முல்லை – முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட 72 குடும்பங் களுக்கு முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இவர் களுக்கென 10 மில்லியன் செலவில் உபகரணங்கள் இவ்வாரம் வழங்கப் படவுள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.

முல்லைத்தீவில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் நலனைக் கருத் திற்கொண்டு அவர்களது வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மீனவக் குடும்பங்களுக்கும் படகு, மீன்பிடி வலை, பெட்டிகள், பொருத்தப்பட்ட சைக்கி ள்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *