2009

2009

இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்க விசேட செயல்திட்டம். யுனிசெப் நிறுவனம் உதவி – பசில் எம்.பி.

20090424063601srilanka4.jpgஇராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள சுமார் 40 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி வசதிகள் அளிப்பதற்காக யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் விரைவில் விசேட திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதிக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆராய்ந்த அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவுள்ளனர். அவர்களை மெனிக்பாம் 4ஆவது வலயத்தில் தங்கவைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபருக்கும் நாளாந்தம் 15 லீட்டர் நீர் வழங்க வேண்டும் என சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.

ஆனால் நாம் நாளாந்தம் 50 லீட்டர் நீர் வழங்கி வருகிறோம். முகாம்களில் உள்ள மக்களுக்கு நீர் வசதி அளிக்க 105 கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 60 நீர் பவுசர்களினூடாக நீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் 60 கிணறுகள் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கென நாளாந்தம் 87 ஆயிரம் உணவுப் பார்சல்கள் வழங்கப்படுகின்றன. சமைத்த உணவுக்குப் பதிலாக அவர்களாக சமைப்பதற்கு விரைவில் வசதிகள் அளிக்க உள்ளோம்.

விரைவில் இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் சமையல் உபகரணங்கள் கிடைக்க உள்ளன. அவற்றோடு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி அடங்கலான அத்தியாவசியப் பொருட்கள், ஆடைகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.மருத்துவ வசதிகள் அளிக்க வரும் வெளிநாட்டு முகவர்களை முகாம்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக அவர்கள் தொடர்பாக இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் சிபாரிசு பெறப்படும் என்றார்.

கந்துருவெலவில் சுற்றிவளைப்பு தேடுதல் இரு பெண்கள் உட்பட 81 பேர் கைது

பொலனறுவை கந்துருவெலவில் சனிக்கிழமை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண்கள் உட்பட 81 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலனறுவை கந்துருவெல பகுதியிலுள்ள அரிசி மில் ஆலைகளில் பணியாற்றியவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி மற்றும் நாவலப்பிட்டி, அட்டன் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாமையினாலேயே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தொடர்பாக அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக விபரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் நிரபராதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட சிறுமி களுத்துறையில் விடுவிப்பு

அம்பலாங் கொடையில் வியாழக்கிழமை இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்ட பியூமி தனஞ்சனி என்ற 11 வயது மாணவி மேதினத்தன்று களுத்துறையில் விடுவிக்கப்பட்டார். தனியார் பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் இம் மாணவியை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக அம்மாணவி தெரிவித்தார். இவர் களுத்துறை பாலம் அருகில் வெள்ளிக்கிழமை நண்பகல் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பாக பெற்றோர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். களுத்துறையில் விடுவிக்கப்பட்ட இச் சிறுமி வடக்கு பொலிஸ் நிலையத்துக்கு சென்று தான் கடத்தப்பட்டதாக கூறினார். களுத்துறை பொலிஸார் சிறுமியை அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

யுத்தமற்ற ஐக்கியமான இலங்கையை கட்டியெழுப்ப அதிகபட்ச சுயாட்சி அவசியமானதொன்றாகும் -அமைப்பாளர் தம்பையா

may-day.jpgஅரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் தீர்வு நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களை கொண்டதாக இருக்க வேண்டும். இடம் பெயர்ந்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி, அரசியல் கைதிகள் அனைரையும் விடுதலை செய்து மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டு இயல்புவாழ்நிலை உறுதி செய்யப்பட வேண்டும். இது உடனடியான நடவடிக்கை ஆகும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உட்பட அனைத்து தமிழர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்கும் ஏனைய அடக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்கும் அதிகபட்ச சுயாட்சியை உறுதி செய்யக்கூடிய அரசியல் தீர்வை உறுதி செய்வது இன்னொரு கட்ட நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே யுத்தமற்ற, ஐக்கியமான, சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் இதன்மூலமே கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.

அட்டன் சக்தி மண்டபத்தில் நடைபெற்ற மே தின கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே மேற்படி குறிப்பிட்டார்.

இலங்கையில் முகாம்களில் உள்ள முதியவர்கள் வெளியே அனுப்பப்டுகின்றனர்

mahinda-samarasinha.jpgஇலங்கையின் வடக்கே பல்வேறு இடங்களில் உள்ள் முகாம்களிலிருந்து 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வெளியே அனுப்பபடுவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக இலங்கை அரசின் மனித உரிமைகள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தமிழோசையிடம் கூறும் போது, இந்த திட்டமானது ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்றும், ஏற்கனவே சுமார் இரண்டாயிரம் முதியவர்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஏற்கனவே உள்ள முதியோர் இல்லங்களுக்கும் மேலாக புதிய இடங்களுக்கும் தாங்கள் ஏற்பாடு செய்து இருப்பதாகவும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இந்துக் கோயில்களிலும் இவர்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவில் புனர்வாழ்வு நிலையத்தில் வன்னியிலிருந்து வந்த 800 இளைஞர்கள்

ltte_.jpgவவுனியாவில் இயங்கும் புனர்வாழ்வு நிலையத்தில் வன்னியிலிருந்து வந்த 800 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்து சரணடைந்தவர்களே இங்கு தங்கவைக்கப்பட்டிருப்பதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி படைத் தரப்பு கூறுகையில்; படையினரிடம் சரணடைந்தவர்களுக்குரிய புனர்வாழ்வு நிலையம் வவுனியாவில் இயங்க ஆரம்பித்துள்ளது. நீதி அமைச்சின் கீழ் இந்த நிலையம் இயங்குகிறது.

வவுனியா மன்னார் வீதியிலுள்ள நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரியே புனர்வாழ்வு நிலையமாக இயங்குகின்றது. வவுனியாவில் படையினரிடம் சரணடைந்த 800 க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து மக்களுடன் இடம்பெயர்ந்து வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கவே இந்த நிலையம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சரணடைந்த பலர் வெலிக்கந்த நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தொழில் பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இவர்களில் பெண்களும் உள்ளனர்.

அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters’ Day (IFFD) – புன்னியாமீன்

international-firefighters-day.jpgஇன்று மே மாதம் 04ஆம் திகதி. ஆண்டு தோறும் மே 4ஆம் திகதியன்று  அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்  International Firefighters’ Day (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது.

தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது. ஆனால்,  இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை.

இயற்கை அனர்த்தங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும்ää அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது மெச்சத்தக்கதே.

இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் பெருமானத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும்,  அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும்,  தேசிய மட்டத்திலும் அங்கீகாரத்த தன்மையை வழங்கி இவர்களை நன்றி கூருமுகமாக இவர்கள் பற்றி நினைவுகூர்வது இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகக் காணப்படுகின்றது. அதாவது,  சமூகத்தையும்,  சூழலையும் பாதுகாக்க முற்படும் இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும் இவர்கள் கௌரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும்,  சூழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூர்வதும் இத்தினத்தின் குறிக்கோளாகும்.

வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பாரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்நிகழ்வையடுத்து மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையினைத் தொடர்ந்து உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக தீயணைப்புப் படையினர் தினத்தினை சர்வதேச ரீதியில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதன் விளைவாகவே மே 4ஆம் திகதி அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. 

தமிழ் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளன

samthan-2.jpgதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளன.  இந்த சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய மனிதாபிமான சேவைகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளன.  இதற்கிடையில் இந்த சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான முன்னெடுப்புகள் குறித்து, தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா கிடக்கட்டும்;அவசரமாக இந்தியா அணுகுண்டு தயாரிக்க வேண்டும்: அத்வானி

india.jpgபா. ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’’மற்றவர்கள் நம்மை விமர்சித்தாலும் பா.ஜனதா எப்போதுமே அணுகுண்டு தயாரிப்பதை ஆதரித்து வந்திருக்கிறது.

1961, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் நாம் பாகிஸ்தானை தோற்கடித்தோம். இதே போன்ற நிலையில் சீனாவுடன் மோத நேர்ந்தால் இந்தியாவிடம் கட்டாயம் அணுகுண்டு இருக்கவேண்டும். அப்போதுதான் 1952-ம் ஆண்டு இந்திய- சீனப் போரின்போது ஏற்பட்ட தோல்வி இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

அணுகுண்டு தொடர்பாக 1964-ம் ஆண்டு பாரதீய ஜனசங்கம் வாரணாசியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அப்போது அமெரிக்கா கோபமாக இருப்பதாக நம்மை விமர்சனம் செய்தார்கள்.

1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்த சில நாட்களில் பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தியா முன்னேற வேண்டும் என்றால், முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டும். அமெரிக்கா என்ன நினைக்குமோ என்ற சிந்தனை இதில் தவிர்க்கப்படவேண்டும்’’ என்று கூறினார்.

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு?

mahinda-samarasinha.jpgஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் இன்றித் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப் பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித் திருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். இந்த விடயம் தொடர்பாக சட்ட மூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றிருப்பதாகவும், ஆயுதங்களைக் கைவிட்டு அரசாங்கப் படைகளிடம் சரணடைபவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப் படுமெனவும் அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்