சீனாவின் செந்து பிரதேசத்தில் இலங்கைக்கான உதவித் தூதரகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம சமர்ப்பித்திருந்தார்.
இதற்காக இவ்வருடம் 193,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேவைப்படும் நிதி திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.