இடம் பெயர்ந்த சகல வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல்கள் தலைமையகம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லையென்றும் தலைமையகம் தெரிவித்தது. யுத்தத்தினால் உள்ளக இடம்பெயர்வுகளுக்கு உள்ளானவர்களும், தேர்தல் தொகுதிக்கு வெளியில் இடம்பெயர்ந் தவர்களும் வாக்களிக்கவென வெவ்வேறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஷாநாயக்க தெரிவித்தார்.
நலன்புரி முகாம்களிலிருந்து சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்ந்தவர்கள் தாம் வாழும் பகுதியில் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச் சாவடி அமைக்கப் படுவதுடன், ஏனையவர்களுக்குக் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப் படுமென்றும் ஆணையாளர் கூறினார்.
தேர்தல் தொகுதிகளுக்கு வெளியில் கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், களுத்துறை உள்ளிட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள், வாக்களிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எனினும் அவர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்திருக்க வேண்டுமென்று ஆணையாளர் குறிப்பிட்டார்.
வன்னிப் பிரதேசத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களுக்குத் தனியாகவும், யாழ். குடாநாட்டில் இடம்பெயர்ந்தவ ர்களுக்குத் தனியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் மீளக் குடியமர்ந்தவர்கள் அங்கேயே வாக்களிக்க முடியும்.