December

December

உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

Boat Refugees_03இந்தோ னேசியக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அகதிகளின் அவலம் முடிவின்றித் தொடர்கின்றது. உலகமே நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களில் திளைத்திருக்கின்ற வேளையில் கடலில தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த அகதிகள் மறக்கப்பட்டு உள்ளனர். கொழும்பைச் சேர்ந்த சாமூவேல் ஜேக்கப் (29) என்ற இளைஞர் கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் உயிரிழந்தார். இவ்வாறான மிக மோசமான படகு விபத்து ஒன்றில் 200 வரையானவர்கள் மரணமடைந்த சம்பவம் கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுதினம் பொக்ஸிங் டே அன்று இத்தாலியில் இடம்பெற்றது. தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இடம்பெற்ற இப்படகு விபத்தில் மரணமாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையர்கள். இதுவே தமிழ் அகதிகளுக்கு இடம்பெற்ற மோசமான விபத்தாக உள்ளது.

தற்போது எரிமலை மையமாகவும் சுனாமியின் மையமாகவுமுள்ள இந்தோனேசியக் கடலில் 250 அகதிகள் சாதாரண படகில் தவிக்க விடப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சம் உலகமே கொண்டாடுகின்ற நத்தார் புதுவருடத்தையொட்டி இவர்களை மனிதாபிமான முறையில் அணுக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

Boat Refugees_03ஒக்ரோபர் 10 மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் இந்தோனேசிய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங்க்கு விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து ஜகார்ற்றா அருகில் உள்ள மேர்க் துறைமுகத்தில் 250 இலங்கைத் தமிழ் படகு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகு அகதிகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைவதற்கு முன்னரே தடுத்து அவர்களை இந்தோனேசியாவிலேயே தஞ்சம்பெற வைக்கின்ற ‘இந்தோனேசியத் தீர்வு’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலியா கடைப் பிடிக்கின்றது. இதன் மூலம் தனக்கு வரும் அகதிகள் பிரச்சினையை கைகழுவி விட்டு வருகின்றது.

இந்த அகதிகளை பலவந்தமாக வெளியேற்றி இந்தோனேசியாவில் தரையிறக்குவதை ஒரு தீர்வாக இந்தோனெசிய அதிகாரிகள் கொண்டுள்ளனர். ஓசானிக் வைக்கிங் கப்பலில் இருந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு ஒறுதி மொழியை இந்த அகதிகளுக்கு வழங்க அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றது. இதே காலப்பகுதியில் ஓசானிக் வைக்கிங் என்ற அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலால் காப்பாற்றப்பட்ட 78 தமிழ் அகதிகள் தரையிறங்க மறுத்தனர். அவர்களது தஞ்ச விண்ணப்பங்கள் சில வாரங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்கச் சம்மதித்தனர். தற்போது அவர்கள் உண்மையான அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனால் மேர்க் இந்தோனேசியத் துறைமுகப் பகுதியில் தத்தளிக்கும் அகதிகள் வரும் ஜனவரி 10 மூன்றாவது மாதத்தை கடலில் கழித்து உள்ளனர். அவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

 இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகள்:

உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

இந்தோனேசியக் கடலில் தொடரும் தமிழ் படகு அகதிகளின் போராட்டம் : த ஜெயபாலன்

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்!

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

அபிவிருத்தி ஏற்பட்டு வரும்போது மாற்றம் தேவையென கூறுவது வேடிக்கை

bhayees.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாட்டில் அபிவிருத்தி துரிதகெதியில் முன்னெடுத்துச் செல்லப்படும் போது இதைவிட சிறந்த மாற்றம் தேவையென ரவூப் ஹக்கீமும் அவரது ஜனாதிபதி வேட்பாளரும் கூறுவது வேடிக்கையாக உள்ளது என பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலையொட்டி புத்தளம் நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் பாயிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பாயிஸ் மேலும் கூறியதாவது, எந்த அடிப்படையில் அந்த மாற்றம் அமைய வேண்டும் என சகோதரர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கவில்லை. யுத்தம் ஒழிக்கப்பட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழும் இத்தருணத்தை மாற்றம் செய்து விட்டு மீண்டும் நாட்டில் யுத்தப் பீதியையும் அமைதியின்மையும் ஏற்பட வேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?

இந்த நாட்டில் நிலவுகின்ற ஜனநாயகத்தையும், சுபீட்சத்தையும் குழிதோன்றிப் புதைத்துவிட்டு இராணுவ மயமான ஆட்சியை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா? என்று பாயிஸ் கேள்வி எழுப்பினார். இந்த நாட்டில் ஜனநாயகவாதிகளும் அரசியலில் பாண்டித்தியமும் பெற்றவர்களை ஒழித்துவிட்டு அரசியல் என்ன என்றே தெரியாத இராணுவ ஆட்சியில் விருப்பம் கொண்ட சரத் பொன்சேகாவை ஆட்சியில் அமர்த்தும் மாற்றம் வேண்டும் என ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?

கடந்த 18 வருடங்களாக புத்தளம் தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாததை மாற்றி புத்தளத்தின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து எமது மாணவ்கள் பட்டதாரியாக மாறிக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் மாற்றம் ஏற்படுத்தி மீண்டும் எமது மாணவர்களுக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையை அவர்கள் ஏற்படுத்தப் போகின்றார்களா?

நாட்டிலுள்ள வளங்களை மேற்கு நாட்டினர் சூரையாடவும், மன்னர் பகுதியில் கண்டெடுக்கப்படும் பெற்றோல் வளங்களை அப்படியே அள்ளி தமது நாடுகளுக்கு கொண்டு செல்லும் மேற்குல நாடுகளின் சதித் திட்டத்தை விரும்பும் சரத் பொன்சேகாவுக்கு இந்த மாற்றம் மூலம் வழிவகுத்து கொடுக்க ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?

நாட்டுக்கு என்ன மாற்றம் வேண்டும் என்பதை ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யூகித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றார். இது இவ்வாறு இருக்க ரவூப் ஹக்கீமும் அவரது குழுவினரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை எந்த விதமான மாற்றமும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று பாயிஸ் மேலும் குறிப்பிட்டார்.

இரா சம்பந்தரின் அரசியல் ஆளுமைக்கு மற்றுமொரு நெருக்கடி. தமிழ் கொங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிக்க முடிவு!!!

gajendrakumar_ponnampalamதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக்கட்சியான தமிழ் கொங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பதாக முடிவெடுத்தள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுக் குழு யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 27ல் வெளியிட்டு இருந்தது. அக்கட்சியின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி அதனைத் தெரிவித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டு வந்த பிரேரணையை ஏற்று அக்கட்சி இம்முடிவுக்கு வந்துள்ளது.

டிசம்பர் முற்பகுதியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்னாவை ஆதரிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தால் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் முடிவை எடுப்பதாகவும் அங்கு தெரிவித்து இருந்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் கட்சியினதும் முடிவு ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு சாதகமாகவே அமைந்து உள்ளது. எம்கெ சிவாஜிலிங்கம் வாக்குகளைப் போடுபவர்கள் தமக்கு வாக்களின்னாவிட்டாலும் பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத் பொன்சேகா பக்கம் சாய்கையில் தமிழ் கொங்கிரஸின் முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பிளவு இரா சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. அத்துடன் ஏற்கனவே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா சம்பந்தனின் திருகோணமலை மாவட்ட நகரசபை உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் துப்பாக்கி முனையில் இணைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் சந்தர்ப்பவாதத்தினாலும் இரா சம்பந்தனின் அரசியல் ஆளுமையின் பலவீனத்தாலும் பிளவுபடுகின்றது.

கிழக்கில் தொடர்ந்து மழை – 80 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

satellite-dec.jpgகிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் எந்தவிதமான பாரபட்சமுமின்றி நிவாரண உதவிகளைத் துரிதமாகப் பெற்றுக் கொடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் வெள்ளப் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு உடனடியாக நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், இதுவரை சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 500 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளன. இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலருணவு, நிதியுதவி போன்றவற்றை எதுவிதமான பாரபட்சமுமின்றிப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார். பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களில் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகரை யில் 500 குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கப்படுவதுடன் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

ஊடகங்களின் ஊகங்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? : பி எம் புன்னியாமீன்

Commissioner of Elections Dayananda Dissanayakeஇலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 6ஆவது ஜனாதிபதித் தேர்தல் 2010 ஜனவரி 26ஆந் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இருந்தபோதிலும்கூட,  பிரதான வேட்பாளர்கள் இருவரே மக்கள் முன் சோபிக்கின்றனர். ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரும்,  தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ அடுத்தவர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா. இவர்கள் இருவரும் தவிர ஏனைய 20 வேட்பாளர்களும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 5%  வாக்குகளையாவது பெறுவார்களா என்பது சந்தேகத்திக்கிடமானதே.

இலங்கையில் காணப்படக்கூடிய அனைத்து அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரண்டு வேட்பாளர்களை பிரதானப்படுத்தியே தமது செய்திகளுக்கும், கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எந்தவொரு ஊடகமாவது ஏனைய 20 வேட்பாளர்களுள் ஒருவருக்காவது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அது பிரதான வேட்பாளர்களை மையப்படுத்திய முக்கியத்துவமாகவே அமைந்திருக்கும். மறுபுறமாக இத்தேர்தலில் போட்டியிடும் ஏனைய 20 வேட்பாளர்களுள் சிலர் பிரதான வேட்பாளர்களுக்கு சார்பாளர்களாக போட்டியிடுவதும் இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும். எனவேதான் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று தேர்தல் ஆணையாளரின் உரையில் “ஒவ்வொரு வேட்பாளர்களும் தமக்காகவே பிரசாரம் செய்ய வேண்டு”மென்பதை வலியுறுத்தியிருந்தார். இருப்பினும்,  இந்த வேட்பாளர்கள் சிலர் மறைமுகமாக பிரதான வேட்பாளர்களுக்கு சார்பான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதை அறியமுடிகின்றது.

இன்று இலங்கையில் அச்சு ஊடகங்களை எடுத்து நோக்கும்போது 100க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நாளிதழ்களாகவும்,  வார இதழ்களாகவும் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமடைந்துள்ளன. தமிழ்மொழியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது சிங்கள மொழியில் இதன் தாக்கம் மிகமிக அதிகம். குறிப்பாக 1994ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் சிங்கள ஊடகங்களின் பங்களிப்பு விசாலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை பல ஆய்வுகள் தெளிவுபடுத்தியிருந்தன. இலங்கையில் சிங்கள மொழி மூலமாக லங்காதீப, திவயின,  லக்பிம,  தினமின போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் ராவய,  இருதின,  சிலுமின, சத்தின,  மவ்பிம,  ரிவிர, லங்கா போன்ற வாரப் பத்திரிகைகளும் தமிழ்மொழி மூலமாக தினகரன்,  தினக்குரல், சுடரொளி, வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களும்,  நவமணி போன்ற வாரப் பத்திரிகைகளும் ஆங்கில மொழி மூலம் டெய்லி நிவுஸ்,  த. ஐலன்ட், டெயிலி மிரர் போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் சன்டே ஒப்ஸேவர், சன்டே டைம்ஸ், சன்டே லீடர்  போன்ற வாரப் பத்திரிகைகளும் காணப்படுகின்றன. இந்த பத்திரிகைகளில் அனேகமானவை தாம் நடுநிலைமைப் போக்குடன் ஜனாதிபதி தேர்தலில் செயல்படுகின்றோம் என்று கூறிக் கொண்டாலும்கூட,  உண்மையான நடுநிலைமைப் போக்கினை அவதானிக்க முடிகின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளில் சில பத்திரிகைகள் அரசாங்கப் பத்திரிகைகளாகும். பெரும்பாலான பத்திரிகைகள் தனியாருக்கு சொந்தமானவையாகும்.   ஏதோவொரு வகையில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்~வுக்கு அல்லது சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு சேர்க்கும் பத்திரிகைகளாகவே இவைகள் காணப்படுகின்றன. அதேபோல வானொலியை எடுத்துக் கொண்டாலும் இன்று 70க்கு மேற்பட்ட வானொலி சேவைகள் மும்மொழியிலும் உள்ளன. இவைகள் செய்திகளை ஒலிபரப்புபவை. 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் இருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இருக்கின்றன. இவைகளிலும் சில அரசாங்க வானொலி, தொலைக்காட்சிகளாகவும் அதிகமானவை தனியாருக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சிகளாகவும் இருக்கின்றன.

இவ்விடத்தில் தனியார் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அவை தத்தமது உரிமையாளர்களின் கொள்கைகளுக்கிணங்க நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இங்கு சில ஊடகங்கள் ஐக்கிய தேசியக்கட்சியினால் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அல்லது மக்கள் விடுதலை முன்னணியினால் நேரடியாக நடத்தப்பட்டு வருபவை. அல்லது பிரதான கட்சியான முக்கியஸ்தர்களினால் மறைமுகமாக வழிநடத்தப்படுபவை. எனவே எவ்வளவு தான் நடுநிலைமைப் போக்கு எனக் காட்டினாலும்கூட அவற்றின் சார்பு நிலை ஏதோவொரு பக்கம் சரிந்திருப்பதை பொதுப்படையாகக் காணமுடிகின்றது. எனவே அரசாங்க ஊடகங்களில் மாத்திரமல்லாமல் தனியார் ஊடகங்களிலும் பக்க சார்பு நிலையிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்குமிடத்து அரசாங்க ஊடகங்களைவிட தனியார் ஊடகங்களில் மக்கள் மயமாக்கல் மிகைத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஊடகங்கள் மக்கள் ஈர்க்கத்தக்க வகையில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை உள்வாங்கியிருப்பதினால் இத்தகைய பிரபல்யம் தவிர்க்க முடியாது ஆகிவிடுகின்றது. மேலும் தனியார் ஊடகங்கள் சர்வதேச ஊடகப் பின்னலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்திருப்பதினால் சர்வதேச சக்திகளுக்கும் உட்பட்டேவிடுகின்றன.

இத்தகைய பின்னணியை வைத்துக் கொண்டே இலங்கை ஊடகங்களை நோக்க வேண்டியுள்ளது.

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ஆழமாக ஆராயுமிடத்தும்,  பல ஆய்வு அறிக்கைகளிலிருந்தும் பின்வரும் முடிவு வெளிப்படுகின்றது. அதாவது,  இலங்கையிலுள்ள வாக்காளர்களுள் சுமார் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் யார் போட்டியிட்டாலும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள். அதேபோல 20 தொடக்கம் 23 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள். நிச்சயமாக இந்த வீதத்தினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமே செல்லக்கூடியவை. இதனைக் கிராமிய மட்டத்தில் பின்வருமாறு எளிமையாகச் சொல்வார்கள் “என் உடலில் ஓடுவது பச்சை இரத்தம்,  என் உடலில் ஓடுவது நீல இரத்தம்.” என்று. இந்த அளவிற்கு அந்த நிலை வலுவடைந்துள்ளது.

இவ்வாறே கட்சியுடன் ஐக்கியமானவர்களின் வாக்கு எத்தகைய நிலையிலும் அக்கட்சியையே சார்ந்திருக்கும். இதில் எத்தகைய மாற்றங்களும் ஏற்பட இடமில்லை. ஆனால் அரசாங்கத்தை கவிழ்ப்பதோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தீர்மானிப்பதோ சுமார் 40 தொடக்கம் 50 வரையிலான இடைப்பட்ட வாக்காளர்களே. பொதுவாக இவை மிதக்கும் வாக்குகள் எனக் கொள்ளப்படுகின்றன. ஒரு பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வரக்கூடிய அரசாங்கத்தின் கொள்கைகளிலோ அன்றேல் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்படக் கூடிய ஜனாதிபதியின் கொள்கைகளையோ விளங்கி வாக்களிக்கக்கூடிய இந்த மிதக்கும் வாக்காளர்கள் உள்ளனர். எனவே,  போட்டியிடும் பிரதானக் கட்சிகள் போட்டியின் பிரதான வேட்பாளர்களின் கொள்கையாக்கங்களை விளக்க வேண்டியர்களாக இத்தகைய மிதக்கும் வாக்கினரே உள்ளனர். எனவே இவர்கள் தான் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி.

தேர்தல் காலத்தில் ஊடகங்களின் பணியென்றுக் கூறும்போது இந்த மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையைத் தீர்மானிக்கக்கூடியதாக அமைதல் வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று ‘வாக்காளரின் மூளையை மழுங்கடிக்கும் விதத்தில் ஊடகங்கள் செயற்படக்கூடாது” என  தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்ததை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

அந்நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் “சட்டத்தின் பிரகாரம் அரச ஊடகங்களை மட்டும் கட்டுப்படுத்தும் அதிகாரங்களே தனக்கிருப்பதாகவும் இன்று பெருமளவில் தனியார் ஊடகங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் சில ஊடகங்கள் வாக்காளர்களின் அறிவுத் திறனை மழுங்கடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்தார். அரச ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் தான் சட்டத்தின் பிரகாரம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட பெயர் குறிப்பிடாமல் பொதுப்படையான நிலையில் இலங்கையில் அச்சு,  இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்கும்போது தற்போதைய நிலையை பிரதான வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கரிபூசிக்கொள்ளும் நிகழ்வுகளை மிகைப்படுத்தி பிரசுரிப்பதையும்,  ஒலி / ஒளிபரப்புவதையுமே காணமுடிகின்றது. ஆனால், ஒருவருக்கொருவர் குறைகூறும் செய்திகளை மக்கள் கவரும் வகையில் வெளியிட்டு வாசகர்களை கவர விளையும் அதேநேரத்தில் பிரதான வேட்பாளர்களை கொள்கையாக்கங்கள் குறித்து இவைகள் முக்கியத்துவப்படுத்த மறந்துவிடுகின்றன.

பிரதான வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தான் பதவிக்கு வரும் பட்சத்தில் தனது கொள்கையாக மஹிந்த சிந்தனை 02 அமைந்திருக்கும் என்றும் மஹிந்த சிந்தனை 02 தற்போதைய செயற்பாட்டின் தொடர்ச்சியாக அமையும் என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால்,  இதுவரை தாம் பதவிக்கு வரும் ஆறாண்டுகளைக் கொண்ட காலத்தில் தனது பொருளாதாரத் திட்டம் என்ன? தற்போதைய இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகள் மேற்கொள்ளப்படப் போகின்றன? என்ற விளக்கங்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தோன்றவில்லை.

அதேபோல பிரதான எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராக சரத்பொன்சேக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எத்தகைய உறுதிப்பாடுகளையும் வெளிப்படுத்தியதாகக் காணமுடியவில்லை. இது தொடர்பாக அவரிடம் நிலையான கொள்கைகள் இருப்பதாக தோன்றவுமில்லை. தான் பதவிக்கு வருமிடத்து நடைமுறைப்படுத்தவுள்ளதாக 10 அம்சங்கள் கொண்ட திட்டமொன்றினை 2009 டிசம்பர் 18ஆம் திகதி கண்டியில் வைத்து அவர் வெளியிட்டார். ஆனால்,  ஐக்கியத் தேசியக் கட்சியோ அன்றேல் சரத்பொன்சேக்காவை வேட்பாளராக அமர்த்தியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியோ சரத்பொன்சேக்காவின் ஆறாண்டு பதவிக்காலத்துக்கான நிலையான திட்டமொன்றை வெளிப்படுத்த தவறி வருகின்றது. தான் பதவிக்கு வருமிடத்து ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி இல்லாமலாக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புச் சொல்லும் மந்திரிசபை ஆட்சிமுறை மீண்டும் அமைக்கப்படும் என்றும் இதில் பிரதம மந்திரி நிறைவேற்று அதிகாரமிக்கவராக காணப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாம் கேட்கும் முக்கியமான வாக்குறுதி தான் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிடுவோம் என்பதாகும். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதிகாரத்தில் வரக்கூடிய எவரும் தனது அதிகாரத்தை இலகுவாக விட்டுக் கொடுத்ததற்கான வரலாறு உலகளாவிய ரீதியிலே உதாரணப்படுத்துவது கடினம். இத்தகைய நிலையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு அதிகாரம் கிடைக்குமிடத்து அவ்வதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கோருவதைப் போல இலகுவில் விட்டுக் கொடுத்துவிடுவாரா எனும் கேள்வியும் எழுகின்றது. தற்போதைய அரசியல் நிலைகளின் பிரகாரம் ஒரு பிரதான கட்சியற்ற பொன்சேகாவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எவ்வாறு பெற முடியும் என்பது மிதக்கும் வாக்காளர்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே,  இலங்கையில் காணப்படக்கூடிய அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியான மிதக்கும் வாக்காளர்களின் மனத்தெளிவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் அமைந்தால் மாத்திரமே ஊடக தர்மம் நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும். மேலே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ஐக்கியத் தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் நிலையான வாக்காளர்களை வைத்து ஊடகங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமிடத்து அதனால் பலன் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால்ää இரண்டு பிரதான வேட்பாளர்களையும் மையப்படுத்தி நடைபெறும் பொதுக்கூட்டங்கள் கட்சியின் நிலையான ஆதரவாளர்களைக் கொண்டே நிரம்புகின்றன.

மிதக்கும் வாக்காளரின் நிலை தேர்தல் நடைபெறும் வரை வெளிப்பட மாட்டாது. மிதக்கும் வாக்காளர்கள் பெரும்பாலானோர் படிப்பறிவுள்ளோர். எனவே, படிப்பறிவோருக்கும் விளக்கமளிக்கக்கூடிய விதத்தில் இத்தகைய ஊடகங்களின் பங்களிப்பு இடம்பெறுதல் அவசியமானதாகும். இலங்கைத் தேர்தல்களில் ஊடகங்களின் பங்களிப்பு என்று கூறும்போது நிலையான கட்சி ஆதரவாளர்களின் காட்சிப்படுத்தலைவிட மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பே தீர்மான சக்தியாக அமையும். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள இத்தருணத்தில் பிரதம வேட்பாளர்கள் தமது நிலையான திட்டத்தை தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும்ää யதார்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். இந்த தன்மையை 2010 ஜனவரி 26ஆந் திகதி தேர்தல் முடிவினை தீர்மானிக்கும் சக்தியாக அமையும். 

 ஊடகங்கள் பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடியாகக் கொள்ளலாம். கருத்துக்களைத் தெரிவிக்கும் அதேநேரம்,  கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இந்த அடிப்படையில் கருத்துக்களைத் தெரிவிக்கவும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவும் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. எனவே ஊடகமானது சுதந்திரமாகவும் நடு நிலைமையுடனும் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரத்தைக் குறிக்கும். சட்டமன்றம்,  நிர்வாகம்,  நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திர ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. அதே நேரம் நடு நிலைமை எனும் போது பக்க சார்பற்ற பொது நிலையை பொருள் படுத்துகின்றது.

ஒரு சம்பவம் அல்லது செய்தியை சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆய்ந்து அல்லது சம்பவம் அல்லது செய்தியை சான்றுகளுடன் உறுதிப்படுத்திக்கொண்டு அதை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதே ஊடகத் தர்மமாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட நிகழ்வுகள் அனைத்துத் தகவல்களையும் செய்தித்தாள்,  வானொலி,  தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்கின்றனர். எனவே மக்களுக்கு உண்மைகளை ஆதாரப்பூர்வமாக அறியத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அதன் பொறுப்பை சரிவரச் செய்வதே ஊடகத் தர்மமாகும். அவ்வாறான நிலை காணப்படின் மாத்திரமே ஜனநாயக பண்பினை வெளிப்படுத்துவதாக அமையும்.

19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் அச்சு ஊடகங்கள் வளர்ச்சியடையலாயிற்று. இக்காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவிப்போரும்,  அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களை அறிந்து கொள்ளவிளைவோரும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நிலவிய வாசிப்பறிவின்மை காரணமாக அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் நிலை மிகமிக குறுகிய வட்டத்துக்குள் மாத்திரமே முடக்கப்பட்டிருந்தது.

20ஆம் நூற்றாண்டில் ஊடகத்துறையின் வளர்ச்சியானது ஓர் உயரிய நிலையை அடைகின்றது. அச்சு ஊடகத்துடன் வானொலியின் அறிமுகமும், அதைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகமும் கருத்துப் பரிமாற்றத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இக்கட்டத்தில் மேற்குலக நாடுகளில் மாத்திரமல்லாமல் தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் வானொலிப் பாவனை அதிகரித்தது. இங்கெல்லாம் ஆரம்பத்தில் அரசாங்கத்தினாலேயே வானொலி ஒலிபரப்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன், கட்டுப்படுத்தவும்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை “இலங்கை வானொலி” வானொலித் துறையில் முன்னோடியாக திகழ்கின்றது.

வானொலியின் பரவலான அறிமுகத்துடன் தகவல்களை “ஒலி” வடிவில் மக்களால் கேட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவானதினால் வானொலியைக் கேட்பதற்கு வாசிப்பறிவற்றநிலை தடையாக அமையவில்லை. தகவல்களையும், செய்திகளையும் வழங்குவதுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது பொழுதுபோக்கு அம்சமாக இசையினையும் இது தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டதினால் படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தன. இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததன் பின்பு “இலங்கையில் வானொலி” பிரதான ஊடகமாக மாறியதுடன், பாமர மக்களிடையேயும் பாவனைப்படுத்தப்படும் நிலை உருவெடுத்தது.

1926ஆம் ஆண்டில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. தொலைக்காட்சி என்பது ஒரு கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி,  ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிறது. பின்னர் இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும்,  கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தருகின்றன. இது கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆனால்,  தொலைக்காட்சிப் பாவனை 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பரவலாக்கம் அடையவில்லை. இதன் தாக்கம் வானொலியை விட பயன்மிக்கதாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் பாவனை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் அதிகரிக்கலாயிற்று.

மூன்றாம் உலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகம் 20ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களிலே ஏற்படுத்தப்பட்டன. அநேகமான மூன்றாம் உலக நாடுகளில் தொலைக் காட்சியின் அறிமுகத்தை அந்நாடுகளின் அரசாங்கங்களே ஏற்படுத்தின. இலங்கையில் 1978ஆம் ஆண்டு சுயாதீனத் தொலைக்காட்சிச் சேவை முதல் தொலைக்காட்சிச் சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூபவாஹினி தேசிய ரீதியில் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் காணப்படுகின்றன. இவைகளுள் அநேகமானவை தனியாருக்குச் சொந்தமானவை. தொலைக்காட்சியிலும் தகவல்கள், செய்திகளை அறிவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களும் மிகைத்திருப்பதினால் வானொலிப் பாவனையைவிட 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொலைக்காட்சிப் பாவனை கூடிய செல்வாக்கினை செலுத்த ஆரம்பித்தது.

20ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுடன் இன்னும் பலவிதமான தொடர்பாடல் ஊடகங்கள் மக்கள் முன் அறிமுகமாகின. குறிப்பாக மேற்குறிப்பிடப்பட்ட சேவைகள் பல வடிவங்களில் நவீனத்துவப்படுத்தப்பட்டதுடன்,  இணையத்தின் அறிமுகத்துடன் இணையத்தளங்களும் ஒரு முக்கியமான கருத்துப் பரிமாற்ற ஊடகமாக மாறலாயிற்று. இந்த இணைய ஊடகங்கள் 21ஆம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தம் நிறைவடையும் இக்காலகட்டத்தில் மேற்குலக நாடுகளில் வளர்ச்சி கண்ட அளவிற்கு மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சி காணாவிடினும்கூட தற்போதைய நிலையில் அவைகளும் வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து கொண்டே வருகின்றன.

எனவே, ஆரம்ப காலகட்டங்களை விட மிலேனியத்தில் வாழும் எமக்கு ஊடகங்களின் தாக்கம் பல வழிகளிலும் மிகைத்ததாகவே உள்ளன. இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளில் மாத்திமல்லாமல் வளர்முக நாடுகளிலும்கூட ஊடகங்கள் பாரிய தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மறுப்பதற்கு இயலாது. எனவேதான் ஜனநாயக விழுமியங்களை மக்கள் முன் வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு பிரதான இடத்தைப் பெறுகின்றன எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை,  வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து ஒன்றில் அவை அரசாங்க ஊடகமாக இருப்பின் அதிகார வர்க்கத்தின் தாக்கங்கள் காணப்படலாம். அன்றேல் தனியார் ஊடகமாக இருப்பின் அந்த ஊடகத்துக்குச் சொந்தமான உரிமையாளர் அல்லது அந்த ஊடகத்துக்கு நிதியுதவியை வழங்கும் தனிப்பட்டவர் அல்லது குழுவினரின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருக்கலாம். மறுபுறமாக தனியார் ஊடகங்கள் வர்த்தக நோக்கத்துடன் செயற்படுவதனால் செய்திகளையோ,  தகவல்களையோ தான் முந்தி ஒலி / ஒளிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் அவசரத்தன்மையுடன் ஒலி / ஒளிபரப்புவதுடன் சிலநேரங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு விடுகின்றன. இத்தகைய நிலைகளினால் ஊடக தர்மம் செயலிழந்து வருவதை பல சந்தர்ப்பங்களிலும் அவதானிக்க முடிகிறது.

உதாரணமாக மேற்குல நாடுகளின் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அந்த ஊடகங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கருத்துக்களை திணிப்பதில் கூடிய அக்கறை காட்டி வருகின்றன. அதுமாத்திரமல்ல மூன்றாம் உலக நாடுகளிலும் முதலாளித்துவம் சார்ந்த தனது மேலைத்தேய பண்புகளை நியாயப்படுத்தி அவற்றை ஏதோ ஒரு வகையில் திணிக்க உடந்தையாக இருந்து கொண்டிருக்கின்றன. இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் அமெரிக்கவாதத்தின் ஏகாதிபத்தியத்தை உலகில் நிலைநிறுத்தி உலகில் உயர்ந்த நிர்வாகமும், சட்டவாக்கமும்,  நீதித்துறையும் அமெரிக்காவிடமே உள்ளது என்பதை எடுத்துக் காட்டவே சர்வதேச ஊடகங்கள் முனைகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகத்தை உள்ளங் கைக்குள் சுருக்கிவிட்ட இந்த சக்திகளால் இவற்றை இலகுவாக கையாள முடிகின்றன.

இதே பின்னணியில் தான் 3ஆம் உலக ஊடகங்களும் இன்று மாறிவிட்டன. குறிப்பாக 3ஆம் உலக நாடுகளின் ஊடகங்களும் அதிகார வர்க்கத்தின் முகவர்களாக அன்றேல் அதிகாரத்துக்காகப் போராடுபவர்களின் முகவர்களாக மாறிவிட்டன. இதனால் ஜனநாயகம் எனும் போது அதிகார வர்த்தக்திற்குரிய ஒரு முகப்பூச்சாகவே உள்ளதே அன்றி உண்மை நிலையினை பிரதிபலிப்பதாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை.

“Federalism and war crimes investigation” Sivajilingam: The wildcard Tamil candidate : Kumar David (The Island)

Sivajilingam M KTNA parliamentarian, K. Sivajilingam, will probably come third, and if he succeeds in attracting a fair proportion of the TNA’s base he may receive more than three hundred thousand votes. However if the TNA and other Tamil leaders undercut him he will fall below 100,000. My reasoning is as follows. The Tamils of the N&E number 10-12% of the population, and 10% of the 14 million registered voters is 1.4 million – I prefer the lower percentage because of demographic uncertainties of Tamil population movement and migration. Usually we expect over 70% poll in an exciting election, however massive numbers are unregistered or displaced and since the TNA is not officially contesting there will be abstentions. We have to opt for a much lower percentage; at a guess 50% (700,00) N&E bred Tamil voters, wherever they live, may turn out, if encouraged by their leaders.

Douglas, Sritharan and possibly Pillayan will root for Rajapakse till they are hoarse, some Tamils will pick Fonseka directly, and the Left candidates – especially Bahu – will attract Tamil votes. After these allowances, would it be unreasonable to guess that 300,000 will pick Sivaji? If, however, jealous Tamil leaders undermine him, which is quite possible, this number will fall precipitately.

This kind of pie in the sky arithmetic may turn out to be silly; we will know in 30 days. But the ballpark numbers make the Sivaji phenomenon interesting for three reasons; in the absence of a landslide in the Sinhalese vote it may cause both major candidates to fall short of a 50% poll. Second, if it goes to recount Sivaji’s voters’ second preferences will decide the outcome. Third, and very important, a large Tamil turnout (for Sivaji or for others) will revitalize Tamil politics at home and throw up new leaders. It will also debunk the boycott-craze of numskull sections in the post-LTTE Tamil diaspora and in the TNA.

If the Bahu- Shivaji linkup becomes strong, long-lasting and is built on mutual trust it could lay the foundations for an important and long awaited trend reversing the decline that started at the fateful 1964 LSSP Party Conference.

Who is this Sivajilingam?

Sivaji is not known in the South so some brief bio may be useful. He is one of the early pioneers of Tamil resistance from the Thangathurai-Kuttimani, pre-Prabakaran era and is probably the only pioneer militant who is still active in Tamil resistance today. He has been identified with emancipation and social justice campaigns on behalf of socially oppressed Tamils and when in the Federal Party, Sivaji campaigned against his uncle Mothilal Nehru in support of oppressed caste candidates.

He was a bridge between the old and new political trends in Tamil nationalism in the 1970s and 1980s. There is an anecdote, which I cannot confirm, that when Prabakharan was stuck in Sri Lanka in the early 1980s, he turned in desperation to Sivaji who arranged a boat to India for VP and his mates. Nevertheless, many of Sivaji’s contemporaries were killed in the LTTE-TELO fratricidal war of 1986.

Troubled TNA waters

The TNA is sliced like a pizza; the three slices are of about equal significance. A leadership group including Sampanthan wishes to support Fonseka and opposes posting a TNA candidate. Another section, dinosaurs that have not been reincarnated from their cringing-before-LTTE previous life, cry boycott. The third slice was determined to put forward a Tamil candidate, refused to pull back and nominated Sivaji, but offered to withdraw if there was an official TNA nominee. Now they have forced a campaign dilemma on the leadership: Dare the TNA sabotage a Tamil parliamentarian and support an erstwhile Tiger hunter and recently retired Rajapakse trooper, Fonseka?

Sampanthan and the TNA are caught by the short and curlies. How can they traverse the North and East campaigning for LTTE vanquisher Fonseka against one of their own? Nor can they refrain from campaigning all together; that would be a walkover –point, set and match – to Douglas! Foist by its own petard the TNA may still do the only thing it can, and accidentally turn it into a shrewd move. It could, for appearances, support Sivaji, but slip in the second preference for Fonseka recommendation in the campaign, thus hanging on to both baby and bathwater. If the TNA gets semi-officially into tow, the Tamil poll may increase substantially and Fonseka’s eventual gain could be large.

War crimes investigations

Sivaji’s two-point manifesto has my endorsement: Federalism as the solution to the national question and a demand for an internationally credible investigation of war crimes. Fonseka, in a newspaper interview, asserted that he had information that persons coming forward to surrender with white flags raised were shot dead, in cold blood, by the army, pursuant to a premeditated decision by government leaders. The next day he tried his darndest to backtrack since there was a storm of protest; “You are a traitor letting the side down by exposing these things” was the gist of the protests – apparently even war crimes are military secrets! In his capitulation he went on to say that that there was no violation of international law and that as the then army commander he would take full responsibility for the behaviour of his legions.

Let us take this matter in two distinct steps. Is the assertion of cold-blooded murder true or false? This and this alone is the primary factual issue that overrides everything else in importance. The conflict between Fonseka and the Rajapakse brothers, electioneering, these are ethically and legally irrelevant; the truth or falsity of the alleged cold-blooded shooting is of primary import. It is so serious a matter and emotions are in overdrive, so there has to be an investigation with international participation. Presidential Commissions have become such shams that only unimpeachably respected international participation can restore a modicum of credibility.

The second step follows after that. Fonseka’s opinion that no international law was violated is tendentious; his personal involvement is implicit and he has an interest in the outcome. Once an independent investigation is completed, if it is found that there is prima facie evidence of indictable offences, there must be prosecutions. None of this should be prejudged, that would be wrong. All persons, if any, held indictable must be prosecuted – Generals, Defence Secretaries, even Heads of State; there is no indemnity for war crimes.

The terms of reference of the investigation must include a probe of alleged LTTE war crimes; it must not be confined to a probe of the state. This may seem pointless if possible offenders are deceased; not so, moral responsibility must to be assigned, even posthumously. Let us take a cool-headed, mature, unemotional approach to alleged war crimes, whichever political party or presidential candidate one supports or what community one belongs to. There is no alternative if we want to be a civilised nation. Sivaji could not be more right than to demand a probe, on behalf of his people, into this and allegedly 50,000 other deaths, but he needs to extend the scope of his demand to include alleged war crimes by both sides.

Federalism

Mucking around with the 13th Amendment, plus minus or zilch is getting nowhere; 13A has become contentious for the way in which it was enacted as much as for what it says. A new constitution needs to be written making 13A, in its locale as an amendment, irrelevant. Why should the national question be confined to an amendment? Decentralisation in general, and the devolution of power to address minority concerns, are aspects of the balance of power between centre, regions and minorities; they are central to, and must be located in, the heart and body of the constitution. There is near universal agreement that the executive presidency must be abolished or muzzled, that the existing proportional representation system must be discarded, the 17th Amendment enforced and a slew of other changes made. Clearly, a wholly new constitution, bottom up, has to be drafted incorporating a new structure of power with the national question uppermost but not the only issue to be addressed.

I am in agreement with Sivaji that the federal option is the best. A group at the Centre for Policy Alternatives (CPA) led by Rohan Edirisinha and Asanga Welikala has done essential theoretical groundwork and the material is accessible in books and scholarly papers. Without detracting from the quality of this work I raise two concerns, the number of federal units, and asymmetrical rather than symmetrical devolution. The CPA group has retained a putative eight-unit federal model (one Tamil unit plus seven others) based on Sri Lanka’s nine provinces. I understand but do not agree with their reasoning, which is that to try to change units, merge provinces, or shift districts around will end in dispute and failure. But, federalism envisages substantial autonomy and an eight way split of so much autonomy in a small country will be a mad-hatters tea party. There has to be just one Tamil unit consisting of the whole of the North and still to be demarcated portions of the East. A new delineation of the rest of the country, limited to just two, or maybe three at most federal units needs to be worked out.

Asymmetrical devolution

In conversations, the CPA group concedes the logic of an asymmetrical relationship; that is the centre relates to the Tamil unit differently from its relationship to other units – be they three or eight. Asymmetry in inter-unit relationships, in so far as the Tamil unit is concerned, is also necessary. However the CPA group is reluctant to formally support the concept of asymmetry. They opine, “It is too complicated to sell; the devil is in the details; there will be so much opposition to an asymmetrical package from stakeholders that the exercise will flounder”. My view is that the political relationship between a putative Tamil unit and the centre, and the relationship between this unit and the other (“Sinhalese”) units, will need to be different, from the relationship between these units and the centre, and the relationship among these units themselves. The UK (England, Scotland, Wales, Northern Ireland) arrangement is radically asymmetrical and the EU is also a supra-scale asymmetrical relationship between confederate states; all to accommodate diversity. Sri Lanka must construct its own asymmetrical model sui generis, but learn from elsewhere as need be.

Sivaji is on the right track in standing for Federalism; it is the model that can sort out the ethnic conflict; however fleshing it out needs a lot more work. But first one must sell the idea and Sivaji has made a good start by making it one of the pillars

புனைபெயரில் ஒழிந்து கொண்டு பத்திரிகா தர்மம் பேசும் எஸ் சிவரூபனுக்கு….. : நடராஜா சேதுரூபன்

Sethuruban with SLFP senior member Rajeeva Wijeyasingaஎஸ் சிவரூபன் தனது சொந்த முகத்துடன் கட்டுரையை வெளியிடாமல் தனது உருட்டுக்கும் புரட்டுக்கும் புனைபெயரில் கவர் எடுத்துக்கொள்கின்றார். சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்  பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. இவரிடம் உள்ள தாழ்வுமனப்பான்மையே இவரை மற்றவர்களது கல்வித் தகுதி திருமணம் போன்ற விடயங்களை கேவலப்படுத்த காரணம் என நினைக்கிறேன். என்னைப் பற்றிப் பிழையான தகவல்கள் பல உலாவருகின்றது. உங்களைப் போன்றவர்கள் ஒழிந்திருந்து செய்கின்ற ஊத்தை வேலைகள் தான் நிதர்சனத்திலும் இடம்பெற்றிருக்கும் என நினைக்கின்றேன். தற்போது நீங்கள் தேசம்நெற்றை இன்னொரு நிதர்சனமாக்கி இருக்கிறீர்கள்.

கட்டுரையாளர் எஸ் சிவரூபன் என்ற பெயருக்குள் ஒழிந்திருப்பவரிடம் நான் கேட்பது என்னைப் பற்றி எழுதிய ஒரு விடயத்திற்காவது உங்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை நீங்கள் உங்களது சொந்தப் பெயரில் அல்லது எஸ் சிவரூபன் என்ற பெயரில் ஒழிந்து கொண்டே வையுங்கள். நான் எழுதுவதை நிறுத்துகின்றேன். அது எனது குழுந்தைகள் மீது சத்தியம். அப்படி ஆதாரத்தை வைக்காவிட்டால் நீங்கள் எழுதுவதை நிறுத்துங்கள்.

1. ‘புலிகளின் நிதர்சனம் டொட்கொம் என்ற புலிகளின் இணையத்தளத்திற்கு நிர்வாகி ஆகிய சேது என அழைக்கபடும் நடராசா சேதுரூபன் என்பவருக்கு தமிழ் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவன்’ என்கிறார் இந்த கட்டுரை எழுதியவர்.

அப்படியானால் அவர் என்ன மொழியில் இணையம் நடாத்தினார்? தொடர்பில் இருந்திருந்தால் தமிழைத் தவிர உலக மொழிகள் எதுவுமே பாவிக்காத புலிகளுடன் என்ன மொழியில் சேது உரையாடி இருப்பார்? நான் தற்போது தேசம் இணையத்திற்கு தமிழில் தான் பதில் எழுதி உள்ளேன். சேதுவுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்பது கட்டுரையாளனின் தலைசிறந்த கண்டுபடிப்பு.

நிதர்சனம் இணையத்தளத்தை சேதுரூபனாகிய நான் இயக்கியதற்கான ஒரு ஆதாரத்தைத் தானும் கட்டுரையாளர் முன்வைக்கட்டும்.

சேதுரூபனாகிய நான் பொட்டமானுடன் நேரடித் தொடர்பில் இல்லாத போதும் அப்படி இருந்ததாக அடம்பிடிக்கும் கட்டுரையாளர் நான் பொட்டம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தட்டும்.

எந்தக் கொலைகளுடனும் அல்லது கொலை செய்தவர்களுடனும் எந்த தொடர்பும் வைத்திராத என்மீது சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடைந்தையாக இருந்தவர் என கூறபட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள கட்டுரையாளர் ஒரு செய்தியைத் தானும் ஆதரமாக காட்ட முடியுமா என்பதே சேதுருபனாகிய எனது சவால்.

மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரையுடைய கொலைக்கும் அது பற்றிய செய்திக்கும் அது வெளியான இணைய ஆசிரியருக்கும் இணையத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தால் அதனை வெளியிடுங்கள். எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.

இவை சாதாரண குற்றச்சாட்டுகளும் அல்ல. தண்டனைக்குரிய குற்றங்கள். இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட புலம்பல்கள். ஒரு தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவர் ஒழிந்திருந்து கொண்டு புலம்பியதை விமர்சனம் என்ற பெயரில் வெளியிட்டது தேசம்நெற்றின் தவறு.

Sethuruban with TELO Selvam and EPRLF Sureshபுலிகளுக்கும் சேதுவாகிய எனக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்திருந்தால் அதை மறைக்க வேண்டிய தேவை எனக்கு எள்ளளவேனும் இல்லை. எனக்கும் ஈ.பி.டி.பிக்கும் புளோட்டுக்கும் ரெலோவுக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்க்கும் இராணுவத்திற்கும் பொலிசுக்கும் இன்னோரன்ன பல சக்திகளுடனும் தொடர்பு இருந்தது அதை நான் ஏன் மறைக்க வேண்டும்?

2. 1998 காலபகுதியில் ஊடகத்துறையில் புகுந்து கல்வியையும் முழுநேர ஊடகத்துறையையும் தொடராக ஆரம்பித்து இலங்கை அரச தொலைக்காட்சி கொழும்பின் தமிழ் தேசிய பத்திரிகை ஊடாக யுத்த களத்து செய்தி சேகரிப்பு வரை ரிபிசி வானொலி, ஈரிபிசி வானொலி அதன் பின்னரான பல சர்வதேச ஊடகங்கள் வரை வேலை செய்து வருகிறேன். இந்த 11 வருடகால வராலாற்றை ‘ஒரு வயது குறைந்த ஒரு மூன்றாந்தர கோமாளி’யாக வர்ணித்தமை எழுத்தாளரின் தாழ்வு மனப்பான்மையை கட்டியம் கூறி நிற்கின்றது.

Tsunami Donation_to_Veerakesari_Journalistபாலாவின் பச்சில் ஊடகத்துறைக்குள் புகுந்து பாலா இறக்கும் வரை தொடர்பில் இருந்த வீரகேசரி பிரதம ஆசிரியராக 2006 வரை இருந்த பாலவின் ஊரவரான நடராஜா ஊடாகவே சேதுவும் வளர்க்கப்பட்டான். நடராஜாவுக்கும் பாலசிங்கத்துக்குமான செய்தி தொடர்பாளனாகவும் சமாதான காலத்தில் தனிபட்ட முறையில் சேதுவாகிய நான் செயற்பட்டிருந்தமை முக்கியமானது. 1994ம் ஆண்டுவரை அன்ரன் பாலசிங்கத்தின் அதிகமான மறைவிடங்கள் யாழில் கரவெட்டி துன்னாலைப் பகுதிகளே.

வீரகேசரியில் வேலை செய்த காலத்திலும் பாதுகாப்பு தரப்பினரது அனுமதிப் பட்டியல் தொடர்பான விபரங்களை பெற்று வெளியிடுவதே எனது வேலையாக இருந்தது. இலங்கையின் யுத்த முனைக்கு பிபிசி ஆணந்தியுடன் ஒரு சந்தர்பத்தில் அனுத்த ரத்வத்தை சகிதம் வன்னி களமுனைக்கு சென்று வந்தேன்.

Sethuruban with Rathika Kumarasamy3. ஒரு செய்தியாளன் என்ற முறையில் இலங்கை அரசும் உத்தியோகபூர்வமாக சேதுவுடன் நோர்வே வந்த நாளில் இருந்து பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்பில் இருந்தது. இன்று 08 வருடங்களாக இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலய அதிகாரிகள் அனைவராலும் சேது அறியபட்டவராகவே இருந்தான். சேது புலியாகவோ அல்லது புலி உளவுக்காறனாகவோ இருந்திருந்தால் இலங்கை அரசால் தனது நாட்டு பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இன்றும் எடுக்க முடியும். இங்கு வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதையும் இலங்கை தூதுவராலயம் நோர்வே அரசுக்கோ அல்லது சேதுவுக்கு எதிராக ஏன் முன்வைக்க இல்லை?

Sethuruban with British Parlimentarians and Councilor4. சேதுரூபன் லண்டனை விட்டு வெளியேறவில்லை எவராலும் வில்லங்கமாக வெளியேற்றப்படவும் இல்லை. சேதுரூபனாகிய நான் சட்டரிதியாக 08-11-2002 யு.எல் இலங்கை விமானத்தில் லண்டனில் உள்ள கால்ரன்லெசரில் சொந்தச் செலவில் விமானச் சீட்டைப் பெற்று இலங்கை சென்றேன்.

அதன்பின் 2 வாரம் கழித்து மீண்டும் அதே இலங்கை விமானத்தில் கொழும்பில் இருந்து பிரித்தானியா வந்து, பிரித்தானியாவில் இருந்து சட்டரிதியாக நோர்வே சென்றேன். நேர்வே சென்ற பின்பும் சட்டரீதியாக பல தடவை பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன்.

ஒருவன் நாடு கடத்தபட்டால் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றபட்டிருந்தால் பிரித்தானிய நடைமுறை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.

5. ”Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்?” என்பது கட்டுரை எழுதிய எழுத்தாளரின் சிறுபிள்ளைதனமான குற்றச்சாட்டு. சேதுரூபன் திருமணம் முடித்த நாளில் இருந்து குறித்த அதே விலாசத்தில் மனைவியுடன் சீரும் சிறப்புமாக இரண்டு குழந்தைகளுக்கும் தகப்பனாக வாழ்ந்து வருகிறேன். தன்னை புனைப் பெயரில் ஒழித்துக் கொண்டு எனது திருமணம் பற்றி கதைகட்டுகின்ற எழுத்தாளர் பத்திரிகா தர்மம் பற்றி ஊருக்கு உபதேசம் வேறு. குறித்த முறையில் திருமணம் முடித்திருந்தால் நோர்வேக்கு சேதுரூபன் சென்றிருக்கவும் முடியாது. நோர்வே நாட்டு குடிஉரிமை பெற்றிருக்கவும் முடியாது.

Sethuruban with UNP politician Jeyalath Jeyawardana6. புலிகள் அழிந்த பின்பு மகிந்தவுடன் தொடர்பு எடுக்க முற்படுவதாக குற்றச்சாட்டு முனைவைக்கபட்டுள்ளது. ஆனால் அது தவறு தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் முதல் ஜ.தே.கட்சி அமைச்சர்கள் வரை பலருடன் நான் அண்மைக் காலம்வரை தொடர்பில்தான் இருந்தேன். இன்றும் தொடர்பில்தான் இருக்கின்றேன்.

7. ஜரோப்பாலில் எனக்கு ரி.பி.சி விடயம் தவிர்ந்த எந்த விடயத்திலும் கிறிமினல் றக்கோட் இருந்தது இல்லை. தற்போது ரிபிசி விடயமும்கூட ஒரு சட்ட தவறாக மாறியுள்ளதால் அதை கிறிமினல் றக்கோட்டாக பார்க்க முடியுமா, முடியாதா என்பது சட்டத்தின் முன் நிக்கிறது.

அண்டப் புழுகுத்தனமாக கட்டுரையை எஸ் சிவரூபன் எந்தவித ஆதரமும் இல்லாமல் எழுதி உள்ளார். அதனை தேசம்நெற் விமர்சனம் என்ற பெயரில் பிரசுரித்தும் உள்ளது. தேசம்நெற் பத்திரகா தர்மம் உண்மையானது என்றால் அந்த ஆதாரங்களை வாங்கிப் பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ் சிவரூபனின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர் இதுவரை இப்படி எத்தனை அண்டப் புழுகுகளை எழுதினார் என்பது வெளிவரும்.

கட்டுரையாளர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் இதற்கு ஆதாரங்களை வைக்கும் வரை தயவு செய்து எழுதுவதை – புனைபெயரில் ஒழிந்திருந்து எழுதுவதை நிறுத்த வேண்டும்.

சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும். : எஸ் சிவரூபன்

 ._._._._._.

விமர்சனக் கட்டுரைகள் சொந்தப் பெயரில் எழுதுவதற்கே தேசம்நெற் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இருப்பினும் இக்கட்டுரையை எழுதியுள்ள எஸ் சிவரூபன் என்பது புனைப்பெயர். கட்டுரையாளரது விமர்சனம் தேசம்நெற் ஆசிரியர்களில் ஒருவர் தொடர்பாக உள்ளதால் இவ்விமர்சனக் கட்டுரையை தேசம்நெற்றின் விதிமுறைகளுக்கு விலக்காக புனைபெயரிலேயே பிரசுரிக்கின்றோம். கட்டுரையின் இறுதியில் த ஜெயபாலனின் விளக்கக் குறிப்பும் இணைக்கப்பட்டு உள்ளது.

தேசம்நெற்

._._._._._.

டிசம்பர் 17 ம் திகதி இலண்டன் நேரத்துக்கு தேசம்நெற்றில் முன்னைநாள் நிதர்சனம் டொட் கொம் என்ற புலிகளின் இணையத்தள நிர்வாகி ஆகிய சேது என அழைக்கப்படும் நடராசா சேதுரூபன் மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கொழும்புக்குச் செல்வதாக செய்திக்கட்டுரையை எழுதிய தேசம் ஆசிரியர் ஜெயபாலன் அக்கட்டுரையில் (http://thesamnet.co.uk/?p=18265)   பின்வருமாறு எழுதுகிறார்.

“நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.”

நடராசா சேதுரூபன் 1978 ம் ஆண்டு இலங்கையில்  பிறந்தவர். துன்னாலையைச் சேர்ந்தவர். இப்பொதைய வயது 31 மட்டுமே. மேற்கூறிய விடயங்களை நாங்கள் சேதுவுடன் ஹாட்லிக்கல்லூரியில் படித்தவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளோம். ஹாட்லிக்கல்லூரியின் இணையத்தளத்திலும் சேதுவின் தகவலை (http://www.hartleycollege.com/cgi-bin/hweb/form/more/all_info.cgi?SERIAL=2136) பார்க்கலாம். அன்ரன் பாலசிங்கம் அடேலை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டது 1978 இல். (ஆதாரம் அடேல் பாலசிங்கத்தின் நூல் – த வில் ரு பிறீடொம்) 1978 ம் ஆண்டுக்குமுதலே முதல் மனைவி நோய் காரணமாக மரணமடைந்துவிட்டார். அதாவது முதல் மனைவி சேது பிறப்பதற்கு முதலே இறந்துவிட்டார். பிறகெப்படி சேது முதல் மனைவியுடன் பணியாற்றியிருக்க முடியும்? இது மிகப்பெரிய பொய். தகவல்களின் நம்பகத்தன்மை பற்றியும் இலங்கையில் அவர் ஊடகவியலாளராக பணியாற்றியதையும் பின்னூட்டத்தில் வாசகர்கள் கேள்வி எழுப்பியபின்னரும் ஜெயபாலன் தானும் பின்னூட்டத்தில் வந்து பின்வருமாறு எழுதுகிறார்.

“சேது இலங்கையில் வீரகேசரியின் தினசரிப் பதிப்பிலும் குறிப்பாக ரிபிசி யில் இருந்து பிரியும்வரை ரிபிசி யிலும் பணியாற்றியவர். சேதுவுடன் சமகாலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் இன்னமும் இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளனர். அவர்கள் அதனை உறுதிப்படுத்தியும் உள்ளனர். சேது வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அன்ரன் பாலசிங்த்தின் முதல் மனைவியும் அங்கு பணிபுரிந்திருந்தார். அந்த உறவும் அன்ரன் பாலசிங்கத்தின் ஒரே ஊரவன் என்ற பிடிப்பும் ஒஸ்லோவில் சேதுவின் ரையை பாலா அண்ணை சரி செய்துவிடத் தூண்டியது.”

பத்தாண்டுகளுக்கு மேலாக தரமான பத்திரிகைத்துறையில் இருப்பவர் ஜெயபாலன். புலிகள் மாற்று இயக்கங்கள் இலங்கை அரசு எல்லாவற்றினதும் அரசியலை நன்கறிந்தவர். அப்படியானவர் புலிகளின் ஏஜண்டாக இருந்த தன்னைவிட ஏறத்தாள எட்டு வயதுகள் குறைந்த ஒரு மூன்றாந்தரமான கோமாளியான போலிப் பத்திரிகையாளனிடம் இலகுவாக ஏமாந்து போனது எவ்வாறு?
பாலசிங்கத்தின் வயது என்ன? சேதுவின் வயது என்ன.? முதல் மனைவியுடன தான் வேலைசெய்தேன் என்று சேது ஜெயபாலனிடம் சொன்ன புழுகை உறுதிப்படுத்தாமலும் தகவலின் மூலத்தை வாசகர்களிடம் சொல்லாமலும் CNN fox news மற்றும் நிதர்சனம் டொட் கொம் பாணியில் ஜெயபாலன் ஒப்புவிப்பதன் மர்மம் என்ன? என்ன சுலபமாக ஊத்தை சேது ஜெயபாலனின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டுப்போகிறான்.

பத்திரிகையாளர்கள் தவறு செய்யாதவர்கள் அல்ல. நல்ல பத்திரிகையாளன் தான் தவறு செய்ததும் தவறைத்திருத்தி மன்னிப்புக் கேட்பான். இங்கோ ஜெயபாலன் தன்னுடைய தவறைத் தெரிந்த பின்னரும் தன்னுடைய மிக மோசமான தகவல் மூலத்தை(சேது) யும் தன்னுடைய மிகப்பலவீனமான செய்திக் கட்டுரையாக்கத்தையும் மறைப்பதற்காக பிடிவாதக்காரனாக இருப்பதைப் போலுள்ளது.

இலங்கையின் முக்கிய பத்திரிகையாளர்களாகிய இக்பால் அத்தாஸ் க்கும் டீ.பீ.எஸ். ஜெயராஜ் க்குமிடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இக்பால் அத்தாஸ் வேணுமென்றே பிழையான தகவலை எழுதுவதில்லை. தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அவர் அடுத்தவாரத்தில் தன்னுடைய தகவல் தவறை சுட்டிக்காட்டி திருத்துவார். டீ.பீ.எஸ். ஜெயராஜ் வேண்டுமென்றும் தவறுதலாகவும் பல தகவல் மற்றும் வாதப்பிழைகளைச் செய்வார். அவர் தவறு சுட்டிக்காட்டப்பட்டாலும் அதனை சரி செய்துகொள்ளமாட்டார். இதன் காரணமாகவே அத்தாஸ் சர்வதேச ரீதியிலும் மதிப்புக்குரிய பத்திரிகையாளராக இருக்கிறார்.

சேதுரூபனைப் பற்றிய ஜெயபாலனின் கட்டுரையானது ஜெயபாலன் என்ற பத்திரிகையாளனின் நம்பகத்தன்மை சுயாதீனம் மற்றும் பத்திரிகைசார் அறங்கள் சம்பந்தமான மிக வலுவான கேள்விகளை எழுப்புகிறது.

என்ன காரணங்களுக்காக நடராசா சேதுரூபன் இலண்டனைவிட்டு வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு இலங்கைக்குச் செல்லவேண்டி வந்தது? பன்னர் ஒரு ஆயசசயைபந Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்? இத்தகைய முக்கியமான விடயங்கள் ஜெயபாலனின் கட்டுரையில் வேணுமென்றே தவிர்க்கப்பட்டு விட்டன.

நிதர்சனம் டொட் கொம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் மிரட்டிப்பணிய வைப்பதற்காகவும் விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் விடுதலைப் புலிகளால் கொல்லப்படப் போகிறவர்களின் “குற்றப் பத்திரிகையை” முன்கூட்டியே அறிவிக்கவும் புலிகளால் பயன்படுத்தப்பட்டது. இதனை நிர்வகித்தவர் சேது என்பதோடு சேதுவுக்கும் பொட்டம்மானுக்கும் நேரடித்தொடர்புகள் இருந்தது. அல்கைடா சம்பந்தப்பட்டு ஒரு இணையத்தை சேது நடாத்தி வந்திருந்தாரானால் இன்னேரம் அவர் சிறைக்குள்தான் இருப்பார். சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடந்தையாக இருந்தவர். மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரை கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே கொலைத்தண்டனை அறிக்கை நிதர்சனத்தில் வந்தது.

இப்படிப்பட்ட சேதுவையும் ஜெயபாலன் கூறுகின்ற “ஜனநாயகவாதிகள்” மற்றும் ரயாகரன் ஆகியோரையும் ஜெயபாலன் ஒரே தளத்தில் வைத்து விமர்சிப்பது ஏளனத்திற்கும் கண்டனத்திற்குமுரியது. ரயாகரனின் கட்டுரை மொழி மட்டுமே கண்டனத்துக்குரியது என்றால் சேதுவின் இணையம் Psychological warfare செய்ததோடு நிஜத்தில் பல கொலைகளுக்கும் உடந்தைபோனது.

சேதுவிற்கு தமிழில் ஒழுங்காக எழுத வாசிக்கத் தெரியுமா என்பதே கேள்விக்குரியது. நல்ல ஆய்வுக் கட்டுரைகளையும் செய்திக் கட்டுரைகளையும் எழுதக்கூடிய பகுப்பாய்வுத்திறனுள்ள ஜெயபாலன் சென்ற ஆண்டிலிருந்து குழு அரசியலின் இயங்கியல் காரணமாக தன்னுடைய நடுநிலைத்தன்மையை விரைவாக இழந்து வருகிறாரோ என்ற ஐயம் எழுகிறது. நிர்மலா ராஜசிங்கம் இராகவன் முதலியோர் மீது தனிப்பட்ட கவனமெடுத்து அவர்கள் மீது நடுநிலமையற்ற புலி அடிவருடிகளான தமிழ்நதி போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளை பிரசுரித்ததும் மீள்பிரசுரித்ததும் ஆனது குழு அரசியலுக்குப் பலியாகியமையாலா? மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளித்து அவை பிரசுரிக்கப்பட வேண்டியவை என்பது நியாயமானதுதான். ஆனால் நிர்மலா ராகவன் போன்ற சிலருடன் சச்சரவு ஏற்பட்ட பின்னர் மட்டும் அச்சிலர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி குறுகிய காலத்துக்குள் அவர்களைப்பற்றி வெளிவந்த “மாற்றுக்கருத்துக்” கட்டுரைகளை எழுதுவதற்கும் மீள்பிரசுரிப்பதற்கும் பின்னால் ஒரு குழு அரசியல் இருப்பதற்கான சாத்தியம் நிறையவுள்ளது.  இப்போது ஜெயபாலன் ஊத்தை சேதுவை மிக மென்போக்கோடு அணுகியம் தற்பாதுகாக்கிற அளவுக்கு அரவணைத்தும் ஓரளவுக்கு நியாயப்படுத்தியும் செல்வதை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். ஜெயபாலனின் அளவுகோல்களில் இரட்டைத்தன்மை மேலோங்கிவருகிறதா? சேதுரூபனுடையதோடு ஒப்பிடுகிறபோது நிர்மலாவினதும் ராகவனினதும் நேர்மை எவ்வளவோ மேலானது. ஆனால் நிர்மலா முதலியாரையும் அவர்தம் ஜனநாயக இயக்க காரரையும் விமர்சிக்கிறபோது ஜெயபாலன் மிகக்கடுமையான அளவுகோல்களையும் கடுமையான மொழியையும் பயன்படுத்துகிறார். ஊத்தை சேது புலிகள் அழிந்த இப்போது மிகப்பரிதாபகரமாக வேண்டுகிற பிரபல்யத்தையும் ஏன் நம்பகத்தன்மையையும் கூட தன்னை அழித்தும் ஊத்தை சேதுவுக்குத் தருகிறார் ஜெயபாலன்.

குறித்த கட்டுரையில் ஜெயபாலன் தனது பெயரில் பின்வரும் பின்னூட்டமூடாக சேதுவை நியாயப்படுத்த முயல்கிறார்.

“படித்தவன் எல்லாம் பண்பாணவன் பண்பாணவன் எல்லாம் படித்தவன் என்ற இந்தச் சிந்தகனயே சேதுவினை ஒரு ஊடகவியலாளனாக பொறுப்பான தொழில் செய்பவனாக பார்க்க முடியாமல் தடுக்கின்றது. என்னைப் பொறுத்தவரை சேது ஒரு தெரிந்த கெட்டவன். இங்கு ஒளிவு மறைவு இல்லை.

ஆனால் இங்கு பின்னூட்டங்கள் சொல்லும் ஊடக நேர்மையை எப்படி மதிப்பிடுவது. ஜனநாயம் மார்க்ஸியம் புரட்சி பேசுகின்ற ஊடகங்களுக்கும் சேதுவின் அன்றைய எழுத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்சேர்க்கிள் இணையத்தளத்தின் இத்தொடுப்பில் உள்ள கருத்துக்களை ஒரு தடவை பார்க்கவும். (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6223:2009-09-11-10-49-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50

சேது பின்னணியில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் நிதர்சனம் இணையத்தில் அல்லது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணையங்களில் எழுதப்பட்டவைக்கும் தமிழ் சேர்க்கிளில் உள்ள கருத்துக்கும் என்ன வித்தியாசம். தமிழ்சேர்க்கிளில் மே 18க்குப் பின் அதன் மொழியில் ஓரளவு திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன் இரயாகரனனின் கட்டுரைக்கும் நிதர்சனம் கட்டுரைகளுக்கும் என்ன வேறுபாடு? நிதர்சனம் கட்டுரையில் மார்க்சியம் சோசலிசம் லெனின் மாஓ போன்ற சொற்கள் காணப்படமாட்டாது. மற்றுப்படி இரு இணையங்களிலும் தமிழில் உள்ள அத்தனை வன்மம் கொண்ட சொற்களையும் பார்க்கலாம்.

லண்டனில் பத்திரிகை நடத்தியவர் தலைமறைவாக இருந்து நடத்திய பின்னூட்டம்.கொம் இணையத்தளம் அதில் கருத்துக்கள் மொட்டைக் கடிதங்கள் எழுதிய ஜனநாயகவாதிகள், மாவோயிஸ்ட்டுக்கள் இவர்களையெல்லாம் எப்படி மதிப்பிடுவது. இவர்கள் எழுதியதற்கும் சேது எழுதியதற்கும் எவ்வித வேறுபாடுகளும் இல்லை.

சேது முக்காடு போடாமல் அவற்றைச் செய்ய மற்றையவர்கள் முக்காடு போட்டுக்கொண்டு அதனைச் செய்கிறார்கள். இந்த ஊத்தைக் கனவான்கள் ஒரு இயக்கத்திற்கு அல்லது ஒருசாராருக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. இவர்கள் ஜனநாயகம் மார்க்ஸியம் படித்தவன் பொறுப்பான தொழில் செய்பவன் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சமூகத்தை மெல்ல மெல்ல நாசமாக்குகிறார்கள். சேது போன்றவர்களை இலகுவில் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கலாம். ஆனால் மற்றையவர்களை அவ்வளவு இலகுவாக அடையாளம் காணவும் முடியாது சிகிச்சை அளிக்கவும் முடியாது. இவர்களே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள். மிகமோசமான சமூகக்கொல்லிகள்.” – த ஜெயபாலன்.

ஜெயபாலனின் கட்டுரைக்கூடாக மட்டும் சேது தனக்கு பிரபலம் தேடாமல் பின்னூட்டங்கள் ஊடாகவும் தேடுகிறார். இதனையும் ஜெயபாலன் அனுமதித்துள்ளார். 

சேது என்கிற சந்தர்ப்பவாத பச்சோந்தியின் இப்போதைய strategy பின்வருமாறு. நிதர்சனம் டொட் கொம் இயக்குனராக இருந்தபோது தனக்கும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்குமிருந்த தொடர்பை பகீரதப்பிரயத்தனம் செய்து மறைப்பது. தனக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்குமிடையிலேயே அதிலும் குறிப்பாக அன்ரன் பாலசிங்கத்துக்குமிடையிலேயே தொடர்பு இருந்ததான புதிய மாயப்புனைவை ஊடகங்கள் ஊடாக கட்டமைப்பது. புலிகள் அழிந்த இக்காலத்தில் மகிந்த ஆட்சியோடு தொடர்பு எடுப்பது. மீண்டும் புதிய எஜமானர்களுக்கு ஊடக ரவுடியாகி (எப்போதும் போலவே வேலை வெட்டிக்குப்போகாது) செல்வாக்கையும் செல்வங்களையும் அனுபவிப்பது.

ஐரோப்பாவில் criminal recordஐ உடைய ஒரு பச்சோந்தியும் கோமாளியுமானவரை மகிந்தவோ அல்லது சரத் பொன்சேகாவோ தங்களது பிரச்சாரத்துக்கு உபயோகிப்பார்களாயின் அவர்களிக்கு கிடைக்கவிருக்கும் தமிழ் வாக்குகளும் கிடைக்காமலே போகும்.

தேசம் நெற் போன்ற பொறுப்பான பத்திரிகைகள் சேது போன்றவர்களின் வேலைத் திட்டங்களுக்குப் பலியாகமல் இருக்க வேண்டும்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.//

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார். முதல் மனைவி பற்றிய எஸ் சிவரூபனின் குறிப்புச் சரியானதே. ஏனையவை எஸ் சிவரூபனுடைய ஊகம் அல்லது விமர்சனம்.

தவறுக்கு வருந்துகிறேன். முன்னைய கட்டுரையிலும் இத்திருத்தத்தை மேற்கொள்கிறேன்.

த ஜெயபாலன்

தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் அமில தேரர் நேற்று கைது: வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடம் பண மோசடி

amila.jpgதேசப் பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் வண. தம்மபர அமில தேரர் நேற்றுக் காலை சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார். தலங்கமவில் வைத்து நேற்றுக் காலை 10 மணியளவில் இவரைக் கைது செய்த சி.ஐ.டி.யினர் விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அமில தேரருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப் பெற்றதையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்மை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி தேரர் பண மோசடி செய்ததாக ஹொரணை, குளியாப்பிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சி.ஐ.டி. யினருக்கு வழங்கிய முறைப் பாடுகளை அடிப்படையாக வைத்தே நேற்று அமில தேரரை கைதுசெய்திருப்பதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன கூறினார்.

பண மோசடி தவிர்ந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களும் அமில தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருப்பதனால், சி.ஐ.டி.யினர் இது குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் ஆரம்ப விசாரணைகள் இடம்பெறுகின்றன.

பொதுமக்களின் பார்வைக்கு புலிகள் இயக்கத்தின் கப்பல் – காலி துறைமுகத்தில் 28 முதல் 31 வரை

ltte-ship.jpgகடற் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான பிரின்ஸஸ் கிரிஸான்டா என்ற கப்பல் பொதுமக்களின் பார்வைக்காக இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை காலி துறைமுகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

புலிகளின் கப்பலுடன் கடற்படைக்குச் சொந்தமான ‘சயுர’ என்ற கரையோர ரோந்து கப்பலும் பொதுமக்களின் பார்வைக்காக காலி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

காலியில் நடைபெறும் சீசன் – 2009 கண்காட்சியிலேயே இந்தக் கப்பல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பொதுமக்கள் இந்தக் கப்பலை காண்பதற்காக கொழும்பு காலி முகத்திடலில் கப்பல் நேற்றுக் காலை தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.