27

27

நண்பனை படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு மரணம்!

Ugarajan_Swaminathanதன்னுடைய பிளற்றில் வாழ்ந்த நண்பன் உகாராஜன் சுவாமிநாதனை (34) கோடாலியால் பலமுறை கொத்திக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஜஸ்டின் சந்திரகாந்தன் (31) மார்ச் 5ல் அவர் சிறை வைக்கப்பட்டு இருந்த அறையில் தூக்கிட்டு மரணித்துள்ளார். ஜனவரி 13ல் உகாராஜன் சுவாமிநாதன் தான் தங்கியிருந்த கரோ ரவுன் சென்ரரில் உள்ள ஆர்எப்சி எக்ஸ்பிரஸ் சிக்கின் கடைக்கு மேலே வைத்து படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இக்கொலை தொடர்பாக 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

ஜஸ்ரின் சந்திரகாந்தன் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஹென்டன் மஜிஸ்ரேற் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார். ஏப்ரலில் இவருடைய வழக்கு விசாரணை ஓல்ட் பெய்லிக்கு வர இருந்த நிலையிலேயே அவர் தூக்கிட்டு மரணித்துள்ளார்.

இம்மரணம் சிறையில் நிகழ்ந்தள்ளதால் இதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எச்எம் பிறிசின் சேர்விஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்விரு மரணங்களுக்குமான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.

ஷரியா(Shari’ah) சட்டம்: பாண் திருடிய சிறுவனின் கை சிதைப்பு! – Mohamed S R Nisthar

Shariah_Law_IranShariah_Law_Iranமேலே உள்ள படங்கள் என் நண்பனால் அனுப்பி வைக்கப்பட்டன. “அரசியலும் சமயமும்” என்ற கட்டுரையில் சமயங்களின் நன் நோக்கங்கள் பற்றி நீதானே எழுதி இருந்தாய், பார்த்தாயா சமயங்களின் சமுக முன்னேற்ற செயற்பாடுகளை என்று என்னைப் பார்த்து அந்த படங்கள் நக்கலாக (sarcastic) கேட்பது போல் தோன்றியது.

ஈரானில் நடந்தாக கூறப்படும் ஒரு சம்பவம் அதற்கு ஆங்கிலத்துடன் ஹிப்ரு மொழியிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் இது ஈரானுக்கும், இஸ்ரவேலுக்குமான பனிப்போர் என்று இதை விட்டுவிடவும் முடியாதுள்ளது. அதேநேரம் இந்த படங்களின் உண்மை தன்மையை(veracity) அறிவதன் மூலமோ, அல்லது புகைப்பட நிபுணத்துவ யோசனை (expert opinion) பெறுவதன் மூலமோ இந்த படங்களின் ஊடாக சம்பந்தப்பட்டோர் சொல்லவந்த விடயம் என்னவென்றும் அறியமுடியாது.

இருப்பினும் அந்த படங்களின் விளக்கத்தையும் எழுப்பப்படும் கேள்வியையும் பார்க்கும் போது அதாவது “in the name of Islam he is being punished”, “ Is this religion of peace and love” இது ஒரு சமயத்தை குறி வைத்து, அந்த சமயம் மனித விழுமியங்களுக்கு எதிரான விடயங்களை போதிப்பதாகவும், எனவே அந்த சமயத்தை பின்பற்றுவோர் பயங்கரவாத சுபாவம் கொண்டோர் என்ற முடிவு நோக்கி மனித சமூகத்தை நிர்ப்பந்திக்கின்றது போலவும் தோன்றுகிறது.

இதுவரை தொலைகாட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவராத இந்த புகைப்படங்களின் பின்னணி இத்தகைய உள் நோக்குத்தான் என்றால், தற்போது திரையரங்குகளில் காண்பிக்கப்படும் “My name is Khan” என்ற திரைப்படம் இந்த புகைப் படங்களுக்கு நல்லதொரு பதிலாகும். ஆனாலும் இந்த புகைப் படங்கள் என் நண்பன் போன்ற பல்லாயிரக்கணக்கானோரின் மனதில் ஷரியா சட்டம் பற்றிய தப்பபிராயம் ஆழ்ப்பதியக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் இதை சற்று ஆழமாக ஆராய்வதன் மூலம் இந்த படங்கள் அடிப்படையில் எதை கேள்விக்குற்படுத்துகிறதோ அதன் தர்க்க நியாயங்களை நாம் அறிய வழி வகுக்கும் என நம்புகிறேன்.

இந்த வகையில் 8 வயது பாண் திருடனின் கை சிதைப்பு என்ற குற்றச்சாட்டு இஸ்லாமிய மார்க்க சட்ட (ஷரியா)த்துடன் நேரடி சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த ஷரியா சட்டமானது கை, கால் வெட்டல், தலை தவிர முழு உடலையும் நிலத்துக்குள் புதைத்து கல்லால் அடித்து கொல்லுதல், வெறும் மேனியுடன் கசையடிக்கு உட்படுத்துதல், சிறை பிடிக்கப்பட்டோரின் அல்லது பணயம் வைக்கப்படோரின் தலை கொய்தல் போன்ற வெறும் தண்டனை கொடுக்கும் முறை என்ற கருத்து நிலவுவதை நாம் மறுப்பதற்கில்லை.

ஷரியா என்பது அடிப்படையில் கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பை வரையறுப்பது. அதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கிடையிலான தொடர்பு ஆதாவது திருமணம், குழந்தைகள் விவகாரம், விவாகரத்து, வணிகம், குற்றமும் தண்டனையும், நல்லாட்சி, சர்வதேச தொடர்புகள், யுத்தமும் சமாதானமும், மரணம், வாரிசுரிமை என்ற முற்றுப் பெறாத பட்டியலை கொண்டிருந்த போதிலும், இந்த ஷரியா சட்டம் முற்றும் முழுதாக அமுலில் இல்லாத நிலையிலும் இஸ்லாமியர்கள் இதில் சிலதை தெரிந்தெடுத்தும், சிலதை கைவிட்டு( pick and choose) இருப்பதும், பல சமூகங்களின் கலாச்சார தாக்கங்கள் இந்த சட்டத்துக்குள் சத்தமின்றி புகுந்துள்ள நிலைமையும் ஷரியா சட்டத்தின் மூலங்களையே(source) கேள்விக்குற்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.

ஷரியாசட்டத்தின் மூலம் என்பது:
1) புனித குர்-ஆன்( Holy Qur’an)

2) ஹதீத் ( Hadith -இறுதி இறை தூதர் முஹம்மது அவர்களின் சொல்லும், செயலும்) அதாவது, இறை தூதர்(நபி/ prophet) முஹம்மது அவர்களின் குர் ஆனை அடியொட்டிய நம்பிக்கை, அந்த நம்பிக்கையை பிரதிபலிக்கும் அவரின் சொல், செயல் என்பவற்றை சுட்டுவதாகும். இவரின் 63 கால உலக வாழ்வில் குறிப்பாக 23 வருட இறை தூதத்துவ (prophet hood)வாழ்வில் குர் ஆனின் போதனைகள் முற்றிலும் இவர் வாழ்வில் பரிட்சிக்கப்பட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கான சாட்சியமாகவே இதை கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் எல்லாம் வல்ல, எல்லாம் நல்ல, எல்லாம் அறிந்த தன்மைகள் இறைவனின் குணாம்சங்களாக(characters) இருப்பதால் இறைவனால் அருளப்பட்ட இந்த ஷரியா சட்டம் முழுமை பெற்றது. இது மாறாத்தன்மை கொண்டது. இதில் அகல்தல்(repeal) சேர்த்தல் (addition) என்பதற்கு இடமில்லை. ஏனெனில் இறைவாக்கு என்பது கால, நேர, இடங்களுக்கு அப்பாற்பட்டது. எக்காலத்துக்கும் எவ்விடத்துக்கும் பொருத்தமானது.

இருந்த போதிலும் இந்த படங்கள் குறிப்பாக ஒரு குற்றச்சாட்டையும் அதற்கான தண்டனையின் தன்மையையும் விமர்சிப்பதனால், ஷரியா சட்டத்தில் “குற்றமும், தண்டனையும்” என்ற விடயத்தை மாத்திரம் இங்கு பார்ப்பது மிக பொருத்தமாக அமையும் என நம்புகிறேன்.

இந்த அடிப்படையில் ஷரியா சட்டம் என்பதன் நோக்கம் “சமூகத்தை பாதுகாத்தல்” என்பதனால் வரம்பு மீறிய சுதந்திரம் (unlimited freedom), தனி மனிதத்துவம் (individualism), பொருள் முதல் வாதம் (materialism) என்பன இங்கு முதன்மை பெற இடமில்லை. இதை அடிப்படையாக கொண்டே விழுமியங்களும், அதை நடைமுறைபடுத்த விதிகளும், விதிகள் மீறப்படும் போது அதற்கு தண்டனையும் வழங்கப்படுகின்றது.

சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முதலில் அதன் அங்கமான தனிமனிதன் பாதுகாக்கப்பட வேண்டும். தனி மனிதனின் பாதுகாப்பு என்பது முதலில் அவனின் மனம் (mind) பாதுகாக்கப்படல் என்பதில் தங்கியுள்ளது. ஆகவேதான் ஒழுக்க கல்வி ஆணுக்கும், பெண்ணுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தாற் போல் சமத்துவ சமூக (just society) அமைப்பு அவசியமாகின்றது. அதற்குப் பிறகு நல்லாச்சியின் (good governance) தேவை அவசியமாகின்றது. அடுத்த நிலையில் குற்றம் சாட்டுவோரின் அதி கூடிய சாட்சிய பொறுப்பு (high evidential burden) தேவைப்படுகின்றது. இதன் மூலம் சட்ட துஸ்பிரயோகம் (miscarriage of justice) தவிர்க்கப்பட வற்புறுதப்படுகின்றது. அடுத்தாற் போல் அளிக்கப்படும் தண்டனை நிருபிக்கப்பட்ட குற்றத்துக்கு சமமானதாக (proportion) இருப்பது ஒரு மீற முடியாத நிபந்தனையாகவுள்ளது. இறுதியாக தண்டனை என்பது மற்றோரை குற்றம் செய்யாமல் தடுக்கும் (deterrent) விதத்திலும் அமைதல் வேண்டும் என்பதும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே மேலே சொன்னவை சாத்தியமில்லாத நிலையில் அளிக்கப்படும் தீர்ப்பு (judgment/verdict) ஷரியா சட்டமாக கொள்ள முடியாது.

எனவே இந்த பாண் விவகாரத்துக்கான தண்டனை மேல் சொன்ன வடிகட்டல் (scrutinizing) முறையின் ஊடாக பெறப்பட்டதா என்ற கேள்வி இயல்பாக எழுவதை தடுக்க முடியாதுள்ளது. இதை விடவும் குற்றம் இழைக்கப்பட்டவர் விரும்பின் குற்றம் செய்தவரை சுயமாக மன்னிக்கவும் அல்லது நட்டஈடு பெற்றுக் கொண்டு மன்னிப்பளிக்கவும் ஷரியா சட்டத்தில் இடமுண்டு. இப்படி செய்ய பாண் வியாபாரி முன்வரவில்லையா என்ற கேள்வியும் தொடர்ந்தே வருகின்றது.

கொலை வழக்குகளில் கூட நட்டஈடு/பாவபணம் (blood money) செலுத்தி கொலைகாரர் மன்னிப்பு பெற்ற சம்பவங்கள் ஈரானிலும் நடந்துள்ளன. ஆகவே இந்த பாண் திருட்டு சம்பவத்தில் பாண் வியாபாரிக்கு நட்டஈடு கொடுத்து சிறுவனை காக்க அந்த சமூகம் முன்வரவில்லையா என்ற கேள்வியை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை.

அதையும் விட மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் முன்னேற்றம் அடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் குற்றச் செயல்களை தூண்டும் gene சிலருக்கு பிறப்பில் இருந்தே இருந்து வருவதாக சொல்லப்படுவதால், இத்தகைய களவுகளுக்கு இந்த ஜீன்னின் பங்களிப்பு என்ன என்பதும் கட்டாயமாக ஆராயப்பட வேண்டும். இந்த “ஒப்பு உவமை” (comparative exercise) செய்யும் முறையையும் தீர்ப்பளிப்போர் அறிந்திருக்கவேண்டும் என்பது ஷரியா சட்டத்தின் இன்னுமொரு அம்சம்.

எனவே இந்த படங்கள் உண்மையானவை என்றும் அதனடிப்படையில் இத்தீர்ப்பு பிழையென்று கொள்வோமாயின், தீர்ப்பளிப்போருக்கான பின்பற்றல் விதி முறையில் ஏதும் பிழை (procedural error) ஏற்பட்டிருக்கலாமே தவிர அல்லது அப்படியான சந்தர்பங்களில் தீர்ப்புக்கு எதிராக மேன்முறைஈடு (appeal) செய்ய வேண்டுமே தவிர ஷரியா சட்டம் பிழையானது என்ற கூற்று தண்டனை பெற்றவருக்கான பரிகாரமாகாது.

அமெரிக்காவில் மாநில துணை ஆளுநராக தமிழர் நியமனம்?

raja.jpgஅமெரிக் காவில் இலினொய்ஸ் மாநிலத் துணை ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமா இந்நியமனத்தை வழங்கவுள்ளார். அமெரிக்காவில் வாழும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கே இந் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார். இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப் பதவியை முதன் முதலில் பெற்ற தமிழர் என்ற பெருமை இவரையே சாரும்.

முல்லை நகரிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பம் – வற்றாப்பளையில் மீள் குடியேற்றம் பூர்த்தி

முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மோதல்களின் போது முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக் காட்டினார்.

வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள் குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90 சதவீதமான மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அர சாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23 ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடத்தப்பட்ட கப்பலில் 19 சிங்களவர் ஒரு முஸ்லிம் – மீட்டெடுக்கும் பணிகளில் இலங்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டிருக்கும் ‘எம். வி. டல்கா’ எனும் கப்பலிலுள்ள 20 இலங்கை சிப்பந்திகளையும் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு கூடிய அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடத்தப்பட்டிருக்கும் 20 இலங்கையர்களில் 19 பேர் சிங்களவர்களெ னவும் ஒருவர் முஸ்லிம் இனத்தவரெனவும் கப்பலுக்கு பொறுப்பான உள்ளூர் முகவர் நிலையமான ஏ. எல். எப். சிப்பிங் பிரைவட் லிமிட்டடின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

பிரிட்டனுக்குச் சொந்தமான மேற்படி ‘எம். வி. டல்கா’ கப்பல் எகிப்தில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை ஓமான் கடல் எல்லையில் வைத்து கடந்த 23ஆம் திகதி சோமாலிய கடற் கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டது.

இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததையடுத்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உடனடியாக ஓமான், பிரிட்டன் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

தபால் மூலம் 75 வீத வாக்குப்பதிவு; 22 மாவட்டங்களிலும் சுமுகம்

பொதுத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நேற்றும் முன்தினமும் நடைபெற்ற தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 22 மாவட்டங்களிலுமுள்ள அரச அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களிலுமாக 75% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.

இதேவேளை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிக்கப்போவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று (26) அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் எட்டாந் திகதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 430 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றிருந்தார்கள். இவர்களுக்கு நேற்றும் முன்தினமும் வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி 75 வீதமான அரச உத்தியோகத்தர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு இடம்பெற்ற தினங்களில் குறித்த அரச அலுவலகங்கள் வாக்குச் சாவடிகளைப் போல் இயங்கின. தெரிவத் தாட்சி அதிகாரியாகக் கடமையாற்றிய அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த எவரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. பொலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்ததுடன், வன்முறைகளைக் கண் காணித்து அறிக்கையிடும் குழுக்களின் பிரதிநிதிகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தபால்மூல வாக்களிப்பின்போது பாரிய அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லையென்றும், தேர்தல் சட்ட விதிகளை மீறிய சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இதில் 45 வீதமான முறைப்பாடுகள் வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இல்லை என்றும், சட்ட விரோத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதென்றும், வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லையென்றும் முறையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்கெடுப்பு நிலைய அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் இருக்காததால், பெருமளவு வாக்குகள் அளிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாக வன்முறை கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வன்முறை கண்காணிப்பாளர் குழுக்கள் சில தேர்தல்கள் ஆணையாளரை நேற்றுச் சந்தித்துள்ளன. தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வாக்குகளை எண்ணும் நிலையங்களில் தமது வன்முறை கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வீதம் நியமிக்குமாறு ஆணையாளரைக் கேட்டுக் கொண்டனர். எனினும் ஆணையாளர் இதனை நிராகரித்துவிட்டதாகக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

மாறாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையத்தில் பல்லூடகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதாக ஆணையாளர்அறிவித்ததாக அந்தப் பிரதிநிதி மேலும் கூறினார்.

யாழ். பல்கலைக்கழக 25வது பட்டமளிப்பு விழா – 3972 பேர் பட்டம் பெற்றனர்

5 வருட இடைவெளிக்குப்பின் யாழ். பல்கலைக்கழக 25 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று கைலாசபதி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 2005, 2006, 2007 ஆம் வருடங்களில் கற்கை நெறியை பூர்த்தி செய்த 3972 பேர் தமக்கான பட்டங்களைப் பெறுகின்றனர்.

இம்முறை பட்டமளிப்பு விழா மூன்று தினங்களில் ஐந்து அமர்வுகளில் நடைபெறும். தினமும் 1324 பட்டதாரிகள் தமது பட்டத்தை ஐந்து அமர்வுகளில் பெறுவர்.

சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவர் கைது; கிணற்றுநீரை ஆராயும் பணியில் சுகாதார குழு

மட்டக்களப்பு வவுணதீவு இருட்டுச் சோலை மடு விஷ்ணு வித்தியாலயத்தில் 118 மாணவர்கள் திடீர் சுகவீனமுற்றது தொடர்பில் வவுணதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சிவராசா கோதையம்மா (42) என்ற பெண்ணே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமையன்று பாடசாலையில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் பாடசாலையின் கிணற்று நீரை அருந்திய மாணவர்கள் திடீர் மயக்கம், வாந்தி, வயிற்று நோவு என்பனவற்றால் பாதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 118 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு மாணவர்களுக்கான உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. மாணவர்களில் 115 மாணவர்கள் குணமடைந்து நேற்றுக் காலை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்களுக்கும் தொடர்ச்சியான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதே நேரம் இப்பாடசாலைக்குச் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று அப்பாடசாலையின் கிணற்று நீர் மற்றும் சுற்றுப்புற சூழல் என்பனவற்றை பரிசோதித்துள்ளனர். இப்பாடசாலையின் கிணற்று நீர் பரிசோதனைக்காக கொழும்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலை நேற்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரெஞ்சு தூதுவர் யாழ். விஜயம்

இலங்கை யிலுள்ள பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்டின் ரொபிசொன் நேற்று முன்தினம் (25) யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்தார். யாழ். அரச அதிபர் கே. கணேஸை பிரெஞ்சு தூதுவர் யாழ். செயலகத்தில் வைத்து முதலில் சந்தித்து பேசினார். அதனையடுத்து திருநெல்வேலியில் உள்ள பிரெஞ்சு நட்புறவு கலாசார கேந்திரத்துக்கு சென்ற அவர் அதன் நடவடிக்கைகளை நேரில் கண்டறிந்தார்.

யாழ். குடாநாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதா என்பதைப் பற்றி அரச அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் பிரெஞ்சு தூதுவர் அதிக அக்கறை காட்டியதாக செயலக வட்டாரங்கள் கூறின.

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார்

பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.  பாஹ்ரேனில் வசித்துவரும் இப்பெண்மணி அவரது மதமாற்றம் குறித்து இரு புத்தங்களைச் சிங்களத்தில் எழுதியுள்ளார். விடுமுறையில் இலங்கை வந்திருந்த அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அச்செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் நாட்டுக்கு அல்லது அரசுக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.  குற்றச்சாட்டுகள் குறித்துப் போதுமான விளக்கம் தராத பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிங்களப் பெயருடைய அப்பெண் முஸ்லிம்களைப் போல் உடை அணிவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பாஹ்ரேனில் வெளியாகும் ‘கல்ப் டெய்லி நியூஸ்’ ,  “தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரா மலனி பெரேரா என்றழைக்கப்படும் பெண் அவரது இள வயதிலிருந்து, அதாவது 1980 களின் மத்திய காலப்பகுதியிலிருந்து பாஹ்ரேனில் வசித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டுள்ளதுடன் அவரது பெற்றோர் சகோதரிகளும் மதம் மாறியுள்ளனர்.