May

May

முல்லை – முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட 72 குடும்பங் களுக்கு முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இவர் களுக்கென 10 மில்லியன் செலவில் உபகரணங்கள் இவ்வாரம் வழங்கப் படவுள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.

முல்லைத்தீவில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் நலனைக் கருத் திற்கொண்டு அவர்களது வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மீனவக் குடும்பங்களுக்கும் படகு, மீன்பிடி வலை, பெட்டிகள், பொருத்தப்பட்ட சைக்கி ள்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் உள்ள மணமகனின் தாயார் கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்டு பணம், நகைகள் கொள்ளை!

வெளிநாட்டில் உள்ளவரின் தாயார் கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்டு பணம், நகைகள் கொள்ளை. வடமராட்சி கரவெட்டிப் பகுதியில்  பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் கொலை செய்யப்பட்டு அவரது நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று (29.05.2010) முற்பகல் 11.15 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கட்டைவேலி கரவெட்டியைச் சேர்ந்த ஜெயபாலன் விஜயலட்சுமி வயது 54 என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவரது கணவரும் ஒரேயொரு மகனும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தனது தாயாருடன் இப்பெண் அவரது விட்டில் வசித்து வந்துள்ளார். தனது மகனுக்குத் திருமண ஏற்பாட்டை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 22 பவுண் நகையும் பல இலட்ச ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பெண் வீட்டிலிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் இப்பெண்ணைக் கொலை செய்து விட்டு அவரது நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை  நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டார். நெல்லியடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமராட்சியில் ஒரு மாத காலத்திற்குள் நடந்த மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடந்த 28ஆம் திகதி புங்குடுதீவில் வைத்து ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவை சொந்த ஊராகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரே கொல்லப்பட்டுள்ளார். புங்குடுதீவிலுள்ள உறவினரைச் சந்தித்து விட்டுத் திரும்பும் வழியில், புங்குடு தீவு அலடிச்சந்தியில் வைத்து அங்கு நின்ற சிலரிடம் சாராயம் எங்கு வாங்கலாம் என விசாரித்துள்ளார். அங்கிருந்த இருவர் சாராயம் வாங்கித்தருவதாக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரது சடலம் அடிகாயங்களுடன் தெங்கன் திடல் பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் 10 ஆயிரம் ருபா பணம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.  இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்.குடாநாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்று வந்த குற்றச்செயல்கள் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது இடம்பெற்றுள்ள இக்கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிளிநொச்சிக்கான நீர் விநியோகம் முழுமையாக்கப்பட்ட பின்னரே இரணைமடு நீர் யாழ்.இற்கு விநியோகம்

Iranaimadu_Tankகிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் விநியோகம் மேற்கொள்வது குறித்து கடந்த சில காலமாக ஆராயப்படுட்டு வரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான நீர் விநியோகம் முழுமையாக மேற்கொள்ளப்பட்ட பின்பே யாழ். குடாநாட்டிற்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர்பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தீhமானிக்கப்பட்டுள்ளது.

Iranaimadu_Tankஇரணைமடுக்குளத்திலிருந்து யாழ்.மாவட்டத்திற்கு குடிநீர்  விநியோகம் மேற்கொள்வது தொடர்பாக நேற்று (29 May 2010) யாழ். மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கருத்துப் பரிமாறல் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் நடாளுமன்றக் குழுக்களின் தலைவர் மு.சந்திரகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், அ.விநாயகமூர்த்தி, ஐக்கிய தேசயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சு.பரமராஜா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, யாழ். பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை நிர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள். யாழ். மாநகர முதல்வர் திருமதி. ப. யோகேஸ்வரி, நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி உட்பட ஏனைய பகுதி  மக்களுக்கான நீர் விநியோகம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டுக்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர்விநியோகம் செய்வது குறித்து ஆராய்வதே முக்கியமானது என்கிற கருத்து அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டது. யாழ். குடாநாட்டிற்கான குறித்த நீர்விநியோகத் திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலரது கருத்துக்களின் நிறைவில் தொகுப்புரை நிகழ்த்திய அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கிளிநொச்சி மக்களுக்கான நீர்விநியோகம் முழுமையாக்கப்படாமல் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்.மாவட்டத்திற்கான நீர்விநியோகத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்தார். அத்துடன் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உள்வாங்கப்படும் எனவும், கிளிநொச்சி மக்களுடன் இணைந்து மற்றுமொரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இது தொடர்பில் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரங்களை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் – ஹிலாரி

hilary-gl.jpgநீண்ட காலம் நிலவிய நெருக்கடிக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கிளின்ரன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் திருமதி கிளின்ரனைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கினார்.

gl-hilary.bmpநல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகவும் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழு, அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமெனவும், சுயாதீனமாகவும், பாரபட்சமின்றியும் செயற்படுவதற்கான அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

திருமதி கிளின்ரனுடனான சந்திப்புக்குப் பின்னர் அவருடன் இணைந்து செய் தியாளர் மாநாட்டில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கலந்து கொண்டார். அரசாங்கம் உள்ளூர் மட்டத்தில் ஆரம்பித்துள்ள இந்த விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட பேராசிரியர் பீரிஸ், “ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையாக மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும்.

நிச்சயமாக இதனை முன்னெடுக்கின்ற வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு தேவையென நாம் கருதினால், அந்தச் சந்தர்ப்பத்தில், ஐ.நா.வின் அனுபவங்களையும் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம். ஆனால், ஆரம்பக் கட்டத்தில் ஆணைக்குழு அதன் பணிகளைச் செய் வதற்கு அனைத்துவிதத்திலும் அதற்கு ஊக்கமளிக்க வேண்டுமென நினைக்கின்றோம்” என்றார்.

யுத்த காலத்தில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால விதிகளுள் 70% பிரமாணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், எஞ்சிய விதிகள் தேவைப்படும் காலத்திற்கு மேலதிகமாக ஒரு கணமும் நீடிக்கப்படாது எனச் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், அமெரிக்கா இலங்கை தொடர்பில் அதன் பிரஜைகளுக்கு நீண்டகாலம் விதித்து வந்த பயண எச்சரிக்கையை விலக்கிக் கொண்டுள்ளமைக்கு அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்தார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் நீண்டகால சிவில் யுத்தத்தின் நிறைவின் போது இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அதிகாரங்களை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

“மூன்று தசாப்த பழைமையுடைய இந்த மோதலை ஆழமாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆஜர்படுத்தப்படும் சாட்சிகளைத் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்குரிய பரந்தளவிலானதும் போதுமானதுமான சட்ட விதிகளை இக்குழு கொண்டிருக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. குழு உறுப்பினர்கள் சுயாதீனம் நடுநிலைமை மற்றும் அதிகாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தெரிவித்த கிளின்ரன் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையையும் விருப்பத்தையும் இந்த ஆணைக்குழு நிறைவேற்றுமென அமெரிக்கா நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு விழா: நடிகர்களுக்கு எச்சரிக்கை

iifa-awards-logo.jpgகொழும்பில் நடத்தப்படக்கூடிய IIFA விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்கு எதிராக தென்னிந்திய திரைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இந்திய திரைப்பட கழகத்தின் விருது வழங்கும் விழாவை ‘இரத்தக் கறை படிந்துள்ள’ இலங்கையில் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைத்துறை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமது கோரிக்கையை மீறி கொழும்பில் விழா நடக்கும் பட்சத்தில், அதில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடாமல் புறக்கணிக்கப்போவதாக தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வெள்ளியன்று சென்னையில் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம் கூறுகிறது.

“இந்த விருது வழங்கும் விழாவை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள். ஆனால் இரத்தக் கறை படிந்த இலங்கையில் நடத்தப்படுவதைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக” அத்தீர்மானம் கூறுகிறது. ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-5 தேதிகளில் கொழும்பில் இந்த விழா நடக்கும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

BBC

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் நிலங்களை வழங்க திட்டம்!

Jaffna_Mosqueயாழ்ப் பாணத்தில் மீள்குடியமர்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களில் காணி இல்லாதவர்களுக்கு பள்ளிவாசல் காணிகளை வழங்கி குடியயேற்றம் செய்யப்படவுள்ளதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் மௌலவி ஏ.சுபியான் தெரிவித்துள்ளார். ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின் யாழ்ப்பாணத்தில் இது வரை 59 முஸ்லிம் குடும்பங்கள் யாழ.செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டு மீள்குடியமர்ந்துள்ளதாகவும், இது தவிர மேலும் 100 குடும்பங்களும் குடியேறியுள்ளதாகவும், இதில் சொந்தக் காணியுள்ளவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

அத்துடன் காணிகளற்றவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு முதல்  யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற குடும்பங்கள் என்கிற முன்னுரிமை அடிப்படையில் சுமார் 20 குடும்பங்களுக்கு யாழ். சின்னப்பள்ளி வாசலின் பின்பறமாக மையவாடிப் பகுதியிலும், 50 குடும்பங்களுக்கு வேலணை சாட்டி பள்ளிவாசல் பகுதியிலும் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், காணிகள் வழங்குவது தொடர்பாக அரசாங்க அதிபரின் அனுமதி கிடைத்ததும், அவை பகிர்ந்தளிக்கப்பட்டு தற்காலிக வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

போரினால் சேதமடைந்த கிளிநொச்சி வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்குகின்றது.

Killinochee_Hospitalபோர் நடவடிக்கைகளால் சேதமடைந்த கிளிநொச்சி வைத்தியசாலை 2கோடியே 50இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு 28 May 2010 முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. இவ் வைத்தியசாலை புனரமைப்பிற்கான நிதி யுனிசெவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது. ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா கட்டட புனரமைப்பிற்கும், ஒரு கோடி ரூபா உபகரணங்கள் கொள்வனவிற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Killinochee_Hospitalஅத்துடன் இவ்வைத்தியசாலைக்கான விசேட வாகனங்கள் ஐந்தும் யுனிசெவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலையின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, சம்பிக்க ரணவக்க, றிசாத்பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சி வைத்தியசாலையின் விடுதிகள், உபகரணங்கள் பலவும் சேதமாகின. எனினும் கிளிநொச்சியில் மக்கள் மீளக்குடியமர ஆரம்பித்ததும் ஓரளவிலான பணிகளை பொதுமக்களுக்கு இவ்வைத்தியசாலை மேற்கொண்டு வந்தது. தற்போது புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முன்னரைப் போல் இவ்வைத்தியசாலை செயற்படக் கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை 1800 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

வவுனியா ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1800 பேர் நாளை (30-05-2010) அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 480 குடும்பங்களைச் சேர்ந்த 1800 பேரே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். கண்டாவளை பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி, பிரபந்தனாறு, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே மிள்குடியமர்த்தப்படவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22ஆயிரம் பேர் இன்னமும் மீள்குடியேற்றப்படாது எஞ்சியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இனிமேல் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் – பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய

Mahinda_Balasuriya_IGPஇலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இனிமேல் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகள் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் 26 May 2010 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

”பொலிஸ் திணைக்களத்தை மக்களுக்குரியதாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். அத்தோடு பொலிஸார் தமிழ் மொழி கற்பதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.  கடந்த காலங்களில் மக்களிடமிருந்து எமக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால் மக்களின் முறைப்பாடுகளை பெறுவதற்கு விசேட நாட்களை ஒதுக்கியுள்ளோம் அதனால், மக்களிடமிருந்து எமக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு ‘டிப்ளோமா’ போன்ற பாடநெறிகளை வழங்கவதற்காக பொலிஸ் கல்லூரிகளை ஆரம்பிக்கவுள்ளோம். தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகளை பெற முடியாத நிலையைப் போக்குவதற்கான வகையில், ஐந்து மாத தமிழ்மொழிப் பயிற்சியை வழங்குகின்றோம். இவ்வாறான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பது வரலாற்றில் முதற் தடவையாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் ‘வெசாக்’ தின களியாட்ட நிகழ்வகளில் அதிக பணம் அறவிடப்படுகின்றன.

‘வெசாக்’ தின வைபவங்கள் யாழ்.குடாநாட்டில் 27 May 2010 முதல் களைகட்டியுள்ள நிலையில். யாழ். கோட்டைக்கு முன்பாக ‘கானிவெல்’ களியாட்ட நிகழ்வுகளும் ஆரம்பமாகியுள்ளன. இந்நிகழ்வுகள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளுக்கு தங்கள் சிறு பிள்ளைகளோடு சென்ற குடும்பத்தினர் பலர் ஏமாற்றங்களுக்குள்ளாகினர். ‘கானிவெல்’ நடைபெறுகின்ற வளவினிற்குள் பிரவேசிப்பதற்கு ஒருவருக்கு 50 ருபா ‘ரிக்கற்’ பெற வேண்டும். அதனை விடவும் உள்ளே சென்று ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்வையிட வேறு வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. சாதாரணமாக ஒரு குடும்பம் 1000 ருபா இல்லாமல் இந்நிகழ்வுகளைக் கண்டு ரசிக்க முடியாது. போரின் பின்பு சுமுகமான நிலையில் இந்த ‘வெசாக்’ தின நிகழ்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிக பணம் அறவிடப்படுகின்றமை கவலை அளிப்பதாகவுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.