September

September

சச்சின் மீதான விமர்சனத்தை பின்வாங்கப் போவதில்லை – மஞ்சுரேக்கர்

sep-14-2009-india.jpgசச்சின் டெண்டுல்கர் இலங்கையில் ஆடிய விதம் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், அதற்காக கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் திணறிய போது வைத்த விமர்சனத்தை பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தன் ஃபார்மிற்காக திணறிய போது ஓய்வறையில் ஒரு யானை என்று வர்ணித்தார்.

அதாவது கடந்த ஆண்டு 51 ஒருநாள் போட்டி களில் சச்சின் டெண்டுல்கர் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போது 24 இன் னிங்ஸ்களில் 62.10 என்ற சராசரி வைத்திருந்தார். ஆனால் அதே காலக் கட்டத்தில் இந்தியா இரண் டாவதாக துடுப்பெடுத்தாடிய போது அல்லது இலக்கைத் துரத்தும்போது 26 ஓட்டங்களையே சராசரியாக வைத்திருந்தார் என்பதே சஞ்சய் மஞ்சு ரேக்கர் கடந்த ஆண்டு வைத்த விமர்சனத்திற்கு காரணம்.

சச்சின் டெண்டுல்கரிடம் இது பற்றி ஒருவரும் வாயைத் திறக்காததற்கு காரணம் அவரது ஆளுமை அவ்வளவு பெரியது என்று கூறும் போதுதான் ஓய்வறையில் அவர் ஒரு யானை என்று கூறினார் மஞ்சுரேக்கர்.அந்த காலக் கட்டத்தில் டெண்டுல்கர் சுதந்திரமாக விளையாடவில்லை. அந்தக் காலக் கட்டத்தில் அவர் எச்சரிக்கையுடன் விளையாடினார். அழுத்தம் அவரது முகத்தில் தெரிந்தது. அவுட் ஆகிவிடுவோம் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. ஆனால் இப்போது அது போய் விட்டது. அவர் தன் பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்.

அவர் ஒரு மகத்தான வீரர். ஆனால் அவரும் ஒரு மனிதன்தானே. அவரை 14 வயது முதல் நான் நெருக்கமாக கவனித்து வருகிறேன். அவர் தோல்வி, அவுட் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் விளையாடினார் என்பதை என்னால் உணர முடிந்தது. இதனால் அப்போது கூறிய கருத்தை இப்போது மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றார். ஆனால், டெண்டுல்கரின் ஆட்டம் தற்போது புத்துணர்வு அளிப்பதாக உள்ளது என்று கூறிய சஞ்சய் மஞ்சுரேக்கர், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில். அவர் அடித்த பேக் ஃபுட் கவர் டிரைவ், பிரண்ட் ஃபுட் கவர் டிரைவ் ஆகியவற்றைப் பார்க்கும் போது தற்போது அவர் 5 ஆண்டுகளுக்குப் பின்னால் சென்றது போல் தெரிகிறது. இப்போது அவர் சுதந்திரமாக விளையாடுகிறார் என்றார்.

சகல தோட்டங்களிலும் நேற்று வழமையான பணி

080909teawomen.jpgமலையகப் பெருந் தோட்டங்களில் அனை த்துத் தொழிற்சங்கங் களையும் சார்ந்த தொழிலாளர்கள் நேற்று (19) முதல் வழமையான பணிக்குத் திரும்பினர்.

தொடர்ந்து போராட்டம் நடத்துமாறு சில சங்கங்கள் விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்துவிட்டு, சகல தொழிலாளர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

இதன்படி தோட்டங்களில் சம்பள உயர்வு தொடர் பாக தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த முரண்பாடான கருத்துகள் நீங்கி அனைவரும் ஒரே தீர்மானத்துடன் போராட்டங்களைக் கைவிட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

சம்பள உயர்வுக்கான போராட்டம் உக்கிரமடைந்து காண ப்பட்ட பொகவந்தலாவை உள்ளிட்ட சகல தோட்டப் பகு திகளிலும் சுமுக நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே தடவையில் நூறு ரூபாவுக்கும் அதிகமான தொகை நாளாந்த சம்ப ளத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக பல தோட்டங்களின் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். பொதுவாக சம்பளத்திற்காகப் போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தொழிற்சங்கப் போட்டிக்காகக் கருத்துக் களை வெளியிட்ட பல தொழிற்சங்கங்களின் தோட்டக் கிளைத் தலைவர்கள், சம்பள உயர்வு தொடர்பான விளக்கத்தை தொழிலாளர்களுக்கு வழங்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

சம்பியன் கோப்பையை வென்று வூல்மருக்கு அர்ப்பணிப்போம் – பாகிஸ்தான் கப்டன் யூனுஸ்கான்

190909pakistan-cricket-team.jpgதென் ஆபிரிக்காவில் நடைபெறும் சம்பியன்ஸ் கோப்பையை வென்று மறைந்த பயிற்சியாளர் வூல்மருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் கப்டன் யூனுஸ்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பொப் வூல்மர் கடந்த 2007ஆம் ஆண்டு மே. தீவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் போது (50 ஓவர்) மர்மமான முறையில் இறந்தார். பிறகு அவரது மரணம் இயற்கையானது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மண்ணில் நடக்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வாகை சூடி கோப்பையை அவருக்கு அர்ப்பணிப்போம் என்று பாகிஸ்தான் அணியின் கப்டன் யூனுஸ்கான் சூளுரைத்து இருக்கிறார்.

8 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வருகிற 22ம் திகதி தென் ஆபிரிக்காவில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் தனது தொடக்க ஆட்டத்தில் 23ம் திகதி மே. தீவை எதிர்கொள்கிறது.

தென்ஆபிரிக்கா புறப்படுவதற்கு முன்பாக யூனுஸ்கான் கராச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது, நாங்கள் வூல்மரின் சொந்த ஊருக்கு (தென் ஆபிரிக்கா) போகிறோம். சம்பியன்ஸ் கோப்பையை வென்று அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என்று நம்புகிறேன்.

கடந்த 2006ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கோப்பை போட்டி இந்தியாவில் நடந்த போது வூல்மர் எங்களுடன் இருந்தார். அந்த போட்டியின் கடைசி நேரத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி அக்தர், முகமது ஆசிப் ஆகியோர் விளையாட முடியாமல் போனதால் வூல்மர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அந்த தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். அடுத்த இரு ஆட்டங்களில் தோல்வி கண்டோம். இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக இருந்தார்.

வூல்மர் மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய இழப்பு, இதனால் நாங்கள் இன்னும் வருத்தப்படுகிறோம். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மனைவி மற்றும் மகன்களுடன் நான் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி வருகிறேன்.  கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற போது அக் கோப்பையை வூல்மருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தோம்.  இந்த முறையும் கோப்பையை வென்று அவருக்கு சமர்ப்பிப்போம்.  ஏனெனில் இது அவர் வாழ்ந்த நாடு என்றார்.

அம்பாந்தோட்டையில் ஆ.அ.அட்டை நடமாடும் சேவை

தென்மாகாண சபைத் தேர்தலுக்கு அடையாள அட்டை கட்டாயமாகையால் அம்பாந்தோட்டையில் இதுவரை அடையாள அட்டை பெறாதவர்களுக்காக நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை நகர சபையும் ஆட்பதிவுத் திணைக் களமும் இணைந்து நாளை காலை 10.00 மணி முதல் அம்பாந்தோட்டை நகர சபை காரியாலயத்தில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்றை நடாத்தவுள்ளது.

இதில் இதுவரை அடையாள அட்டையை பெறாதவ ர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் கே.ஜீ.காமினி வேண்டு கோள்விடுத்தார்.

ஜனவரி 21, 22, 23,24 தேதிகளில் உலகத் தமிழ் மாநாடு – கருணாநிதி

karunanithi.jpgகோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாடு ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டின்போது உலகத் தமிழ் மாநாடு கோவையில் பிரமாண்டமான அளவில் நடத்தப்படும் என அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.

இதையடுத்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் – ஜனாதிபதி

190909mainpic.jpgஇலங் கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பெஸ்கோ நிவாரணக் கிராமங்களின் நிலவரம், வவுனியா மற்றும் வடக்கில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், கண்ணிவெடி, மிதிவெடி அகற்றல்,  மீள்குடியேற்றம் ஆகியவற்றை நேரில் அவதானித்ததன் பின்னர் அலரி மாளிகையில் ஜனாதிபதியை அவர் நேற்று சந்தித்தார்.

இதன்போது கண்ணிவெடி, மிதிவெடி அகற்றுவதில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இது தொடர்பில் மேலும் உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயாராகவுள்ளதென்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரே நாளில் சுமார் 2 இலட்சத்து 50,000 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததுடன் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதுடன் அவர்களின் சுகாதார நிலையை பேணுவதோடு மீளக் குடியேற்றப்படுவதுடன் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொண்டு அரசாங்கம் அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் தொடர்பாக சர்வதேச சமூகம் கரிசனை காட்டுவதாக ஐ. நா. பிரதி செயலர் குறிப்பிட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உதாரணமாக குரேஷியா யுத்தத்தின் 16 வருட நிறைவுக்கு பின்னரும் இன்னமும் கண்ணி வெடிகள் மிதி வெடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் ஆனால், இலங்கை அவ்வாறான நீண்டகாலத்தை எடுக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் இடம்பெயர்ந்தவர்களுள் 70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்று நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து வாழ விரும்புபவர்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். இதன்படி, சுமார் 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.  அவற்றை பரிசீலித்து குறித்த நபர்களை உறவினர்களிடம் பொறுப்பளிக்கவும், நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியே சென்று தொழில் புரிவதற்கு ஏதுவாக பகல்நேர அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த காலம் போல் அல்லாது தற்போது இராணுவத்தின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஐ. நா. சபை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்குவது நீதிமன்றத்துக்கு உட்பட்ட பொறுப்பேயன்றி அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல என்பதையும் பிரதிவாதி வழக்கில் தனக்குரிய தண்டனையை குறைத்துக்கொள்வதற்கு மனுவொன்றை தாக்கல் செய்யாத ஒரு குறையாகவே கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கிழக்கில் நெல் உற்பத்தி அதிகரிப்பு!

190909paddy.jpgநாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சுழலை அடுத்து கிழக்கு மாகாணத்தின் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. கிழக்கின் நெல் உற்பத்தி 37.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான நெல் உற்பத்தி கிட்டியுள்ளதாக அந்தத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் புரம்பாக குருணாகல்,  பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய  மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும் – ஐ.நா.சபை வேதனை

உலக ஏழை மக்களின் பட்டினியை போக்க ஐ. நா. சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபாய நிதிக்கு பட்ஜெட் போடப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து உள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக ஐ. நா. சபை வேதனை அடைந்து உள்ளது.

இது தொடர்பாக ஐ. நா. உலக உணவு திட்ட அலுவலகம் கூறி இருப்பதாவது, நாள் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிக அளவில் பாதித்து உள்ளது.

இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கு அல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 25வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. இவ்வாறு ஐ. நா. சபையின் உலக உணவுத் திட்ட அலுவலகம் அறிவித்து உள்ளது.

நாட்டுக்கு எதிராக சதியில் ஈடுபடும் தலைவர்களை அடையாளம் கண்டு மக்கள் பாடம் புகட்டுவர் – ஜனாதிபதி

slpr080909.jpgஎதிர்கால சந்ததியினருக்கு சுபிட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டுவது தாய்நாட்டின் மீது பற்றுள்ள அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் பிறந்து வளர்ந்து மரணிக்கின்ற தாய்நாட்டிற்கு எதிராக காட்டிக் கொடுப்புகளையும், சூழ்ச்சிகளையும் செய்வதையும் விடுத்து உலகின் பெருமையுடன் எழுந்து நிற்கக்கூடிய இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அனைத்து எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார்.

காலி மாவட்ட மகா சங்கத்தினர், மற்றும் இளைஞர் அமைப்புகளையும் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று முன்தினம் 17ஆம் திகதி இச்சந்திப்பு நடைபெற்றது.

எமது நாட்டைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி வெளிநாட்டினருடன் இணைந்து சூழ்ச்சிகளை செய்ய முற்படும் சகல தலைவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்துகொண்டு செயற்பட்ட சில தலைவர்கள் இன்று நாட்டில் சுதந்திரம் இல்லை எனக் கூறிக்கொண்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்வது நாட்டின் மீதுள்ளபற்றுடன்தானா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தென்பகுதியில் மட்டுமல்ல வட பகுதியிலுமுள்ள சிறுவர் சிறுமியர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்குடனேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறேன். 30 வருடங்களின் பின்னர் வடபகுதி சிறுவர், சிறுமியர் ஆயுதங்களைக் கைவிட்டு பாட புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் கல்விக்காகவும் தேவையான அனைத்து கல்வி வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

நாட்டுக்காக எந்த சவால்களையும் எந்தவிதமான சேறு பூசுதல்களுக்கும் முகம்கொடுக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான எதிர்க்கட்சித் தலைவரின் மூத்த சகோதரர் கூட எமக்கு ஊடக சுதந்திரம் இங்கு நன்கு பேணப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

வடமாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம். – வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்பு

190909images-sports-games.jpgவட மாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும் வகையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், வடமாகாண பிரதம செயலர் இளங்கோ உட்பட பிரமுகர்கள் துரையப்பா விளையாட்டரங்கு நுழைவாயிலிருந்து  மேள தாளங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், மாகாண கொடியை ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. முதலாவதாக 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிம்பிக் தீபத்தை வவுனியா, யாழ். மாணவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத் தக்கது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைபெறும் இவ்விளையாட்டுப் போட்டிகள், நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.