14

14

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு இராணுவத் தளபதி கண்டனம்

jagath_jayasuriya.jpgபுலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து படையினர் அடைந்த வெற்றியை காட்டிக்கொடுக்கும் வகையில் இராணுவத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய படைவீரர்களை கௌரவிக்கும் வைபவம் இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உறுதிமிக்க தலைமைத்துவம் கிடைக்காதிருந்தால் இந்த வெற்றியை இராணுவத்தினரால் அடைந்திருக்க முடியாது.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டல் காரணமாகவே இந்த வெற்றி படையினருக்குக் கிடைத்தது என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறினார். 

முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை 22,000 பேர் மீள்குடியமர்வு – உறவினர்களுடன் வசிப்போர் 17, 18இல் மீள்குடியேற்றம்

lankaidsleavingcamp.jpgமுல் லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரையில் 22 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்போரை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வசித்து வருபவர்கள் எதிர்வரும் 17 ஆம், 18 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பூநகரி செயலாளர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களை விடுத்து வவுனியாவின் வெளியிடங்களில் தங்கியிருப்பவர்கள் தமது மீள்குடியேற்றத்தை உறுதி செய்து கொள்வதற்காக வவுனியா – குருமண்காட்டில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீள்குடியமர்வு க்கான விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே, பதிவுகளை மேற்கொண்டோரே 17ம், 18ம் திகதிகளில் விசேட பஸ்கள் மூலம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள திகதியன்று நகர சபை மைதானத்திற்கு காலை 8 மணிக்கு வருகை தருமாறும் இதன் போது பாரிய பொதிகளை தம்முடன் எடுத்து வரவேண்டாமென்றும் அரச அதிபர் மேலும் கேட்டுக் கொண்டார்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உருத்திரபுரம் கிழக்கு, ஜெயந்திநகர், பெரிய பரத்தன், உதய நகர் மேற்கு ஆகிய இடங்களிலும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் முழங்காவில், இரணைதீவு, நாச்சிக்குடா, ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு, கிராஞ்சி, பல்லவராயன்கட்டு, பொன்னாவெளி, நல்லூர், கரியாலை நாகபடுவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே 17ம், 18ம் திகதிகளில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கிருக்கும் முல்லைதீவு துணுக்காய், மாந்தை கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

பல்கலைக்கழகக் கல்வியை முடக்கும் ரணிலின் வெள்ளை அறிக்கை யுகத்தை மாற்ற அரசுக்கு முடிந்துள்ளது – ஜனாதிபதி

mahinda0.jpgபல் கலைக்கழகக் கல்வியை முடக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட வெள்ளையறிக்கை யுகத்தை மாற்றி உயர்கல்வித்துறையை சர்வதேசத்துக்கு நிகரானதாக முன்னெடுக்க அரசாங்கத்துக்கு முடிந்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து கல்விமான்களின் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கல்விமான்களின் பங்களிப்பு பெரும்பலமாக அமையுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், விரிவுரையாளர்கள், கல்வி மற்றும் கல்வி சாரா அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர்களான பேராசிரியர் விஷ்வா வர்ணபால, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பந்துல குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்த தாவது:- பூரண சுதந்திரமடைந்துள்ள நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய முக்கிய தேவையாகவுள்ளது. அத்துடன் கல்விமான்கள் அச்சுறுத்தப்பட்ட காலங்கள் போலல்லாது கல்விமான்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய உணர்வை இல்லாதொழிக்க சில சக்திகள் முற்பட்ட போது, அதற்கெதி ராக நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். அதேபோன்று உயர் கல்வியென்பது ஒரு சாராருக்கு மட்டுமே உரித்தானது என்ற நோக்கில் நாம் ஒருபோதும் செயற்படவில்லை. சிலர் இக்காலகட்டத்தில் தார்மீக சமுதாயம் பற்றிப் பேசியபோதும் நாடு பற்றிய சிந்தனை அவர்களுக்கு இருக்கவில்லை. நாட்டின் இன்றைய சூழலை கருத்திற் கொண்டு கல்விமான்கள் மிகுந்த தெளிவோடு செயற்படுவது முக்கியம். கல்விமான்களுக்கு விலங்கிட்டு அவர்களின் கருத்துக்களை அடக்க ஒருபோதும் எவருக்கும் இடமளிக்க முடியாது.

புலிகள் பெருமளவிலான கல்விமான்களை அச்சுறுத்தியும் படுகொலை செய்துமுள்ளனர். வடக்கு, கிழக்கு கல்விமான்களுக்கு புலிகளே பெரும் அச்சுறுத்தலாக விளங்கினர். அதனைப் பற்றி நான் மேலும் விபரிக்க வேண்டிய அவசியமில்லை. கல்விமான்கள் பல்வேறு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். எனினும் நாடு என்று வரும்போது சகலரும் ஒன்றித்த கருத்துடன் செயற்படுவது அவசியம். நாட்டின் உயர் கல்வித்துறையை மேம்படுத்துவதில் நாம் எப்போதும் முன்னின்று செயற்பட்டுள்ளோம். அதேபோன்று இலவசக் கல்விக்கும் நாம் முக்கியத்துவமளித்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை: மக்கள் இடம்பெயரும் அபாயம்

front.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த வெள்ள அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. நேற்று முதல் மழை ஓய்ந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தேங்கியிருந்த வெள்ளநீர் படிப்படியாக குறைந்து வருகின்றது. இதேவேளை கல்முனை, கல்முனைக்குடி, பாண்டிருப்பு தாழ்ந்த பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை அகற்ற கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கிட்டங்கி வாவி நீர் மட்டம் குறைந்துள்ள போதிலும் கிட்டங்கி பாலத்தின் நீரோட்டத்தை சல்வீனியா தாவரம் தடுத்துள்ளதனால் வீதிக்குக் குறுக்காக வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் போக்குவரத்து தடை ஓரளவு நீங்கியுள்ளது நீரோட்டத்தை தடை செய்யும் சல்வீனியா தாவரத்தை உடன் அகற்ற வீதி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்தினால் சேமடைந்து இருக்கும் கிட்டங்கி வீதியை திருத்தம் செய்து மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கிழக்கு மாகாண உறுப்பினர் எஸ். புஸ்பராசா சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மக்கள் இடம் பெயரும் நிலை ஏற்படலாம் என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வெள்ளத்தின் காரணமாக செங்கலடி, பெருமாவெளிப் பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் 25 ஆம் கிராமம், வேத்துச்சேனை, ஆணைக்கட்டியவெளி, சின்னவத்தைக் கிராமங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர், இக் கிராமங்களின் பாலத்தின் ஊடான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈரலக்குளம் பாதை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுச்சேவை நடாத்தப்படுவதாகவும் தெரிவித்தார். ஐயங்கேணி, பலாச்சேலை, சித்தாண்டி கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் முள்ளாமுனை வயல் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்றார். கடந்த 81 மணித்தியாலயத்தில் 144.7 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பில் பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ். வசந்தகுமார் தெரிவித்தார். ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று (12) பிற்பகல் 5.30 வரை 1534.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

Mahinda_Posterபொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் கட் அவுட்களையும் வேட்பு மனு தாக்கல் செய்யும் தினமான 17 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

தனது சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட் அவுட்களை உடனடியாக அகற்றி முன் உதாரணமாக செயற்படுமாறும் ஜனாதிபதி தன்னிடம் கேட்டுக் கொண்டதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார். தேர்தல் சட்ட விதிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்ததாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, பொலிஸ் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில்,

1981 ஆம் ஆண்டு தேர்தல் விதிமுறையின் 15 வது பிரிவுக்கு அமைய பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட் அவுட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் இவை காட்சிக்கு வைக்கப்படக் கூடாதென தேர்தல் சட்டம் கூறுகிறது. அந்த திகதிக்கு பின்னர் இவை பலாத்காரமாக அகற்றப்படும்.

இதற்கமைய உடனடியாக இவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலிருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

மயோன் முஸ்தபா ஜனாதிபதி தேர்தலில் போட்டி

ballot-muthaffa.jpgஉயர் கல்வி பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை அபேட்சகராகப் போட்டியிட எம். எம். மயோன் முஸ்தபா தீர்மானித்து ள்ளார்.

சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச மக்களுக்கு தனது முடிவை அறிவிக்கும் கூட்டத்திலேயே மயோன் முஸ்தபா இந்த முடிவை தெரிவித்தார்.

மீள்குடியேறிய மக்களுக்காக கிளிநொச்சியில் பஸ் டிப்போ

buss.jpgகிளிநொச் சியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் போக்குவரத்துக்காக கிளிநொச்சி நகரில் இ.போ.ச. டிப்போவொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை நேற்று கூறியது. முதற்கட்டமாக இந்த டிப்போவுக்கு 12 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இ.போ.ச. பிரதி பொது முகாமையாளர் பி. ஏ. லிவ்னிஸ் தெரிவித்தார்.

முதற்கட்டமாக கிளிநொச்சி நகர பஸ் சேவை, கிளிநொச்சி – முழங்காவில், கிளிநொச்சி – பூனகரி ஊடாக நல்லூர், கிளிநொச்சி – உரித்துபுரம், கிளிநொச்சி – யாழ்ப்பாணம், கிளிநொச்சி – வவுனியா இடையிலான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மல்லாவியில் இ.போ.ச. உப டிப்போவொன்றும் ஆரம்பிக்கப்ப ட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் கூறினார்.

அதிகாரப் பரவராக்கத் திட்ட அடிப்படையை இலங்கை இந்தியாவிடம் கையளித்தது?

கடந்த வாரம் இலங்கை உயர்மட்டக் குழுவின் புதுடில்லி விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை, இந்தியாவிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசின் உயர்மட்டக்குழு கடந்த வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் புதுடில்லிக்கு விஜயத்தை மேற்கொண்ட வேளையிலேயே இந்த இரண்டு பக்க ஆவணம் புதுடில்லி அதிகாரத் தரப்பிடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரடங்கிய உயர்மட்டக்குழுவே இந்த ஆவணத்தைப் புதுடில்லியில் கையத்ததாகவும் தெரியவருகின்றது.

புதுடில்லி விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் “இலங்கையில் அரசியல் தீர்வு நோக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இரு தரப்புகளும் இணங்கிக் கொண்டன” என்று குறிப்பிடப்பட்டமை தெரிந்ததே.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே ஆதரவு. தீர்மானத்தில் மாற்றமில்லை என்கிறார் சிவநேசதுரை சந்திரகாந்தன்

pilleyan_mahinda.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றமும் கிடையாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை நாம் மாற்றியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்து வரும் கருத்தை மறுத்துள்ள அவர் மக்களை குழப்பும் வகையில் அவை செய்தி வெளியிடுவதாக குறிப்பிட்டார். மேற்படி ஊடகங்கள் தங்களையும் குழப்பி மக்களையும் குழப்ப முயல்வதாகக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வெற்றிக்கு தமது கட்சி பாடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை தமிழ் மக்கள் விடுதலை முன்னணி மாற்றிக் கொண்டுள்ளதாக சில ஊடகங்கள் கடந்த தினங்களில் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

சமூகத்தின் எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுக்க முடியாமல் ஹக்கீம் தடம்புரள்கிறார் – மு.கா. முன்னாள் உறுப்பினர் அப்துல் கபூர்

அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க திரவெடுத்த தோள்களோடு திரண்டு நிற்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது போன்று சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கவோ ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ முஸ்லிம் சமூகம் அரசியல் சாணக்கியம் அற்றவர்கள் அல்ல. இவ்வாறு கல்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான ஏ. அப்துல் கபூர் தெரிவித்துள்ளார். அப்துல் கபூர் இது விடயமாக மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவுமே முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். கால நேரத்துக்குப் பொருத்தமான வகையில் அரசியல் வியூகம் வகுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்களோடு பேசி முஸ்லிம் சமூகத்திற்கு உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொடுத்தார்.

தென் கிழக்குப் பல்கலைக்கழம், ஒலுவில் துறைமுகம் இதற்கு நல்ல உதாரணங்களாகும். மர்ஹும் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரவூப் ஹக்கீம் அரசியல் வியூகம் அற்று சமூகத்தின் எதிர்காலம் கருதி தீர்மானங்களை எடுக்க முடியாமல் தடம்புரள்கிறார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த காலம் முதல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் சகல விதமான மத கலாசார உரிமைகளையும் பெற்று தங்களது இருப்பையும் உறுதிப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள் என கபூர் மேலும் தெரிவித்துள்ளார்.