இலங்கை அரசுக்கு ரஷ்யா வாழ்த்து

russian-flag.jpgவிடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தோற்கடித்து வெற்றிபெற்றமை தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டிருக்கும் செய்தியில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்யும் பொருட்டு  பிரிவினை வாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ரஷ்யா உதவிகளை வழங்குகிறது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், மோதல்கள் முடிவு பெற்றிருப்பதானது இலங்கையில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் கொண்டு வருமென நம்புவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *