September

September

750 கிலோ கடல் அட்டைகளுடன் கல்பிட்டியில் இருவர் கைது – இந்தியாவிலிருந்து கடத்தல்

nimal_madiwaka.jpgஇந்தியா விலிருந்து சட்டவிரோத மாக கொண்டுவரப்பட்ட 750 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ள கல்பிட்டி பொலிஸார் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகளையே கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

¡ன் ஒன்றில் எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே பொலிஸார் இந்த கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :- 30 ஸ்ரீ 8818 என்ற இலக்கமுடைய வான் கல்பிட்டி, மங்டல துடாவ பிரதேசத்தில் வேகமாக சென்றுள்ளது. அதில் சந்தேகம் ஏற்பட்ட பொலிஸார் அதனை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அந்த வானில் ஏதோ பொதிகள் இருந்துள்ளதை அவதானித்த பொலிஸார் அதனை முழுமையாக சோதனையிட்டுள்ளனர். இதன்போது 20 பொலித்தீன் பொதிகளில் சுற்றப்பட்ட நிலையில் 750 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை மீட்டெடுத்துள்ளனர். இந்த கடல் அட்டைகள் எவ்வாறு கொண்டு வந்துள்ளனர் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ. டி. எச். பந்துசேன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் புதிய செயற்கை கோள்

210909flag.jpgதகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் புதிதாக ஒரு செயற்கை கோளை தயாரிக்கிறது. இதற்கு பக்சாட் – 1 ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை தயாரிக்க சீனா உதவி செய்கிறது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதன்படி சீனா பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர் உதவி செய்யும்.

பாகிஸ்தானின் விண்வெளி மையம், மற்றும் சீனாவின் நெடுஞ்சுவர் தொழிற் கூட்டமைப்பும் இணைந்து இந்த செயற்கை கோளை உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

இடம்பெயர் மக்களின் நடமாட்ட சுதந்திரத்துக்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் : அமெ. புதிய தூதுவர்

170909us_ambassado.jpgஇலங் கையின் வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நடமாட்ட சுதந்திரத்துக்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என்று இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக பொறுப்பேற்றுள்ள பற்றீசியா ஏ. பியூடெனிஸ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர். தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஜனாதிபதி ஒபாமாவின், அறிமுக நற்சான்றுக் கடிதத்தை ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கையளிக்கும் பெருமையும் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைத் தூதுவராக எனது பணிக்காலத்தை ஆரம்பிக்கும் பெருமையும் கடந்த வியாழக்கிழமை எனக்குக் கிட்டியது.

இலங்கை நாட்டைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அதன் கலாசாரப் பொக்கிஷங்கள் பலவற்றையும் இயற்கைப் பொக்கிஷங்களையும் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஐக்கிய அமெரிக்காவைப் பற்றிய உங்களுடைய தகவு நோக்குகள், எண்ணக் கருத்துக்கள் பற்றியும் இவ்விரு நாடுகளுக்கிடையில் நிலவும் தொடர்புகள் பற்றியும், கேட்டறிந்து கொள்வதற்கும் நான் ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன்.

ராஜதந்திர சேவையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள நான், முப்பதாண்டு காலத்தில் ஏறத்தாழ அரைப்பகுதியை தென் ஆசியாவில் கழித்திருக்கிறேன் என்ற வகையில், தென் ஆசியாவுக்கு மீண்டும் திரும்புவதையிட்டு தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது நாடுகள் முதன் முதலாக இராஜதந்திர உறவுகளை நிறுவிய கடந்த ஆறு தசாப்தங்களில், நமது உறவுகள், பல கூறுகளைக் கொண்டனவாகவும் பரஸ்பரம், நன்மை பயக்கும் தோழமையுடன் கூடியனவாகவும் இருந்து வந்துள்ளன. சர்வதேச அரங்கில், பெருந்தொகையில் மக்கள் அழிவை ஏற்படுத்தும் ஆயுதப் பரவல் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல் பற்றியும் கடல் மார்க்கங்களைப் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருத்தல் பற்றியும் நம் இரு நாடுகளும் அக்கறை கொண்டுள்ளன. வணிகத்திலும் வர்த்தகத்திலும் இலங்கைப் பொருட்களுக்கு, ஐக்கிய அமெரிக்காவே முன்னணி வகிக்கும் ஏற்றுமதிச் சந்தையாகத் திகழ்கின்றது.

அதேவேளை, அமெரிக்கப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் இலங்கை, ஒரு பிரதான சேரிடமாக அமைந்துள்ளது. இராணுவக் கூட்டுறவைப் பொறுத்தளவில், இலங்கை இராணுவத்தின் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள், ஐக்கிய அமெரிக்கப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களிலும் மாநாடுகளிலும் கல்விப் பரிமாற்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளனர். அபிவிருத்திக்கான உதவியை நோக்கும் போது, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களுக்காக, இரண்டு பில்லியனுக்கும் அதிகமான ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இவ்வருடத்தில் மட்டும், இலங்கையின் வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏழு பில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்குவதற்கு உதவியாகக் கொடுக்கப்பட்ட நிதியும் இதிலடங்கும். கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், ஐக்கிய அமெரிக்கக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்பதற்கு, வருடாந்தம் 2000இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்து கொள்கிறார்கள்.

அமெரிக்க அறிஞர்கள் பலரும் அமெரிக்க மாணவர்கள் பலரும், இலங்கையின் கலாசாரத்தைப் பற்றியும் மரபுகளைப் பற்றியும் கற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்கிறார்கள்.

கலாசாரத்தையும் கலைகளையும் எடுத்துக் கொண்டால், இடைவிடாது, அமெரிக்க, இலங்கைச் சமயத் தலைவர்களும் புலமை சார்ந்த சிறப்பறிஞர்களும் கலைஞர்களும், நம் இரு நாடுகளினதும் மரபுரிமைக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

உதாரணமாக, இலங்கைக்கு வந்த ஹென்றி ஸ்டீல் ஒல்கொட், இத்தீவில் பல பௌத்த பாடசாலைகளை நிறுவினார். இவற்றுட் பல இன்னமும் இயங்கி வருகின்றன. இவ்வுறவுகளை விரிவுபடுத்தி ஆழமாக்குவதற்காக உழைப்பதே என் கடமையும் விருப்பமுமாகும்.

வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நேரத்திலும் பெரும் சந்தர்ப்பம் நிலவும் நேரத்திலும், நான் உங்கள் நாட்டிற்கு வந்திருக்கிறேன். ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாகப் போர் இலங்கையை அழித்தது. இந்நாட்டில் வாழும் மக்களுள் ஏறத்தாழ அரைவாசிப்பேர், இம் மோதலுக்கு முற்பட்ட காலத்தை நினைவுபடுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு இளையோராக இருக்கிறார்கள். மோதலின் முடிவை, ஐக்கிய அமெரிக்கா வரவேற்கின்றது.

1997 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய அமெரிக்கா, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பொருள் உதவி வழங்கியோரைப் பற்றிப் புலனாய்வு செய்து, வெற்றிகரமாக தண்டனை வழங்கியுள்ளது.

இராணுவ மோதல் முடிவுக்கு வந்த பின்னர், நீண்ட செயன்முறையாகிய இணக்கப்பாடு ஆரம்பமாகின்றது. நாடு முழுவதிலும், மக்களுக்கிடையிலும் எவ்வாறு நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையையும் ஏற்படுத்தலாம் என்பதை இலங்கை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கான வழியை வேறு எவரும் அமைத்துக் கொடுக்க முடியாது.

இப்பதவியில் முன்னர் இருந்தவர்களைப் போல, நமது ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கு நான் செயலார்வத்துடன் முயற்சி செய்வேன். அவர்களைப் போலவே, ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் மூலமாக எப்பொழுதுமே அமைந்திருந்த சில அடிப்படைத் தத்துவங்களை நானும் கடைப்பிடித்து நடப்பேன்.

மனித உரிமைகளை முன்னேற்றுதல் நமது முக்கியமான, உலகளாவிய அக்கறைகளுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்கா உட்பட, எந்தவொரு நாடுமே, மனித உரிமைகளைக் காத்தல் தொடர்பாக முழுமையான பதிவைக் கொண்டதாக இல்லை. நாங்களும் விமர்சிக்கப்பட்டிருக்கிறோம் எனினும் நமது சொந்தக் குறைபாடுகளை அணுகுவதற்கு முயலும் அதேவேளை, உலகம் முழுவதிலும் வாழும் மக்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரங்களுக்காகவும் செயற்பட வேண்டியது நமது பொறுப்பென்று நாம் நம்புகின்றோம்.

எனவே, இலங்கையில், வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நடமாட்டச் சுதந்திரத்திற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் என்பதே இதன் கருத்தாகும். இந்த இலங்கைப் பிரஜைகள், பல தசாப்தங்களாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடுங்கோன்மையின் கீழ் இன்னல்பட்டுள்ளார்கள்.  புதிய இலங்கையில் தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. அவர்கள், அவ்வாறு செய்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டுமென்று நாம் தூண்டுகின்றோம்.

ஊக்கமும் ஆக்கமும் உள்ளதும் சுதந்திரமானதுமான ஊடகம், ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சங்களுள் ஒன்றாகும். மாறுபட்ட கருத்துக்கள் செவிமடுக்கப்பட வேண்டும். சகித்துக் கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களை அடக்குபவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள் முழு நாட்டிற்கும் கேடு விளைவிப்போராவர். நீண்ட வரலாற்றுடன் கூடிய நமது தொடர்பு, வளர்வதற்கும் விரிவடைவதற்கும் உள்ளார்ந்த பெரும் சாத்தியப்பாடு உண்டு. இதை யதார்த்தமாக்குவதற்காக எனது பதவிக்காலத்தில் மக்களோடும் அரசாங்கத்தோடும் சேர்ந்து உழைப்பதற்கும் நான் காத்திருக்கின்றேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்

அனைத்துத் தமிழர்களுக்கும் நியாயமான உரிமைகள் கிடைக்கட்டும் : நோன்பு பெருநாள் செய்தியில் சந்திரகாந்தன்

210909pillayan.jpg“தமிழ்ப் பேசும் அனைத்து மக்களுக்கும் நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப் பெற பிரார்த்திப்போம்” என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்துள்ள புனித ரம்ழான் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில்,  “ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

இப்பண்டிகையானது வெறும் சடங்காகவோ கேளிக்கையாகவோ அல்லாமல் பல தத்துவங்களையும் மனிதனின் சுபீட்சமான எழுச்சிக்கான வழிகாட்டுதல்களையும் எடுத்துக் காட்டுவதாக இருப்பதை நான் காண்கின்றேன். முப்பது நாட்கள் ஆகாரமின்றி, ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள், இதன் மூலம் மிகப்பெரும் யதார்த்தமான தத்துவத்தை எடுத்து இயம்புகின்றனர்.

மனதை ஒருமைப்படுத்துவது இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுவதாகும். இதன் மூலம் பிறரை மதித்தல், பிறருக்கான உரிமைகளை வழங்குதல், மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடன் பழகுதல் போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன.  இவ்வாறான தத்துவங்களும். குணாதிசயங்களுமே இன்று எல்லோருக்கும் தேவைப்படுகின்றன. மதங்கள் அனைத்துமே மனிதனின் மனங்களை ஒருநிலைப்படுத்தி நல்வாழ்வுக்காக வழிகாட்டுகின்றன.

ஆனால் துரதிஷ்டவசமாக எல்லா மதங்களிலும் மத விழுமியங்களை துறந்து தமது சுகபோகங்களுக்கும் அளவுகடந்த ஆசைகளுக்கும் மற்றவர்களை துன்பப்படுத்தி, காயப்படுத்தி வாழ்பவர்கள் உள்ளனர்.  எமது நாட்டை பொறுத்தளவில் பல்லின பல கலாசார பரம்பரை கொண்டவர்களே வாழ்கின்றனர். இச்சூழலில் நாம் எமது மத விழுமியங்களையும் சகோதர மதங்கள் கூறும் நல்லொழுக்கங்களையும் கடைப்பிடிப்போமானால், பிரச்சினைகள் என்பது எம்மை எள்ளளவும் நெருங்க மாட்டாது.

அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது உடைமைகளை, உறவுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  இம்மக்களின் வாழ்வில், நிம்மதியும் மகிழ்ச்சியும் விரைவில் கிடைக்கப் பெற இந்நன்நாளில் அனைவரும் பிரார்த்திப்போம். எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு அடிகோலாகத் திகழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப்பெற வழிகள் பிறக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும். அது இந்தியாவிலா? இலங்கையிலா? – சீமான்

seeman-prabhakaran.jpg“நாம் தமிழர்” இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான். தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார்.  இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார். அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை என்பதைக்கூட நாலு சுவற்றுக்குள் இருந்துகொண்டுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றபோது ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்திற்கு தடை விதித்தார்கள்.  ஆனால் அந்த இயக்கத்தை ஆதரித்து பேச தடை விதிக்கவில்லை. அந்த தடையையும் 16 மாதற்குள் நீக்கிவிட்டார்கள்.  20 வருடங்களாக தமிழ் சாதிக்கு மட்டும் ஏன் தடை? இதற்காக குரல் கொடுத்தால் நமக்காகத்தான் கட்டப்பட்டிருக்கிறது சிறைச்சாலைகள். நான் சிறையை நிரப்பினால்தான் சிறை பணியாளர்கள் வயிறை நிரப்ப முடியும். 

தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை வாக்கெடுப்பு நடத்தினால் தெரிந்துவிடும்.  ஆனால் இந்திய அரசாங்கம் அதை செய்யாது.  ஏன் தெரியுமா?வாக்கெடுப்பு நடத்தினால் 61\2 கோடி தமிழர்களும் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வார்கள்.  அதனால் வாக்கெடுப்பு நடத்த மாட்டார்கள். ஆனாலும் நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும்.  அது இந்தியாவிலா? இலங்கையிலா? இந்திய அரசாங்கமே உடனே அறிவித்திடு’’ என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான் பேசினார்.

கடைசி ஆட்டத்தில் மானம்காத்த இங்கிலாந்து

200909eng-cr-team.bmpஇங்கி லாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான  7 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில்  அவுஸ்திரேலியா முதல் 6 போட்டிகளிலும்  வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் இன்று நடைபெற்ற 7 வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தனது மானத்தை ஓரளவு காத்துக்கொண்டது.

இந்த தோல்வியின் மூலம் அவுஸ்திரேலியா 7 போட்டி கொண்ட தொடரில் 6-1 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 1-2 என தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வவைத்து வந்தமை தெரிந்ததே.

Australia 176 (45.5 ov)
England 177/6 (40.0 ov)
England won by 4 wickets (with 60 balls remaining)
NatWest Series [Australia in England] – 7th ODI

Played at Riverside Ground, Chester-le-Street
20 September 2009 (50-over match)
       
 Australia innings (50 overs maximum)
 SR Watson  c Swann b Anderson  0
 TD Paine†  c †Prior b Onions  4 
 RT Ponting*  c Collingwood b Swann  53 
 MJ Clarke  run out (Morgan/Collingwood)  38 
 MEK Hussey  c Denly b Bresnan  49 
 CL White  b Swann  1
 JR Hopes  c & b Swann  11 
 MG Johnson  c Anderson b Swann  10 
 NM Hauritz  c & b Shah  3
 B Lee  b Swann  0 
 BW Hilfenhaus  not out  2
 Extras (lb 1, w 4) 5     
      
Total (all out; 45.5 overs) 176 (3.84 runs per over)

Fall of wickets1-0 (Watson, 0.4 ov), 2-17 (Paine, 3.4 ov), 3-96 (Ponting, 24.5 ov), 4-110 (Clarke, 27.6 ov), 5-112 (White, 28.5 ov), 6-138 (Hopes, 36.3 ov), 7-158 (Johnson, 40.4 ov), 8-158 (Lee, 40.6 ov), 9-163 (Hauritz, 43.1 ov), 10-176 (Hussey, 45.5 ov) 
        
 Bowling
 JM Anderson 7 0 36 1
 G Onions 9 1 28 1
 TT Bresnan 6.5 0 25 1
 PD Collingwood 7 0 37 0
 GP Swann 10 1 28 5
 RS Bopara 1 0 7 0 
 OA Shah 5 1 14 1

England innings (target: 177 runs from 50 overs)
 AJ Strauss*  c Hilfenhaus b Hauritz  47 
 JL Denly  run out (†Paine/Ponting)  53 
 RS Bopara  lbw b Watson  13 
 OA Shah  c †Paine b Hopes  7
 PD Collingwood  not out  13
 EJG Morgan  c †Paine b Lee  2
 MJ Prior†  c Ponting b Hilfenhaus  11
 TT Bresnan  not out  10  
 Extras (b 4, lb 2, w 6, nb 9) 21     
      
Total (6 wickets; 40 overs) 177 (4.42 runs per over)
Did not bat GP Swann, JM Anderson, G Onions 
Fall of wickets1-106 (Strauss, 20.4 ov), 2-129 (Denly, 27.1 ov), 3-133 (Bopara, 28.6 ov), 4-137 (Shah, 29.2 ov), 5-141 (Morgan, 31.4 ov), 6-162 (Prior, 36.2 ov) 
        
 Bowling O M R W Econ  
 B Lee 10 3 33 1 
 BW Hilfenhaus 6 1 38 1
 MG Johnson 5 0 29 0  
 NM Hauritz 8 0 30 1
 JR Hopes 6 1 29 1
 SR Watson 5 0 12 1 

Match details
Toss England, who chose to field
Series Australia won the 7-match series 6-1

முதல்வர்கள் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவும் முடிவு

மாகாண சபைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதிகளைப் பெற்றுக் கொள்வதுடன் சில விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். மாகாண முதலமைச்சர்களின் 26வது மாநாடு நேற்று (19) ஆம் திகதி ஹபரன விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாநாடு நடைபெற்ற ஹோட்டல் முன்பாக ஏழு மாகாண சபைகளின் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. மாகாண சபையின் பிரதான செயலாளர்கள், திறைசேரி மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

விவசாயத்துறை, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவ் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்குத் தேவையான கூடுதலான நிதியைப் பெறுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக 13ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அமைச்சின்அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் “நாம் பயிர் வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம்” தேசிய வேலைத் திட்டம் ஊடாக விவசாயிகளின் பொருளாதார துறையை முன்னேற்றுவதற்கு மாகாண சபைகள் முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

சமூக சேவைத் திணைக்களத்தின் மூலம் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கும் மாகாண சபையின் கீழுள்ள குளங்களை புனரமைப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மாகாண சபையின் கீழுள்ள வீதிகள் புனரமைப்பில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான ஆயுர்வேத மத் திய மருந்தகங்களை மீள வடமத்திய மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனோடு பேசியுள்ள தாகவும் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். இறுதியாக 27 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டை வடமேல் மகாணத்தில் நடத்துவதற்கும் அதன் தலைவர் பொறுப்பை மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்கவுக்கு வழங்கவும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை தமிழர்களை காக்க கோரி பல நகரங்களில் கிறிஸ்தவர் ஊர்வலம்

200909.jpgஇலங்கையில் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை தங்கள் பூர்வீக இடங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 17 மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் பேரவை சார்பில் நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது.

நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – அமைச்சர் டியூ குணசேகர

200909-deu.jpgதற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது.  அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல என்று அரசியல் யாப்பு விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ குணசேகர தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கியிருந்த நேர்காணலில்.தெரிவித்திருந்தார்
 

கேள்வி : நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை எப்படியிருக்கிறது?

பதில் : முப்பது வருடகால பயங்கரவாதம், 30 வருட கால யுத்தம் நாட்டின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை மாற்றியமைப்பதே இப்போதைய தேவையாக உள்ளது. இரண்டாவதாக 1977 காலப் பகுதியில் ஆரம்பித்த திறந்த பொருளாதாரக் கொள்கையானது 2006இல் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பொருளாதார வழிமுறைகளில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் சரிவு நிலை ஏற்பட்டிருப்பினும் கூட எமது தேசிய உற்பத்திகளைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.

விசேடமாக தேசிய உற்பத்தியை கிராமிய, மாகாண மட்டத்தில் அதிகரிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சிறந்த முறையில் செயற்படுவதற்கு ஏதுவாய் அமைந்தது. தேசிய உற்பத்தியில் 50 சதவீத அதிகரிப்பை மேல் மாகாணமும், 2.9 வீதம் வட மாகாணமும், கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்கள் 4 சதவீத அதிகரிப்பையும் காட்டுகின்றன. இதேவேளையில் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற பொதுத் தேர்தல், மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள் இவற்றின் பெறுபேறுகளிலேயே தங்கியிருக்கின்றன.

கேள்வி : யுத்தத்தின் பின்னரான சமாதான முன்னெடுப்புக்கள் பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் : தற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது.

அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல. வேறு நாடுகளில் அகதிகளைப் பராமரிப்பதில் நிலவும் பிரச்சினைகளைப்போல நமது நாட்டில் இல்லை. அமெரிக்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். சிறிய தீவான எமது நாட்டில் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை நிவாரணக் கிராமங்களில் வைத்து பராமரிப்பதென்பது சாதாரண விடயமல்ல.

முதலில் மக்கள் மீளக்கூடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் பிரதான பாதைகள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். அப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சிறந்த போக்குவரத்து வசதிகள் இருந்தால்தான் அப்பகுதிகள் பொரு ளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

அடுத்த கட்டமாக அப்பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்க்கூடியதொரு நிலைமை ஏற்படும். மன்னார் மாவட்டத்தில் 45 பொலிஸ் நிலையங்கள் இருந்தன. அவற்றில் பல முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளில் பொலிஸார் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும். படிப்படியாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் தனியொரு அமைச்சினால் மட்டும் செய்துவிட முடியாது. அனைத்து அமைச்சுக்களினதும் முழு ஒத்துழைப்புடனேயே இவ்வாறான பணிகளைச் செய்ய முடியும். வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. அடையாள அட்டை இல்லாமல் அவர்களால் எந்தவொரு தேவையையும் பூர்த்திசெய்துகொள்ள முடியாது. இவ்வாறு பிரச்சினைகள் அதிகம்.

கேள்வி : பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி?

பதில் : இது ஒன்றும் புதிய விடயமல்ல: 1987ம் ஆண்டிலிருந்து இன்றுவரை செயற்படும் மாகாண சபை முறை 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக ஏற்று சட்ட ரீதியாக செயற்படுத்துவது 13ஆவது திருத்தத்தின் கீழ் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆயினும் கடந்த 20 வருடங்களாக தமிழ் மொழியை அமுலாக்க முடியாது போய்விட்டது. தற்போதைய ஜனாதிபதி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழியை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

அதற்கமைய நான் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள், பிரத்தியேக முயற்சிகள் ஆகியன காரணமாகவும் அதனை முன்னெடுக்க ஜனாதிபதி அவர்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பின் காரணமாகவும் தமிழ் மொழியை அரச கரும மொழியாக முழு அளவில் முன்னெடுக்க அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ் மொழியை அரச கரும மொழியாக முன்னெடுப்பதற்கான அரசியல் தடைகள் முற்றாக நீங்கியுள்ளன.

எனினும் தமிழ் மொழியை அரச திணைக்களங்களில் உரிய முறையில் அமுல்படுத்துவதற்கேற்ற ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது. இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தாய்மொழி தமிழாக இருப்பின் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைக் கற்றிருத்தல் அவசியமாகும். அதுபோல் தாய் மொழி சிங்களமாக இருப்பின் இரண்டாம் மொழியாக தமிழ் மொழியை கற்றிருத்தல் அவசியமாகும். அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் உயர் அதிகாரிகள் மட்டத்திலிருந்து சாதாரண ஊழியர்கள் வரையிலானோர் இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியம் குறித்துக் கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.

2007 ஜுலை முதலாம் திகதியிலிருந்து அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் அனைவரும் இரண்டாம் மொழியை கற்றிருக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் சம்பள அதிகரிப்புப் பெற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது அரச திணைக்களங்களில் இரண்டாம் மொழி தொடர்பாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தெற்கே சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் கற்பிக்கும் அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரச உத்தயோகத்தர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பதினான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தெற்கில் சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் அதேவிதமான பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பான்மை சமூகம் முங்கொடுக்கிறது. இதுவே கள யதார்த்தமாகும்.

இந்த வாரம் தொடக்கம் அனைத்து அரச நிறுவனங்களிலும் மொழி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க செயலாளர் மட்டத்திலான அதிகாரியொருவர் நியமிக்கப்படவுள்ளார். அந்தந்த அரச நிறுவனங்களில் அரசகரும மொழித் திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு அவரையே சாரும். நமது நாட்டில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் இருக்கின்றனர். இதுவொரு அரசியல் தீர்வுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான செயலாக அமையும்.

கேள்வி : எப்போதும் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்து வரும் தெற்கில் உள்ள அரசியல் தடைகளை எவ்வாறு சமாளிக்கப் போகிறீர்கள்?

பதில் : அதற்கு நாம் கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். எமது அரசியல் பிரச்சினைகளை இதுவரை தீர்க்க முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் சிறுபான்மையினர் அல்ல என்பதையும் இவ்விடத்தில் கூற வேண்டும். இதுவரை காலமும் நாட்டை ஆண்டுவந்த பிரதான இரு அரசியல் கட்சிகளுக்கிடையே இது தொடர்பில் ஒரு இணக்கம் ஏற்படாமை இதற்கு முக்கிய காரணமாகும்.

தேசியப் பிரச்சினை தொடர்பாக மொழி, மதம், இனம் ஆகிய விடயங்களில் ஒரு இணக்கம் ஏற்படத் தவறியமையும் முக்கிய காரணமாகும். அனைத்துக் கட்சிகளின் மாநாட்டை ஜனாதிபதி கூட்டுவதற்கான காரணம் இந்தப் பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கேயாகும். இவ்விடத்தில் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் குறைந்த பட்ச இணக்கப்பாட்டுக்காவது வரவேண்டும்.

கேள்வி : இதற்கு பதின்மூன்றாவது திருத்தம் எந்த வகையில் உதவியாக அமையும்?

பதில் : பதின்மூன்றாவது திருத்தம் புதிய விடயமல்ல. நமது அரசியல் யாப்பின் ஓர் அங்கமாகவே இருக்கிறது. அதனைக் கொண்டுவருவதற்கான முக்கிய நோக்கமே வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதாகும். ஆனால் கடந்த 17 வருடகாலமாக அம் மாகாணங்கள் தவிர்ந்த வேறு மாகாணங்களில் அது செயற்பட்டு வருகிறது. யுத்தத்தின் பின்னர் கிழக்கில் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல், பின்னர் மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் கிழக்கு மாகாண சபை இயங்கி வருகிறது.

வடக்கில் ஏற்கனவே நான் கூறியதுபோன்று அனைத்து விடயங்களையும் கட்டம் கட்டமாகவே செய்ய வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு நிர்வாகம் தொடர்பான ஐயப்பாடு தெற்கில் இருக்கிறது. முக்கியமாக காணி, பொலிஸ் ஆகிய விடயங்களில் அதிகாரம் தொடர்பான பீதி அர்த்தமற்ற ஒன்றாகும். வடக்கு, கிழக்கில் சிறு தொகை காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் தனிநபர்களுக்குச் சொந்தமானதாகும். அப்பிரதேசங்களில் சொற்ப அளவிலான நிலங்களே அரசுக்கு சொந்தமானதாகும்.

கேள்வி : 13ஆவது திருத்தம் தொடர்பில் அரச தரப்பினருக்கிடையே ஒருமித்த கருத்தை எட்டமுடியாதுள்ளதே?

பதில் : ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய, விமல் குழு இவர்கள்தான் 13ஆவது திருத்தம் தொடர்பான எதிர்ப்பை முன்வைக்கின்றனர். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் அதனைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மொழிப் பிரச்சினை தொடர்பான எதிர்ப்பைச் சமாளித்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது போன்று இதனையும் தீர்த்துக்கொள்ள முடியுமென்றே நான் கருதுகிறேன்.

கேள்வி : இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென கருதுகிறீர்கள்?

பதில் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நாம் 88, 89 களில் இருந்தது போன்ற நிலையிலேயே இருந்து வந்தனர். அவர்களால் சுயாதீனமாக செயல்பட முடியாமல் இருந்தது. கடந்த காலங்களில் நிலவிய யதார்த்த நிலை அது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இந்நிலையில் அவர்களின் செயற்பாடுகளும் மாற வேண்டும். நிச்சயம் மாறும் என்றே நானும் கருதுகிறேன். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் அந்த மாற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்து புலிகளை ஏசுவதையோ, விமர்சிப்பதையோ விடுத்து அவர்களைச் சுயமாகச் செயற்பட விடுவதே சிறந்தது. அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரையில் அவர்கள் அப்பகுதி மக்களால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். அவர்கள் உண்மையான பிரதிநிதிகளா இல்லையா என்ப தையும் அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். அது வரையில் அவர்களை அப்பிரதேச ஜனநாயக பிரதிநிதிகளாக ஏற்றுச் செயற்பட வேண்டும்.

கேள்வி : இடதுசாரிக் கட்சிகளின் செயற்பாடுகள் எப்படியிருக்கின்றன?

பதில் : வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஐந்து இடதுசாரிக் கட்சிகள் எப்போதும் இணைந்தே செயற்பட்டு வருகிறோம். எதிர்காலத்தில் கூட்டமைப்பாக செயற்படுவது பற்றிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஒருவர் இன்னொருவரின் மனம் புண்படாதவாறு செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.

கேள்வி : வடபகுதி மக்களின் மனங்களைத் தெற்கு எவ்வாறு வெற்றிகொள்ளலாம்?

பதில் : வடக்கில் அகதிகளாக இருக்கும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டிவரும் தெற்கு மக்களின் கரிசனையிலிருந்தே மக்களின் மனங்களை வென்று பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமை சந்தோஷத்திற்குரியதாக இருப்பினும் அளவுக்கு மிஞ்சி அதைத் தூக்கிப்பிடிக்காமல் ஏற்பட்டிருக்கும் சுமுக நிலையை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

முப்பது வருட காலமாக இடம்பெறாத சுமுக அரசியல் நிலையை ஏற்படுத்தி அதற்கான களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசு, பொது மக்கள், சமூகக் குழுக்கள், அரசியல் வாதிகள் உட்பட அனைவருமே இதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

நேர்கண்டவர் : பி. வீரசிங்கம்

13வது திருத்த சட்டத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இருந்தபோதும் பல்வேறு தடைகள்

cheif_ministers_meeting.pngஅரசியல மைப்பின் 13வது திருத்த சட்டத் தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதி காரங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அவற்றை செயற்படுத்தும் போது பல்வேறு தடைகள் ஏற்பட்டு உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார்.

மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நேற்று (19 ஆம் திகதி) ஹபரண விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, கிழக்கு ஆகிய ஏழு மாகாண சபைகளினதும் முதல மைச்சர்கள் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து உரைநிகழ்த்திய மாகாண முதலமைச்சர்: மாகாண சபைகள் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனாலும் மத்திய அரசாங்கத்தினால் அதற்குத் தேவையான நிதி வழங்கப்படா மையினால் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது. இவ்விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்ல ப்பட்டுள்ளது. அவற்றைத் தீர்ப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி சம்பந்தமான அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. காணி சம்பந்தமான அதிகார ங்களில் சில பிரச்சினைகள் உள்ளன. பொலிஸ் அதிகாரம் பற்றி தற்போது எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.