07

07

ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன – சுதந்திரக் கட்சியில்; இணைந்த எஸ்.பி. உறுதிமொழி

sb-dissanayake.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஓய்வு பெற்ற சரத்பொன்சேகாவைத் தோல்வியுறச்செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பனிப்புடன் பாடுபடுவதாக ஐ.தே.கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியயின் வெற்றியை உறுதி செய்வதற்காக தாம் ஐ.தே.க வில் வகித்த பதவிகள் அனைத்தையும் உதரித்தள்ளிவிட்டு இவ்வாறு இன்று ஐ.மு.சு.கூட்டமைப்பில் இணைந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர், வலப்பனை தேர்தல் தொககுதியின் பிரதான அமைப்பாளர் மற்றும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை தாம் மேற்கொண்ட இந்த தீர்மானத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்;றும் அவருடன் நெருங்கியவர்களும், தற்போது பாரிய நம்பிக்கையுடன் வந்திருப்பவர்களுமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி. திசாநாக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவுடன் நேற்று சம்பந்தன் சந்திப்பு

Sambanthan_Rஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக அரசுத் தரப்புடனும் எதிர்க்கட்சி தரப்புடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவது என்று த. தே.கூட்டமைப்பின் தலைமை தீர்மானித்திருக்கின்றது. இதன் ஓர் அம்சமாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சு நடத்தினார்.

‘மக்கள் விடுதலை இராணுவம்’ ஒரு புஸ்வாணம்? இது ஈரோஸ் சங்கர்ராஜி அணியா? : த ஜெயபாலன்

Nesan Shankar Rajeeமக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் புதிய மார்க்ஸிய இயக்கம் தோற்றம் பெற்றுள்ளதாக பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகையில் அன்ரனி லொய்ட்ஸினால் எழுதப்பட்ட கட்டுரைக்குப் பின்னணியில் ஈரோஸ் அமைப்பின் சங்கர்ராஜி நேசன் அணியே பின்னணியில் இருப்பதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை ஈரோஸ் அமைப்பின் நேசன் அணியினர் மறுக்கின்றனர். மக்கள்  விடுதலை இராணுவம் அல்லது மக்கள் விடுதலைப் படைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதே தங்களது உத்தியோகபூர்வமான அறிவிப்பு எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்த நேசன் சங்கர்ராஜி தளநிலைமைகள் எப்படி என்று தன்னால் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

ரைம்ஸ் பத்திரிகையாளர் அன்ரணி லொய்ட் தனது நண்பர் என்று தெரிவித்த நேசன் சங்கர்ராஜி இன்னும் சில தினங்களில் இவ்வமைப்புப் பற்றிய மேலதிக செய்திகள் ரைம்ஸ் பத்திரிகையில் வர இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்த இருப்பதாக இன்று (Dec 7)  அன்ரணி லொய்ட் தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று (Dec 7) ரைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளிவருவதற்கு முன்னதாகவே நேசன் சங்கர்ராஜி, சக்தி ஆகியோர் இலங்கை அரசு அரசியல் தீர்வு காணாதபட்சத்தில் அழுத்தம் டகொடுக்கும் நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்ற வகையில் உரையாடி உள்ளனர். அந்த உரையாடலில் சிறிய அளவிலான தாக்குதல்கள் பற்றியும் உரையாடி இருந்தனர்.

சில மாதங்களுக்கு முன் வரை பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சங்கர் ராஜி நேசன் திடீரென இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது பற்றியும் பேசியது முரண்நகையாகவே இருந்தது.

இன்று ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக மக்கள் விடுதலை இராணுவத்தின் ‘தளபதி’ கோணேஸ் என்பவருடன் தொடர்பு கொள்ளமுற்பட்ட போது இலங்கையில் உள்ள ஒரு கைத்தொலைபேசி இலக்கம் தேசம்நெற்க்கு வழங்கப்பட்டது. அவ்விலக்கத்துடன் தொடர்புகொண்டால் கோணேசுடன் பேச முடியும் எனவும் சொல்லப்பட்டது. அவ்விலக்கத்துடன் தொடர்பு கொண்டு கோணேஸா பேசுகிறீர்கள் என்று கேட்ட போது ஆம் என்று பதில் வந்தது.

தேசம்நெற்றை அறிமுகப்படுத்திக் கொண்டு மக்கள் விடுதலை இராணுவம் பற்றிக் கேட்ட போது அவர் ஈரோஸின் வரலாற்றை அளக்க ஆரம்பித்தார். அந்த அறிமுகமான குரலைக் கொண்டு ‘சக்தி’ பேசுகிறீர்கள் என்ற போது அவர் ‘ஓம்’ என்றார். இவரை சில வாரங்களுக்கு முன் தமிழர் தகவல் நடுவம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு ஒன்றில் லூசியம் சிவன் கோவிலில் சந்தித்து இருந்தேன். அந்த அறிமுகம் இருந்தது.

நீங்கள் தான் மக்கள் விடுதலை இராணுவம் என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளீர்கள் என்று கேட்ட போது அவர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார் சக்தி. ‘உங்களுக்கு ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளதா எனக் கேட்டபோது ‘நிச்சயமாக. இலங்கை அரசு அரசியல் தீர்வை முன் வைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்படும்’ என்றும் சக்தி தெரிவித்தார்.’ யார் அந்த மக்கள் விடுதலை இராணுவம்?’ எனக் கேட்டபோது ஒரு மணி நேரத்தில் மீண்டும் அழையுங்கள் முழுத்தகவல்களையும் பெற்று வைக்கின்றோம் என்றனர்.

அவ்வாறே சில மணி நேரங்களுக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ‘சில விசயங்களை எப்படி உங்களுக்குச் சொல்வது’ என்று கதைத்துக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துணடிக்கப்பட்டது. மீண்டும் பலமுறை முயற்சித்த போதும் தொடர்புகொள்ள முடியவில்லை.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குகணேஸ் என்ற முன்னால் போராளி ஒருவர் ஈரோஸ் நேசன் அணியில் உள்ளார் என்றும் தெரிய வருகின்றது. நேசன் அணிக்கும் பிரபா அணிக்கும் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னரேயே மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

‘மக்கள் பாதுகாப்புப் படை’ இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனத் தெரிவித்த நேசன் சங்கர்ராஜி இவர்கள் புலிகளைப் போன்று பாஸிஸ அமைப்பாகச் செயற்பட மாட்டார்கள் என்பது அவர்களுடைய மார்க்ஸிய கருத்துக்களில் இருந்து வெளிப்படுவதாகத் தெரிவித்தார். 

ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ள கோணேஸ் என்ற தளபதிக்கு மக்கள் பாதுகாப்புப் படை வழங்கிய பெயர் குகணேஸ் என்றும் அது தவறுதலாக கோணேஸ் என பிரசுரிக்கப்பட்டதாக பத்திரிகையாளர் அன்ரனி லொயட் தெரிவித்ததாக நேசன் சங்கர்ராஜி தெரிவித்தார்.

அன்ரனி லொய்ட் என்ன சொன்னார் என்பதை நேசன் சங்கர்ராஜி சொல்கிறாரா அல்லது நேசன் சங்கர்ராஜி விரும்புவதை அன்ரனி லொய்ட் ஊடாகத் தெரிவிக்கிறாரா என்ற குழப்பம் தவிர்க்க முடியாதது. அன்ரனி லொய்ட்க்குப் பின் நேசன் சங்கர்ராஜியும் அவருக்குப் பின் மக்கள் பாதுகாப்புப் படையும் அதற்குப் பின் இலங்கை அரசும் றிற்கின்றதா என்ற சந்தேகத்திற்கு நியாயங்கள் நிறையவே உண்டு.

ரைம்சில் வெளியான செய்தி தொடர்பாக இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வல ‘மக்கள் விடுதலை இராணுவம்’ என்ற அமைப்பின் பெயரை அரசாங்கம் அறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இவர்களை அரசியல் நிர்வாகரீதியாகக் கையாள்வதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழலில் இவ்வாறான அமைப்புகள் தோண்றுவது உலகில் சகஜம் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

இயக்க வரலாறுகளின் ஆரம்ப காலங்களில் ஈரோஸ் அமைப்பு இந்திய இராணுவத்திடமும் பாலஸ்தீனத்திலும் பயிற்சி எடுத்திருந்தது. ஆனால் தற்போது ஈரோஸ் பலவாகச் சிதறியுள்ளது. அதில் நேசன் அணி தனது தந்தை சங்கர்ராஜியின் நிழலில் இயங்குகிறது. இலங்கை அரசுடன் மிக நெருக்கமாக இருந்த இவ்வமைப்பு தற்போது இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் து}க்கவும் தயார் எனத் தெரிவிக்கின்றனர். இவர்களது கதையை கேட்க எத்தனை பேர் தயார் என்பதும் இவர்கள் தான் மக்கள் விடுதலை இராணுவமா என்பதையும் அறிய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி ஏற்படாது.

இந்த மக்கள் விடுதலை இராணுவத்திற்குப் பின் மக்களல்ல இலங்கை அரசு செயற்படுகின்றது என்ற சந்தேகம் வலுவடைந்து வருகின்றது. இவை பற்றிய உண்கைள் விரைவில் துலங்கும் என நம்பலாம்.

இன்னும் ஓரிரு வாரங்களில் ஈரோஸ் அமைப்பின் சங்கர்ராஜி அணி ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேசன் சங்கர்ராஜி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

._._._._._.

 New Tamil group People’s Liberation Army vows to start a fresh war
December 7, 2009, Anthony Loyd in Colombo

A Marxist group of Tamil militants with connections to the Palestinian Liberation Organisation and Cuba is preparing to mount a new insurgency in Sri Lanka six months after the Government declared an end to the 26-year-old war there.

The People’s Liberation Army (PLA) was founded in eastern Sri Lanka four months ago and has vowed to launch attacks against government and military targets unless its demands for a separate Tamil homeland are met.

“This war isn’t over yet,” Commander Kones, head of the PLA’s Eastern District military command, told The Times during a night meeting in a safe house in the east of the country last week.

“There has been no solution for Tamils since the destruction of the LTTE [Tamil Tigers] in May. So we have built and organised the PLA and are ready to act soon. Our aim is a democratic socialist liberation of the northeast for a Tamil Eelam [the desired Tamil state].”

Kones, a nom de guerre, claimed that the PLA had 300 active members and expected to recruit 5,000 volunteers from the 280,000 Tamil civilians recently freed from detention camps.

He said that the PLA, commanded by a ten-man committee, was an entirely separate organisation from the LTTE, but said that former LTTE cadres would be able to join the organisation provided that they swore their allegiance to the PLA’s political aims.

“There are former LTTE members in the PLA now,” he said. “But the LTTE was an extremist organisation that fought only for itself rather than the people’s needs.

“It is totally destroyed now and I don’t worry about it. We are socialist ideologues and we are trying to draw different Tamil groups together for a people’s struggle, a people’s war.”

Although the PLA’s capabilities remain unclear, it includes in its ranks several experienced insurgents who fought against the government forces in Sri Lanka in the 1980s before falling foul of the LTTE and either leaving the country or becoming dormant.

Commander Kones, now in his forties, had himself been given guerrilla training at a camp in Uttar Pradesh, India, in 1983, where his trainers included fighters from the Palestinian Liberation Organisation (PLO).

“We still have a relationship with the PLO, as well as Cuba and Indian Maoist groups,” he said.

“They fight for their rights just as we do.”

During later action against government forces in eastern Sri Lanka he was imprisoned and tortured, before escaping from the country to live in Europe.

The threat of an aspiring new Tamil insurgent group comes at a complicated time for the Sri Lankan authorities.The unified image that accompanied their decisive victory over the Tamil Tigers in May has been eroded. The architect of that victory, General Sarath Fonseka, has become embroiled in a political scrap with the incumbent President Mahinda Rajapaksa as both men vie for a presidential election victory next month.

Their rivalry could split the vote of the Sinhalese majority, offering the swing vote to the country’s Tamil minority, who have yet to declare their political allegiance.

A new round of violence during this period could have a dramatic reversal on efforts to stabilise the country.

“We are much more politically skilled than the LTTE ever were and know how to avoid the ‘terrorist’ label that they acquired,” Kones said.

“Our enemy is simply the Government here, and we fight just for Tamil rights. We are not against the international community,” he said. “Indeed, we want them to support us in pressurising the Sri Lankan Government.”

Kones said that he had no intention of trying to emulate the Tigers’ style of warfare, but suggested a more asymmetric strategy involving attacks by widely dispersed PLA cells. However, he added that his targets would include economic and administrative centres, as well as military forces.

Other PLA insiders said that one of their likely first fights would be with groups of former LTTE cadres led by the infamous Colonel Karuna. Karuna split from the LTTE ranks in 2004 and later joined the Government, but still holds influence in eastern Sri Lanka.

“We are getting stronger by the day, much stronger than any other group,” Kones said. “The day of action is close.”

A few nights after meeting Commander Kones, deep in a rural area, The Times encountered three young PLA recruits waiting for a guide to take them to one of the organisation’s jungle training camps.

Two were 15 years old, one was 16. “The PLA sound very interesting to us,” they said. “They are the only ones now doing something for the Tamil people.”

Theirs was not, however, a pervading sentiment. Shattered by their experiences in the war zones this year, depressed by their subsequent incarceration in detention camps, few Tamils expressed any great enthusiasm for a return to war.

“I’m not interested in Eelam,” Raja Muragaswaran, 31, who was released from a camp last month, said.

“I lost everything that I had ever worked for in the name of Eelam. How many died for Eelam, and all for what? We just want peace.”

www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece

மதவாச்சி, கெப்பித்திகொள்ளாவ சோதனைச்சாவடி; பாஸ் நடைமுறை நீக்கம்

buss.jpgமதவாச்சி மற்றும் கெப்பித்தி கொல்லாவ சோதனைச்சாவடிகளில் நடைமுறையிலிருந்த வாகன பாஸ் முறைமை நேற்று முன்தினம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

இதற்கான அங்கீகாரத்தை பாது காப்பு அமைச்சு வழங்கியுள்ளது. இதன்படி நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் வாகனங்கள் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ சோதனைச்சாவடி ஊடாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி சென்றுவர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாகன பாஸ் நடைமுறை நீக்கப்பட்டதை அடுத்து முதன் முறையாக கொழும்பிலிருந்து சென்ற வாகனங்கள் இச்சோதனைச்சாவடி களூடாக வவுனியா மற்றும் திருகோணமலை சென்றன.

காலி சிவன் கோவிலில் கொள்ளையர் அட்டகாசம் 17 விக்கிரகங்களை பெயர்த்தெடுத்துச் சென்றனர்

காலி சிவன் கோவிலுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த கொள்ளைக் கோஷ்டியொன்று நூறு வருடங்களுக்கும் மேல் பழைமை வாய்ந்த பெறுமதி மதிக்க முடியாத 17 விக்கிரகங்களைப் பெயர்த்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தென் பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தத் துணிகர கொள்ளை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பல அரசியல் பிரமுகர்களும் பொலிஸாரை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது காலி நகரில் பஸ் நிலையத்திற்கு அருகிலும் நகரசபை மண்டபத்திற்கு முன்பாகவும் சிவன் கோவிலுள்ளது. ஆலயத்தின் நான்கு புறமும் பெரிய மதில் சுவர்கள் உள்ளன. ஆலயத்தின் முன்புறவாசல் காலிமாத்தறை வீதியிலும் பின்புறக் கதவு காலிகொழும்பு வீதியிமுள்ளது. கோயிலின் பாதுகாப்புக்காக காவலாளியும் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வாகனமொன்றில் வந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர் கோயிலின் பின்புற வாசல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் இவர்களை தடுத்து நிறுத்த முனைந்ததுடன் உதவி கேட்டு குரல் எழுப்பியுமுள்ளõர்.

எனினும் ஆலயத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் பெரிய மதில் சுவர்களிருந்ததால் அது வெளியே கேட்கவில்லை.  இதற்கிடையில் அந்தக் கொள்ளையர்கள் காவலாளியை மடக்கிப் பிடித்து அவரைக் கடுமையாகத் தாக்கிய பின் அவரது கையையும் காலையும் கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் அங்கிருந்த பெரிய சுற்றியல்கள் மற்றும் உளிகள் மூலம் சிவன் மற்றும் அம்மன் கோவில் கதவுளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து உள்ளே பூட்டப்பட்டிருந்த கதவுகளையும் உடைத்து விக்கிரகங்களை அடியோடு பெயர்த்துள்ளனர்.

ஐம்பொன் மற்றும் பவுணினாலான 14 பெரிய விக்கிரகங்களையும் மூன்று சிறிய விக்கிரகங்களையும் அவற்றின் இருப்பிலிருந்து பெயர்த்து பலத்த சிரமத்தின் மத்தியில் ஒன்றொன்றாக கோயிலினுள்ளிருந்து சுமார் 50 யார் தூரத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு கொண்டு வந்து ஏற்றியுள்ளனர்.

மிகவும் பாரமான இந்த விக்கிரகங்களை தூக்கித் தூக்கி நிலத்தில் வைத்தவாறே வெளியே கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் உள்ளன. கொள்ளையர்கள் சிவன், முருகன், பிள்ளையார், வள்ளி, தெய்வானை, அம்மன், கிருஷ்ணர், சண்டேஸ்வரர் உட்பட 17 விக்கிரகங்களை பெயர்த்துச் சென்றுள்ளதாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் சேனாதிராஜா இரத்தினராஜா தெரிவித்தார். பெயர்த்தெடுக்கப்பட்ட அனைத்து விக்கிரகங்களும் நூற்றாண்டு பழைமை வாய்ந்தவை. இவற்றின் பெறுமதி மதிப்பிடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரும் உடனடியாக அங்கு வந்து புலன்விசாரணைகளை ஆரம்பித்தனர். நேற்று மாலை வரை எவரும் கைதாகவுமில்லை.

தேர்தலைக் கண்காணிக்க 4 வெளிநாட்டுக் குழுக்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா உறுதியளிப்பு

dayananda_disanayake.jpgஜனவரி 26 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வருகை தரவுள்ளன. ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய தேர்தல் ஆணைக்குழு என்பனவற்றைச் சேர்ந்த நான்கு குழுக்கள் தேர்தலை கண்காணிக்குமென தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தமக்கு அறிவித்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க இத்தகவலை தெரிவித்தார்.எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரங்களைத் தடுப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததுடன், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஐ.தே.மு. ஆட்சியமைக்கையில் அவர்கள் தொடர்பாக சட்டரீதியில் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மூலம் ஐ.தே.கவின் வலதுசாரி சர்வாதிகாரம் அம்பலம்

ஐ. தே. க. சம்மேளனத்தில் வைத்து ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் ஐ. தே. க.வின் வலதுசாரி சர்வாதிகாரத் தோற்றம் அம்பலமாகியுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். ஊடகங்களை அடக்கி, ஒடுக்கிய ஐ. தே. க.வின் கடந்த கால போக்கு இன்னும் மாறவில்லை என்றும் தனது சுயரூபத்தை ஐ. தே. க. வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:- ஐ. தே. க. சம்மேளனத்திற்கு செய்தி திரட்டச் சென்ற ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஊடகவியலாளர்கள் அறுவர் நேற்று முன்தினம் ஐ. தே. க. தலைவரின் ஆதரவாளர்களால் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் கெமரா உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு, வீடியோ ஒளிநாடாக்களும் பறிக்கப்பட்டுள்ளன. மலசலகூடத்தினுள் புகுந்து தப்ப முயன்ற இந்த ஊடகவியலாளர்கள் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளனர். ஊர்மக்கள்தான் இவர்களை காப்பாற்றியுள்ளனர். இவர்களை பாரிய கும்பலொன்றே தாக்கியுள்ளது. தமது கடமையை நிறைவேற்றச் சென்ற வேளையிலேயே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செய்தி திரட்டுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். தமது உயரதிகாரிகளின் பணிப்பின் படியே இவர்கள் செய்தி திரட்டச் சென்றனர். இவர்கள் அரசியல் செய்வதற்காக ஐ. தே. க. மாநாட்டிற்குச் செல்லவில்லை.

இந்த மாநாட்டிற்கு அரசாங்க ஊடகங்களுக்கு அழைப்பு வழங்கவில்லையெனவும், ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டது தெரியாது எனவும் ஐ. தே. க. செயலாளர் கூறியுள்ளார். ஜனநாயகம், ஊடக சுதந்திரம் பற்றி பேசும் ஐ. தே. க. செயலில் அதற்கு மாறாகவே செயற்படுகிறது. கட்சியொன்றின் மாநாட்டில் செய்தி திரட்டச் செல்வதற்கு அனுமதி தேவையில்லை. ஐ. தே. க. வும் ஜே. வி. பி. யும் ஊடக சுதந்திரம் குறித்து பேசினாலும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராகவே செயற்படுகின்றன. கடந்த ஐ. தே. க. ஆட்சியில் பத்திரிகைகள் “சீல்” வைக்கப்பட்டபோது பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் தாக்கப்பட்டனர். ஆனால் ஐ. தே. க. தனது கடந்தகால போக்கை இன்னும் மாற்றவில்லை. ஐ. தே. க. வின் இந்த போக்கினால் மிகவும் பயங்கரமான நிலை உருவாகியுள்ளது.

தமது கூட்டங்களுக்கு அரச ஊடக நிறுவனங்களிலிருந்து யாரும் வரக் கூடாது எனவும், அவ்வாறு வந்தால் திரும்பிச் செல்ல மாட்டார்கள் எனவும் ஜே. வி. பி. அச்சுறுத்தியுள்ளது. மறுபக்கம் செய்தி திரட்ட வந்த அரச ஊடக நிறுவன ஊடகவியலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் ஐ. தே. க. கூட்டங்களுக்கு செய்தி திரட்டச் செல்வதற்கு அரச ஊடக நிறுவனங்களில் பணி புரியும் ஊடகவியலாளர்களை அனுப்ப முடியாது. ஐ. தே. க. வினர் அவர்களை கொலை செய்து விடலாம். இந்தத் தாக்குதல் ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது சில தொலைக்காட்சி சேவைகள் 24 மணித்தியாலமும் அது குறித்து செய்தி வெளியிட்டன. ஆனால் தனியார் ஊடகம், அரசாங்க ஊடகம் என வேறுபாடு கிடையாது. அனைத்தும் ஊடகங்களே. அவற்றின் சுதந்திரத்தை பாதுகாக்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ. ரீ. என். மற்றும் ரூபவாஹினி ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

பாதுகாப்பு செயலாளர் நியமனத்துக்குப்பின் எந்தவொரு சொத்தையும் வாங்கவில்லை – கோத்தாபய ராஜபக்ஷ

gothabaya.jpgஎதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகாவும் விடுக்கும் அனைத்து குற்றச் சாட்டுக்களையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு கடந்த சனிக்கிழமை வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

புலிகளின் சொத்து மற்றும் அந்த சொத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் ஊழல் மோசடி உட்பட விடுக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் மக்கள் மற்றும் படையினரின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் விடுக்கப்பட்ட பொய்க் குற்றச் சாட்டுக்களாகும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

தான் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டது. முதல் எந்தவொரு சொத்தையும் கொள்வனவு செய்யவில்லை என்று இப் பேட்டியின் போது கூறிய பாதுகாப்பு செயலாளர், அவ்வாறு கொள்வனவு செய்திருந்தால் அதனை நிரூபித்துக் காட்டுமாறு அவர் சவால் விடுத்தார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு வங்கியிலும் தனது பெயருக்கு உள்ள சொத்துக்களை தேடிப் பார்க்க அனுமதி வழங்கும் பகிரங்க கடிதமொன்றை வழங்க தான் தயாராக இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

அப்பேட்டியில் அவர் தொடர்ந்து கூறியதாவது:- ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 60 வருடங்களில் நாட்டுக்கு இழைத்திருக்கும் மிகப் பெரிய துரோகம் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டதாகும். அந்த உடன்படிக்கையின் படி சட்ட பூர்வமாக உருவாக்கப்பட்ட படையினருடன் புலிகள் இயக்க தீவிரவாதிகள் சமமாகக கருதப்பட்டனர். படை அதிகாரிகள் தீவிரவாதிகளுடன் கை குலுக்கி சமாதானம் பற்றிப் பேசவும் நேர்ந்தது என்று பாதுகாப்பு செயலாளர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை கிட்டத்தட்ட 3 ஆயிரம் தடவைகள் மீறப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதிருந்தது. புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்புத் தலைவர் கே. பி. கைது செய்யப்பட்டதையடுத்து அவரிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூறிவருகிறார் என்று பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

அரசாங்கத்தினால் நம்பிக்கை மீறப்பட்டிருந்தால் கே. பி. யை கைது செய்திருக்க முடியாது. ஏனெனில் அதற்கு சில வாரங்களுக்கு முன் செனல் 4 தொலைக்காட்சி சேவை கே. பி. யை பிரபாகரனின் வாரிசு என அறிவித்திருந்தது.  எனவே எமது புலனாய்வு அதிகாரிகள் கே. பி. யை கையாளுவதுடன், அவரை விசாரித்தும் வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானவை. இதில் சில சட்டபூர்வ வர்த்தகங்களாகவும் உள்ளன. சில நாடுகளில் புலிகளின் தொடர்புகளை எம்மால் கையாள முடிந்திருக்கிறது. ஆனால் சில நாடுகளில் அது கஷ்டமாக உள்ளது. விரைவில் கே. பி. யின் சொத்து பற்றிய விபரங்களை எம்மால் வழங்கக் கூடியதாக இருக்கும். சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் கொழும்பில் 90 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த 25 பேர்ச் காணித் துண்டொன்றை ஒதுக்கியுள்ளது.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று பொன்சேகா கூறி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியின் போது கூறியுள்ளார். சரத் பொன்சேகா ஓய்வு பெறுவதற்கு முன் காணி ஒதுக்குவது தொடர்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.  இராணுவ தளபதிக்கு மட்டுமன்றி கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகளுக்கும் கொழும்பில் காணி ஒதுக்கப்பட வேண்டுமென இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசியபோது அவர் கூறியிருந்தார்.  இந்த யோசனையை ஜனாதிபதி அங்கீகரித்ததையடுத்து பாதுகாப்பு அமைச்சு காணிகளை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான கொழும்பு கிரிமண்டல மாவத்தையில் தலா 10 பேர்ச் வீதம் மூன்று காணித் துண்டுகளை ஒதுக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்தது. குறிப்பிட்ட காணி அமைத்துள்ள இடத்தில் ஒரு பேர்ச் 3.8 மில்லியன் ரூபா பெறுமதியாகும். இந்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்ததும் அது பற்றி பொன்சேகாவுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் தனது எண்ணத்தில் இருக்கும் வகையிலான வீட்டை கட்டுவதற்கு 10 பேர்ச் காணி போதாது என்று அவர் கூறியதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து தான் மீண்டும் ஜனாதிபதியிடம் சென்று பொன்சேகாவின் நிலையை எடுத்துக் கூறி அதே விலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிட மிருந்து தலா 15 பேர்ச் வீதம் மூன்று காணித் துண்டுகளை பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய குறிப்பிட்டார்.

எனினும் அமைச்சரவை 20 பேர்ச் காணித்துண்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியபோதும் பொன்சேகா திருப்தி அடைந்ததாக தெரியவில்லை.  அதனையடுத்து இன்றையகாணிப் பெறுமதியில் 90 மில்லியன் ரூபா பெறுமதியான 25 பேர்ச் காணித்துண்டை அரசாங்கம் ஒதுக்கியது. எனினும் தற்போது தனது காணி ஒதுக்குவது தாமதமாவதாக குற்றம் சாட்டி அவர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். ஆனால் குறிப்பிட்ட காணித்துண்டு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; விசாரணையில் 3 பொலிஸ் குழு

வெலிசறை – நவலோக மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஜாஎல, கந்தானை மற்றும் பேலியகொட ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளே இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

வெலிசறை – நவலோக மைதானத்தில் நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.

திசாநாயக்கவின் இல்லத்தில் ஜனாதிபதி, எஸ்.பி.திசாநாயக்க இடையில் நேற்று சந்திப்பு

sb-dissanayake.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க இன்று திங்கட்கிழமை தனது எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எஸ்.பி.திசாநாயக்க ஆதரவளிப்பாரென ஊகங்கள் வெளிப்படுத்தப்படும் நிலையில் இன்று செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சன்டே ரைம்ஸ் நேற்று ஞாயிறு மாலை தெரிவித்தது. 

இதேவேளை, ஹங்குரான்கெத்தவிலுள்ள திசாநாயக்கவின் இல்லத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி.திசாநாயக்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் வெலிசறையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பிரதம அமைப்பாளரான எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொள்ளவில்லை. தனது தீர்மானத்தை அறிவிப்பதற்காக இன்று திங்கட்கிழமை திசாநாயக்க கொழும்பில் செய்தியாளர் மாநாட்டைத் திட்டமிடுவதாக அவரின் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சன்டே ரைம்ஸ் தெரிவித்தது. எஸ்.பி.திசாநாயக்க தற்போது மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்திருந்த எஸ்.பி.திசாநாயக்க பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.