மதவாச்சி, கெப்பித்திகொள்ளாவ சோதனைச்சாவடி; பாஸ் நடைமுறை நீக்கம்

buss.jpgமதவாச்சி மற்றும் கெப்பித்தி கொல்லாவ சோதனைச்சாவடிகளில் நடைமுறையிலிருந்த வாகன பாஸ் முறைமை நேற்று முன்தினம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

இதற்கான அங்கீகாரத்தை பாது காப்பு அமைச்சு வழங்கியுள்ளது. இதன்படி நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் வாகனங்கள் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ சோதனைச்சாவடி ஊடாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி சென்றுவர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாகன பாஸ் நடைமுறை நீக்கப்பட்டதை அடுத்து முதன் முறையாக கொழும்பிலிருந்து சென்ற வாகனங்கள் இச்சோதனைச்சாவடி களூடாக வவுனியா மற்றும் திருகோணமலை சென்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *