2009

2009

பொரு. நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க ஆசியாவில் இணைந்த செயற்பாடு அவசியம் – அமைச்சர் போகொல்லாகம

rohitha-bogollagama_s.jpgமீண்டும் ஒரு பொருளாதார நிதி நெருக்கடி தலைதூக்காமலிருக்க ஆசிய நாடுகளின் இணைந்த செயற்பாடு கள் அவசியமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லா கம தெரிவித்தார்.

உலகின் 70 சதவீத வெளிநாட்டு நாணய மாற்று ஒதுக்கத்தைக் கொண்டுள்ள ஆசியா 2030ம் ஆண்டளவில் அபிவி ருத்தியடைந்து உள்நாட்டு உற்பத்தியில் 50 வீதத்தை விஞ்சியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான இணைந்த செயற்பாடுகள் அவசியமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச பயங்கரவாதம் நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் ஒரு பொது அச்சுறுத்தலாகியுள்ளது. உலக நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் அதனை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய செயற்பாடுகள் அவசியம் என்பதையும் அமைச்சர் வலி யுறுத்தினார்.

ஆசிய ஒத்துழைப்பு உரையாடலுக்கான அமைச்சரவை மாநாட்டில் ஆரம்ப உரையை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் போகொல்லாகம தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் அமைப்பின் நாடுகள் உலகின் மூன்றில் இரண்டு மனித வளத்தைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களாகிய எரிபொருள், நிலக்கரி, வாயு, அலுமினியம், செம்பு மற்றும் சுரங்க தாதுப் பொருட்களையும் கொண்டுள்ளன. இது அங்கத்துவ நாடுகளின் பொருளாதார ஆற்றல் திறனை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. இவை ஆசிய நாடுகளுக்கான சிறந்த பொருளாதார வாய்ப்பைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை தொடர்பாடல் போதாமை கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும். பெளதிக, உள்ளக கட்டமைப்பு, இலத்திரனியல் தொலைத் தொடர்புத் துறைகளின் மேம்பாடுகள் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.

கடந்த நூற்றாண்டில் ஆசிய பிராந்தியம் அபிவிருத்தியில் பின்னடைந்து காணப் படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் பொருளாதார வளர்ச்சிபெற வேண்டுமெனில் விரிவானதும் மேம்பாடு மிக்கதுமான வர்த்தகம், முதலீடுகள் மற்றும் கூட்டு வர்த்தக முயற்சிகளில் உச்ச அளவில் கரிசனை செலுத்துவது அவசியமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2000 பேர் சொந்த இடங்கள் அனுப்பிவைப்பு

chals_.jpgநிவாரணக் கிராமங்களிலிருந்து மக் களை படிப்படியாக சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையின் கீழ் நேற்றும் 2000 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். நிவாரணக் கிராமங்களிலிருந்து மக்களை படிப்படியாக சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையின் கீழ் நேற்றும் 2000 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

35 பஸ் வண்டிகளில் நேற்றுக் காலை முதல், கட்டம் கட்டமாக இவர்கள் யாழ். நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்களது உடைமைகள் அனைத்தும் 15 லொறிகளில் ஏற்றப்பட்டு பஸ் வண்டிகளுடனேயே அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். நேற்று முன் தினம் அனுப்பப்பட்ட 3220 பேருக்கும், நேற்று அனுப்பப்பட்ட 2000 பேருக்கும் தேவையான உலர் உணவுப் பொருட்கள் என்பனவும் வழ ங்கப்பட்டன.

பயங்கரவாத இருள் நீங்கி சமாதான ஒளி பிறக்கட்டும் – ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

121009.jpgதீபத் திருநாளான இத்தீபாவளித் திருநாள் எமது நாட்டிலிருந்து பயங்கரவாத இருளைப் போக்கி சமாதான ஒளியேற்ற வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேனென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடைமையையும் வெற்றிகொள்வதைக் குறிப்பதாக அமைகிறது.

உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்து மதத்தின் மிக உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களுக்கு ஏற்ப ஒரு சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான உண்மையான போராட்டத்தில் மானிடர்கள் பெற்ற முன்னேற்றத்தையும் குறித்து நிற்கின்றது. இந்தவகையில், இது மக்களின் ஆன்மீக சுபீட்சத்தின் ஒரு கொண்டாட்டமாகவும் உள்ளது.

இன்று எமது மக்கள் இந்தீபத் திருநாளை அவர்களை மிக நீண்டகாலமாகப் பிரித்து வைத்திருந்த இன, மத, மற்றும் ஏனைய எல்லா வேறுபாடுகளையும் மறந்து அவர்கள் மத்தியில் அன்பையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் ஐக்கிய உணர்வுடன் கொண்டாட முடிந்துள்ளது.

இலங்கை வாழ் இந்துக்கள் மகிழ்ச்சி பொங்கும் இத்தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சியில் உலகெங்கிலும் வாழும் தமது இந்து சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றனர். இந்து சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு சிரமங்களையும் கடந்த காலத்தோடு மறந்து தங்களது சொந்த வீடுகளில் அமைதி, அன்பு, சுபீட்சத்தோடு வாழமுடியுமானதொரு புதியதோர் யுகத்தில் நாம் இன்று இருக்கின்றோம்.

தேர்வுக் குழுவினரின் எதிர்ப்பையும் மீறி ஒபாமாவுக்கு நோபல் பரிசு – நோர்வே பத்திரிகை தகவல்

Alfred_Nobelதேர்வுக் குழுவின் பெரும்பான்மை எதிர்ப்பையும் மீறி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக நோர்வே பத்திரிகை தகவல் வெளியிட்டு இருக்கிறது.

2009ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடந்த வாரம் வழங்குவதாக நோபல் பரிசு குழு அறிவித்தது. நோர்வே பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு நோபல் பரிசுக்கு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது.

நோபல் பரிசுக்கு, ஒபாமாவின் தேர்வு ஒரு மனதான முடிவு என்று தேர்வுக்குழுவின் செயலாளர் கெர் லுன்டெஸ்டாட் அப் போது கூறினார். எனினும், ஜனாதிபதி பதவி ஏற்று 9 மாதங்கள் கூட முழுமை யடையாத நிலையில் ஒபாமா நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது, சர்ச்சையை உருவாக்கியது. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நோபல் பரிசு குழு வின் பெரும்பான்மை உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி ஒபாமாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

நோர்வேயில் இருந்து வெளிவரும் வெர்டென்ஸ் காங்க் என்னும் பத்திரிகை இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இது குறித்து அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது, நோபல் பரிசு தேர்வுக்குழு (ஐவர் குழு) உறுப்பினர்கள் பெரும்பான்மையானோரிடம் வெர்டென்ஸ் காங்க் தொடர்பு கொண்டு கருத்து கேட்டது. இந்த உறுப்பனர்கள் முதலில் உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஒபா மாவை தேர்வு செய்வதை விரும்பவில்லை.

தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னேற்ற கட்சி என்ற இடது சாரி கட் சியை சேர்ந்த இங்கெர்-மேரி யெட்டர்ஹார்ன் என்ற பெண் தலைவர்தான் முதன் முதலில் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கக் கூடாது என்று எதிர்த்தவர்.  ஒபாமா, தான் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றினாரா? என்பதை தெரிந்து கொள்ளும் முன்பாகவே நோபல் பரிசு வழங்குவது குறித்து அவர் கேள்வி எழுப்பியும் இருக்கிறார்.

எனினும், நோபல் பரிசு தேர்வுக்குழுவின் தலைவர் தோர்ப்ஜோயர்ன் ஜாக்லாண்ட், சிஸெல் ரோயன் பெக் இருவரும் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தீவிரமாக சிபாரிசு செய்தனர். இவர்கள் இருவரும் தொழிலாளர் கட்சியின் பிரதிநிதிகள் ஆவர். தேர்வுக் குழுவின் தலைவரே தீவிர ஆதரவு தெரிவித்ததால் முடிவில் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்குவதென தீர்மா னிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

படையினருக்கு இடர்காலக்கடன் கொடுப்பனவாக ரூ. 700 மில்லியன்

படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.படையினர் கோரியிருந்த இடர்காலக் கடன்களுக்கென 700 மில்லியன் ரூபாவை உடனடியாக இலங்கை இராணுவத்துக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது என பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வன்னி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டபோது அங்குள்ள படைவீரர்கள், தாம் கோரியிருந்த இடர்கால கடன் (10 மாத கொடுப்பனவு) இதுவரை கிடைக்க வில்லை என இராணுவத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சுமார் 900 க்கும் அதிகமான விண்ண ப்பங்கள் இராணுவ தலைமையகத்துக்கு கிடைத்திருந்தபோதும் நிதி பற்றாக்குறை காரணமாக உடனடியாக இக் கடனை வழங்க முடியாமல் போனது. இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி ஜனாதி பதியுடனும், பாதுகாப்பு செயலாளருடனும் பேச்சு நடத்தியதன் பயனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 700 மில்லியன் ரூபா வை உடனடியாக வழங்குமாறு திறைசேரிக்கு பணிப்புரை வழங்கினார். தற்போது திறைசேரி 700 மில்லியன் ரூபாவை இராணுவத்துக்கு வழங்கியுள்ளதுடன் இடர்காலக் கடன்கள் தற்போது வழங்கப்பட்டும் வருகிறது என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நற்சிந்தனை கொண்ட சிறந்த மக்கள் சமூகமொன்றை உருவாக்குவோம் – தீபாவளி வாழ்த்தில் பிரதமர்

171009rathnasiri.jpgவெற்றி கொண்ட சுதந்திரத்தை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கு மனிதத்துவத்தை மதித்து, நல்ல சிந்தனைகளைக் கொண்ட சிறந்த மக்கள் சமூமொன்றை உருவாக்குவது அவசியம். அதற்கு இத்தீபாவளித் திருநாள் வழி வகுக்குமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளை முன்னிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளித் திருநாள் சுபீட்சமான மனித வாழ்வின் மகத்துவத்தை சமூகத்துக்கு எடுத்துக் காட்டும் பண்டிகையாகும்.

அநீதியைத் தோற்கடித்து நீதியை வெற்றிபெறச் செய்யும் இறைசிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தீபங்களை ஏற்றும் இத்தீபாவளித்திருநாள் இருளை வென்று மனித மனங்களில் பரந்த சிந்தனை எனும் ஒளியை உருவாக்கும் பெறுமதியை உலகுக்கு உணர்த்துகிறது. தீயவர்களுடைய செயற்பாடுகளினால் எமது சமூகம் 30 வருடகாலமாக பீடனைகளுடன் கழித்த காலங்களை நாம் மறந்துவிட முடியாது. தற்போது புதுயுகமொன்று உருவாகியுள்ளது.

நற்குணம் படைத்த மனிதர்களினால் இலங்கைத் திருநாடு நிரம்ப வேண்டும். அதற்கு இத்திருநாள் வழிவகுக்கட்டும் என வாழ்த்துவதாகவும் பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலைஞர் சிந்தனைகள் என்ற பிரிவில் பட்ட மேற்படிப்பு

karunanithi.jpg இந்தியாவின் தொன்மையான பல்கலைக் கழகமான சென்னைப் பல்கலைகக் கழகம், பெரியார் சிந்தனைகள், அண்ணா சிந்தனைகள், கலைஞர் சிந்தனைகள் என்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுவருகிறது.

காந்திய சிந்தனைகள் மற்றும் அம்பேத்கார் சிந்தனைகள் போன்ற கற்கை நெறிகள் ஏற்கனவே பல பல்கலைக் கழகங்களில் எம் ஏ பாட திட்டத்தில் இருப்பதாகவும், அதே போல தற்போது இந்தப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திருவாசகம் அவர்கள் தெரிவித்தார்.

ஆனால் கலைஞரைப் பற்றிய விமர்சனங்கள் இந்தப் பாடத்திட்டத்தில் இருக்காது என்றும் பிற தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை ஒட்டிய முதுகலைப் பட்டங்கள் வரும் ஆண்டுகளில் துவக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கண்டியில் இன்று உள்ளூராட்சி தலைவர்கள் மாநாடு

இலங்கை உள்ளூராட்சி சபைகளினதும் மாநகர சபை மேயர்களினதும், ஆணையாளர்களினதும் மாநாடு இன்றும், நாளையும் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஆரம்ப உரையாற்றவுள்ளார்.

காசா மீதான இஸ்ரேலிய படை நடவடிக்கை: ஐ.நா. மனித உரிமை சபையில் மீண்டும் விசாரணை

171009gaza.jpgகாசாவில் இஸ்ரேல் தீவிர படை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது  மத்தியகிழக்கிலுள்ள காசா பகுதி மீது இந்த வருடத்தின் முற்பகுதியில் நடைபெற்ற இஸ்ரேலிய படை நடவடிக்கை குறித்த தனது விவாதத்தை ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் மீண்டும் துவக்கியுள்ளது.

இது குறித்த விசாரணைகள் தென் ஆப்பிரிக்க நீதிபதி ரிச்சரட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் நடைபெற்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அகிய இரண்டுமே போர்க் குற்றங்களை புரிந்ததாக குற்றம்சாட்டி, இருதரப்பும் நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இவ்விசாரணைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதல் விவாதம் இரு வாரங்களுக்கு முன்பு நடந்தபோது, இப்பிரச்சினை தொடர்பான தனது பதில் நடவடிக்கைகளை ஆறு மாதங்கள் காலம் தாழ்த்துவது என மனித உரிமை கவுன்சில் முடிவெடுத்தது.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக முதலில் இதற்கு பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் பாலத்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை மாற்றிக் கொண்டு, இது தொடர்பான விவாதம் உடனே மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

கல்வி அமைச்சு மாகாணசபைகளுக்கு 90 மில்லியன் ரூபா அனுப்பி வைப்பு – மாணவர்களிடம் பரீட்சை கட்டணம் அறவிடக் கூடாது

அரசாங்க பாடசாலைகளில் 2009ம் ஆண்டுக்கான மூன்றாந்தவணைப் பரீட்சைகளை நடத்துவதற்கென கல்வி அமைச்சு 90 மில்லியன் ரூபாவை மாகாண சபைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. பாடசாலை மட்டத்தில் வலய மட்டத்தில் இம்முறை நடைபெறவுள்ள மூன்றாந்தவணை பரீட்சைக்கென மாணவர்கள் எவரும் பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

அத்துடன் பரீட்சைக்கென மாணவர்களிடம் கட்டணம் அறவிட வேண்டாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. சில மாகாண சபைகளும் இப்பரீட்சைக்கென நிதி ஒதுக்கியுள்ளதுடன் கல்வி அமைச்சின் வேண்டு கோளுக்கு இணங்க 3ஆம் தவணைப் பரீட்சை நடத்துவதற்குரிய செலவினம் தொடர்பான மதிப்பீடுகளை கல்வி அமைச்சுக்கு மாகாண சபைகள் அனுப்பி வைத்துள்ளன.

அத்துடன் இம்முறை க.பொத. சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும் மாதிரி பரீட்சையும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 6ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இப்பரீட்சைகள் நடைபெறும். மூன்றாம் தவணைப் பரீட்சையாக ஆண்டு 6 தொடக்கம் 10ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்குரிய பரீட்சை நவம்பர் 17 தொடக்கம் 30ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

தவணைப் பரீட்சைகளை ஏற்பாடு செய்வதற்கென நியமிக்கப்பட்ட விசேட குழுவினதும், தேசிய கல்வி ஆணைக்குழுவினதும் அறிக்கையின் பிரகாரம் மாகாண அதிகாரிகளின் ஒப்புதல்களுடன் பரீட்சையை இவ் வாறு நடத்துதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மாகாண ரீதியில் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதற்கென கல்வி அமைச்சில் 9 பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகள் மற்றும் பாடசாலைகள் தொகுதி (சிறிய பாடசாலை களுக்கான பிரதான பாடசாலையுடன் இணைந்து அடிப்படையில் பரீட்சைகளை ஒருங்கிணைப்பதற்கென அதிபர்கள் மற்றும் பிரபல்ய மான ஆசிரியர்களை உள்ளடக்கியதாக கமிட்டியொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.