‘லைலா’ இன்று ஆந்திராவை தாக்கும் அபாயம்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த ‘லைலா’ புயல் சின்னம் இந்தியாவின் தெற்குக் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்தது.

இந்தியாவை நோக்கி நகரும் இந்தப் புயல் இன்று அதிகாலை ஆந்திராவைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும் இந்தியாவிலும் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சுமார் 600 கி. மீற்றர் தொலைவிலும் சென்னை நகருக்குக் கிழக்கே 185 கிலோ மீற்றர் தொலைவிலும் ‘லைலா’ நிலை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *