பொகவந்த லாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை நகரில் நடத்திய பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தோட்டப் பகுதிகளில் இன்று 500 ரூபா சம்பள உயர்வு கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தெழிலாளர்கள் மறியல் போராட்டம் ஒன்றையும் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கட்டம் ஒன்றுக்கு கல் வீசியதையடுத்து இவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
theva
சம்பளஉயர்வுக்கே இடமில்லை அல்லது வாயே திறக்ககூடாது நாளாந்தம் மழையிலும்;குளிரிலும் வயிற்றுப்பாட்டுக்காக இந்த தொழிலாளிகள் உழைககணும்.முதலாளி வசதியுடன் வாழணும். இலங்கை அரசு “நம்நாட்டுதேயிலை உலகிலேயே சிற்ந்தது” என தம்பட்டம் அடிக்ககணும். அதிகாரங்களுக்கு எதிராக உரிமை கேட்டு குரல்எழுப்புவோருக்கு கிடைக்கும் பரிசையும் அங்கு நிலவும் அடக்குமுறைகளை அவதானிக்கையில் இலங்கையில் செயல்படும் “சனநாயகம்” எப்படி சனத்துக்கு நாயகமாக இருக்கிறது புரிகிறது!