19

19

முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!

Musical_Instrumentபுனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 125 பேர் உட்பட 495 பேர் நேற்று (May 17 2010) அவர்களது பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இவர்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஏ.சந்திரசிறி, அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ரி.நீக்கிலாப்பிள்ளை, உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமானது. வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்வு, பனர்வாழ்வளிக்கபட்டு இரத்மலானை இந்தக் கல்லாரியில் தற்போது கல்வி கற்று வரும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் என்பனவும் இதன் போது இடம் பெற்றன.  இரத்மலானை இந்துக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள முன்னால் குழந்தைப் போராளிகளுக்கு லிற்றில் எய்ட் இசைக் கருவிகளை வழங்கி அவர்களுக்கு இசை பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தது.  லிற்றில் எய்ட் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது. http://littleaid.org.uk/ and http://littleaid.org.uk/gallery/musical-instruments-to-ambepusse-24th-july-2009

பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட 495பேர் அவர்களின் பெற்றொர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக போரில் இணைக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 198 பேரும், பல்கலைக்கழக மாணவர்கள் 72 பேரும், கனரக வாகன சாரதிப் பயிற்சி பெற்றிருந்த 100 பேரும் மற்றும், முன்னாள் போராளிகள் 125 பேரும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்குடா நாட்டில் திடீரெனப் பெய்த கடும் மழையினால் மக்கள் பாதிப்பு!

May 17 2010  யாழ்.குடாநாட்டில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன. சில வீடுகளின் கூரைகள், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதமாகின். மின்சாரமும் முழுவதுமாக குடாநாட்டில் தடைப்பட்டது.  இன்று (May 18 2010) காலையிலேயே மின்சார விநியோகம் யாழ்ப்பாணத்தில் சீர்செய்யப்பட்டது.

இதேவேளை, கொழும்பு உட்பட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். தெற்கில் 2இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கொழும்பு, களுத்துறை, கம்பகா, காலி, புத்தளம் மாவட்டங்களிலேயே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரற்ற இக் காலநிலை சில நாட்களுக்குத் தொடரும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

கோழிக்கூட்டு கூடாரத்தில் வன்னி மக்கள், யுத்த நாயகன் பொன்சேகா சிறைக்கூண்டில் – ரணில்

ranil.jpgயுத்த வெற்றியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பெரும் செலவில் தேசிய வைபவம் நடைபெறவுள்ள நிலையில், வன்னியிலுள்ள மக்கள் வீடுகளின்றி கோழிக் கூடுகளிலும், யுத்த வெற்றிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஜெனரல் சரத் பொன்சேகா சிறைக் கூண்டிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரித்தது. மக்களின் சுதந்திரத்தை குறைத்து வருகிறது. பாராளுமன்ற அனுமதி இல்லாமல் எப்படி செலவினங்களை அரசாங்கத்தால் குறைக்க முடியுமென்பதே எமது கேள்வியாக இருக்கிறது. மக்களின் உரிமைகளை முடக்கியே இவற்றை செய்கின்றனர்.

இதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எதிர்க்கட்சியினருடன் பேசினார் என்று குற்றஞ்சுமத்தியே ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தனர். எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஓய்வு பெற்றுச் செல்ல ஜனாதிபதியே அவருக்கு அனுமதி வழங்கியிருந்தார். இவ்வாறான நிலையில் எப்படி இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவை கைது செய்ய முடியும்?

வாக்களிப்பதற்கும் வாக்கு கேட்பதற்கும் அரசியலமைப்பில் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை சரத் பொன்சேகாவின் இந்த கைதின் மூலம் மீறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தை மீறுவதாகவும் இந்த செயற்பாடு அமைந்திருக்கிறது.

இதேநேரம், யுத்த வெற்றியின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு படை அணிவகுப்பு நிகழ்வை பெரும் செலவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். எனினும், பெருந் தொகை செலவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் யுத்த வெற்றிக்கு பொறுப்பு கூற வேண்டிய சரத் பொன்சேகா ஏன் அங்கு இல்லை. எதற்காக அவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள் என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

யுத்தத்தை வென்றவரை சிறையில் வைத்து கொண்டு பெருந்தொகையை செலவிடுகிறீர்கள். இயற்கையும் அதனுடன் இணைந்து விட்டது. யுத்தம் முடிவடைந்த ஒரு வருடம் பூர்த்தியடைந்து விட்ட போதிலும் வன்னியில் மக்களுக்கு வீடுகள் இல்லை. கோழி கூடுகள் போன்ற சிறு கூடாரங்களிலேயே இருக்கின்றனர். யுத்தத்தை வென்ற சரத் பொன்சேகா சிறை கூண்டிலும் வன்னி மக்கள் கோழி கூடுகளிலும் வைக்கப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாது கொழும்பு கொம்பனி வீதி பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினால் நிரந்தர உறுதி பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகள் இடித்தழிக்கப்பட்டுள்ளன. இது சட்ட விரோதமாகும். ஏனெனில், இந்த வீடுகளை அகற்ற வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்க வேண்டும். நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எனினும், இதில் எதுவும் அங்கு நடக்கவில்லை. வீடமைப்பு அமைச்சருக்கு கூட என்ன நடந்ததென தெரியாது. எதற்காக இந்த வீடுகள் உடைக்கப்பட்டன என்பது எமக்கு தெரியும். அந்த இடத்தில் 15 மாடிகள் கொண்ட சொகுசு மாடி கட்டிடங்களை நிர்மாணித்து 4,5 கோடிகளுக்கு விற்பதற்கு பேசியுள்ளனர்.

இதேநேரம், கடந்த இரு நாட்களாக கொழும்பு மாநகரின் பல பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து நகர அபிவிருத்தி அதிகாரசபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

அடைமழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும்; தாழமுக்கம் நகர்வு; மீனவர்களுக்கு எச்சரிக்கை

lightning.jpgவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் யாழ்ப்பாணத்திற்கு 600 கிலோ மீற்றர் வடகிழக்காக நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இத்தாழமுக்கம் இந்தியாவின் ஒரிஸா மாநிலப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் தற்போதைய மழை காலநிலை அடுத்துவரும் இரண்டொரு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது இந்தத் தாழமுக்கம் நாளுக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடலில் கொந்தளிப்பு நிலைமை காணப்படுகின்றது. அதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது கடலில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40-60 கிலோ மீற்றர்களாகக் காணப்பட்டா லும் அது சில வேளைகளில் 90 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரி க்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேநேரம் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணித்தியால மழை வீழ்ச்சிப் பதிவுப்படி அதிக மழை வீழ்ச்சி காலி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. இம்மழை வீழ்ச்சி பதிவுப்படி காலியில் 283.8 மி.மீ., களுத்துறையில் 278.6 மி.மீ., இரத்மலானை 177.1 மி.மீ., கொழும்பில் 133.1 மி.மீ., புறக்கோட்டையில் 147.3 மி.மீ., மாலிம்பொடவில் 106.8 மி.மீ. என்ற படி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றார்.

பாராளுமன்ற அமர்வுகள் நேற்று மழை காரணமாக இடைநிறுத்தம்

parliament2.jpgஸ்ரீஜய வர்த்தனபுர கோட்டே பகுதி உட்பட கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் நேற்று இடைநடுவில் நிறுத்தப்பட்டன. வழமையாக பாராளுமன்றத்தினுள் செல்லும் பிரதான நுழைவாயில் பகுதி வீதி முழுமையாக நீரில் மூழ்கிக் காணப்பட்டது. மாற்று வழியாக பத்தரமுல்ல பகுதியிலிருந்து நுழைவு வீதி பயன்படுத்தப்பட்டது. தியவன்னா ஓயாவை ஊடறுத்து பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதியும் சிறிதளவு நீரில் மூழ்கியிருந்தது.

வழமைபோன்று பாராளுமன்ற அமர்வுகள் நேற்றுக்காலை 9.30க்கு ஆரம்பமானது. இச்சமயத்திலிருந்து கடும் மழையும் இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. மதிய உணவு வேளைக்கு பின்னரும் சபை அமர்வுகள் ஆரம்பமாகின. பிற்பகல் 2.00 மணியளவில் அமைச்சர் டிலான் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

எமக்கு தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி இடைவிடாது பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கிவருவதாக தெரியவருகிறது.

பாராளுமன்றத்தின் முன்னாலுள்ள வீதியும் நீரில் மூழ்கி வருகிறது. பாராளுமன்றத்தில் தொழில் புரியும் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும். நேரம் ஆக ஆக நிலைமை மேலும் மோசமடையலாம். எனவே சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லை இடைநிறுத்துவதா? என சபை முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதனை ஆமோதித்த அமைச்சர் விமல் வீரவன்ச “கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது குறித்து பேசப்பட்டது. சபை இதற்கு முடிவு எடுக்க வேண்டும்” என்றார். சபாநாயகரின் ஆலோசனையை பெற்று சபையை இன்று காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக உதவி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். சபை நடவடிக்கைகள் நேற்று இரண்டு மணிக்கு முடிவடைந்த வேளையிலும் மழை குறைவடைந்ததாக தெரியவில்லை.

எம். பீக்களுக்கு சபாநாயகர் விடுத்த அறிவுறுத்தல்…

sp.jpgபாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் படியே பாராளு மன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டுமெனவும் சபையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கவும் வேண்டுமென ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினருக்கு சபாநாயகர் நேற்று அறிவுறுத்தல் வழங்கினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுந்த சர்ச்சை யொன்றையடுத்தே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க எம்.பி சஜித் பிரேமதாச, சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கேள்வியொன்றை எழுப்பினார். இதன்போது அதற்குப் பொருத்த மில்லாத வகையில் ஐ.தே.க. எம்.பிக்களான ரவி கருணாநாயக்க, தயாசிரி ஜயசேகர, ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க ஆகியோர் கூச்சலிட்டனர். இதன்போதே இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் இவ் அறிவுறுத்தலை வழங்கினார்.