கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கிழக்கின் உதயம வேலைத்திட்டத்தின் கீழ் இந்த முதலீட்டு வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் 3 கோடி ரூபாவுக்கு குறைவில்லாத முதலீடுகளுக்கு வருமானவரி விலக்களிக்கப்படும். இயந்திரங்கள் இறக்குமதி மீதான வரி விதிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.