலையில் இந்த ஏகாதிபத்தியவாதிகள் தமது இலக்கை மாற்று வழிகளில் முன்னெடுக்க முயல்வார்கள் என்றும் இந்த முயற்சியையும் முறியடிக்க வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நேற்று புதன்கிழமை கொழும்பு தேசிய நூலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அதன் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர மேலும் கூறியதாவது;

நாட்டைப் பிரிப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச ஏகாதிபத்திய வாதிகள் தமது நன்மைக்காகச் செயற்படுகின்றனர். இவர்களின் கைக் கூலியாகச் செயற்பட்ட பிரபாகரன் பிரிவினை கோரி போராட்டத்தை நடத்திய நிலையில் எமது படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.

எனினும், இவ்விலக்கை அடைவதற்கு ஏகாதிபத்தியவாதிகள் வேறு மார்க்கங்களை நாடுவர். இவர்களது இலக்கை முறியடிப்பதற்கான சவால்களை வெற்றி கொள்ள வேண்டும்.

இந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கிடையிலான யுத்தத்தில் தற்போது வெற்றி கொள்வதற்கு எமக்கு ரஷ்யாவும் சீனாவும் உதவியுள்ளன. இதற்கு எமது நன்றிகள்.

தற்போது தீர்வு குறித்து பேசப்படுகின்றது. வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு படையினர் தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ள நிலையிலேயே இது பேசப்படுகின்றது. இது அவசியமற்றது. வடக்கை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு வெளிநாட்டு அமைப்புகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது.

வடக்கு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வை முன்வைக்க ஐ.தே.க. கோரிக்கை

தீவிரவாத த்திலிருந்து விடுதலை பெற்றுள்ள வடக்கு மக்களின், அபிலாஷைகள் தொடர்பாக தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட்டாலே அவற்றை நிறைவேற்ற முடியும். இதற்கு சர்வதேச ஆதரவு வேண்டுமென்பதால், இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முனைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மீண்டும் ஒரு தீவிரவாதம் நாட்டில் உருவாகாமலிருக்க வேண்டுமானால், இந்தியாவைப் போன்றதொரு அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது பொருத்தமானது என ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், அவர் மேலும் கூறியுள்ளதாவது;

எமது தாய் நாடு வரலாற்றில் முக்கியமான தருணத்தை அடைந்துள்ளது. மூன்று தசாப்த காலமாக இருந்து வந்த தீவிரவாதம் மற்றும் யுத்தமும் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை நாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். இங்கு வாழக்கூடிய சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் என்ற சகல இனத்தவர்களும் அச்சம், பீதியற்ற சூழ்நிலையில் வாழும் சந்தர்ப்பத்தை அமைப்பது எமது பொறுப்பாகும்.

இவ்வேளையில் தீவிரவாதத்திடமிருந்து நாட்டை மீட்பதற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூருவதுடன், அவர்கள் அனைவருக்கும் ஐ.தே.க.வின் கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டுக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் இராணுவத்தினால் பெறப்பட்ட இம்மாபெரும் வெற்றியை அரசியல் இலாபம் கருதி செயற்படுவதையும் அதன் நோக்கத்தையும் விலக்கிக் கொள்வது சிறந்தது.

தீவிரவாதத்தினால் எமது கட்சி பல தலைவர்களை இழந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, ரஞ்சன் விஜேரத்ன, ஜானக்க பெரேரா உட்பட பல தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.

அதுமட்டுமல்லாது, தலதா மாளிகை, முஸ்லிம் பள்ளி வாசல் மற்றும் உடைமைகளுக்கும் பாரிய சேதங்களை விளைவித்த பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை யாவருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாகும். தீவிரவாதத் தை முறியடிக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன முதல் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க வரையிலான அரசாங்கங்கள் யுத்தத்தை நடத்தின. பின்னர் பேச்சுக்குச் சென்றன. பேச்சுகளை நிராகரித்த புலிகளை எமது படையினர் அழித்திருக்கின்றனர்.

நாடு விடுதலை பெற்றுள்ளது. தீவிரவாதத்தினுள் இருந்த வடக்கு தமிழ் மக்களும், சுதந்திரமான விடுதலையைப் பெற்றுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் யுத்தத்தால் அவல நிலைக்குள்ளான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அனைத்தையும் இழந்து நிற்கும் வடக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இன்றைய பாரிய சவாலாகும். இதனை நிவர்த்தி செய்ய தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் பூரணமான ஆதரவினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான வடக்கு மக்களின் நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டியதும், இராஜதந்திர ரீதியில் அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அம்மக்களைச் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவதிலும் அவர்களது தேவைகள் மற்றும் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதுமட்டுமன்றி, மீண்டும் ஒரு உரிமைப் போராட்டமாக எழுந்து ஆயுதப் போராட்டமாக வியாபிக்காதிருக்க வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்று அவசியமாகும்.

சகலரும் இலங்கையரே தவிர இன பேதமற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவைப் போன்றதொரு அரசியல் தீர்வை மேற்கொள்ள சர்வதேச ஆதரவும் அவசியமாகின்றது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

chamalrajapaksa.jpgகப்பல் சிப்பந்திகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார்.