மட்டு. மாவட்டத்தில் மெய்வல்லுநர் போட்டிகள்

மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் இம்மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட மட்டத்தில் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சியொன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் விளையாட்டு வீரர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று சங்கத்தின் செயலாளர் த. சோமஸ் காந்தன் அறிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்காகவும், திறந்த போட்டியாகவும் இரண்டு பிரிவுகளாக மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டியில் பங்கு கொள்வதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்குமாறும் சங்கத்தின் செயலாளர் கேட்டுள்ளார். குறுந்தூர ஓட்டப் போட்டி கள், மரதன் ஓட்டம் மற்றும் அஞ்சலோட்டம் உட்பட 16 வகை யான போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *