2009

2009

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சனத்தொகை மதிப்பீடு!

0000sri-lanka-map.jpg இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் சனத்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2011 ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை முற்றுப்பெறும் என்றும் சனத்தொகை மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.பீ.பி.எஸ் வைத்தியரத்ன தெரிவித்தார்.

10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கௌளப்பட்டபோதும் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அப்பணி முழுமையடையவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகள் அந்த வீடுகளில் வசிப்பவர்களின் விபரங்கள் என்பன ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக பணிகள் அடுத்த ஆண்டு பூர்த்தி

yappa.jpgஅம்பாந் தோட்டை துறைமுக நிர்மாண பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தியடைந்து விடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது கப்பல் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த துறைமுகத்திற்கான முதலாவது இறங்குதுறையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளதாக தெரிவித்த அவர் 500 மீற்றர் தூரம் வரை இறங்குதுறை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நாரஹேன்பிடியிலுள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில்,

கொழும்பைப் போன்று கிராமப் புறத்தையும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு இறுதியிலே இந்த துறைமுக நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனினும், தமது இலக்குக்கு முன்னரே தற்பொழுது வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.

39,080 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிர்மாண பணிகள் முன்னெடுக்கப் படவுள்ளன. இவற்றில் 33,218 மில்லியன் ரூபாவை சீன அரசு நிதியுதவியாக வழங்கி யுள்ளது என்றார். 2010ம் ஆண்டு டிசம்பரில் பணிகளை பூர்த்தி செய்து விட்டு நீரை உள்வாங்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அணியுடனான டெஸ்ட்; நியூசிலாந்து அணி 281/8

murali.jpgஇலங் கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்சிற்காக நியூசிலாந்து அணி 281ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுகளை இழந்து இருந்தது. மூன்றாவது நாள் ஆட்டமும் மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.

Sri Lanka                        

1st innings: 452
(T. Dilshan 92, M. Jayawardene 114, T. Samaraweera 159, D. Vettori 4-78, C. Martin 4-77)

NEW ZEALAND               

1st innings               (overnight 87-2)
T. McIntosh lbw b Muralitharan   69
M. Guptill b Thushara    24
D. Flynn b Mendis    14
J. Patel lbw b Muralitharan   26
R. Taylor c P. Jayawardene b Thushara  35
J. Ryder b Kulasekara    42
B. McCullum b Thushara     1
J. Oram c sub (Warnapura) b Muralitharan  12
D. Vettori not out    33
I. O’Brien not out     3
Extras: (b6, lb5, nb11)   22
TOTAL (for 8 wkts, 105 overs)   281
To bat: Chris Martin.
Fall of wickets: 1-45 (Guptill), 2-80 (Flynn), 3-129 (Patel), 4-180 (Taylor),
5-188 (McIntosh), 6-195 (McCullum), 7-223 (Oram), 8-259 (Ryder).
Bowling: Kulasekara 10-2-41-1 (nb1), Thushara 22-2-80-3 (nb6), Mendis 34-8-75-1 (nb4), Muralitharan 37-9-66-3, Paranavitana 2-0-8-0.

அரசிற்கு எதிரான பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி உறுப்பினர்கள் கைது.

jvp-poster.jpgநாட்டில் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழியுங்கள் எனும் வாசகம் அடங்கிய பிரசுரங்களை ஒட்டிய ஜேவிபி யை சேர்ந்த கொழும்பு நகரசபை உறுப்பினரான சுமித் ஹேவாபாசப்பெருமகே யுடன் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலி பிரிட்டிஷ் விசா ஒத்திவைக்கப்பட்ட சிறை

court222.jpgபோலி பிரிட்டிஷ் விசாவுடன் லண்டன் செல்ல முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகி டீ அல்விஸ் 50 ஆயிரம் ரூபா அபராதமும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்தார்.  2008 ஏப்ரல் 24 ஆம் திகதி இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின் போது இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இவ்வாறு நீதிவான் தீர்ப்பு வழங்கினார்.

வெளிநாட்டுப் பயண முகவர் ஒருவரே தனக்குப் பயண ஏற்பாடு செய்துதந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலீடுகளுக்கு வரிச்சலுகை – நிதி அமைச்சு தகவல்

ep-map.jpgகிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கிழக்கின் உதயம  வேலைத்திட்டத்தின் கீழ் இந்த முதலீட்டு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் 3 கோடி ரூபாவுக்கு குறைவில்லாத முதலீடுகளுக்கு வருமானவரி விலக்களிக்கப்படும். இயந்திரங்கள் இறக்குமதி மீதான வரி விதிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சு மேலும்  தெரிவித்துள்ளது.

லாக்கர்பி குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்

lockerbie_bombing.jpgஸ்காட் லாந்தில் இருபது வருடங்களுக்கு முன்னார் லாக்கர்பி நகருக்கு மேலாக பயணிகள் விமானம் ஒன்றை குண்டுவைத்துத் தகர்த்ததற்காக சிறையிலிடப்பட்டிருந்த, அப்டல் பசட் அல் மெஃராஹி என்னும் நபர் விடுதலை செய்யப்பட்டு, தனது நாடான லிபியாவுக்கு விமானத்தில் சென்றார்.

குணப்படுத்த முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெஃராஹி அவர்கள், மனிதாபிமான அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது. அவர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளது.பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

அரசு மேலதிக வரிச்சுமைகளை சுமத்தாது; மானியங்களும் குறைக்கப்படமாட்டா சபையில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

26parliament.jpgதுண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக எக்காரணம் கொண்டும் அரசாங்கம் மக்கள் மீது மேலதிக வரிச்சுமைகளை சுமத்தவோ மானியங்களை குறைக்கவோ நடவடிக்கை எடுக்காது. இந்த வருட முடிவுக்குள் வருமான இலக்குகளை எட்ட ஆவன செய்யப்படுமென அரச வருவாய்த்துறை அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (20) பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்க வருமானம் குறைந் துள்ளதால் துண்டு விழும் தொகையை 6.5ல் இருந்து 7 வரையாக உயர்த்த நேரிடுகிறது. ஆனால் இந்த வருட முடி வுக்குள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ள வருமான இலக்குகளை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

துண்டு விழும் தொகையை நிரப்புவதற்காக புதிதாக வரிகளை அமுல்படுத்தவோ மானியங்களை குறைக்கவோ மாட்டோம். வருவாயை அதிகரிக்க அரசாங்கம் சகல நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளது.

2003ம் ஆண்டில் 105 வீதமாக இருந்த கடன் வீதம் தற்பொழுது 81 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வருமானம் வேகமாக அதிகரித்து வருவதோடு வருமான முரண்பாடுகளை குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அரசாங்க வருவாய் 255 பில்லியன் ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் துண்டுவிழும் தொகையை நிரப்புவதற்கு அரசாங்கம் வரிகளை அதிகரிக்கவும் மானியங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டார்.

சிறுமிகளின் மரணம்; விசாரணைக்கு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் – ஆகஸ்ட் 23இல் மஸ்கெலியாவில்

girl2222.gifமஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தைச்சேர்ந்த சிறுமிகள் இருவர் கொழும்பில் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பில், உரிய விசாரணைகளைப் பக்கச்சார்பின்றி நடத்தக்கோரி மஸ்கெலியா நகரில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடப்போவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.  திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சிறுமிகளின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சிவசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு திகாம்பரம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; குடும்பத்தின் வறுமைகாரணமாக கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமிகள் இருவர் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையானது பேரதிர்ச்சியைத்தருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தாம் பெரும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளதாக மரணமான சிறுமிகளின் பெற்றோர் எமது கவனத்துக்கொண்டு வந்துள்ளனர். கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் யுவதிகள் இளைஞர்கள் சொல்லொணா துயரங்களுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் கல்விகற்க வேண்டிய வயதிலுள்ள சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு தோட்டப்பகுதி சிறுவர்களை வெளிமாவட்டங்களில் வீட்டு வேலைக்கு அமர்த்துவதற்கு தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த ஒரு சிலர் உடந்தையாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், முள்ளுகாமத்தோட்டத்தைச்சேர்ந்த இரண்டு சிறுமிகளின் மரணமானது, முழு மலையக தமிழ் சமூகத்துக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமது வறுமையைப்போக்கிக் கொள்வதற்காக தலைநகரம் சென்ற சிறுமிகளின் இந்தப்பரிதாபகரமான நிலைமைக்கு யார் காரணம், என்பதை கண்டறிந்து சட்டத்துக்கு முன்நிறுத்துவதற்கு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு இவ்வாறு இடம்பெற்ற இந்த அநீதிக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில், மஸ்கெலியா பிரதேச பொதுமக்கள், மலையக சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.

தலைபிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று

muslim-prayer.jpgஹிஜ்ரி 1430 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன்று மஃரிப் தொழுகை நேரமாகிய 6.24 மணி தொடக்கம் ரமழான் மாதத்திற்கான தலைமைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறு புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-2390783, 2432110, 2434651 மற்றும் 0777-366099 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளவாசலின் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், ஸாவியா, தக்கியா, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.