2009

2009

குச்சவெளியில் 25 வருடங்களின்; பின்னா; ஏர்பூட்டு விழா!

திருகோணமலை மாவட்ட குச்சவெளிப் பிரதேசத்தில் திரியாய் நீலப்பணிக்கன் குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 25 வருடங்களின் பின்னர் வேளாண்மைச் செய்கையை ஆரம்பிக்கும் வகையில் நேற்று ஏர்பூட்டு விழா நடைபெற்றது.

எதிர்வரும் பெரும்போகச் செய்கையை ஆரம்பிக்கும் வகையில் மாகாண விவசாய அமைச்சர் ஏற்பாடு செய்த இந்த ஏர்பூட்டு விழாவில் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர்களான துரையப்பா நவரட்ணராஜா, எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே உட்பட மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகளும் விவசாயிகளும்  கலந்து கொண்டனர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முயற்சி காரணமாக இப்பிரதேசத்தில்  பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீலப்பணிக்கன் குளமும் புனரமைப்பு செய்யப்பட்டு நீர்ப்பாசன வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரமும் விதை நெல்லும் வழங்கப்பட்டன.

மட்டு. மாவட்டத்தில் மெய்வல்லுநர் போட்டிகள்

மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் இம்மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட மட்டத்தில் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சியொன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் விளையாட்டு வீரர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று சங்கத்தின் செயலாளர் த. சோமஸ் காந்தன் அறிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்காகவும், திறந்த போட்டியாகவும் இரண்டு பிரிவுகளாக மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டியில் பங்கு கொள்வதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்குமாறும் சங்கத்தின் செயலாளர் கேட்டுள்ளார். குறுந்தூர ஓட்டப் போட்டி கள், மரதன் ஓட்டம் மற்றும் அஞ்சலோட்டம் உட்பட 16 வகை யான போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

மாற்றம் கோரி பிரித்தானிய தமிழ் பேரவை கூட்டத்தில் வாக்குவாதம் : தேசம்நெற் வாசகர்

BTF Banner._._._._._.
இவ்வாக்கத்தை இங்கு பதிவு செய்துள்ளவர் தேசம்நெற் கருத்துக்களம் பகுதியில் கருத்துக்களைப் பதிவு செய்து வருபவர். தேசம்நெற் க்கு தன்னை அடையாளப்படுத்தியும் உள்ளார். இவர் அண்மைக் காலங்களில் பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மட்டுமல்ல போராட்டங்களை முன்னெடுத்தவரும் கூட.
._._._._._.

செம்பரம்பர் 6 லண்டன் ரெயினஸ் லேன் பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவை தனது அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இந்த கூட்டத்திற்கு பிரித்தானிய தமிழ் பேரவையின் ரெயினஸ் லேன் பகுதி உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு இந்தியாவில் இருந்து சைக்கிளில் உலகம் சுற்றிய ஒரு சிறப்பு பிரதிநிதி ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் கடந்தகால, எதிர்கால திட்டம் பற்றியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பான தமது நடவடிக்கைகள் பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டது.

அங்கு பிரிஎப் தலைவர்கள் கொடுத்த அரசியல் விளக்கம் அவர்களின் அரசியல் தேர்ச்சியை வெளிப்படுத்தியது. லப்ரொப்பைக் கொண்டு வந்து பவர்பொயின்றில் படம் காட்டியவர்களின் பிறைனில் பிளெக்ஹோல் தான் தெரிந்தது. நகைச்சுவையாகவும் இருந்தது. ‘லண்டனில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக கொன்ஸவேற்றிவ் கட்சியில் உறுப்பினராக வேண்டும்’ என்று ஒருவர் கருத்து வெளியிட்டார். காரணம் ‘கொன்சவேட்டிவ் தான் இனி ஆட்சியமைக்கும்’ என்றார். அவர் நிறுத்தவில்லை தொடர்ந்தார். திறப்பு போராட்டம் பற்றி குறிப்பிட்டார். ‘ஒரு திறப்பை அவர்கள் அச்சிட்டிருக்கினம். இதை நாம் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.’ என்றவர் ‘இதுதான் வன்னி தடுப்பு முகாமின் திறப்பு’ என்றார். ‘அட பாவிகாள இந்த திறப்பு அடிச்ச காசை அங்கை அனுப்பியிருந்தால் ஒரு நேர சாப்பாடாவது அந்த சனம் சாப்பிட்டிருக்கும்’ என ஆதங்கத்தில் பேச முனைந்த போது தடுத்து விட்டனர். பின்னர் எமக்கு பேச சந்தர்ப்பம் தருவதாக கூறினார்கள்.

வரிசைப்படி பேச சந்தர்ப்பம் கொடுத்த போதும் வரிசையின் இறுதியில் இருந்த பிரிஎப் சாதாரண உறுப்பினர்கள் இருவர் தம் கருத்தை கூற முன் வந்தனர். அவர்களின் அவசரத்திற்கான காரணம் இனியும் மற்றவர்கள் சொல்லும் கருத்தை கேட்டால் தலை வெடிக்குமளவிற்கு அங்கிருந்தவர்கள் பேசியதே.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் பற்றியோ அல்லது நடந்து முடிந்த யுத்த அவலம் பற்றிய ஒரு சுயவிமர்சனத்தை வைக்காது திரும்பவும் எவ்வாறு லண்டன் வாழ் மக்களிடம் காசு புடுங்கலாம் என்ற திட்டங்களே அங்கு பேசப்பட்டது. லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் விளம்பரம் போட வேண்டும் என்று அதற்கு காசு சேர்க்கவும் முனைந்தனர். அந்த இரு உறுப்பினரும் ‘இனியும் சனத்தை பேக்காட்டிறதை விட்டு விட்டு உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்’ என்று கோரினார்கள்.

‘நாங்கள் அண்மையில் கூட்டிய ஊர்வலத்திற்கு சனம் வராததற்கு காரணம் ஊரில் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை’ என்று பிரிஎப் பேச்சாளர் அளித்த காரணத்திற்குப் பதில் அழித்த ஒருவர், ‘மக்களை காசு போடும் வங்கிகளாக பார்த்த நீங்கள் அவர்களை அரசியல் மயப்படுத்தி நீங்கள் ஒழுங்கான அரசியல் செய்திருந்தால் மக்கள் தாமாகவே வந்திருப்பார்கள்’ என்று சாடினார். ‘இன்றைய மக்களின் தேவை அவர்களின் மறுவாழ்வே ஒழிய மீண்டும் உங்களுடைய சுத்துமாத்து அரசியல் அல்ல’ என்று அவர் தொடர்ந்தும் கூற அங்கிருந்த ஒருவர் ‘சிங்களவனோடு போய் வேலை செய்வதே’ என்று கூக்குரல் இட்டார்.

இங்கு வந்திருந்தவர்கள் அனைவருமே பிரிஎப் இன் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். பிரிஎப் யை கேள்விக்கு உட்படுத்திய இரு உறுப்பினர்களும் பிரித்தானியாவில் பிரிஎப் ஆல் நடத்தப்பட்ட கடந்த கால போராட்டங்களில் முன்னின்றவர்கள். இன்று கேள்வி கேட்கும் இவர்களை பிரிஎப் எட்டத்தில் வைத்திருக்கவே முயல்கிறது. ஏனெனில் பிரிஎப் இடம் பதிலில்லை.

விடுதலைப் புலிகளின் இறுதி நேர மனித உரிமை மீறில்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது யாராலும் அங்கு பதில் கூற முடியவில்லை. மாறாக ‘அது அரசின் பொய் பிரச்சாரம்’ என்று பதில் கொடுக்கப்பட்டது. ‘தன் சொந்த குடும்பமே இவ்வாறு பாதிக்கப்பட்டது’ என்று ஒரு உறுப்பினர் கூற அங்கு அதற்கு மறுமொழி கொடுக்க யாரும் இருக்கவில்லை.

‘தமிழ் மக்களின் அவலங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது அந்த மக்கள் பற்றிய நலனில் எந்தவித அக்கைறையும் இல்லாத அமைப்பில் இணைந்து வேலை செய்வது மடைத்தனம்’ என்று கூறிய அந்த இரு பிரிஎப் உறுப்பினரும் ‘மக்களை பலகாலம் பேய்க்கட்ட முடியாது’ என்று கூறிவிட்டு வெளியேறினர்.

இவர்கள் இருவரும் வெளியேறியதும் இருவரையும் சிறீலங்கா அரசின் ஏஜன்டுகள் என்று பழி சுமத்தி விட்டு தமது கூட்டத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின் விடுதலைப் புலிகளின் தலைவரின் முன்னைநாள் மெய்பாதுகாவலராக இருந்த ஒருவர் இந்த இருவருக்கும் தொலைபேசியில் மிரட்டியிருக்கறார். ‘இயக்கதிற்கு எதிராக வேலை செய்வதை நிறுத்தாவிட்டால் பின் நடப்பவைக்கு தன்னில் பிழை கூற வேண்டாம்’ என்று. அவர்களில் ஒருவர் இது சம்பந்தமாக பொலிசாரிற்கு புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட நபர்களின் பெயர் விபரங்களை பொலிசாருக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று அரச இலக்கிய விருது விழா – செங்கை ஆழியானுக்கு உயர் விருது வழங்கி கெளரவம்

mahinda-rajapaksha.jpgஅரச இலக்கிய விருது விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

2009ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது தமிழில் 15 நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் இலக்கிய விருதான சாகித்திய ரத்னா விருது “செங்கை ஆழியான்” கலாநிதி க. குணராசாவிற்கு வழங்கப்பட்டு ள்ளது.

நேற்றைய இவ்விழாவில் கலாநிதி க. குணராசாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாகித்திய ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். அத்துடன் சிங்கள மொழி இலக்கியவாதி பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், ஆங்கில இலக்கியத்துக்காக பேராசிரியர் ஏஸ்லிஹெல்பேவுக்கும் ஜனாதிபதியினால் சாஹித்திய ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர்கள் மூவருக்கும் விருதுகளுடன் தலா 75,000ரூபா பணப் பரிசும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

பொகவந்தலாவையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

150909police22.jpgபொகவந்த லாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை நகரில் நடத்திய பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தோட்டப் பகுதிகளில் இன்று 500 ரூபா சம்பள உயர்வு கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தெழிலாளர்கள் மறியல் போராட்டம் ஒன்றையும் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கட்டம் ஒன்றுக்கு கல் வீசியதையடுத்து இவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பெற்றோலிய ஆராய்ச்சியில் இந்தியாவின் அம்பானிக் குழுமம் ஆர்வம்!

oil_research.jpgமன்னார் பிரதேசத்தின் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில்  இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமான முகேஷ் அம்பானி குழுமத்தின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துப்  பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக  முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவின் திசாநாயக்க நாளை மும்பாய் பயணமாகவுள்ளார்.

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் இலங்கையில் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டிவருவதாகவும்  அதற்கான எண்ணெய் ஆராய்ச்சிப் பகுதிகள் மன்னார் மாவட்டத்தில் இனங்காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

5ஆவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி

999cri.jpgலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 4ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளதால், 7 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது ஆஸி.

இன்று இரு  அணிகளுக்குமிடையிலான 5ஆவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

England innings
 AJ Strauss*  lbw b Hauritz  35 
 JL Denly  c Hussey b Johnson  45 
 RS Bopara  c Hauritz b Watson  18
 MJ Prior†  st †Paine b Hauritz  37
 OA Shah  c †Paine b Johnson  31
 EJG Morgan  c Siddle b Bracken  58 
 AD Mascarenhas  c Johnson b Watson  19 
 SCJ Broad  run out (Ponting)  22
AU Rashid  run out (†Paine)  18 
 TT Bresnan  c Bracken b Siddle  4 
 RJ Sidebottom  not out  3  
 Extras (lb 1, w 6, nb 2) 9     
      
Total (all out; 50 overs) 299 (5.98 runs per over)

Fall of wickets1-61 (Strauss, 13.2 ov), 2-95 (Bopara, 19.4 ov), 3-105 (Denly, 22.3 ov), 4-165 (Prior, 33.3 ov), 5-192 (Shah, 38.1 ov), 6-230 (Mascarenhas, 41.6 ov), 7-267 (Broad, 46.6 ov), 8-272 (Morgan, 47.3 ov), 9-278 (Bresnan, 48.3 ov), 10-299 (Rashid, 49.6 ov) 
        
 Bowling
 PM Siddle 10 1 50 1 
 NW Bracken 8 1 43 1
 MG Johnson 10 0 80 2
 SR Watson 10 0 60 2 
 NM Hauritz 10 0 54 2
 MJ Clarke 2 0 11 0 5

Australia innings (target: 300 runs from 50 overs)
 

SR Watson  c Mascarenhas b Bresnan  36
 TD Paine†  c Rashid b Bresnan  16
 RT Ponting*  c Shah b Broad  126 
 MJ Clarke  c Shah b Rashid  52 
MEK Hussey  c Sidebottom b Mascarenhas  6
 CJ Ferguson  lbw b Broad  17 
 CL White  not out  24
 MG Johnson  not out  18
 Extras (b 1, w 6) 7     
      
Total (6 wickets; 48.2 overs) 302 (6.24 runs per over)
Did not bat NM Hauritz, NW Bracken, PM Siddle 
Fall of wickets1-45 (Paine, 8.6 ov), 2-76 (Watson, 14.5 ov), 3-209 (Clarke, 36.3 ov), 4-226 (Hussey, 39.3 ov), 5-255 (Ferguson, 43.3 ov), 6-261 (Ponting, 43.6 ov) 
        
 Bowling 
 SCJ Broad 9 0 57 2
 RJ Sidebottom 9.2 0 43 0  
 TT Bresnan 10 0 76 2 
AD Mascarenhas 10
AU Rashid 7 0 55 1 
 RS Bopara 3 0 21 0

ஐ.நா. சபை அமர்வில் பிரதமர்

1509sri-lankan-prime-minister.jpgஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 64 ஆவது வருடாந்த அமர்வில் இம்முறை இலங்கை சார்பில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 64 ஆவது வருடாந்த அமர்வுகள் இன்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றன. இந்த அமர்வுகளின் பொதுவான விவாதங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதிவரையும் மேலும் 28 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளின் தலைவர்கள் இந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க. ஓபன் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை வில்லியம்ஸ் சகோதரிகள் தமதாக்கினர்

venus-williams.jpgஅமெரிக்க. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை அமெரிக்க சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் வென்றனர்.

முதலாம் தரவரிசை இரட்டையர் வீராங்கனைகளான காரா பிளாக்-லீசல் ஹூபர் இணையை வில்லியம்ஸ் இணை 6- 2, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

இந்த 89 நிமிட இறுதிப் போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஒரு சர்வைக் கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் இந்த ஆண்டில் ஆஸ்ட்ரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் தற்போது. யு.எஸ்.ஓபன் பட்டங்களை வில்லியம்ஸ் சகோதரிகள் வென்றுள்ளனர். சாம்பியன் பட்டம் வென்ற செரீனா, வீனஸ் சகோதரிகள் 4,20,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை பகிர்ந்து கொண்டனர். ,

இலங்கை குறித்த அறிக்கை அமெரிக்க காங்கிரஸ் ஆராயும்

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் பற்றி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தயாரித்த அறிக்கை ஒன்று அடுத்தவாரம் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்று யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான அமெரிக்க தூதுவர் ஸ்ரெபன் றெப் தெரிவித்துள்ளார்.