20

20

கொழும்பு – விமான நிலையத்துக்கிடையில் ஹெலிகொப்டர் சேவை

9colombo.jpgகொழும்புக்கும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விஷேட ஹெலிகொப்டர் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கெப்டன் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

கடும் மழை காரணமாக கொழும்பு கட்டுநாயக்க வீதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதையடுத்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். விமானப்படையின் ஹெலிடுவர்ஸ் ஹெலிகொப்டர்கள் இந்த சேவைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் குறைந்த கட்டணமே அறவிடப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை எந்த ஒரு அவசர நிலைமைக்கும் முகம் கொடுக்கும் வகையில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சனல் 4 செய்தி தொடர்பாக பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கை

இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முழுமையாக நிராகரித்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை மீட்கும் நோக்கத்துடன் மனிதாபிமான நடவடிக்கையில் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டிருந்ததாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் உட்பட பல நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். மனிதாபிமான நடவடிக்கைகளானவை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் பிரகாரம் இடம்பெற்றது. பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்பும் ஏற்படக்கூடாது என்ற கடுமையான உத்தரவின் பிரகாரம் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை அரசாங்கம் இப்போது மீளக்கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இலங்கையின் சகல இனக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாண்புமிக்கோர் உறுப்பினர்கள் கொண்டதாக அக்குழு அமைந்துள்ளது. அத்தகைய கவலைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்த ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. அத்துடன், தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் சகல சமூகங்கள் மத்தியிலும் மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது.

ஒளிநாடாவைப் பார்க்காமல் அதில் கூறப்பட்டிருக்கின்ற விசேட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துகளைத் தெரிவிப்பதற்கான நிலைப்பாட்டில் உயர்ஸ்தானிகராலயம் இல்லை. ஆதலால், கூறப்படும் ஒளிநாடாவை பார்வையிட அனுப்பிவைக்க முடியும். ஒளிபரப்புவதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மை குறித்து பரிசீலிப்பதற்காக அதனை பார்வையிட அனுப்பிவைக்க முடியும்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவின்போது இடம்பெற்ற நீதி விசாரணைக்குப் புறம்பான தண்டனைகள் உயர்மட்ட உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியில் வெளிநாட்டு நிருபர் ஜொநாதன் மில்லரின் செய்தி இணையத்தளங்களில் வெளியாகியிருந்தன. 18 மே 2010 இல் இந்த அறிக்கை பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் வெளியிடப்பட்டதாக அத தெரண இணையத்தளம் நேற்று தெரிவித்திருந்தது.

5 இலட்சம் பேர் பாதிப்பு; உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு

coio.jpgமேல் மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் தொகை சுமார் 5 இலட்சம் என இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1734 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ளத்தினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர இரத்தினபுரி, புத்தளம், கேகாலை, குருநாகல், திருகோணமலை, மாத்தறை, அநுராதபுரம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.
coio.jpgகடும் காற்றுடன் கூடிய மழையை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் கூறியது. வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள சூறாவளி இலங்கையை தாண்டி நகர்வதால் இலங்கைக்கு சூறாவளி அபாயம் ஏற்படாது என அவதான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இந்தத் தாக்கத்தினால் எதிர்வரும் தினங்களிலும் கடும் காற்று வீசும் எனவும் இதனால், எதிர்வரும் தினங்களிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். மேல், மத்திய, தென்பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்படுகிறது. கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில், நேற்று ஓரளவு குறைவாக மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிற போதிலும் ஜின் கங்கை மற்றும் களுகங்கை நீர் மட்டங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பிரதான வீதிகளில் நேற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ராகம, ஹுணுப்பிட்டிய, வல்பொல ரயில் பாதைகளில் நீர் நிறைந்திருந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பாணந்துறை பகுதியில் ரயில் பாதையில் நீர் நிறைந்திருந்ததால் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்திருந்தன. பாரிய மண் திட்டு விழுந்ததால் காலி- மாத்தறை இடையிலான ரயில் சேவை நேற்றும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சில பகுதிகளில் 4-5 அடி உயரத்திற்கு வெள்ளம் காணப்படுவதால் உலர் உணவு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாதுகாப்புப்படையினரும் பொலிஸாரும் சிவில் அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

முன்னாள் புலி உறுப்பினர்களில் 20 ஜோடிகளுக்கு திருமணம்

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சிலருக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுவதாக அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பாக இருக்கும் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் சுமார் 20 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க பி.பி.சி.க்கு தெரிவித்திருக்கிறார்.

அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் வாய் மூல உறுதிமொழி மூலம் திருமணம் செய்திருந்ததாகவும் ஆனால், உத்தியோகபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் அநேகமானோர் தமது ஜோடிகளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் ஆயினும் இருதரப்பினரதும் பெற்றோர்களினதும் இணக்கத்தை அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயினும், சில ஜோடிகளின் நிலைமை மாற்றமடைந்திருக்கலாமெனவும் பெண்ணொருவர் இனிமேலும் அந்த மனிதரை நான் விரும்பவில்லையெனக் கூறக்கூடுமெனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், ஆண்களும் அவ்வாறு கூறக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் முடிவில் சுமார் 10 ஆயிரம் முன்னாள் போராளிகள் முகாம்கள் அல்லது புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டனர். ஜோடிகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கிழமைக்கு ஒருதடவை ஒருவரையொருவர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக பிரிகேடியர் ரணசிங்க கூறியுள்ளார். அவர்கள் சட்டரீதியாகத் திருமணம் செய்த பின் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து குடும்பங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்ல முடியும். அவர்களில் சிலருக்குப் பிள்ளைகள் உள்ளனர். சிறியளவு தொகையினரே தற்போது வழக்கு விசாரணைக்காக வைக்கப்படுவார்களெனவும் அநேகமானோர் ஒருவருடத்தின் பின் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சபையில் இன்று விசேட அறிக்கை

parliament2.jpgதொடர்ச் சியான மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் இன்று சபையில் விசேட அறிக்கையொன்று வெளியிடப்படுமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ச்சியான மழை வெள்ளம் காரணமாக பெரும்பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. இதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்பதை சபையில் தெரிவிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

அதன் போது அவர் தமது கூற்றை நீட்டிச் செல்ல முற்பட்ட போது, இதனை ஒரு விவாதமாக்கிக் கொள்ள வேண்டாமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். இதன் போது குறிப்பிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, இன்று அது தொடர்பில் அரசாங்கத்தின் கூற்று வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.

‘லைலா’ இன்று ஆந்திராவை தாக்கும் அபாயம்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த ‘லைலா’ புயல் சின்னம் இந்தியாவின் தெற்குக் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்தது.

இந்தியாவை நோக்கி நகரும் இந்தப் புயல் இன்று அதிகாலை ஆந்திராவைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும் இந்தியாவிலும் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சுமார் 600 கி. மீற்றர் தொலைவிலும் சென்னை நகருக்குக் கிழக்கே 185 கிலோ மீற்றர் தொலைவிலும் ‘லைலா’ நிலை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முசலி மினி சூறாவளியால் 87 குடும்பங்கள் பாதிப்பு – 2 பாடசாலைகள் தரைமட்டம்

rain.jpgமன்னார் முசலி பிரதேசத்தில் நேற்றிரவு வீசிய மினி சூறாவ ளியால் 87 தற்காலிக கூடாரங்கள் முற்றாக சேதமானதோடு, இரண்டு பாடசாலைகளின் கொட்டில்களும் தரைமட்டமாகியுள்ளன.

கூடாரங்களில் வசித்த 87 குடும்பங்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும், வன்னி மாவட்ட எம்.பி.பாரூக் ஹுனைஸ் எடுத்துக் கொண்ட துரித முயற்சியால் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க ப்பட்டுள்ளன. பொற்கேணி மற்றும் வேப்பங்குளம் வித்தி யாலயங்களே மினி சூறாவளி யால் தரை மட்டமாகியுள்ளன.

முசலி பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹுனைஸ் எம்.பி. செய்து கொடுத்துள்ளார்.