5 வருட இடைவெளிக்குப்பின் யாழ். பல்கலைக்கழக 25 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று கைலாசபதி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 2005, 2006, 2007 ஆம் வருடங்களில் கற்கை நெறியை பூர்த்தி செய்த 3972 பேர் தமக்கான பட்டங்களைப் பெறுகின்றனர்.
இம்முறை பட்டமளிப்பு விழா மூன்று தினங்களில் ஐந்து அமர்வுகளில் நடைபெறும். தினமும் 1324 பட்டதாரிகள் தமது பட்டத்தை ஐந்து அமர்வுகளில் பெறுவர்.